search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கோனியம்மன் கோவில்"

    • நிச்சயதார்த்தத்தையும் கொங்கு மக்கள் கோனியம்மன் ஆலயத்தில் நடத்துகிறார்கள்.
    • சிவப்பு மற்றும் வெள்ளை பூவை தனித்தனியாக கட்டி அம்மன் முன்பு போடுகிறார்கள்.

    கோனியம்மன் கோவிலில் திருமண பேறு, குழந்தை பேறு, நல்ல உடல் நலம் மற்றும் தொழில் விருத்தி ஆகிய 4 விதமான கோரிக்கைகள் தான் அதிக அளவில் பக்தர்களால் வேண்டுதல்களாக வைக்கப்படுகிறது.

    இந்த வேண்டுதல்களை கோனியம்மன் குறைவின்றி நிவர்த்தி செய்து அருள்பாலித்து வருகிறாள். இதன் காரணமாக கோனியம்மன் மீது கொங்கு மண்டல மக்களுக்கு தணியாத பற்றும், பாசமும் இருக்கிறது.

    கோனியாத்தா உத்தரவு தராமல் எந்த ஒரு செயலையும் செய்வதில்லை என்பதை கொங்கு மண்டல தொழில் அதிபர்களும், அரசியல் வாதிகளும் ஒரு சடங்கு போல, மரபு போல கடைபிடித்து வருகிறார்கள்.

    இதனால் தான் தங்கள் வீட்டு சுப நிகழ்ச்சியான திருமணத்தை உறுதி செய்வதற்கான நிச்சயதார்த்தத்தையும் கொங்கு மக்கள் கோனியம்மன் ஆலயத்தில் நடத்துகிறார்கள்.

    கோனியம்மனை சாட்சியாக வைத்து அவள் முன்னிலையில் திருமண நிச்சயம் செய்தால் மணமக்கள் அனைத்து வித செல்வங்களும் பெற்று குறைவின்றி நீடூழி வாழ்வாங்கு வாழ்வார்கள் என்பது அவர்களது நம்பிக் கையாகும். திருமண நிச்சயதார்த்தத்துக்கு கொங்கு மண்டல மக்கள் உப்பை மாற்றி கொள்ளும் சடங்கை கடைபிடிக்கிறார்கள்.

    மணமக்கள் வீட்டார் இருவரும் ஒரு கூடையில் உப்பை நிறைத்து அதன் மீது மஞ்சள், குங்குமம், வெற்றிலை - பாக்கு, பூ வைத்து ஒருவருக்கொருவர் கொடுத்து மாற்றி கொள்வார்கள்.

    கோனியம்மன் கண் எதிரில் அவள் முன்னிலையில் திருமண நிச்சயதார்த்தம் நடப்பதால் மணமக்கள் வீட்டார் தாங்கள் கொடுத்த வாக்கை மீற மாட்டார்கள் என்பது நம்பிக்கையாக உள்ளது.

    பூ போட்டு  உத்தரவு கேட்கும் பக்தர்கள்

    கோவை மாவட்ட பக்தர்கள் திருமணம், புதிய தொழில் தொடக்கம் என எந்தவொரு சுபநிகழ்ச்சிகளை நடத்த வேண்டும் என்றாலும் கோனியம்மனிடம் உத்தரவு வாங்குவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.

    சிவப்பு மற்றும் வெள்ளை பூவை தனித்தனியாக கட்டி அம்மன் முன்பு போடுகிறார்கள். பின்னர் அம்மனை வேண்டி பூவை எடுக்கிறார்கள். வெள்ளை பூ கிடைத்தால் சுபகாரியத்தை உடனே நடத்தலாம், அம்மன் உத்தரவு கிடைத்து விட்டது என்று அர்த்தமாம். சிவப்பு பூ வந்தால் அவசரம் வேண்டாம், கொஞ்ச நாள் கழித்து அந்த நிகழ்ச்சியை நடத்தலாம் என எண்ணப்படும்.

    • கோவையே கோனியம்மன், கோனியம்மனே கோவை என்று அறிஞர்கள் போற்றுகின்றனர்.
    • கோவில் என்பது தலைவன் உறைவிடம் என்று பொருள்படும்.

    கிராம மக்களாகிய உழவர்கள், தம்மையும் தமது சொத்தாகிய கால்நடையையும் பாதிக்கும் நோய் நொடிகளில் இருந்து பாதுகாத்துக் கொள்ளவும், தமது பயிர் செழித்து விளைய வேண்டியும் தெய்வத்தை வழிபடுவார்கள். அவர்கள் வழிபடும் தெய்வம் பெரும்பாலும் கிராம தேவதையாக அமைந்து இருக்கும் அந்த கிராம தேவதை அக்கிராமத்தாரின் நல்வாழ்வினைப் பேணி அருள்வதாக விளங்கும். கிராம மக்களின் நல்வாழ்க்கை பல வகையிலும் சிறந்து விளங்குவதற்கு கிராம தேவதை வழிபாடே காரணமாகும்.

    அவ்வாறு கிராம தேவதையாக அமைந்து விளங்கும் தெய்வங்களுள் மாரியம்மன், காளியம்மன் குறிப்பிடத்தக்கவையாகும். அக்கிராம தேவதைகளுள் கோவையின் காவல் தெய்வமாக திகழ்கின்ற கோனியம்மனும் ஓர் ஒப்பற்ற தெய்வம் ஆகும். மாரியம்மனும், காளியம்மனும் பல கிராமங்களில் திருக்கோவில் கொண்டு விளங்கக் காணலாம். ஆனால் அன்னை கோனியம்மன் கோவையம்பதியில் மட்டுமே திருக்கோவில் கொண்டு எழுந்தருளி திருக்காட்சி அருளுகின்றாள்.

    தமிழகத்தின் முக்கிய நகரங்களுள் ஒன்றாகவும், கொங்கு நாட்டின் பெருநகராகவும் விளங்குகின்ற கோவை மாநகரம், சில நூற்றாண்டுகளுக்கு முன்னர் மரங்கள் அடர்ந்த காட்டுப் பகுதியாக இருந்தது. அக்காட்டினிடையே இருளர் இன மக்கள் வாழ்ந்த ஒரு சிறு கிராமமும் இருந்தது.

    அக்கிராமத்தில் வாழ்ந்த இருளர் தலைவனாக கோவன் என்பவன் இருந்தான். அவன் பெயராலேயே அந்தக் கிராமம் கோவன் புதூர் என்ற பெயரால் அழைக்கப்பட்டது. பிறகு அது நாளடைவில் மருவி தற்போது கோயம்புத்தூர் என்று அழைக்கப்படுகிறது.

    இருளர் தலைவனாகிய கோவன், தன் கிராமத்தில் ஒரு சிறு கோவிலைக் கட்டி, அதில் ஒரு கல்லை நாட்டிக் கோனியம்மன் என்னும் பெயரால் வழிபட்டான். கிராமத்தவராகிய மற்றவர்களும் அத்தெய்வத்தை வழிபட்டு வந்தனர்.

    கல் வடிவில் விளங்கிய கோனியம்மனும் அவர்கள் வாழ்வினை வளமுறச் செய்தாள். அதோடு, அந்த கிராம தேவதையாக, அக்கிராமத்தின் காவல் தெய்வமாகத் திகழ்ந்தாள்.

