search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மல்லிகைப்பூ"

    • வழக்கமாக 5,000 கிலோ மல்லிகை பூ வரும் நிலையில், தற்போது 300 கிலோ மட்டுமே வந்துள்ளதாக வியாபாரிகள் கூறியுள்ளனர்.
    • பனிப்பொழிவு காரணமாக மல்லிகை பூ விளைச்சல் குறைந்துள்ளதால் விலை உயர்ந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

    சங்கரன்கோவில்:

    தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் மலர் சந்தையில் மல்லிகை பூ கிலோ ரூ.5000-க்கு விற்பனை செய்யப்படுவதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

    வழக்கமாக 5,000 கிலோ மல்லிகை பூ வரும் நிலையில், தற்போது 300 கிலோ மட்டுமே வந்துள்ளதாக வியாபாரிகள் கூறியுள்ளனர். மேலும் பனிப்பொழிவு காரணமாக மல்லிகை பூ விளைச்சல் குறைந்துள்ளதால் விலை உயர்ந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

    மல்லிகை பூ போலவே பிச்சி பூ, கனகாம்பரம் கிலோ ரூ.3,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

    • பூக்கள் விலை குறைவால் விவசாயிகள் அவதியடைந்துள்ளனர்.
    • புரட்டாசி மாதம் என்பதால் திருவிழாக்கள் ஏதும் இல்லாததால் பூக்கள் விலை குறைந்தே காணப்படுகிறது.

    ஆரல்வாய்மொழி :

    குமரி மாவட்டம் தோவாளையில் புகழ்பெற்ற பூச்சந்தை உள்ளது. இந்த சந்தையில் இருந்து பூக்கள் மாவட்டம் முழுவதும் மாநிலம் முழுவதும் திருவனந்தபுரம், வேளச்சேரி வழியாக வெளிநாடுகளுக்கும் சென்று வருகிறது.

    ஆரல்வாய்மொழி, குமாரபுரம், பழவூர்மாட நாடார் குடியிருப்பு, காவல்கிணறு உள்ளிட்ட பகுதியில் இருந்து பிச்சி பூவும், திண்டுக்கல் கொடைரோடு, வத்தலகுண்டு, மதுரை, மானாமதுரை, கோவில்பட்டி, சங்கரன்கோவில், ராஜபாளையம் உள்ளிட்ட பகுதியிலிருந்து மல்லிகை பூ, பெங்களூர், ஓசூர், தர்மபுரி, ராயக்கோட்டை ஆகிய ஊர்களில் இருந்து மஞ்சள் கிரேந்தியும், பட்ட ரோஷும், திருக்கண்ணங்குடி, தென்காசி, புளியங்குடி, புளியரை ஆகிய ஊர்களில் இருந்து பச்சையும், துளசியும் வருகிறது. அதேபோல் சேலத்தில் இருந்து அரளி, தோவாளை, ராஜாவூர், செண்பகராமன்புதூர், ராஜாவூர், மருங்கூர் ஆகிய பகுதியிலிருந்து அரளி, சம்பங்கி, கோழி கொண்டை, தாமரை, அருகம்புல் ஆகிய பூக்கள் சந்தைக்கு வந்து வியாபாரம் நடக்கிறது.

    புரட்டாசி மாதம் என்பதால் விசேஷ வீடுகளில் திருவிழாக்கள் ஏதும் இல்லாததால் பூக்கள் விலை குறைந்தே காணப்படுகிறது.

    பூச்சந்தையில் ஒரு தாமரை பூ ரூ.2-க்கும். சீசன் இல்லாததாலும் மல்லிகைப்பூ இல்லாத காரணத்தாலும் மல்லிகைப்பூ வரத்து குறைவு இதனால் ஒரு கிலோ மல்லிகைப்பூ ரூ.800-க்கு விற்பனையாகி வருகிறது. பிச்சிப்பூ ரூ.600 அரளி ரூ.60, கனகாம்பரம் ரூ.300, முல்லை ரூ.500 மரிக்கொழுந்து ரூ.120, மற்ற பூக்களும் விலை குறைந்தே காணப்படுகிறது. பூக்கள் விலை குறைவால் விவசாயிகள் அவதியடைந்துள்ளனர்.

