search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "குறைந்தது"

    • நீர்பிடிப்பு பகுதியில் மழை பொழிவு இல்லாததால் இன்றும் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து குறைந்தது.
    • இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 101.65 அடியாக உள்ளது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தின் முக்கிய நீர் ஆதாரமாக விளங்கும் பவானிசாகர் அணையின் கொள்ளளவு 105 அடி ஆகும். அணையின் முக்கிய நீர் பிடிப்பு பகுதியாக நீலகிரி மலைப்ப குதி உள்ளது.

    நீர்ப்பிடிப்பு பகுதியில் பரவலாக மழை பெய்ததால் கடந்த ஆகஸ்ட் மாதம் 5-ந் தேதி பவானிசாகர் அணை 102 அடியை எட்டியது.

    இதையடுத்து அணையின் பாதுகாப்பு கருதி உபரிநீர் பவானி ஆற்றில் திறந்து விடப்பட்டது. இந்நிலையில் நீர் பிடிப்பு பகுதியில் மழை குறைந்ததால் அணைக்கு நீர்வரத்து குறைந்தது.

    எனினும் அணைக்கு வரும் தண்ணீரும், பாசனத்துக்கு திறக்கப்படும் தண்ணீரும் ஒரே அளவில் இருந்ததால் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து 102 அடியில் நீடித்து வந்தது.

    இந்நிலையில் 56 நாட்களுக்கு பிறகு நேற்று பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 101.92 அடியாக குறைந்தது. தொடர்ந்து நீர்பிடிப்பு பகுதியில் மழை பொழிவு இல்லாததால் இன்றும் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து மேலும் குறைந்தது.

    இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 101.65 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 913 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

    பாசனத்திற்காக கீழ் பவானி வாய்க்காலில் 2,300 கன அடி, காலிங்கராயன் பாசனத்திற்கு 500 கன அடி என மொத்தம் 2,800 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    • நீர்ப்பிடிப்பு பகுதியில் கடந்த சில நாட்களாக மழைப்பொழிவு இல்லாததால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து குறைய தொடங்கியுள்ளது.
    • இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணைக்கு வினாடிக்கு 2,900 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது.

    ஈரோடு:

    பவானிசாகர் அணையின் நீர்பிடிப்பு பகுதியான நீலகிரி மலைப்பகுதியில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வந்தது. இதன் காரணமாக 105 அடி கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணையின் நீர்மட்டம் கடந்த மாதம் 5-ந் தேதி 102 அடியை எட்டியது.

    அணையின் பாதுகாப்பு கருதி அணைக்கு வரும் உபரிநீர் அப்படியே பவானி ஆற்றுக்கு திருப்பி விடப்ப ட்டது. பின்னர் மழைப்பொ ழிவு இல்லாத போது நீர்வரத்து குறைவதும், மழை பொழிவின்போது நீர்வரத்து அதிகரிப்பதும் என மாறி மாறி வந்து கொண்டு இருக்கிறது.

    இந்நிலையில் நீர்ப்பிடிப்பு பகுதியில் கடந்த சில நாட்களாக மழைப்பொழிவு இல்லாததால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து குறைய தொடங்கியுள்ளது.

    இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணைக்கு வினாடிக்கு 2,900 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து பாசனத்திற்காகவும், குடிநீருக்காகவும் 2,800 கன அடி வீதம் தண்ணீர் வெளி யேற்றப்பட்டு வருகிறது.

    இதேப்போல் மாவட்டத்தில் உள்ள பிரதான அணைகளில் நீர்வரத்து சற்று அதிகரித்து ள்ளது. 41.75 அடி கொண்ட குண்டேரி பள்ளம் அணை யின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 36.04 அடியாக உள்ளது.

    30.84 அடி கொண்ட பெரும்பள்ளம் அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 21.26 அடியாக உள்ளது. இதேபோல் 33.50 அடி கொண்ட வரட்டுபள்ளம் அணியின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 33.46 அடியாக உள்ளது.