    பல்லாண்டுகளுக்கு பின்னர் கோசர் மரபினர் கொங்கு நாட்டை ஆண்டனர். அக்கொங் கிளங்கோசர், ஒரு மண் கோட்டையையும், ஓர் ஊரையும் அமைத்தனர். அக்கோட்டையின் காவல் தெய்வமாகக் கோனியம்மனைக் கோவில் கட்டி எழுந்தருளச் செய்தனர். கோசரால் அமைக்கப் பெற்ற ஊர் ஒரு நகரமாகும். குக்கிராமமாக இருந்த ஊர் நகரமாக மாறியதற்கு அன்னை கோனியம்மனின் திருவருளே காரணமாகும். கிராமமாக இருந்த கோவன்புதூர், இன்று முக்கிய பெரிய நகரமாக விளங்க அருள் செய்து விளங்குபவள் கோனியம்மன்.

    கோவை நகர மக்களும், கோனியம்மனையே முக்கிய தெய்வமாகவும், தலைமைத் தெய்வமாகவும் கொண்டு போற்றி வழிபட்டு வருகின்றனர். எனவேதான் கோவையே கோனியம்மன், கோனியம்மனே கோவை என்று அறிஞர்கள் போற்றுகின்றனர்.

    கோவில் என்பது தலைவன் உறைவிடம் என்று பொருள்படும். உலகுக்கு எல்லாம், உயிர்களுக்கு எல்லாம் தலைவனாக உள்ள இறைவனின் உறைவிடம் கோவில். அந்த இறைவனுக்குக் கோன் என்ற பெயரும் உண்டு. தேவர் தலைவனாகிய இந்திரனுக்கு தேவர்கோன் என்ற பெயர் அமைந்தது போன்று தேவ தேவனாகிய, மகாதேவனாகிய இறைவனுக்கும் கோன் என்று அமைந்தது.

    கோன் என்ற சொல்லிற்கு அரசன் என்றும் பொருள் உண்டு. அரசன் என்றால், உலகின் காவலன், நாயகன், தலைவன் என்று அர்த்தமாகும்.

    கோன் என்பது அரசனைக் குறிப்பது போன்றே கோனி என்பது அரசியைக் குறிக்கும். அன்னை பராசக்தி உலகிற்கு அரசி. இறைவன் உலகிற்கு அரசனாக விளங்கும்போது, இறைவி உலகிற்கு அரசியாக விளங்க வேண்டியதுதானே முறை. எனவே, கோவையில் காட்சி தரும் கோனியம்மன் உலக அரசியாக, உலக அரசர்கள் எல்லாம் வழிபடும் உத்தம அரசியாக திகழ்கின்றாள்.

    அரசியானவள் நகரின் நடுநாயகமாக விளங்க வேண்டியதற்கேற்ப, கோனியம்மன் திருக்கோவில் கோவை மாநகரின் நடுநாயகமாக அமைந்து விளங்குகின்றது. தனக்கு மேல் ஓர் அரசியில்லாத தனிப் பேரரசியாக கோனியம்மன் திகழ்கிறாள்.

    அரசியிடம் விளங்க வேண்டிய அன்பு, அறிவு, கருணை ஆகியவற்றின் திருவுருவாகத் திருக்கோவிலுள் உயரிய பீடம் மீது எழுந்தருளி வீற்றிருக்கின்றாள். கருணைப் பெருக்கும், திருமுக மண்டலமும், அன்பு தவழும் புன்னகையும், அருள் சுரக்கும் நயனங்களும் கொண்ட அட்டபுயநாயகியாக வீற்றிருந்து அருளாட்சி புரிகின்றாள்.

    வலது திருக்காலை மடக்கி உயர்த்தி பீடத்தின் மீது வைத்தும், இடது திருக்காலால் அசுரன் ஒருவனை மிதித்தும் மங்கல நாயகியாக கோனியம்மன் பொலிவுறுகின்றாள். அரசர்க்கரசியாக, கோவைக்கு அரசியாக, காவல் தெய்வமாக, கண்கண்ட தெய்வமாக விளங்குகின்ற கோனியம்மன் திருக்கோவிலில் நவராத்திரி விழா சீரும் சிறப்புமாக நடைபெறும்.

    என்றாலும் இத்தலத்தில் மாசி மாதம் நடைபெறும் தேர்த்திருவிழாவாகிய பிரம்மோற்சவம் மிகவும் விசேஷமானதாகும். ஆண்டு தோறும் மாசி மாதம் வளர்பிறையில் அன்னையின் தேர்த் திருவிழா அருள் மணக்கும் வகையில் அழகாக நடைபெற்று வருகின்றது. அப்போது கோவையில் லட்சக்கணக்கான மக்கள் திரண்டு வந்து கோனியம்மனை தரிசித்து அருள் பெறுவார்கள்.

    • அனைத்து கோவில்களிலும் நவக்கிரகங்கள் சன்னதி தனியாக இருக்கும்.
    • திருமண தோஷம் உள்ளவர்களும் இந்த நவக்கிரகங்களை வலம் வந்து பலன் பெறுகிறார்கள்.

    சிவன், பெருமாள், முருகன் என அனைத்து கோவில்களிலும் நவக்கிரகங்கள் சன்னதி தனியாக இருக்கும். கிரக தோஷம் நீங்க பக்தர்கள் நவக்கிரகங்களை வலம் வந்து விளக்கேற்றி வழிபடுவர். இதேபோல கோவை நகரில் ஆட்சி புரியும் கோனியம்மன் கோவிலிலும் நவக்கிரக சன்னதி உள்ளது. மற்ற கோவில்களில் நவக்கிரக சுவாமிகளும் தனித்தனியாக அமர்ந்து அருள்பாலிப்பார்கள். ஆனால் கோனியம்மன் கோவிலில் நவக்கிரக சுவாமிகள் தம்பதி சமேதராக அமர்ந்து அருள்பாலிப்பது விசேஷமானது ஆகும்.

    கிருத்திகா ரோகினி உடனமர் சந்திரபகவான், சுகீர்த்தி உடனமர் சுக்கிர பகவான், ஞானதேவி உடனமர் புதன் பகவான், சித்திரலேகா உடனமர் கேதுபகவான், சக்திதேவி உடனமர் செவ்வாய் பகவான், ஹிம்ஷிகா தேவி உடனமர் ராகுபகவான், சனி நீலாதேவி உடனமர் சனீஷ்வரபகவான், உஷா பிரத்யுஷா உடனமர் சூரியபகவான், தாராதேவி உடனமர் குருபகவான் என சுவாமி சிலைகள் உள்ளன.

    இங்கு நவக்கிரகங்கள் மகிழ்ச்சியான நிலையில் அருள்பாலிப்பதாக கூறப்படுகிறது. இவ்வாறு மகிழ்ச்சி நிலையில் இருக்கும் சுவாமிகளை வழிபட்டால் நாம் நினைத்து வழிபட்டது நடக்கும், சனி தோஷம், சுக்ர தோஷம் என அனைத்துவிதமான தோஷங்களும் நீங்கும் என்பது ஐதீகம். திருமண தோஷம் உள்ளவர்களும் இந்த நவக்கிரகங்களை வலம் வந்து பலன் பெறுகிறார்கள்.

