search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Tomato prices"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • மத்திய இணை மந்திரி அஷ்வினி குமார் சவுபே எழுத்துப்பூர்வமாக பதில் அளித்தார்.
    • விலை உயர்ந்து வருவதால், விவசாயிகள் அதிக அளவில் தக்காளி பயிரிடுவார்கள்.

    புதுடெல்லி:

    வடமாநிலங்களில் பருவமழையால் ஏற்பட்ட சரக்கு போக்குவரத்து பாதிப்பு, விளைச்சல் குறைவு போன்ற பல்வேறு காரணங்களால் தக்காளி விலை கடுமையாக உயர்ந்துள்ளது. பல்வேறு மாநிலங்களில் கிலோ 200 ரூபாய் முதல் 250 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. விலையை குறைக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கைகள் எடுத்துள்ளன. கூட்டுறவு சங்கங்கள் மூலம் மானிய விலையில் தக்காளி விற்பனை செய்யப்படுகிறது. எனினும் இது குறிப்பிட்ட பகுதிகளில் மட்டுமே கிடைப்பதால், பெரிய அளவில் பலன் கொடுக்கவில்லை.

    இந்த விவகாரம் தொடர்பாக பாராளுமன்ற மாநிலங்களவையில் கேள்வி எழுப்பட்டது. இதற்கு நுகர்வோர் விவகாரம், உணவு மற்றும் பொது விநியோகத்துறை இணை மந்திரி அஷ்வினி குமார் சவுபே எழுத்துப்பூர்வமாக பதில் அளித்தார். அதில் அவர் கூறிருப்பதாவது:-

    மகாராஷ்டிராவின் நாசிக், நரியங்கான் மற்றும் அவுரங்காபாத் மற்றும் மத்தியப் பிரதேசத்தில் இருந்து தக்காளி வரத்து அதிகரிக்கும்போது தக்காளி விலை குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    தற்போது தக்காளி விலை உயர்ந்து வருவதால், விவசாயிகள் அதிக அளவில் தக்காளி பயிரிடுவார்கள். எனவே வரும் மாதங்களில் தக்காளி வரத்து அதிகரித்து விலை சீராகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    பருவகால விலை ஏற்ற இறக்கம், கோலாரில் வெள்ளை ஈ நோய் தாக்குதல், நாட்டின் வடக்குப் பகுதியில் திடீர் பருவ மழையின் தாக்கம் ஆகியவை அரியானா மற்றும் இமாச்சலப் பிரதேசத்தில் தக்காளி பயிர்களை மோசமாகப் பாதித்துள்ளது. மழையால் சரக்கு போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது. இதுபோன்ற காரணங்களால் விலை உயர்வு ஏற்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • 80 ரூபாய்க்கு விலை போன ஒரு பெட்டி தக்காளி தற்போது 400 ரூபாய்க்கு விலை போகிறது.
    • 2 நாட்களுக்கு முன், இடைவிடாது மழை பெய்தது.

    உடுமலை :

    கடந்த ஆடி மாதத்தில் பெய்த தொடர் மழையால், வைகாசி பட்டத்தில் சாகுபடி செய்த தக்காளி முழுவதும் அழிந்தது. இதனால் 80 ரூபாய்க்கு விலை போன ஒரு பெட்டி தக்காளி தற்போது 400 ரூபாய்க்கு விலை போகிறது.சில்லரை விலையில் கிலோ ரூ. 40 வரை விற்பனை செய்யப்படுகிறது. ஆடிப்பட்டத்தில் சாகுபடி செய்த தக்காளி தற்போது அறுவடை செய்யப்பட்டு வருகிறது.

    கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக மழை இன்றி வறண்ட வானிலை காணப்பட்டதால் விளைச்சல் அதிகரிக்கும் சூழல் ஏற்பட்டது.இந்நிலையில் 2 நாட்களுக்கு முன், இடைவிடாது மழை பெய்தது. இது பருவமழை காலம் என்பதால் மழை தொடரும் வாய்ப்பு உள்ளது.

    இதனால் தக்காளி அழுகுவது மேலும் அதிகரிக்கும். உற்பத்தி இழப்பு ஏற்படும் வாய்ப்பு அதிகம் இருப்பதால் தக்காளி விலை மேலும் மேலும் உயர வாய்ப்புள்ளது. தற்போதைய நிலவரப்படி உடுமலையில் தக்காளி ஒரு பெட்டி ரூபாய் 450 க்கும் சில்லறை விற்பனையில் 30 முதல் 40 வரையும் விற்பனையானதாக வியாபாரிகள் தெரிவித்தனர். மேலும் தக்காளி உடுமலையிலிருந்து வெளி மாவட்டங்களுக்கும் அனுப்பி வைக்கப்படுவதாகவும் விவசாயிகள் தெரிவித்தனர்.

