search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வ.உ.சி."

    • முன்னாள் அமைச்சர் ராஜலெட்சுமி விழாவில் கலந்து கொண்டு வ.உ.சி.யின் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
    • விழாவின் போது பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது.

    சங்கரன்கோவில்:

    சங்கரன்கோவில் உச்சினிமாகாளியம்மன் கோவில் தெருவில் அ.தி.மு.க. சார்பில் கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனாரின் பிறந்தநாள் விழா கொண்டாடப் பட்டது. அ.தி.மு.க. நகர்மன்ற உறுப்பினர் அண்ணாமலை புஷ்பம் தலைமை தாங்கினார். மாவட்ட மாணவரணி பொருளாளர் மாரியப்பன், முன்னாள் நகர்மன்ற உறுப்பினர் உமா மகேஸ்வரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இதில் சிறப்பு விருந்தினராக முன்னாள் அமைச்சரும், அ.தி.மு.க. மாநில மகளிர் அணி துணை செயலாளருமான ராஜலெட்சுமி கலந்து கொண்டு வ.உ.சி.யின் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது.

    விழாவில் சங்கரன்கோவில் ஒன்றிய செயலாளர் ரமேஷ், நகர செயலாளர் ஆறுமுகம், நகர்மன்ற உறுப்பினர் சங்கரசுப்பிரமணியன், தலைமை நிலைய பேச்சாளர்கள் கணபதி, ராமசுப்பிரமணியன், நகர அவை தலைவர் வேலுச்சாமி, பொருளாளர் அய்யப்பன், நகர பேரவை செயலாளர் சவுந்தர் என்ற சாகுல் ஹமீது, எழில்நகர் கிளை செயலாளர் பாபு, களப்பாகுளம் கிளை செயலாளர் பசும்பொன், தகவல் தொழில் நுட்ப அணி நிர்வாகிகள் முருகன், செந்தில்குமார், குட்டி மாரியப்பன், சிவஞான ராஜா உள்ளிட்ட ஏராளமான அ.தி.மு.க.வினர் கலந்து கொண்டு வ.உ.சி. படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

    • வ.உ.சி. பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.
    • காரைக்குடி வட்டார வெள்ளாளர் சங்கத்தின் செயலாளர் கருப்பையா பிள்ளை நன்றி கூறினார்.

    காரைக்குடி

    காரைக்குடி வட்டார வெள்ளாளர் வ.உ.சி அறக் கட்டளை மற்றும் காரைக் குடி வட்டார வெள்ளாளர் சங்கம் இணைந்து நடத்தும் 37-ஆம் ஆண்டு விழா மற்றும் தியாகச்செம்மல் சுதந்திர போராட்ட வீரர் வ.உ.சிதம்பரம் பிள்ளையின் 152-வது பிறந்தநாள் விழா காரைக்குடியில் நடைபெற்றது. வ.உ.சி அறக்கட்டளை பொருளாளர் ராஜமாணிக்கம்பிள்ளை வரவேற்றார். காரைக்குடி வட்டார வெள்ளாளர் சங் கத்தின் தலைவர் சேவுகன் பிள்ளை தலைமை வகித்தார்.

    மதுரை மாருதி குரூப்ஸ் நிறுவனர் மாருதி பாலகிருஷ்ணன் பிள்ளை வ.உ. சிதம்பரனார் படத்தை திறந்து வைத்து பேசினார். திருச்சி இந்தியன் வங்கியின் மேனாள் மண்டல மேலாளர் சோமையா பாரதி பிள்ளை பரிசுகளை வழங்கினார். வ.உ.சி அறக்கட்டளையின் தலைவர் சபாபதி பிள்ளை, செயலாளர் முத்து ராமலிங்கம் பிள்ளை உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். திருச்சி பாரதி தாசன் பல்கலைக்கழக முன்னாள் துணை வேந்தர் மணிசங்கர் பிள்ளை, முல்லை கொடி உள்ளிட்டோர் பலர் பேசினர். காரைக்குடி வட்டார வெள்ளாளர் சங்கத்தின் செயலாளர் கருப்பையா பிள்ளை நன்றி கூறினார்.

    • வ.உ.சி. காய்கறி மார்க்கெட்டுக்கு இன்று ஆந்திரா, குப்பம் போன்ற பகுதியில் இருந்து 20 டன் தக்காளி விற்பனைக்கு வந்தது. இதனால் தக்காளி விலை குறைந்தது.
    • ஒரு கிலோ தக்காளி ரூ.25-க்கு விற்பனையானது. சுமாரான தக்காளி ரூ.20-க்கு விற்பனையானது.

    ஈரோடு:

    ஈரோடு வ.உ.சி. காய்கறி மார்க்கெட்டுக்கு தினமும் ஆந்திரா, கிருஷ்ணகிரி, ஒட்டன்சத்திரம், தாளவாடி போன்ற பகுதிகளில் இருந்து தக்காளி அதிக அளவில் விற்பனைக்கு வருகிறது. தினமும் 10 முதல் 12 டன் தக்காளி லோடு வரும்.

    இந்நிலையில் சமீபகா லமாக தக்காளி விலை கூடுவதும், குறைவதுமாக நிலையற்ற தன்மையுடன் இருந்து வருகிறது. கடந்த வாரம் வ.உ.சி. மார்க்கெ ட்டில் ஒரு கிலோ தக்காளி ரூ.45-க்கு விற்பனையானது.

    இந்த நிலையில் தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்ததால் தக்காளி விளைச்சல் பாதிக்கப்பட்டு மீண்டும் வரத்து குறைய தொடங்கியுள்ளது. இதன் எதிரொலியாக தக்காளி விலையும் அதிகரித்தது.

    கடந்த 3 நாட்களுக்கு முன்பு வ.உ.சி காய்கறி மார்க்கெட்டில் தக்காளி விலை ஒரு கிலோ ரூ.50-க்கு விற்பனையானது. இன்று வ.உ.சி.மார்க்கெ ட்டில் தக்காளி வரத்து அதிகரித்தது.

    இன்று ஆந்திரா, குப்பம் போன்ற பகுதியில் இருந்து 20 டன் தக்காளி விற்பனைக்கு வந்தது. இதனால் தக்காளி விலை குறைந்தது. ஒரு கிலோ தக்காளி ரூ.25-க்கு விற்பனையானது. சுமாரான தக்காளி ரூ.20-க்கு விற்பனையானது.

    ×