    • மதுரை பூ மார்க்கெட்டில் மல்லிகை விலை திடீர் உயர்ந்துள்ளது.
    • கிலோ ரூ.1,500-க்கு விற்பனை செய்யப்பட்டது.

    மதுரை

    மதுரை பூ மார்க்கெட்டில் மல்லிகை விலை திடீரென அதிகரித்துள்ளது. கிலோ 1500 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுவதால் பொது மக்கள் மத்தியில் தயக்கம் ஏற்பட்டுள்ளது.

    பண்டிகை காலங்களில் அனைவராலும் மிகவும் விரும்பி வாங்கப்படும் பூக்களில் மல்லிகை முதலிடம் பெற்றுள்ளது. அந்த வகையில் அவ்வப் போது மல்லிகையின் விலை வீழ்ச்சி அடைந்தாலும் பண்டிகை காலங்களில் வரலாறு காணாத அளவுக்கு மல்லிகை பூக்களின் விலை அதிகரிப்பது வழக்கமாகி விட்டது.

    தற்போது சீசன் மந்தமாக இருப்பதாலும் மல்லிகை பூக்கள் வரத்து மதுரை மார்க்கெட்டில் கணிசமாக குறைந்துள்ளதாலும் விலை திடீரென அதிகரித்துள்ளது. வருகிற 18-ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா என்பதாலும் பூக்களின் தேவை அதிகமாக இருப்ப தாலும் அதன் விலை உயர்வு இருமடங்காக அதிகரித்து உள்ளது.

    இன்று காலை மல்லிகை பூ கிலோவுக்கு 1200 முதல் 1500 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டது அதுபோல முல்லை பிச்சி ஆகிய பூக்களின் விலை 700 ரூபாயாக விற்கப்பட்டது.

    சம்மங்கி, அரளி 200 ரூபாய்க்கும், செவ்வந்தி 50 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டன. இதுபோல மற்ற பூக்களும் சற்று விலை அதிகரித்து உள்ளது.

    • கடந்த 2 நாட்களுக்கு முன்பு 250 ரூபாய்க்கு விற்ற மல்லிகை பூ ஒரு கிலோ நேற்று ரூ. 360-க்கு விற்கப்பட்டது.
    • இன்று விலை மேலும் உயர்ந்து ஒரு கிலோ மல்லிகை பூ 500 ரூபாய்க்கு விற்பனையாகிறது. ஆனாலும் பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் முகூர்த்த நாளைெயாட்டி அதிக அளவில் மல்லிகை பூக் களை வாங்கி செல்கின்றனர்.

    சேலம்:

    சேலம் பூ மார்க்கெட்டுக்கு சேலம், தர்மபுரி, ஓசூர், பெங்களூர், நாமக்கல் உட்பட பல்வேறு பகுதிகளில் இருந்து பூக்கள் விற்பனைக்கு கொண்டுவரப்படுகின்றன. இந்த பூக்களை சேலம் மற்றும் பக்கத்து மாவட்டங்களைச் சேர்ந்த பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் வாங்கி செல்கிறார்கள். இந்த நிலையில் பூக்களின் விலை நாளுக்கு நாள் அதிகரிக்க தொடங்கியுள்ளது. கடந்த 2 நாட்களுக்கு முன்பு 250 ரூபாய்க்கு விற்ற மல்லிகை பூ ஒரு கிலோ நேற்று ரூ. 360-க்கு விற்கப்பட்டது. இன்று விலை மேலும் உயர்ந்து ஒரு கிலோ மல்லிகை பூ 500 ரூபாய்க்கு விற்பனையாகிறது. ஆனாலும் பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் முகூர்த்த நாளைெயாட்டி அதிக அளவில் மல்லிகை பூக் களை வாங்கி செல்கின்றனர். மற்ற பூக்களின் விலை விவரம் ஒரு கிலோவுக்கு வருமாறு:- முல்லை ரூ.360 ஜாதிமல்லிகை ரூ. 260, காக்கட்டான் ரூ.320, கலர் காக்கட்டான் ரூ.280 ,மலைக்காக்கட்டான் ரூ.320, அரளி ரூ.160, வெள்ளைஅரளி ரூ.260, மஞ்சள் அரளி ரூ.260, செவ்வரளி ரூ.260, ஐ.செவ்வரளி ரூ.180, நந்தியாவட்டம் ரூ.140, சி.நந்திவட்டம் ரூ.200, சம்பங்கி ரூ.200, சாதா சம்பங்கி ரூ.200.