    • கிலோ ரூ.60க்கு விற்பனை செய்யப்படுகிறது.
    • தக்காளி பயிர் செய்து அறுவடை செய்யும் வரை இந்த விலையேற்றம் இருக்கும்

    கோவை

    கோவையில் உள்ள மார்க்கெட்டுகளுக்கு கர்நாடகா, ஆந்திரா, பகுதிகளில் இருந்து தக்காளி வருகிறது.

    இதைத் தவிர கோவை தொண்டாமுத்தூர், மதுக்கரை, பாலத்துறை, நாச்சிபாளையம், காளாம்பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்தும் தக்காளி விற்பனைக்காக கொண்டு வரப்படுகிறது.

    மார்க்கெட்டுகளுக்கு வரும் இந்த தக்காளியை சில்லரை வியாபாரிகள் வாங்கி கடைகளில் விற்பனை செய்கின்றனர்.

    இதனிடையே மார்க்கெட்டுகளில் 25 கிலோ எடையுள்ள ஒரு பெட்டி தக்காளி கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு ரூபாய் 450 முதல் 500 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டது. கிலோ ரூ.10 முதல் ரூ.20 வரை விற்பனை செய்யப்பட்டது. அதன் பின்னர் ஒரு கிலோ ரூ. 40க்கு விற்பனை செய்யப்பட்டது.

    இந்த நிலையில் தக்காளி விலை திடீரென உயர்ந்துள்ளது. ஒரு பெட்டி தக்காளி ரூபாய் 900 வரை விற்பனையாகி வருகிறது. ஒரு கிலோ தக்காளி ரூ.50 முதல் ரூ.60 வரை விற்பனையாகிறது.

    பருவமழையின் காரணமாக தக்காளி வரத்து குறைவாக இருப்பதாகவும், இதனால் தக்காளியின் விலை அதிகரித்துள்ளதாகவும், மேலும் முகூர்த்த மற்றும் பண்டிகை தினங்களால் தக்காளி உள்ளிட்ட காய்கறிக்கு அதிக அளவு தேவை ஏற்பட்டுள்ளதாகவும் வியாபாரிகள் தெரிவித்தனர்.

    இதுகுறித்து வியாபாரிகள் கூறுகையில், மழை காரணமாக தக்காளி பூக்கள் கருகி விழுந்துள்ளன. இதனால் தற்போது தக்காளி உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த பல மாதங்களாகவே தக்காளி ரூ.10 முதல் ரூ.20க்கு விற்பனையாகி வந்தது.

    இதனால் விவசாயிகள் கடும் நஷ்டத்தை சந்தித்து வந்தனர். சிலர் தக்காளி விவசாயத்தை கைவிட்டதால் தற்போது வரத்து முற்றிலுமாக குறைந்துள்ளது.

    ஈரோடு:

    ஈரோடு வ.உ.சி. காய்கறி மார்க்கெட்டு தினமும் ஆந்திரா, கிருஷ்ணகிரி, ஒட்டன்சத்திரம், தாளவாடி போன்ற பகுதிகளில் இருந்து தக்காளி அதிக அளவில் விற்பனைக்கு வந்தது. தினமும் 10 முதல் 12 டன் தக்காளி லோடு வந்தது.

    இந்நிலையில் சமீபகா லமாக தக்காளி விலை கூடுவதும், குறைவதுமாக இருந்து வருகிறது. கடந்த வாரம் வ.உ.சி. மார்க்கெட்டில் ஒரு கிலோ தக்காளி ரூ.45-க்கு விற்பனையானது.

    தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்ததால் தக்காளி விளைச்சல் பாதிக்கப்பட்டு மீண்டும் வரத்து குறைய தொடங்கியது. இதன் எதிரொலியாக தக்காளி விலையும் அதிகரித்துள்ளது.

    இந்நிலையில் மார்க்கெட்டிற்கு கடந்த சில நாட்களாக மீண்டும் தக்காளி அதிக அளவில் வரத்தாகி வருகிறது. இன்று வ.உ.சி. மார்க்கெட்டில் தக்காளி அதிகளவில் விற்பனைக்கு வந்தது.

