என் மலர்
நீங்கள் தேடியது "VOC market"
- பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று புனித நீர் ஊற்றி வருகின்றனர்.
- விழாவின் முக்கிய நிகழ்ச்சியான குண்டம் விழா இன்று நடை பெற்றது.
ஈரோடு:
ஈரோடு பெரிய மாரியம்மன் வகையறா கோவில்களில் ஒவ்வொரு ஆண்டும் குண்டம், தேர் திருவிழா வெகு விமரிசியாக நடைபெற்று வருகிறது. அதன்படி இந்த ஆண்டுக்கான குண்டம் திருவிழா தொடங்கி நடந்து வருகிறது.
ஒவ்வொரு நாளும் பெரிய மாரியம்மன் கோவில் கம்பத்துக்கு புனித நீர் ஊற்ற ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று புனித நீர் ஊற்றி வருகின்றனர். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான குண்டம் விழா இன்று நடைபெற்றது.
அதைத்தொடர்ந்து நாளை தேர் திருவிழா நடைபெறுகிறது. வருகிற 5-ந் தேதி பெரிய மாரியம்மன் வகையறா கோவில்களில் நடப்பட்ட கம்பங்கள் எடுக்கப்பட்டு ஊர்வலமாக வந்து காவிரி ஆற்றில் விடப்படுகிறது. கோவில் திருவிழா காரணமாக ஈரோடு மாநகரம் விழாக்கோலம் பூண்டுள்ளது.
ஈரோடு வ.உ.சி மார்க்கெட்டில் 700-க்கும் மேற்பட்ட காய்கறி கடைகள் செயல்பட்டு வருகிறது. இங்கு சில்லரை மற்றும் மொத்த வியாபாரம் நடைபெற்று வருகிறது. இதன் வளாகத்திலேயே பழச் சந்தையும் செயல்பட்டு வருகிறது.
தாளவாடி, திருப்பூர், ஒட்டன்சத்திரம், பெங்களூர், ஆந்திரா போன்ற பகுதிகளில் இருந்து காய்கறிகள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது. எப்பவும் வ.உ.சி மார்க்கெட் ஆட்கள் நடமாட்டமாக பரபரப்புடன் காட்சியளிக்கும்.
இந்நிலையில் பெரிய மாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு இன்று வ.உ.சி. பூங்கா காய்கறி மார்க்கெட்டிற்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
இதையொட்டி இன்று காலை ஆயிரக்கணக்கான காய்கறி வியாபாரிகள் கருங்கல்பாளையத்தில் உள்ள காவிரி ஆற்றங்கரையில் புனித நீரை எடுத்து ஊர்வலமாக வந்து ஈரோடு பெரிய மாரியம்மன் கோவில் கம்பத்துக்கு புனித நீர் ஊற்றி வழிபட்டனர்.
இன்று காய்கறி மார்க்கெட்டுக்கு விடுமுறை அளிக்கப்பட்ட தகவல் தெரியாமல் ஏராளமான பொதுமக்கள் காய்கறி வாங்க வந்திருந்தனர். விடுமுறை அளிக்க ப்பட்டதால் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.
ஈரோடு:
ஈரோடு வ.உ.சி. காய்கறி மார்க்கெட்டு தினமும் ஆந்திரா, கிருஷ்ணகிரி, ஒட்டன்சத்திரம், தாளவாடி போன்ற பகுதிகளில் இருந்து தக்காளி அதிக அளவில் விற்பனைக்கு வந்தது. தினமும் 10 முதல் 12 டன் தக்காளி லோடு வந்தது.
இந்நிலையில் சமீபகா லமாக தக்காளி விலை கூடுவதும், குறைவதுமாக இருந்து வருகிறது. கடந்த வாரம் வ.உ.சி. மார்க்கெட்டில் ஒரு கிலோ தக்காளி ரூ.45-க்கு விற்பனையானது.
தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்ததால் தக்காளி விளைச்சல் பாதிக்கப்பட்டு மீண்டும் வரத்து குறைய தொடங்கியது. இதன் எதிரொலியாக தக்காளி விலையும் அதிகரித்துள்ளது.
இந்நிலையில் மார்க்கெட்டிற்கு கடந்த சில நாட்களாக மீண்டும் தக்காளி அதிக அளவில் வரத்தாகி வருகிறது. இன்று வ.உ.சி. மார்க்கெட்டில் தக்காளி அதிகளவில் விற்பனைக்கு வந்தது.