    • மதுரையில் மல்லிகை பூக்கள் ரூ.700-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
    • பிச்சி-முல்லை மலர்களும் விலை உயர்ந்துள்ளது.

    மதுரை

    ஆடி 18-ஐ யொட்டி மதுரையில் மல்லிகை பூக்கள் 700 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டன பிச்சி, முல்லை மலர்களும் விலை அதிகரித்துள்ளது.

    ஆடி மாதத்தின் முக்கிய தினமாக ஆடி 18-ஐ யொட்டி மதுரையில் உள்ள பூ மார்க்கெட்டுகளில் பூக்க ளின் விலை மேலும் அதிகரித்துள்ளது. மதுரை மாட்டுத்தாவணியில் உள்ள மலர் வணிக வளாகத்தில் மல்லிகை, பிச்சி, முல்லை உள்ளிட்ட அனைத்து மலர்க ளும் விற்பனை செய்யப் பட்டு வருகின்றன. இன்று பூக்களை வாங்க பொது மக்கள் அதிகளவில் திரண்டனர்.

    மல்லிகை பூக்கள் நேற்றை விட ரூ.200 விலை உயர்ந்து இன்று கிலோ 700 ரூபாய்க்கு கொடுக்கப்பட்டது. நேற்று 400 ரூபாய் வரை விற்கப்பட்ட பிச்சி, முல்லை மலர்களும் இன்று 700 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டன. இது தவிர சம்மங்கி 300 ரூபாய்க்கும், பட்டன் ரோஸ், செவ்வந்தி 250 ரூபாய்க்கும், செண்டு மல்லி 120 ரூபாய்க்கும், அரளி 250 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டன.

    தற்போது ஆடி மாதம் என்பதால் ஓரளவுக்கு விலை கட்டுப்பாட்டில் இருப்பதாகவும் வருகிற ஆவணி மாதத்தில் விசேஷ நாட்கள் அதிகமாக இருக்கும் என்பதால் பூக்களின் தேவை யும் அதிகமாக இருக்கும். அப்போது பூக்களின் விலை மேலும் அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

    • சத்தியமங்கலம் பூ மார்க்கெட்டுக்கு சீசன் காலங்களில் சுமார் 3 முதல் 5 டன் வரை மல்லிகைப்பூக்கள் கொண்டு வரப்படும்.
    • தற்போது கடும் பனிப்பொழிவு நிலவி வருவதால் மல்லிகைப்பூக்கள் செடியிலேயே கருகி வருகிறது. இதனால் பூ உற்பத்தி குறைந்து விட்டது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் 25 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் பல்வேறு வகையான மலர்களை சாகுபடி செய்து வருகின்றனர். இதில் அதிக அளவில் சுமார் 10 ஆயிரம் ஏக்கரில் மல்லிகைப்பூ சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.

    அதிகாலை நேரத்தில் விவசாயிகள் மல்லிகைப்பூக்களைபறித்து விற்பனைக்காக சத்தியமங்கலம் பூ மார்க்கெட்டுக்கு கொண்டுவருவார்கள். அங்கு ஏலம் முறையில் பூக்கள் விற்பனை நடைபெறும்.