    • நீர்ப்பிடி ப்பு பகுதியில் கடந்த சில நாட்களாக மழைப்பொழிவு இல்லாததால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து குறைய தொடங்கியுள்ளது.
    • இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணைக்கு வினாடிக்கு 3,100 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது.

    ஈரோடு:

    பவானிசாகர் அணையின் நீர்பிடிப்பு பகுதியான நீலகிரி மலைப்பகுதியில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருவதால் 105 அடி கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணையின் நீர்மட்டம் கடந்த மாதம் 5-ந் தேதி 102 அடியை எட்டியது.

    அணையின் பாதுகாப்பு கருதி அணைக்கு வரும் நீர் அப்படியே பவானி ஆற்றுக்கு திருப்பி விடப்பட்டது. பின்னர் மழைப்பொழிவு இல்லாத போது நீர் வரத்து குறைவதும், மழை பொழிவின்போது நீர்வரத்து அதிகரிப்பதும் என மாறி மாறி வந்து கொண்டு இருக்கிறது.

    இந்நிலையில் நீர்ப்பிடி ப்பு பகுதியில் கடந்த சில நாட்களாக மழைப்பொழிவு இல்லாததால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து குறைய தொடங்கியுள்ளது.

    இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணைக்கு வினாடிக்கு 3,100 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து பாசனத்திற்காகவும், குடிநீருக்காகவும் 3 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    • சுகாதாரத் துறையினர் வெளியிட்டுள்ள பட்டியல் படி மாவட்டத்தில் மேலும் 24 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
    • இதுவரை 1 லட்சத்து 34 ஆயிரத்து 874 பேர் பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் கடந்த 3 மாதத்திற்கும் மேலாக கொரோனா தினசரி பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. அதே நேரம் சிகிச்சையில் இருப்பவர்கள் குணமடைந்து வீடு திரும்பி வருகின்றனர்.

    கடந்த சில நாட்களாக தினசரி பாதிப்பை விட குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

    நேற்று சுகாதாரத் துறையினர் வெளியிட்டுள்ள பட்டியல் படி மாவட்டத்தில் மேலும் 24 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாவட்டத்தில் கொரோனாவால் மொத்தம் பாதித்தவர்கள் எண்ணிக்கை 1 லட்சத்து 35 ஆயிரத்து 821 ஆக உயர்ந்துள்ளது.

    மேலும் சிகிச்சையில் இருந்த 23 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை 1 லட்சத்து 34 ஆயிரத்து 874 பேர் பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

    இதுவரை 734 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். தற்போது மாவட்டத்தில் கொரோனா பாதிப்புடன் 213 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    • கடந்த சில மாதங்களாக பருத்தி மூட்டைகள் வரத்து அதிக அளவில் இருந்தது.
    • இந்த வாரம் ஆயிரம் மூட்டைகள் மட்டும் பருத்தி மூட்டைகள் கொண்டு வரப்பட்டது.

    அந்தியூர்:

    அந்தியூர் ஒழுங்குமுறை விற்பனை கூடம் அத்தாணி சாலை வாரச்சந்தை எதிர்ப்புறம்அமைந்துள்ளது. இங்கு விவசாயிகளின் விளை பொருட்கள் கொண்டு வரப்பட்டு விற்பனை நடைபெறும்.

    இந்த நிலையில் அந்தியூர் தவிட்டுப்பாளையம், வெள்ளியம்பாளையம், வட்டக்காடு, புதுக்காடு, காந்தி நகர், சங்கரா பாளை யம், எண்ணமங்கலம், சின்னத்தம்பி பாளையம், பச்சம் பாளையம், கள்ளி மடை குட்டை உள்ளிட்ட பகுதிகளில் விவசாயிகள் பருத்தி பயிரிட்டு உள்ளனர்.