    வியாழன், சனிக்கிழமைகளில் இங்கு பக்தர்கள் எள் தீபம் ஏற்றி வழிபடுவர். நவக்கிரக சன்னதி களில் வழக்கமாக சூரியபகவான் கிழக்கு திசை நோக்கி அமர்ந்து அருள் வழங்குவார்கள். இங்குள்ள சன்னதியில் மேற்கு நோக்கி உள்ளார். கோனியம்மன் வடக்கு நோக்கிய நிலையில் அருள்பாலிப்பதால் ஆகமவிதிப்படி சூரியபகவான் மேற்கு நோக்கி உள்ளதாக கூறப்படுகிறது.

    • கோவன்புத்தூரின் காவல் தெய்வமாக அமைந்த சக்திதான் கோனியம்மன்.
    • நவக்கிரக சுவாமிகள் தம்பதி சமேதராக அமர்ந்து அருள்பாலிப்பது விசேஷமானது ஆகும்.

    கொங்கு நாடான கோவை மாநகர் ஆதியில் அடர் மரங்கள் நிறைந்த காடாக இருந்தது. இருளர்களின் தலைவன் கோவன் அதனை சீர்படுத்தி நகராக மாற்றி ஆட்சி புரிந்து வந்தான்.

    ஒரு சமயம் அவன் ஆட்சி புரிந்த பகுதியில் பஞ்சம் ஏற்பட்டு மக்கள் வாழ வழியின்றி தவித்தனர். அவர்களின் நிலையைக் கண்ட கோவன் தனது ஆட்சியின் கீழ், வசிக்கும் மக்கள் வாழ்வில் நன்மைகள் பல பெற்று பஞ்சம் பிணிகள் ஏற்படாமல் சிறந்து வாழ்ந்திட வேண்டி வனப்பகுதியில் சிறு நிலத்தை சீரமைத்து அங்கு கல் ஒன்றினை வைத்து அம்மனாக எண்ணி வழிபடத் தொடங்கினான். அதன்பிறகு கொங்கு நாட்டு மக்கள் செழிப்புற்று திகழ்ந்தனர். அதன்பின் இருளர்கள் அந்த அம்மனையே தங்களது குலதெய்வமாக எண்ணி கோவில் கட்டி வழிபடத் தொடங்கினர்.

    இக்கோவில் கோவைக்கு வடக்கு திசையில் அமைந்தது. அம்பிகை காவல் தெய்வமாக நகரைக் காத்தாள். அவனது ஆட்சி முடிந்த பல்லாண்டுகளுக்குப்பின் இப்பகுதியை இளங்கோசர் என்பவர் ஆண்டு வந்தார். அப்போது சேரமன்னர் ஒருவர் படையெடுத்து வந்தார். அவரின் படையெடுப்பில் இருந்து நாட்டைக்காக்க கோவன்புத்தூரின் மையத்தில் ஓர் கோட்டையையும் மண் மேட்டையும் கட்டி காப்புத் தெய்வமான அம்மனை அங்கு வைத்து வழிபட்டார். இவளே கோனியம்மனாக வழிபடப்படுகிறாள்.

    ஆலயத் தோற்றம்

    கோவன்புத்தூரின் காவல் தெய்வமாக அமைந்த சக்திதான் கோனியம்மன். நமது செந்தமிழ்நாட்டிலே ஓரிடத்தில் பத்து குடிசைகள் சேர்ந்தாற்போல் அமைந்தாலும் அந்த இடத்தில் ஒரு மண்மேடை கட்டி அதன் மீது கூரை வேய்ந்து நடுவில் மண் திட்டில் ஓர் பிம்பத்தை அமைத்து தெய்வமாக தொழுவதும், அரசும் - வேம்பும் சேர்ந்து மரமாக வளர்ந்த நிழலில் கல்நட்டு தெய்வமாக வழிபடுவதும் நம் முன்னோர் வகுத்த வழியாகும்.

    இவ்வாறு தான் காடு திருத்தி மக்கள் வாழும் நிலமாக பண்படுத்தியபோது இருளர் தலைவனான கோவன் தங்கள் குடிசைக்கருகில் வடபாகத்தில் சிறு கோவில் ஒன்றெடுத்து ஒரு கல் நட்டு தானும் தன் இனத்தார்களும் குலதெய்வமென வழிபட்டு விழாசெய்தும் கொண்டாடினான். இக்கோவில் கோயம்புத்தூருக்கு வடக்கில் துடியலூருக்கு செல்லும் வழியில் சங்கனூர் பள்ளத்தருகே இருந்து பாழடைந்தது. மக்கள் இதனை கோனியம்மன் பழைய கோவில் எனக் கூறுகின்றனர்.

    பல்லாண்டுக்குபின் இளங்கோசர் கொங்கு நாட்டினை ஆண்ட காலத்தில் சேரர் படையெடுத்தால் தடுக்க ஒரு மண்கோட்டையையும், மேட்டையும் புதிதாக கோவன் புத்தூரிலே கோசர்கள் கட்டினார்கள். அங்ஙனம் கட்டிய கோட்டைக்கு காப்பு தெய்வமாகவும் தன் பெயர் விளங்கும் வண்ணமும் சிறு கோவில் ஒன்றெடுத்து அதில் வைத்து வணங்கிய தெய்வத்துக்கு கோனியம்மன் என பெயரிட்டு கோவில் கொள்ள செய்தனர். அக்கோவிலே தற்போது கோவை மாநகரின் நடுவில் விளங்கும் கோனியம்மன் கோவில் ஆகும்.

    தம்பதி சமேதராக அருள்பாலிக்கும் நவக்கிரகங்கள்

    சிவன், பெருமாள், முருகன் என அனைத்து கோவில்களிலும் நவக்கிரகங்கள் சன்னதி தனியாக இருக்கும். கிரக தோஷம் நீங்க பக்தர்கள் நவக்கிரகங்களை வலம் வந்து விளக்கேற்றி வழிபடுவர். இதேபோல கோனியம்மன் கோவிலிலும் நவக்கிரக சன்னதி உள்ளது. மற்ற கோவில்களில் நவக்கிரக சுவாமிகளும் தனித்தனியாக அமர்ந்து அருள்பாலிப்பார்கள். ஆனால் கோனியம்மன் கோவிலில் நவக்கிரக சுவாமிகள் தம்பதி சமேதராக அமர்ந்து அருள்பாலிப்பது விசேஷமானது ஆகும்.

    கிருத்திகா ரோகினி உடனமர் சந்திரபகவான், சுகீர்த்தி உடனமர் சுக்கிர பகவான், ஞானதேவி உடனமர் புதன் பகவான், சித்திரலேகா உடனமர் கேதுபகவான், சக்திதேவி உடனமர் செவ்வாய் பகவான், ஹிம்ஷிகா தேவி உடனமர் ராகுபகவான், சனி நீலாதேவி உடனமர் சனீஷ்வரபகவான், உஷா பிரத்யுஷா உடனமர் சூரியபகவான், தாராதேவி உடனமர் குருபகவான் என சுவாமி சிலைகள் உள்ளன.