இன்று தாளவாடி, சத்தியமங்கலம், ஆந்திரா பகுதியில் இருந்து 25 டன் தக்காளி வந்தது. இதனால் தக்காளி விலை கிடுகிடு என குறைந்தது. ஒரு கிலோ தக்காளி ரூ.15-க்கு விற்பனையானது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
- வ.உ.சி. காய்கறி மார்க்கெட்டுக்கு இன்று ஆந்திரா, குப்பம் போன்ற பகுதியில் இருந்து 20 டன் தக்காளி விற்பனைக்கு வந்தது. இதனால் தக்காளி விலை குறைந்தது.
- ஒரு கிலோ தக்காளி ரூ.25-க்கு விற்பனையானது. சுமாரான தக்காளி ரூ.20-க்கு விற்பனையானது.
ஈரோடு:
ஈரோடு வ.உ.சி. காய்கறி மார்க்கெட்டுக்கு தினமும் ஆந்திரா, கிருஷ்ணகிரி, ஒட்டன்சத்திரம், தாளவாடி போன்ற பகுதிகளில் இருந்து தக்காளி அதிக அளவில் விற்பனைக்கு வருகிறது. தினமும் 10 முதல் 12 டன் தக்காளி லோடு வரும்.
இந்நிலையில் சமீபகா லமாக தக்காளி விலை கூடுவதும், குறைவதுமாக நிலையற்ற தன்மையுடன் இருந்து வருகிறது. கடந்த வாரம் வ.உ.சி. மார்க்கெ ட்டில் ஒரு கிலோ தக்காளி ரூ.45-க்கு விற்பனையானது.
இந்த நிலையில் தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்ததால் தக்காளி விளைச்சல் பாதிக்கப்பட்டு மீண்டும் வரத்து குறைய தொடங்கியுள்ளது. இதன் எதிரொலியாக தக்காளி விலையும் அதிகரித்தது.
கடந்த 3 நாட்களுக்கு முன்பு வ.உ.சி காய்கறி மார்க்கெட்டில் தக்காளி விலை ஒரு கிலோ ரூ.50-க்கு விற்பனையானது. இன்று வ.உ.சி.மார்க்கெ ட்டில் தக்காளி வரத்து அதிகரித்தது.
இன்று ஆந்திரா, குப்பம் போன்ற பகுதியில் இருந்து 20 டன் தக்காளி விற்பனைக்கு வந்தது. இதனால் தக்காளி விலை குறைந்தது. ஒரு கிலோ தக்காளி ரூ.25-க்கு விற்பனையானது. சுமாரான தக்காளி ரூ.20-க்கு விற்பனையானது.
- சமீபகாலமாக தக்காளி விலை கூடுவதும் குறைவதுமாக நிலையற்ற தன்மையுடன் இருந்து வருகிறது.
- ஈரோடு வ.உ.சி. பூங்கா மார்க்கெட்டுக்கு 30 டன் தக்காளி விற்பனைக்கு வந்தது. இதனால் தக்காளி விலை குறைந்தது.
ஈரோடு:
ஈரோடு வ.உ.சி. காய்கறி மார்க்கெட்டுக்கு தினமும் ஆந்திரா, கிருஷ்ணகிரி, ஒட்டன்சத்திரம், தாளவாடி போன்ற பகுதிகளில் இருந்து தக்காளி அதிக அளவில் விற்பனைக்கு வந்தது. தினமும் 15 டன் தக்காளி லோடு ரத்தாகி வந்தது.
இந்நிலையில் சமீபகாலமாக தக்காளி விலை கூடுவதும் குறைவதுமாக நிலையற்ற தன்மையுடன் இருந்து வருகிறது. கடந்த வாரம் வ.உ.சி. மார்க்கெட்டில் ஒரு கிலோ தக்காளி ரூ.35-க்கு விற்பனையானது. இந்திலையில் தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருவதால் தக்காளி விளைச்சல் பாதிக்கப்பட்டு வரத்து குறைய தொடங்கியுள்ளது. இதன் எதிரொலியாக தக்காளி விலையும் அதிகரித்துள்ளது.
கடந்த 3 நாட்களுக்கு முன்பு வ.உ.சி காய்கறி மார்க்கெட்டில் தக்காளி வரத்து குறைய தொடங்கியது தக்காளி விலை அதிகரித்து ஒரு கிலோ ரூ.50-க்கு விற்பனையானது.
இந்நிலையில் இன்று மார்க்கெட்டில் தக்காளி வரத்து அதிகரித்தது. இன்று கிருஷ்ணகிரி, ஆந்திரா, குப்பம் போன்ற பகுதியில் இருந்து எப்போதும் இல்லாத அளவாக 30 டன் தக்காளி விற்பனைக்கு வந்தது. இதனால் தக்காளி விலை குறைந்தது. ஒரு கிலோ தக்காளி ரூ.30-க்கு பெற்றது. சுமாரான தக்காளி ரூ.25-க்கு விற்பனையானது.