    இதையொட்டி வெள்ளிக்கிழமை முதல்திங்கட்கிழமை வரை ஒழுங்குமுறை விற்பனை கூட கட்டிடத்தில் பருத்தி வைக்கப்பட்டு அதன் ஏலம் திங்கட்கிழமை காலை அந்தியூர் ஒழுங்குமுறை விற்பனை கூட கண்காணிப்பாளர் ஞானசேகர் முன்னிலையில் நடைபெறும்.

    இந்த ஏலத்தில் புளியம்பட்டி, அன்னூர், கொங்கணாபுரம், சத்தியமங்கலம், அவிநாசி, ஆந்திர மாநிலம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வியாபாரிகள் வந்து பருத்தியின் விளைச்சலுக்கு ஏற்றவாறு விலை நிர்ணயிக்கப்பட்டு ஏலம் எடுத்து வருகிறார்கள்.

    கடந்த சில மாதங்களாக பருத்தி மூட்டைகள் வரத்து அதிக அளவில் இருந்தது. இந்த நிலையில் பருத்தி விளைச்சல் குறைவானதை யொட்டி அந்தியூர் ஒழுங்கு முறை கூடத்துக்கு பருத்தி வரத்து குறைந்தது.

    இதையடுத்து இந்த வாரம் ஆயிரம் மூட்டைகள் மட்டும் பருத்தி மூட்டைகள் கொண்டு வரப்பட்டது.

    • இன்று காலை மேலும் நீர் வரத்து குறைந்து பவானிசாகர் அணைக்கு 5ஆயிரம் கன அடியாக நீர் வரத்து குறைந்தது.
    • அணைக்கு வினாடிக்கு 5400 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அதே 5,400 கன அடி நீர் அப்படியே வெளியேற்றப்பட்டு வருகிறது.

    ஈரோடு:

    பவானிசாகர் அணையின் நீர் பிடிப்பு பகுதியான நீலகிரி மலைப்பகுதியில் கடந்த சில நாட்களாகவே கன மழை பெய்து வந்தது. இதன் காரணமாக கோவை மாவட்டம் பில்லூர் அணை நிரம்பியது. அங்கிருந்து உபரி நீர் முழுவதும் அப்படியே பவானிசாகர் அணைக்கு வருகிறது.

    இதன் காரணமாக கடந்த 5-ந் தேதி பவானிசாகர் அணை 102 அடியை எட்டியது. இதனைத் தொடர்ந்து அணையின் பாதுகாப்பு கருதி அணைக்கு வரும் உபரி நீர் அப்படியே வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனைத் தொடர்ந்து பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

    இதனால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கையும் விடுக்கப்பட்டது. முதலில் பவானிசாகர் அணைக்கு 25 ஆயிரம் கனஅடி நீர் வந்தது. மழை குறைந்ததால் நீர் வரத்தும் குறைந்தது.

    இன்று காலை மேலும் நீர் வரத்து குறைந்து பவானிசாகர் அணைக்கு 5ஆயிரம் கன அடியாக நீர் வரத்து குறைந்தது.

    இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணை 102 அடியில் தொடர்ந்து நீடிக்கிறது. அணைக்கு வினாடிக்கு 5400 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அதே 5,400 கன அடி நீர் அப்படியே வெளியேற்றப்பட்டு வருகிறது. 

    • இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணை 102 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 15,600 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது.
    • தொடர்ந்து இன்று 8-வது நாளாக கொடிவேரி அணையில் குளிக்க பொதுமக்களுக்கு தடை நீடிக்கப்பட்டுள்ளது.

    ஈரோடு:

    பவானிசாகர் அணையின் நீர் பிடிப்பு பகுதியான நீலகிரி மலைப்பகுதியில் கடந்த சில நாட்களாகவே கன மழை பெய்து வந்தது. இதன் காரணமாக கோவை மாவட்டம் பில்லூர் அணை நிரம்பியது.

    அங்கிருந்து உபரி நீர் முழுவதும் அப்படியே பவானிசாகர் அணைக்கு வருகிறது. இதன் காரணமாக பவானிசாகர் அணை 102 அடியை எட்டியது. இதனைத்தொடர்ந்து அணையின் பாதுகாப்பு கருதி அணைக்கு வரும் உபரி நீர் அப்படியே வெளி யேற்றப்பட்டு வருகிறது.