    இங்கு நவக்கிரகங்கள் மகிழ்ச்சியான நிலையில் அருள்பாலிப்பதாக கூறப்படுகிறது. இவ்வாறு மகிழ்ச்சி நிலையில் இருக்கும் சுவாமிகளை வழிபட்டால் நாம் நினைத்து வழிபட்டது நடக்கும், சனி தோஷம், சுக்ர தோஷம் என அனைத்துவிதமான தோஷங்களும் நீங்கும் என்பது ஐதீகம். திருமண தோஷம் உள்ளவர்களும் இந்த நவக்கிரகங்களை வலம் வந்து பலன் பெறுகிறார்கள்.

    வியாழன், சனிக்கிழமைகளில் இங்கு பக்தர்கள் எள் தீபம் ஏற்றி வழிபடுவர். நவக்கிரக சன்னதி களில் வழக்கமாக சூரியபகவான் கிழக்கு திசை நோக்கி அமர்ந்து அருள் வழங்குவார்கள். இங்குள்ள சன்னதியில் மேற்கு நோக்கி உள்ளார். கோனியம்மன் வடக்கு நோக்கிய நிலையில் அருள்பாலிப்பதால் ஆகமவிதிப்படி சூரியபகவான் மேற்கு நோக்கி உள்ளதாக கூறப்படுகிறது.

    ஏழுநிலை ராஜகோபுரம்

    2008 ஆம் ஆண்டு இத்திரு க்கோயிலின் நுழைவாயிலில் 83 அடி உயர ஏழுநிலை ராஜகோபுரம் கட்ட தமிழக அரசு அனுமதி வழங்கியது. பல கோடி ரூபாய் செலவில் நடைபெற்ற இப்பணிக்கு இந்து சமய அறநிலையத்துறை ரூபாய் முப்பது லட்சம் வழங்கியது. பொதுமக்கள் மற்றும் உபயதாரர்கள் மூலம் மீதமிருந்த செலவுகள் செய்யப்பட்டன. திருக்கோயில்களில் 12 வருடங்களுக்கு ஒருமுறை நடைபெறும் திருக் குடமுழுக்கு விழா, புதிய ராஜகோபுரத்துடன் ஜூலை 11, 2014 இல் நடைபெற்றது.

    ஆதிகோனியம்மன் பின்னணி தகவல்கள்

    கோனியம்மன் ஆலயத்தின் பின்பகுதியில் ஆதிகோனியம்மனுக்கு தனி சன்னதி உள்ளது. அந்த சன்னதியில் துர்க்கையும் வீற்றிருந்து அருள்பாலித்து வருகிறாள். சப்தமாதர்களும் உள்ளனர்.

    இவர்களுக்கு அருகில் உக்கிர வீரபத்திரர், கருப்பர், முனீஸ்வரரும் உள்ளனர். இந்த சன்னதியில் பக்தர்களை மிகவும் கவர்வது ஆதி கோனியம்மன் விக்ரக மாகும். இங்கு ஆதி கோனியம்மனுக்கு தலை மட்டுமே உள்ளது. உடல் இல்லை. இதன் பின்னணியில் ஒரு வரலாறு கூறப்படுகிறது. கோவையில் கோசர்கள் கோனியம்மனை வழிபட்டு வந்த காலக்கட்டத்தில் அதற்குரிய மூலவரை உருவாக்கி வைத்திருந்தனர்.

    அவர்களுக்கு பிறகு கோவை நிலப்பகுதியை ஆண்ட மைசூர் மன்னர்கள் கோனியம்மனை மகிஷாசூரமர்த்தினியாக வடிவமைத்து வழிபட்டனர். இந்தநிலையில் திப்புசுல்தான் படையெடுத்து வந்து கோவை யில் உள்ள ஆலயங்களை எல்லாம் சூறையாடினான். அப்போது இந்த தலமும் பலத்த சேதத்தை சந்தித்தது. சிலைகளில் பெரும்பாலானவை உடைக்கப்ப ட்டன.

    மகிஷாசூரமர்த்தினி சிலையும் திப்புசுல்தான் படைகளால் உடைக்கப்பட்டது. அப்போது சிலையின் தலையும் உடலும் இரண்டு துண்டாக உடைந்தது. தலையை இந்த தலத்திலேயே வைத்து வழிபட்டு வருகிறார்கள்.

    உடல் பகுதி மைசூர் சாமுண்டீஸ்வரி ஆலயத்தில் இருப்பதாக தெரியவந்துள்ளது. தலை இல்லா முண்டத்தை அங்குள்ளவர்கள் இன்றும் வழிபட்டு வருவதாக சொல்லப்படுகிறது.

    ஆலயத்தில் நடைபெறும் உற்சவங்கள்

    ஒவ்வொரு மாதமும் மாதப்பிறப்பு உற்சவம் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. மாலையில் கோவில் காலம் நிறைவு எய்திய பின்னர் கோனியம்மன் உற்சவரை கேடயத்தில் அழகுற எழச்செய்து கோவிலுக்குள் புறப்பாடு செய்யப்படும். அதுபோலவே பவுர்ணமி தோறும் கோனியம்மன் உற்சவர் கோவிலுக்குள் புறப்பாடு செய்யப்படும்.

    ஆடி வெள்ளிக்கிழமைகளில் சிறப்பு அலங்காரத்துடன் இருக்கும் அம்மனை பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து தரிசித்து மகிழ்வர். ஆடி மாதம் முழுவதும் உற்சவ அம்மன் ஊஞ்சலில் கொலு இருக்கும். நவராத்திரி உற்சவத்தின்போது அம்மனுக்கு ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கோலமாக அலங்காரம் செய்விக்கப்பட்டு பக்தர்கள் மனம் நிறைவுறும் வண்ணம் கோனியம்மன் மூலவரும் உற்சவரும் காட்சி தருவர்.

    இது தவிர கீழ்கண்ட உற்சவங்களும் இத்திருக்கோவிலில் சிறப்புற நடைபெறுகின்றன.

    1. ஆடிவெள்ளிக்கிழமை 2. தை வெள்ளிக்கிழமை 3. நவராத்திரி 4. மாதப்பிறப்பு 5. பவுர்ணமி பூஜை 6. அமாவாசை 7. கார்த்திகை 8. தீபாவளி 9. தனுர் மாத விழா 10. தை பொங்கல்.

    கோனியம்மன் கோவிலில் நிச்சயதார்த்தம்

    கோனியம்மன் கோவிலில் திருமண பேறு, குழந்தை பேறு, நல்ல உடல் நலம் மற்றும் தொழில் விருத்தி ஆகிய 4 விதமான கோரிக்கைகள் தான் அதிக அளவில் பக்தர்களால் வேண்டுதல்களாக வைக்கப்படுகிறது.

    இந்த வேண்டுதல்களை கோனியம்மன் குறைவின்றி நிவர்த்தி செய்து அருள்பாலித்து வருகிறாள். இதன் காரணமாக கோனியம்மன் மீது கொங்கு மண்டல மக்களுக்கு தணியாத பற்றும், பாசமும் இருக்கிறது.

    கோனியாத்தா உத்தரவு தராமல் எந்த ஒரு செயலையும் செய்வதில்லை என்பதை கொங்கு மண்டல தொழில் அதிபர்களும், அரசியல் வாதிகளும் ஒரு சடங்கு போல, மரபு போல கடைபிடித்து வருகிறார்கள்.