    இன்று தாளவாடி, சத்தியமங்கலம், ஆந்திரா பகுதியில் இருந்து 25 டன் தக்காளி வந்தது. இதனால் தக்காளி விலை கிடுகிடு என குறைந்தது. ஒரு கிலோ தக்காளி ரூ.15-க்கு விற்பனையானது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    • வ.உ.சி. காய்கறி மார்க்கெட்டுக்கு இன்று ஆந்திரா, குப்பம் போன்ற பகுதியில் இருந்து 20 டன் தக்காளி விற்பனைக்கு வந்தது. இதனால் தக்காளி விலை குறைந்தது.
    • ஒரு கிலோ தக்காளி ரூ.25-க்கு விற்பனையானது. சுமாரான தக்காளி ரூ.20-க்கு விற்பனையானது.

    ஈரோடு:

    ஈரோடு வ.உ.சி. காய்கறி மார்க்கெட்டுக்கு தினமும் ஆந்திரா, கிருஷ்ணகிரி, ஒட்டன்சத்திரம், தாளவாடி போன்ற பகுதிகளில் இருந்து தக்காளி அதிக அளவில் விற்பனைக்கு வருகிறது. தினமும் 10 முதல் 12 டன் தக்காளி லோடு வரும்.

    இந்நிலையில் சமீபகா லமாக தக்காளி விலை கூடுவதும், குறைவதுமாக நிலையற்ற தன்மையுடன் இருந்து வருகிறது. கடந்த வாரம் வ.உ.சி. மார்க்கெ ட்டில் ஒரு கிலோ தக்காளி ரூ.45-க்கு விற்பனையானது.

    இந்த நிலையில் தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்ததால் தக்காளி விளைச்சல் பாதிக்கப்பட்டு மீண்டும் வரத்து குறைய தொடங்கியுள்ளது. இதன் எதிரொலியாக தக்காளி விலையும் அதிகரித்தது.

    கடந்த 3 நாட்களுக்கு முன்பு வ.உ.சி காய்கறி மார்க்கெட்டில் தக்காளி விலை ஒரு கிலோ ரூ.50-க்கு விற்பனையானது. இன்று வ.உ.சி.மார்க்கெ ட்டில் தக்காளி வரத்து அதிகரித்தது.

    இன்று ஆந்திரா, குப்பம் போன்ற பகுதியில் இருந்து 20 டன் தக்காளி விற்பனைக்கு வந்தது. இதனால் தக்காளி விலை குறைந்தது. ஒரு கிலோ தக்காளி ரூ.25-க்கு விற்பனையானது. சுமாரான தக்காளி ரூ.20-க்கு விற்பனையானது.

    • சமீபகாலமாக தக்காளி விலை கூடுவதும் குறைவதுமாக நிலையற்ற தன்மையுடன் இருந்து வருகிறது.
    • ஈரோடு வ.உ.சி. பூங்கா மார்க்கெட்டுக்கு 30 டன் தக்காளி விற்பனைக்கு வந்தது. இதனால் தக்காளி விலை குறைந்தது.

    ஈரோடு:

    ஈரோடு வ.உ.சி. காய்கறி மார்க்கெட்டுக்கு தினமும் ஆந்திரா, கிருஷ்ணகிரி, ஒட்டன்சத்திரம், தாளவாடி போன்ற பகுதிகளில் இருந்து தக்காளி அதிக அளவில் விற்பனைக்கு வந்தது. தினமும் 15 டன் தக்காளி லோடு ரத்தாகி வந்தது.

    இந்நிலையில் சமீபகாலமாக தக்காளி விலை கூடுவதும் குறைவதுமாக நிலையற்ற தன்மையுடன் இருந்து வருகிறது. கடந்த வாரம் வ.உ.சி. மார்க்கெட்டில் ஒரு கிலோ தக்காளி ரூ.35-க்கு விற்பனையானது. இந்திலையில் தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருவதால் தக்காளி விளைச்சல் பாதிக்கப்பட்டு வரத்து குறைய தொடங்கியுள்ளது. இதன் எதிரொலியாக தக்காளி விலையும் அதிகரித்துள்ளது.

    கடந்த 3 நாட்களுக்கு முன்பு வ.உ.சி காய்கறி மார்க்கெட்டில் தக்காளி வரத்து குறைய தொடங்கியது தக்காளி விலை அதிகரித்து ஒரு கிலோ ரூ.50-க்கு விற்பனையானது.

    இந்நிலையில் இன்று மார்க்கெட்டில் தக்காளி வரத்து அதிகரித்தது. இன்று கிருஷ்ணகிரி, ஆந்திரா, குப்பம் போன்ற பகுதியில் இருந்து எப்போதும் இல்லாத அளவாக 30 டன் தக்காளி விற்பனைக்கு வந்தது. இதனால் தக்காளி விலை குறைந்தது. ஒரு கிலோ தக்காளி ரூ.30-க்கு பெற்றது. சுமாரான தக்காளி ரூ.25-க்கு விற்பனையானது.

    ×