    இதனைத் தொடர்ந்து பவானி ஆற்றில் வெள்ள ப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில் நீர்ப்பிடிப்பு பகுதியில் மழை பொழிவு குறைந்ததால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து குறைய தொடங்கியது.

    நேற்று 20 ஆயிரம் கன அடி நீர் வந்து கொண்டிருந்த நிலையில் இன்று 15 ஆயிரம் கன அடியாக குறைந்தது. இதனால் பவானிசாகர் அணையில் இருந்து பவானி ஆற்றுக்கும் நீர் திறப்பு குறைக்கப்பட்டுள்ளது.

    இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணை 102 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 15,600 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது. இந்த 15,600 கன அடி நீர் அப்படியே பவானி ஆற்றுக்கு உபரி நீராக திறந்து விடப்பட்டு வருகிறது.

    தொடர்ந்து இன்று 8-வது நாளாக கொடிவேரி அணையில் குளிக்க பொதுமக்களுக்கு தடை நீடிக்கப்பட்டுள்ளது. 

    ஈரோடு:

    ஈரோடு வ.உ.சி. காய்கறி மார்க்கெட்டு தினமும் ஆந்திரா, கிருஷ்ணகிரி, ஒட்டன்சத்திரம், தாளவாடி போன்ற பகுதிகளில் இருந்து தக்காளி அதிக அளவில் விற்பனைக்கு வந்தது. தினமும் 10 முதல் 12 டன் தக்காளி லோடு வந்தது.

    இந்நிலையில் சமீபகா லமாக தக்காளி விலை கூடுவதும், குறைவதுமாக இருந்து வருகிறது. கடந்த வாரம் வ.உ.சி. மார்க்கெட்டில் ஒரு கிலோ தக்காளி ரூ.45-க்கு விற்பனையானது.

    தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்ததால் தக்காளி விளைச்சல் பாதிக்கப்பட்டு மீண்டும் வரத்து குறைய தொடங்கியது. இதன் எதிரொலியாக தக்காளி விலையும் அதிகரித்துள்ளது.

    இந்நிலையில் மார்க்கெட்டிற்கு கடந்த சில நாட்களாக மீண்டும் தக்காளி அதிக அளவில் வரத்தாகி வருகிறது. இன்று வ.உ.சி. மார்க்கெட்டில் தக்காளி அதிகளவில் விற்பனைக்கு வந்தது.

    இன்று தாளவாடி, சத்தியமங்கலம், ஆந்திரா பகுதியில் இருந்து 25 டன் தக்காளி வந்தது. இதனால் தக்காளி விலை கிடுகிடு என குறைந்தது. ஒரு கிலோ தக்காளி ரூ.15-க்கு விற்பனையானது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    • வ.உ.சி. காய்கறி மார்க்கெட்டுக்கு இன்று ஆந்திரா, குப்பம் போன்ற பகுதியில் இருந்து 20 டன் தக்காளி விற்பனைக்கு வந்தது. இதனால் தக்காளி விலை குறைந்தது.
    • ஒரு கிலோ தக்காளி ரூ.25-க்கு விற்பனையானது. சுமாரான தக்காளி ரூ.20-க்கு விற்பனையானது.

    ஈரோடு:

    ஈரோடு வ.உ.சி. காய்கறி மார்க்கெட்டுக்கு தினமும் ஆந்திரா, கிருஷ்ணகிரி, ஒட்டன்சத்திரம், தாளவாடி போன்ற பகுதிகளில் இருந்து தக்காளி அதிக அளவில் விற்பனைக்கு வருகிறது. தினமும் 10 முதல் 12 டன் தக்காளி லோடு வரும்.