    இதனால் தான் தங்கள் வீட்டு சுப நிகழ்ச்சி யான திருமணத்தை உறுதி செய்வதற்கான நிச்சயதார்த்தத்தையும் கொங்கு மக்கள் கோனியம்மன் ஆலயத்தில் நடத்துகிறார்கள்.

    கோனியம்மனை சாட்சியாக வைத்து அவள் முன்னிலையில் திருமண நிச்சயம் செய்தால் மணமக்கள் அனைத்து வித செல்வங்களும் பெற்று குறைவின்றி நீடூழி வாழ்வாங்கு வாழ்வார்கள் என்பது அவர்களது நம்பிக் கையாகும். திருமண நிச்சய தார்த்தத்துக்கு கொங்கு மண்டல மக்கள் உப்பை மாற்றி கொள்ளும் சடங்கை கடைபிடிக்கிறார்கள்.

    மணமக்கள் வீட்டார் இருவரும் ஒரு கூடையில் உப்பை நிறைத்து அதன் மீது மஞ்சள், குங்குமம், வெற்றிலை - பாக்கு, பூ வைத்து ஒருவருக்கொருவர் கொடுத்து மாற்றி கொள்வார்கள்.

    கோனியம்மன் கண் எதிரில் அவள் முன்னிலையில் திருமண நிச்சயதார்த்தம் நடப்பதால் மணமக்கள் வீட்டார் தாங்கள் கொடுத்த வாக்கை மீற மாட்டார்கள் என்பது நம்பிக்கையாக உள்ளது.

    பூ போட்டு உத்தரவு கேட்கும் பக்தர்கள்

    கோவை மாவட்ட பக்தர்கள் திருமணம், புதிய தொழில் தொடக்கம் என எந்தவொரு சுபநிகழ்ச்சிகளை நடத்த வேண்டும் என்றாலும் கோனியம்மனிடம் உத்தரவு வாங்குவதை வழக்கமாக கொண்டுள்ளனர். சிவப்பு மற்றும் வெள்ளை பூவை தனித்தனியாக கட்டி அம்மன் முன்பு போடுகிறார்கள். பின்னர் அம்மனை வேண்டி பூவை எடுக்கிறார்கள். வெள்ளை பூ கிடைத்தால் சுபகாரியத்தை உடனே நடத்தலாம், அம்மன் உத்தரவு கிடைத்து விட்டது என்று அர்த்தமாம். சிவப்பு பூ வந்தால் அவசரம் வேண்டாம், கொஞ்ச நாள் கழித்து அந்த நிகழ்ச்சியை நடத்தலாம் என எண்ணப்படும்.

    தினந்தோறும் பக்தர்களுக்கு அன்னதானம்

    இத்திருக்கோவிலில் 23-3-2002 முதல் தமிழக அரசு அறிவித்துள்ள அன்னதான திட்டத்தின்கீழ் தினமும் பக்தர்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டு வருகின்றது.

    இத்திட்டத்தில் ரூ.50 ஆயிரம் முதலீடு செய்தால் அதில் இருந்து கிடைக்கப்பெறும் வட்டியில் இருந்து வருடம் ஒரு நாளைக்கு தாங்கள் விரும்பும் நாளில் தங்கள் பெயரில் பக்தர்களுக்கு மதிய உணவு வழங்கப்படும். இத்திட்டத்திற்கு வருமான வரிசட்டம் 80(ஜி)-ன் கீழ் வருமானவரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

    தானத்தில் சிறந்தது அன்னதானம் என மறைநூல்கள் கூறுகின்றன. அன்பர்கள் இச்சீரிய அன்னதான திட்டத்தில் தாங்களும் பங்கு கொண்டு ரூ.50 ஆயிரம் முதலீடு செய்தும் தங்கள் பிறந்த நாள், தங்களது குழந்தைகளின் பிறந்தநாள் போன்ற சிறப்பு தினங்களில் ரூ.3,500 திருக்கோவிலில் செலுத்தி குறைந்தது 100 பக்தர்களுக்கு மதிய உணவு வழங்கி அருள்மிகு கோனியம்மன் அருளுக்கு பாத்திரர் ஆகும்படி அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.

    நன்கொடைகளை வங்கி வரைவோலை மற்றும் பணிவிலை மூலமாகவும் அனுப்பலாம்.

    முகவரி, நிர்வாக அதிகாரி, அருள்மிகு கோனியம்மன் திருக்கோவில் அன்னதான நிதி, கோயமுத்தூர் 641 001.

    கோவில் நடை தினந்தோறும் காலை 6.30 மணிக்கு திறக்கப்பட்டு மதியம் 12.30 மணி வரை திறந்திருக்கும். பின்னர் மாலை 4.30 மணிக்கு நடைதிறந்து இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.

    காலை 6.30 மணி-நடைதிறப்பு

    காலை 7 மணி-காலசந்தி பூஜை

    நண்பகல் 12 மணி -உச்சிகால பூஜை.

    பகல் 12.30 மணி -நடைசாத்துதல்

    மாலை 4.30 மணி -நடைதிறப்பு

    மாலை 7 மணி-சாயரட்சை பூஜை,

    இரவு 8.30 மணி-நடை சாத்துதல்.

    பூஜை கட்டண விவரம்

    அர்ச்சனை சீட்டு - ரூ.5

    தேங்காய் சீட்டு - ரூ.5

    மாவிளக்கு சீட்டு- ரூ.20

    உபய கட்டணச்சீட்டு - ரூ.20

    தனி வழி தரிசனம்- ரூ.25

    பால் அபிஷேகம் சீட்டு- ரூ.25

    குத்துவிளக்கு சீட்டு - ரூ.50

    விசேஷ நாட்கள் தனி வழி - ரூ.50

    ஆட்டோ, ஸ்கூட்டர் பூஜை- ரூ.50

    கார் பூஜை சீட்டு - ரூ.100

    அபிஷேக சீட்டு - ரூ.100

    புகைப்படம் எடுத்தல் - ரூ.150

    ஜமுக்காளச்சீட்டு - ரூ.200

    திருவிளக்கு வழிபாடு சீட்டு- ரூ.250

    உப்பு ஜவுளி - ரூ.500

    வீடியோ எடுத்தல் சீட்டு- ரூ.500

    தங்கப்பாவாடை சீட்டு- ரூ.1000

    கோவில் தொடர்புக்கு

    செயல் அலுவலர்,

    அருள்மிகு கோனியம்மன் திருக்கோவில்,

    பெரியகடை வீதி,

    கோவை-641 001.

    தொலைபேசி எண்: 0422-2396821.

    website: www.kovai.koniamman.org, Email-ID: koniamman@bsnl.in

    • இன்று கோனியம்மன் குதிரை வாகனத்தில் வீதி உலா வருகிறார்.
    • நாளை தெப்பத் திருவிழா நடக்கிறது.

    கோவையின் காவல் தெய்வம் என்று அழைக்கப்படும் கோனியம்மன் கோவில் டவுன்ஹாலில் அமைந்துள்ளது. பிரசித்தி பெற்ற இந்த கோவிலின் தேர்த்திருவிழா ஒவ்வொரு ஆண்டும் மாசி மாதம் வெகுவிமரிசையாக நடத்தப்படுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான மாசி மாத தேர்த்திருவிழா கடந்த ஜனவரி மாதம் 23-ந் தேதி தேர் முகூர்த்தக்கால் நடுதலுடன் தொடங்கியது.