    இந்த சந்தையில் மல்லிகைப்பூக்களை ஏலம் எடுக்க பல்வேறு பகுதிகளில் இருந்தும் வியாபாரிகள் அதிகளவில் வருவார்கள். மேலும் இந்த மார்க்கெட்டில் இருந்து கேரளாவுக்கும், வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது.

    சத்தியமங்கலம் பூ மார்க்கெட்டுக்கு சீசன் காலங்களில் சுமார் 3 முதல் 5 டன் வரை மல்லிகைப்பூக்கள் கொண்டு வரப்படும். ஆனால் தற்போது கடும் பனிப்பொழிவு நிலவி வருவதால் மல்லிகைப்பூக்கள் செடியிலேயே கருகி வருகிறது. இதனால் பூ உற்பத்தி குறைந்து விட்டது.

    இன்று சத்தியமங்கலம் பூ மார்க்கெட்டுக்கு 450 கிலோ மட்டுமே மல்லிகைப்பூக்கள் கொண்டு வரப்பட்டது. மேலும் தற்போது பொங்கல் பண்டிகை என்பதால் மல்லிகைப்பூக்கள் தேவை அதிகரித்து உள்ளது. பூக்கள் வரத்து குறைந்து தேவை அதிகரித்து உள்ளதால் இன்று நடந்த பூ மார்க்கெட்டில் ஒரு கிலோ மல்லிகைப்பூ ரு.4550-க்கு விற்பனை ஆனது. அதிக விலைக்கு பூ விற்பனையானாலும் வியாபாரிகள் போட்டி போட்டு மல்லிகைப் பூக்களை வாங்கி சென்றனர்.

    • கடும் பனிப்பொழிவால் வரத்து குறைவு
    • தோவாளை சந்தையில் விற்பனை அமோகம்

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரி மாவட்டம் தோவாளையில் மலர் சந்தை செயல்பட்டு வருகிறது.

    இந்த சந்தைக்கு தோவாளை, ஆரல்வாய் மொழி, காவல்கிணறு, புதியம்புத்தூர், மாடநாடார் குடியிருப்பு பகுதிகளில் இருந்து பிச்சிப்பூவும், மதுரை, மானாமதுரை, கொடைரோடு, திண்டுக்கல், சங்கரன்ேகாவில், ராஜ பாளையம் ஆகிய பகுதிகளில் இருந்து மல்லிகைப் பூவும் வருகின்றன.

    இதேபோல், சேலத்தில் இருந்து அரளிப்பூ, பெங்களூரூவில் இருந்து மஞ்சள் கேந்தி, பட்டர் ரோஸ் போன்றவையும், திருக்குறுங்குடி, அம்பாசமுத்திரம், தென்காசி, புளியங்குடி பகுதிகளில் இருந்து பச்சை, துளசி போன்றவையும், ஆரல்வாய்மொழி, தோவாளை, ராஜாவூர், மருங்கூர் பகுதிகளில் இருந்து கோழிப்பூ, அரளி உள்ளிட்ட மற்ற பூக்களும் தினமும் விற்பனைக்கு வரு கின்றன. அவை மாவட்டத்தின் பல பகுதிகளுக்கு மட்டுமின்றி, கேரள மாநிலத்துக்கும் அனுப்பி வைக்கப்படு கின்றன.

    இந்த நிலையில் கடந்த 2 நாட்களாக தோவளை சந்தைக்கு பூக்களின் வரத்து குறைந்து உள்ளது. பனிப்பொழிவு காரணமாக பூக்கள் வரத்து பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

    இதற்கிடையில் நாகர்கோவில் சவேரியார் ஆலய திருவிழா மற்றும் சுபமுகூர்த்த தினம் போன்றவை காரணமாக பூக்களின் தேவை அதிகரித்துள்ளது. ஆனால் வரத்து குறைவாக இருப்பது பூக்களின் விலை உயர்வை ஏற்படுத்தி உள்ளது.