    இந்நிலையில் சமீபகா லமாக தக்காளி விலை கூடுவதும், குறைவதுமாக நிலையற்ற தன்மையுடன் இருந்து வருகிறது. கடந்த வாரம் வ.உ.சி. மார்க்கெ ட்டில் ஒரு கிலோ தக்காளி ரூ.45-க்கு விற்பனையானது.

    இந்த நிலையில் தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்ததால் தக்காளி விளைச்சல் பாதிக்கப்பட்டு மீண்டும் வரத்து குறைய தொடங்கியுள்ளது. இதன் எதிரொலியாக தக்காளி விலையும் அதிகரித்தது.

    கடந்த 3 நாட்களுக்கு முன்பு வ.உ.சி காய்கறி மார்க்கெட்டில் தக்காளி விலை ஒரு கிலோ ரூ.50-க்கு விற்பனையானது. இன்று வ.உ.சி.மார்க்கெ ட்டில் தக்காளி வரத்து அதிகரித்தது.

    இன்று ஆந்திரா, குப்பம் போன்ற பகுதியில் இருந்து 20 டன் தக்காளி விற்பனைக்கு வந்தது. இதனால் தக்காளி விலை குறைந்தது. ஒரு கிலோ தக்காளி ரூ.25-க்கு விற்பனையானது. சுமாரான தக்காளி ரூ.20-க்கு விற்பனையானது.

    • சத்தியமங்கலம் பூ மார்க்கெட்டில் முகூர்த்த தினங்கள் இல்லாததால் மல்லிகைப்பூ விலை குறைந்து ரூ.௩௫௦-க்கு விற்பனையானது.
    • மல்லிகை விலை கடும் வீழ்ச்சி அடைந்ததால் விவசாயிகள் வேதனை அடைந்தனர்.

    சத்தியமங்கலம்:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள விவசாயிகள் பல்வேறு வகையான பயிர்களை அதிகளவில் பயிரிட்டு அறுவடை செய்து வருகிறார்கள்.

    இதே போல் சத்திய மங்கலம், பு.புளியம்பட்டி, பவானிசாகர், சிக்கரசம் பட்டி, புது வடவள்ளி, ராஜன் நகர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் விவசாயிகள் பலர் மல்லிகைப்பூ உள்பட பல்வேறு பூக்கள் பயிரிட்டு உள்ளனர்.

    இந்த பகுதிகளில் விளையும் பூக்களை சத்தியமங்கலம் பஸ் நிலையம் அருகே செயல்படும் பூ மார்க்கெட்டுக்கு கொண்டு வரப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    சத்தியமங்கலத்தில் விற்பனை செய்யப்படும் மல்லிகைப் பூக்கள் உள்ளூர் மற்றும் வெளியூர், வெளி மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. இங்கு விற்பனை செய்யப்படும் பூக்கள் பொதுமக்கள் விரும்பி வாங்குகிறார்கள். இதனால் வியாபாரிகள் மற்றும் வாடிக்கையாளர்கள் ஏராளமானோர் இங்கு வந்து பூக்களை அதிகளவில் கொள்முதல் செய்கிறார்கள்.

    மேலும் இந்த பகுதிகளில் விளையும் மல்லிகைப் பூக்கள் சிங்கப்பூர், துபாய், சார்ஜா உள்பட பல வெளி நாடுகளுக்கு நறுமணப் பொருட்கள் தயாரிக்க ஏற்றுமதி செய்யப்படுகிறது.

    இதனால் இங்கு மல்லிகைப்பூ சாதாரண நாட்களில் ரூ.500 வரையும் முகூர்த்தம் மற்றும் விழாக் காலங்களில் ரூ.3 ஆயிரம் வரையும் வியாபாரிகள் கொள்முதல் செய்கிறார்கள். கேரளா மாநிலத்தில் நடக்கும் விஷேச நாட்களில் விலை மேலும் உயர்ந்து காணப்படும்.