    பின்னர் கடந்த 14-ந் தேதி பூச்சாட்டு, 20-ந் தேதி கிராம சாந்தியும் நடந்தது. 21-ந் தேதி தேர்த்திருவிழா கொடியேற்றம், அக்னிசாட்டு ஆகியவை நடைபெற்றது. இதையொட்டி அம்மனுக்கு சிறப்பு பூஜை செய்து கோவில் கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டது.

    தொடர்ந்து 22-ந் தேதி புலிவாகனத்தில் அம்மன் வீதி உலா, 23-ந் தேதி கிளி வாகனத்திலும், 24-ந் தேதி சிம்ம வாகனத்திலும், 25-ந் தேதி அன்ன வாகனத்திலும், 26-ந் தேதி காமதேனு வாகனத்திலும், 27-ந் தேதி வெள்ளை யானை வாகனத்திலும் அம்மன் திருவீதி உலா நடந்தது.

    தேர்த்திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருக்கல்யாணம் நேற்று முன்தினம் இரவு நடைபெற்றது. இதில் ஓதுவார் கண்ணப்பனின் திருமுறை பாராயணத்தோடு பக்தர்கள் சூழ கோனியம்மனுக்கு மங்கல நாண் அணிவிக்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று மதியம் நடைபெற்றது. இதையொட்டி கோவை கோனியம்மன் கோவிலில் இருந்து அலங்கரிக்கப்பட்ட கோனியம்மன் உற்சவர் அதிகாலை நேரத்தில் பல்லக்கில் எழுந்தருளி ராஜவீதியில் உள்ள தேர்நிலை திடலுக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு வேதமந்திரம் முழங்க அலங்கரிக்கப்பட்ட திருத்தேரில் கோனியம்மன் எழுந்தருளினார். அப்போது சுற்றியிருந்த பக்தர்கள் அம்மனை இருகரம் கூப்பி வழிபட்டனர்.

    தேரோட்டத்தை முன்னிட்டு கோவை ராஜவீதியில் தேர் முன்பு நேற்று காலை முதல் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிய தொடங்கினார்கள். அவர்கள் தேரில் எழுந்தருளிய கோனியம்மனை தரிசித்தனர். மேலும் ஏராளமான பக்தர்கள் உப்பு, மிளகு வாங்கி தேர் மீது வீசி தங்கள் நேர்த்திக்கடனை செலுத்தினார்கள். மதியம் 2.05 மணிக்கு தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி நடைபெற்றது.

    இதில் பேரூர் ஆதினம் சாந்தலிங்க மருதாசல அடிகளார், சிரவை ஆதினம் குமரகுருபர சுவாமிகள், காமாட்சிபுரி ஆதீனம் சிவலிங்கேஸ்வரர் சுவாமிகள், இந்து சமய அறநிலையத்துறை கோவை இணை ஆணையர் பரஞ்சோதி, உதவி ஆணையர் கருணாநிதி, கோவில் செயல் அலுவலர் செல்வம்பெரியசாமி உள்ளிட்டோர் பங்கேற்று தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

    இதைத்தொடர்ந்து தேர்நிலைத்திடலில் இருந்து அலங்கரிக்கப்பட்ட தேர் ஆடி அசைந்து ராஜவீதியில் இருந்து ஒப்பணக்கார வீதியை நோக்கி வந்தது. தேரின் முன்பும், பின்பும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டிருந்தனர். ஏராளமான பக்தர்கள் திருத்தேரை வடம் பிடித்து இழுத்தனர். கூட்ட நெரிசலில் பக்தர்கள் சிக்கி விட கூடாது என்பதற்காக தேரின் இருபுறமும் நீண்ட கயிற்றை கட்டி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    பக்தர்கள் வெள்ளத்தில் தேர் ஆடி அசைந்து வந்தது பார்க்க கண்கொள்ளா காட்சியாக இருந்தது. அப்போது ஏராளமான பக்தர்கள் ஓம் சக்தி, பராசக்தி என்று பக்தி கோஷம் எழுப்பினார்கள்.

    தேர் ராஜவீதி, ஒப்பணக்கார வீதி, வைசியாள் வீதி, கருப்பகவுண்டர் வீதி வழியாக வந்து மாலையில் தேர்நிலைத்திடலை அடைந்தது. தேரோட்டத்தையொட்டி இந்து அமைப்புகள், வியாபாரிகள் சங்கத்தினர், உள்பட பல்வேறு அமைப்புகள் சார்பில் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மேலும் மோர், குளிர்பானங்கள் உள்ளிட்டவையும் பக்தர்களுக்கு வழங்கப்பட்டது.

    தேரோட்டத்தை முன்னிட்டு நேற்று கோவை மாநகரில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு இருந்தது. மேலும் போக்குவரத்தை ஒழங்குபடுத்தும் பணியில் போக்குவரத்து போலீசார் ஈடுபடுத்தப்பட்டனர்.

    இதுதவிர மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் தலைமையில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    இன்று (வியாழக்கிழமை) கோனியம்மன் குதிரை வாகனத்தில் வீதி உலா வருகிறார். நாளை (வெள்ளிக்கிழமை) வேணுகோபால சுவாமி கோவிலில் உள்ள தெப்பக்குளத்தில் தெப்பத் திருவிழா நடக்கிறது.

    இதனை தொடர்ந்து 4-ந்தேதி கொடியிறக்கமும், 5-ந்தேதி வசந்த விழாவுடன் மாசி தேர்த்திருவிழா நிறைவு பெறுகிறது.

    • நாளை பரிவேட்டை நிகழ்ச்சி நடக்கிறது.
    • நாளை மறுநாள் தெப்பத்திருவிழா நடக்கிறது.

    கோவையின் காவல் தெய்வமாக கோனியம்மன் கோவில் உள்ளது.

    இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் தேர்த்திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது.

    இந்த ஆண்டுக்கான தேர்த்திருவிழா கடந்த மாதம் 23-ந் தேதி தேர் முகூர்த்தக்கால் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. கடந்த 14-ந் தேதி பூச்சாட்டு திருவிழாவுடன் தேர்த்திருவிழா தொடங்கியது. 20-ந் தேதி கிராமசாந்தி பூஜையும், 21-ந் தேதி கொடியேற்றம், அக்னிசாட்டு நிகழ்ச்சியும் நடந்தது.

    22-ந் தேதி அம்மன் புலி வாகனத்திலும், 23-ந் தேதி கிளி வாகனம், 24-ந் தேதி சிம்மன வாகனம், 25-ந் தேதி அன்ன வாகனம், 26-ந் தேதி காமதேனு வாகனம், 27-ந் தேதி வெள்ளை யானை வாகனத்திலும் அம்மன் வீதி உலா நடந்தது.

    தேர்த்திருவிழாவினையொட்டி அனைத்து நாட்களிலும் ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வந்த வண்ணம் இருந்தனர். தினமும் பெண் பக்தர்கள் கொடி கம்பத்திற்கு நீருற்றி வழிபட்டு வந்தனர்.

    நேற்று திருக்கல்யாண நிகழ்ச்சி நடந்தது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.