    இன்று தோவாளை சந்தையில் ஒரு கிலோ மல்லிகைப்பூ ரூ. 4 ஆயிரத்துக்கு விற்கப்பட்டது. பிச்சிப்பூ ரூ.ஆயிரத்து 750-க்கும், சம்பங்கி ரூ.250க்கும், சேலம் அரளி ரூ.220-க்கும், உள்ளூர் அரளி ரூ.200-க்கும், பட்டர் ரோஸ் ரூ. 200-க்கும், முல்லைப்பூ ரூ. ஆயிரத்து 700-க்கும், கனகாம்பரம் ரூ.700-க்கும், கோழிப்பூ ரூ.80-க்கும்,மஞ்சக் சேந்தி ரூ.60-க்கும், சிகப்பு கேந்தி ரூ.80-க்கும் விற்பனையானது.

    இதேபோல், மரிக்கொழுந்து, தாமரை, அருகம்புல் போன்றவற்றின் விலையும் உயர்ந்துள்ளது.

    • தீபாவளி பண்டிகையையொட்டி மதுரையில் மல்லிகை பூக்கள் ரூ.1,200-க்கு விற்பனை ஆட்டிறைச்சி விலை ரூ.ஆயிரத்தை தொட்டது
    • பிற்பகலில் இருந்தே ஆட்டிறைச்சி விற்பனை களைகட்டியது

    மதுரை

    நாடு முழுவதும் உற்சாகத்துடன் தீபாவளி பண்டிகை நாளை (திங்கள் கிழமை) கொண்டாடப்படுகிறது. மதுரையிலும் வழக்கமான உற்சாகத்துடன் தீபாவளி பண்டிகையை கொண்டாட மக்கள் முன்னேற்பாடுகளை செய்து வருகிறார்கள்.

    மார்க்கெட்கள் மற்றும் பஜார் கடைகளில் தேவையான பொருட்களை வாங்க மக்கள் கூட்டம் அலைமோதி வருகிறது. மாசி வீதிகள், காமராஜர் சாலை, நேதாஜி ரோடு, பெரியார் பஸ் நிலையப் பகுதி, பைபாஸ் ரோடு, சிம்மக்கல், யானைக்கல் உள்ளிட்ட பகுதிகளில் கூட்டம் நிரம்பி வழிகிறது.

    சாலையோர கடைகளும் அதிகரித்துள்ளதால் பொருட்களை வியாபாரிகளும் போட்டி போட்டு குறைந்த விலையில் விற்பனை செய்து வருகிறார்கள். இதனால் மதுரையில் தீபாவளி வியாபாரம் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது.

    மல்லிகை ரூ.1200

    மதுரை பூ மார்க்கெட்டில் இன்று ஒரு கிலோ மல்லிகை பூ ரூ.1200 -க்கு விற்கப்பட்டது.முல்லை ரூ.1200-க்கும், பிச்சி ரூ.1000-க்கும், கனகாம்பரம் ரூ.1500-க்கும், அரளி, சம்பங்கி 150-க்கும், மரிக்கொழுந்து ரூ.100-க்கும் , தாமரைப்பூ ரூ.10-க்கும் விற்பனையாகி வருகிறது.

    பூ மார்க்கெட்டில் இன்று ஏராளமானோர் திரண்டு ஆர்வமாக வாங்கி வருவதால் பூக்களின் விலை மாலையில் சற்று அதிகரிக்கும் என்று வியாபாரிகள் தெரிவித்தனர்.

    ஆட்டிறைச்சி ரூ.1000

    மதுரையில் தீபாவளி பண்டிகையொட்டி அசைவ பிரியர்களை ஊக்குவிக்கும் வகையில் ஆங்காங்கே இறைச்சி கடைகள் போடப்பட்டுள்ளன. இன்று பிற்பகலில் இருந்தே ஆட்டிறைச்சி விற்பனை களைகட்டியது.

    சாலை ஓரம் மற்றும் இறைச்சி கடைகளில் சுமார் 5 ஆயிரம் ஆடுகள் தீபாவளி பண்டிகைக்காக வெட்டப்படுகின்றன.