    இந்த நிலையில் கடந்த 2 வாரங்களுக்கு முன்பு முகூர்த்த நாட்கள் தொடர்ச்சியாக வந்தது. இதனால் மல்லிகைப்பூக்கள் தேவை அதிகரித்தது. இதன் காரணமாக மல்லிகைப் பூ ரூ.3 ஆயிரம் முதல் ரூ.4 ஆயிரம் வரை விற்பனை செய்யப்பட்டது.

    இந்த நிலையில் கடந்த சில நாட்களாக முகூர்த்த நாட்கள் இல்லாததால் சத்தியமங்கலம் பூ மார்க்கெட்டில் மல்லிகை பூ விலை குறைந்தது. கடந்த ஒரு மாதமாக 1 கிலோ மல்லிகைப்பூ ரூ.2 ஆயிரத்துக்கு மேல் விற்பனையானது.

    ஆனால் முகூர்த்தம் மற்றும் விஷேச நாட்கள் இல்லாததால் வியாபாரிகள் ஒரு சிலர் மட்டுமே வந்திருந்தனர்.

    இதனால் நேற்று 1 கிலோ மல்லிகை ரூ.350-க்கு விற்பனை செய்யப்பட்டது. மல்லிகை விலை கடும் வீழ்ச்சி அடைந்ததால் விவசாயிகள் வேதனை அடைந்தனர்.

    சத்தியமங்கலம் பூ மார்க்கெட்டி பூக்கள் விலை நிலவரம் வருமாறு:

    மல்லிகை ரூ.350, முல்லை ரூ.100, காக்கடா ரூ.75, செண்டு மல்லி ரூ.28, கனகாம்பரம் ரூ.550, சம்பங்கி ரூ.10, அரளி ரூ.50, செவ்வந்தி ரூ.120 விற்பனையானது.

    • சமீபகாலமாக தக்காளி விலை கூடுவதும் குறைவதுமாக நிலையற்ற தன்மையுடன் இருந்து வருகிறது.
    • ஈரோடு வ.உ.சி. பூங்கா மார்க்கெட்டுக்கு 30 டன் தக்காளி விற்பனைக்கு வந்தது. இதனால் தக்காளி விலை குறைந்தது.

    ஈரோடு:

    ஈரோடு வ.உ.சி. காய்கறி மார்க்கெட்டுக்கு தினமும் ஆந்திரா, கிருஷ்ணகிரி, ஒட்டன்சத்திரம், தாளவாடி போன்ற பகுதிகளில் இருந்து தக்காளி அதிக அளவில் விற்பனைக்கு வந்தது. தினமும் 15 டன் தக்காளி லோடு ரத்தாகி வந்தது.

    இந்நிலையில் சமீபகாலமாக தக்காளி விலை கூடுவதும் குறைவதுமாக நிலையற்ற தன்மையுடன் இருந்து வருகிறது. கடந்த வாரம் வ.உ.சி. மார்க்கெட்டில் ஒரு கிலோ தக்காளி ரூ.35-க்கு விற்பனையானது. இந்திலையில் தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருவதால் தக்காளி விளைச்சல் பாதிக்கப்பட்டு வரத்து குறைய தொடங்கியுள்ளது. இதன் எதிரொலியாக தக்காளி விலையும் அதிகரித்துள்ளது.

    கடந்த 3 நாட்களுக்கு முன்பு வ.உ.சி காய்கறி மார்க்கெட்டில் தக்காளி வரத்து குறைய தொடங்கியது தக்காளி விலை அதிகரித்து ஒரு கிலோ ரூ.50-க்கு விற்பனையானது.

    இந்நிலையில் இன்று மார்க்கெட்டில் தக்காளி வரத்து அதிகரித்தது. இன்று கிருஷ்ணகிரி, ஆந்திரா, குப்பம் போன்ற பகுதியில் இருந்து எப்போதும் இல்லாத அளவாக 30 டன் தக்காளி விற்பனைக்கு வந்தது. இதனால் தக்காளி விலை குறைந்தது. ஒரு கிலோ தக்காளி ரூ.30-க்கு பெற்றது. சுமாரான தக்காளி ரூ.25-க்கு விற்பனையானது.

    ×