    விழாவின் சிகர நிகழ்ச்சியான திருத்தேரோட்டம் இன்று மதியம் 2 மணிக்கு நடக்கிறது. இதனையொட்டி இன்று காலை கோனியம்மனுக்கு 16 வகை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

    தொடர்ந்து 6 மணிக்கு அம்மன் திருத்தேருக்கு எழுந்தருளும் நிகழ்ச்சி நடந்தது. அம்மன் திருத்தேருக்கு எழுந்தருளுவதை காண திரளான பக்தர்கள் காலையிலேயே கோவிலுக்கு வந்திருந்தனர்.

    அவர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து அம்மனை பய பக்தியுடன் தரிசித்து சென்றனர். மேலும் கோவிலில் வைக்கப்பட்டுள்ள அக்னி சாட்டு கம்பத்திற்கு தண்ணீர் ஊற்றியும், உப்பு நேர்த்தி கடன் செலுத்தியும் சாமி தரிசனம் செய்தனர்.

    இன்று மதியம் 2 மணிக்கு தேரோட்டம் நடக்கிறது. இதில் முக்கிய பிரமுகர்கள், ஏராளமான பக்தர்கள் பங்கேற்று தேரினை வடம் பிடித்து இழுக்கிறார்கள். தேரோட்டத்தில் பங்கேற்கும் பக்தர்களுக்கு இலவச மோர், தண்ணீர், அன்னதானம் உள்ளிட்டவையும் பல்வேறு அமைப்பினர், அரசியல் கட்சிகள் சார்பில் வழங்கப்பட்டது.

    தேரோட்டத்தை யொட்டி தேர் செல்லும் வீதிகளில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    கோனியம்மன் கோவில் தேரோட்டத்தில் செயின் பறிப்பு நடைபெறாத வகையில் கண்காணிப்பு பணியினை போலீசார் தீவிரப்படுத்தி உள்ளனர். செயின் பறிப்பு சம்பவங்கள் நடைபெறாத வகையில் டிரோன் காமிரா மூலமும் போலீசார் கண்காணித்து வருகின்றனர்.

    தேரோட்டத்தை தொடர்ந்து நாளை பரிவேட்டை நிகழ்ச்சி நடக்கிறது. அதனை தொடர்ந்து அம்மன் குதிரை வாகனத்தில் திருவீதி உலா வருகிறார். நாளை மறுநாள் தெப்பத்திருவிழாவும், 4-ந்தேதி தரிசனம், தீர்த்தவாரி, யாளி வாகனம், கொடியிறக்க நிகழ்ச்சி நடக்கிறது. 6-ந் தேதி வசந்தவிழாவுடன் தேரோட்ட விழா நிறைவு பெறுகிறது.

    • 28-ந்தேதி திருக்கல்யாணம் நடக்கிறது.
    • தேர்த்திரு விழா மார்ச் 1-ந்தேதி நடக்கிறது.

    கோவையின் காவல் தெய்வம் என்று அழைக்கப்படும் கோனியம்மன் கோவில் டவுன்ஹாலில் உள்ளது. இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் மாசி மாதத்தில் தேர்த்திருவிழா விமரிசையாக நடத்தப்படுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான மாசி மாத தேர்த்திரு விழா அடுத்த மாதம் (மார்ச்) 1-ந் தேதி நடக்கிறது. இதையொட்டி கடந்த மாதம் தேர் முகூர்த்தக்கால் நடப்பட்டது. கடந்த 14-ந் தேதி பூச்சாட்டு, 20-ந் தேதி கிராம சாந்தி நடந்தது.

    அதைத்தொடர்ந்து தேர்த்திருவிழாவுக்கான கொடியேற்று விழா, அக்னிசாட்டு நேற்று இரவு 7.30 மணிக்கு நடைபெற்றது. இதை யொட்டி அம்மனுக்கு சிறப்பு பூஜை செய்து கோவில் கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டது. விநாயகர், அம்மன் எழுந்தருளி அக்னிசாட்டு கம்பத்தை மேளதாளத்தோடு எடுத்து கோவிலை சுற்றி வந்து இரவு 8 மணியளவில் கோவில் வளாகத்தில் அக்னிசாட்டு கம்பம் வைக்கப் பட்டது. அப்போது பக்தர்கள் சிலர் பக்தி பரவசத்தில் சாமியாடினர்.

    இதில் பேரூர் ஆதினம் சாந்தலிங்க மருதாசல அடிகளார், சிரவை ஆதினம் குமரகுருபர சுவாமிகள், காமாட்சிபுரி ஆதீனம் சிவலிங் கேஸ்வரர் சுவாமிகள், கோவில் செயல் அலுவலர் செல்வம் பெரிய சாமி, முன்னாள் அறங்காவலர் ராம்கி, ரெயில்வே ஆலோசனை குழு உறுப்பினர் ஆர்.எஸ்.சண்முகம் உள்பட பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    தேர்த்திருவிழாவையொட்டி கோவில் கோபுரம் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது. இன்று (புதன்கிழமை) புலிவாகனத்தில் அம்மன் வீதி உலா, நாளை (வியாழக்கிழமை) கிளி வாகனத்திலும், 24-ந் தேதி சிம்ம வாகனத்திலும், 25-ந் தேதி அன்ன வாகனத்திலும், 26-ந் தேதி காமதேனு வாகனத்திலும், 27-ந் தேதி வெள்ளை யானை வாகனத்திலும் அம்மன் திருவீதி உலா நடக்கிறது.

    28-ந் தேதி திருக்கல்யாணம் நடைபெறுகிறது. விழாவின் சிகர நிகழ்ச்சியான தேர்த்திருவிழா 1-ந் தேதி மதியம் 2.05 மணிக்கு நடக்கிறது. வருகிற 2-ந் தேதி பரிவேட்டை-குதிரை வாகனம், 3-ந் தேதி தெப்பத் திருவிழா, 4-ந் தேதி தீர்த்தவாரி கொடியிறக்கம், 6-ந் தேதி வசந்த விழாவுடன் தேர்த்திருவிழா நிறைவடைகிறது.

    • 28-ந்தேதி திருக்கல்யாணம் நடைபெறுகிறது.
    • 1-ந்தேதி தேரோட்டம் நடைபெறுகிறது.

    கோவையின் காவல் தெய்வமான கோனியம்மன் கோவில் தேர்த் திருவிழா வருகிற 1-ம் தேதி நடக்கிறது. இதையொட்டி கடந்த ஜனவரி மாதம் தேருக்கு முகூர்த்தக்கால் நடப்பட்டு திருவிழா தொடங்கியது. நேற்று முன்தினம் இரவு பூச்சாட்டு நிகழ்ச்சி நடைபெற்றது.

    இதற்காக பூஜைகள் செய்யப்பட்ட கம்பம் ஊர்வலமாக எடுத்துவரப்பட்டு கோவில் வளாகத்தில் நடப்பட்டது. பின்னர் இதற்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. தொடர்ந்து பொதுமக்கள் புனித நீர் ஊற்றி வழிபட்டனர்.

    மேலும் கோவில் நடை நேற்று அதிகாலை திறக்கப்பட்டது முதல் பக்தர்கள் பூக்கம்பத்திற்கு புனித நீர் ஊற்றி வழிபட்டு வருகின்றனர். மேலும் வருகிற 21-ந் தேதி கொடியேற்றம் மற்றும் அக்னிசாட்சி நிகழ்ச்சி நடைபெறுகிறது. 22-ந் தேதி அம்மன் புலி வாகனத்திலும், 23-ந் தேதி அம்மன் கிளி வாகனத்திலும், 24-ந் தேதி அம்மன் சிம்ம வாகனத்திலும் திருவீதி உலா நடைபெறுகிறது. மேலும் அன்றைய நாள் திருவிளக்கு பூஜையும் நடைபெறும். 25-ந் தேதி அம்மன் அன்ன வாகனத்திலும், 26-ந் தேதி அம்மன் காமதேனு வாகனத்திலும், 27-ந் தேதி அம்மன் வெள்ளை யானை வாகனத்திலும் திருவீதி உலா நடைபெறுகிறது. 28-ந்தேதி திருக்கல்யாண நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. 1-ந்தேதி தேரோட்டம் நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.

    • கம்பம் கோனியம்மன் கோவிலுக்கு இன்று மாலை எடுத்து வரப்படுகிறது.
    • வெள்ளை யானை வாகனத்திலும் அம்மன் வீதி உலா நடக்கிறது.

    கோவை

    கோவையின் காவல் தெய்வமாக கோனியம்மன் கோவில் உள்ளது.

    இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் தேர்த்திருவிழா வெகு விமரி சையாக கொண்டாடப்படுகிறது.

    இந்த ஆண்டுக்கான தேர்த்திருவிழா கடந்த மாதம் 23-ந் தேதி தேர் முகூர்த்தக்கால் நிகழ்ச்சியுடன் தொடங்கி யது.விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பூச்சாட்டு திருவிழா இன்று இரவு நடக்கிறது. வெரைட்டிஹால் ரோ ட்டில் உள்ள தேவேந்திர வீதியில் இருந்து மேளதாளங்கள் முழங்க அம்மனுக்கு பூச்சாட்டு கம்பம் கோனியம்மன் கோவிலுக்கு இன்று மாலை எடுத்து வரப்படுகிறது.

    தூய்மை பணிகள் நிறைவடைந்து பல வண்ண மலர்களால் பூச்சாட்டு கம்பம் அலங்கரிக்கப்படும்.சிவாச்சாரி யர்கள் வேதங்க ளை பாராய ணம் செய்ய கோவில் கொடிக்க ம்பத்திற்கு, முன்பு பூக்கம்பம் எழுந்தருளுவிக்கப்படும்.

    பூச்சாட்டுக் கம்பம் சிவாச்சா ரியர்கள், பக்தர்கள் சூழ மங்கள இசை இசைக்க கோவிலை வலம் வந்து கோவில் முன்பகுதியில் நடப்படும். அதற்கு மஞ்சள் பூசி குங்கும திலகமிடப்படும்.பூச்சாட்டு கம்பத்துக்கு மலர்கள் அணிவித்து சிறப்பு வழிபாடுகள் செய்யப்படும். தொடர்ந்து கம்பத்திற்கு கீழ் பகுதியில் உப்பு, மஞ்சள், மிளகு ஆகியவை வைத்து பக்தர்கள் வழிபாடு செய்வர். மேளதாளங்கள், மங்கள இசை இசைக்கப்படும். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொள்வார்கள்.

    20-ந் தேதி( திங்கட்கிழமை) கிராமசா ந்தி பூஜையும், 21-ந் தேதி( செவ்வாய்க்கிழமை) கொடியேற்றம், அக்னிசாட்டு நிகழ்ச்சி நடக்கிறது.22-ந் தேதி(புதன்கிழமை) அம்மன் புலி வாகனத்தில் திருவீதி உலாவும், 23-ந் தேதி கிளி வாகனம், 24-ந் தேதி சிம்மன வாகனத்தில் அம்மன் வீதி உலா மற்றும் திருவிளக்கு பூஜை நடக்கிறது.25-ந் தேதி அன்ன வாகனத்திலும், 26-ந் தேதி காமதேனு வாகனத்திலும், 27-ந் தேதி வெள்ளை யானை வாகனத்திலும் அம்மன் வீதி உலா நடக்கி றது.

    28-ந் தேதி(செவ்வா ய்க்கிழமை) திருக்கல்யாண நிகழ்ச்சி நடக்கிறது. விழாவின் சிகர நிகழ்ச்சியான திருத்தேரோட்டம் மார்ச் 1-ந் தேதி(புதன்கிழமை) நடக்கிறது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று தேரை வடம் பிடித்து இழுக்கிறார்கள்.2-ந் தேதி பரிவேட்டை- குதிரை வாகனம், 3-ந் தேதி தெப்பத்திருவிழா, 4-ந் தேதி தரிசனம், தீர்த்தவாரி, யாளி வாகனம், கொடியிறக்க நிகழ்ச்சியும், 6-ந் தேதி வசந்தவிழாவுடன் தேரோட்ட விழா நிறைவு பெறுகிறது.

    • மார்ச் 1-ந் தேதி திருத்தேரோட்டம் நடக்கிறது.
    • மார்ச் 2-ந்தேதி பதிவேட்டை குதிரை வாகன உலா நடைபெறும்.

    கோவையில் பிரசித்தி பெற்ற கோனியம்மன் கோவில் தேர்த்திருவிழா நடக்கிறது. இதற்கான முகூர்த்தக்கால் நடும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. அடுத்த மாதம் (பிப்ரவரி) 14-ந் தேதி இரவு 7.30 மணிக்கு பூச்சாட்டு விழாவுடன் தேர் திருவிழா தொடங்குகிறது. 20-ந் தேதி கிராம சாந்தி நிகழ்ச்சி 21-ந் தேதி கொடியேற்றம், இரவு 7.30 மணிக்கு அக்னி சாட்டு விழா நடைபெற உள்ளது. 22-ந் தேதி புலி வாகனத்தில் அம்மன் திருவீதி உலாநடக்கிறது. 24-ந் தேதி இரவு திருவிளக்கு வழிபாடு நிகழ்ச்சி நடக்கிறது. 28-ந்தேதி திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெறும்.

    பின்னர் மார்ச் 1-ந் தேதி திருத்தேரோட்டம் மதியம் 2.05 மணிக்கு திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி நடக்கிறது.அதன்படி ராஜ வீதி தேர் நிலை திடலில் இருந்து புறப்படும் தேர் ராஜவீதி, ஒப்பணக்கார வீதி, கருப்ப கவுண்டர் வீதி, வைசியா வீதி வழியாக மீண்டும் தேர்நிலை வந்தடையும். இதனைத் தொடர்ந்து மார்ச் 2-ந் தேதி பதிவேட்டை குதிரை வாகன உலா நடைபெறும். 3-ந் தேதி தெப்ப திருவிழா மற்றும் 4 -ந் தேதி தீர்த்தவாரிகொடி இறக்க நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.

    விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் செயல் தலைவர் செல்வம் பெரியசாமி குழுவினர் செய்துள்ளனர். முன்னதாக முகூர்த்தக்கால் நடும் நிகழ்ச்சியில் முன்னாள் எம்.எல்.ஏ. கார்த்திக் மற்றும் ஸ்ரீராம் டுடோரியல் ராம்கி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×