    சில நாட்களுக்கு முன்பு வரை கிலோ ரூ.800 முதல் ரூ.900 வரை விற்கப்பட்ட ஆட்டிறைச்சி தீபாவளியையொட்டி ரூ. ஆயிரமாக அதிகரித்தது.

    ஆடுகளின் விலை ஏற்றம் காரணமாக இறைச்சி விலை உயர்ந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

    பட்டாசு கடைகளிலும் மக்கள் கூட்டம் அலைமோதி வருகிறது. விதவிதமான பட்டாசுகள் இந்த ஆண்டு விற்பனைக்கு வந்துள்ளதால் குடும்பத்துடன் வந்து பொதுமக்கள் பட்டாசுகளை வாங்கி சென்றனர்.

    • சத்தியமங்கலம் மார்க்கெட்டுக்கு பூக்கள் வரத்து அதிகரித்தது. ஆனால் பூக்களை கொள்முதல் செய்ய வியாபாரிகள் பலர் வரவில்லை.
    • இதனால் தற்போது 1 கிலோ மல்லிகை ப்பூ ரூ.300-க்கு விற்பனை யானது.

    சத்தயமங்கலம்:

    ஈரோடு மாவட்டம் சத்தியமஙகலம், சிக்கரசம் பட்டி உள்பட சுற்று வட்டார பகுதிகளில் சுமார் 20 ஆயிரம் பரப்பளவில் மல்லிகைப்பூ, முல்லைப்பூ உள்பட பல்வேறு பூக்கள் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.

    இந்த பகுதிகளில் இருந்து பூக்களை பறித்து சத்திய மங்கலத்தில் செயல்படும் பூ மார்க் கெட்டுக்கு விற்ப னைக்கு கொண்டு வரப்படு கிறது. வியாபாரிகள் கொள்முதல் செய்து ஈரோடு மாவட்டம் மட்டுமின்றி தமிழகத்தின் பல்வேறு பகுதி களுக்கு அனுப்பி வைக்கின்ற னர்.

    மேலும் கேரளா, ஆந்திரா என வெளி மாநில வியாபாரிகள் வந்து பூக்க ளை மொத்தமாக கொள் முதல் செய்து வருகிறார்கள். இதனால் பண்டிகை மற்றும் முகூர்த்த நாட்களில் தேவை அதிகரித்து பூக்களின் விலையும் அதிகமாக இருக்கும்.

    அதே போல் கடந்த மாதம் ஓணம் பண்டிகை மற்றும் முகூர்த்த நாட்கள் தொடர்ந்து வந்ததது.இதை யொட்டி கேரளா மாநிலத்து க்கு அதிகளவு பூக்கள் ஏற்று மதி செய்யப்பட்டது. தேவை அதிகரிப்பால் கடந்த மாதம் மல்லிகை ப்பூ கிலோ ரூ.4 ஆயிரத்துக்கு மேல் விற்ப னை செய்யப்பட்டது.

    இந்த நிலையில் சத்தியமங்கலம் பகுதியில் பூக்கள் வரத்து அதிகரித்துள்ளது. மேலும் பண்டிகை மற்றும் முகூர்த்த நாட்கள் இல்லாத தால் பூக்களின் தேவை தொடர்ந்து குறைந்து வரு கிறது.

    தற்போது வெப்ப கால நிலை நிலவுவதால் பூக்கள் உற்பத்தி 3 டன்னில் இருந்து 5 டன்னாக அதி கரித்தது. இதனால் தேவை யை விட உற்பத்தி அதிகமாக உள்ளதால் விலையும் படிப்படியாக குறைந்து வரு கிறது.

    கடந்த மாதம் ரூ.4 ஆயிரத்துக்கு மேல் மல்லி கைப்பூ விற்பனை செய்ய ப்பட்டது. அது படிப்படியாக குறைந்து கடந்த சில நாட்களாக மல்லிகைப்பூ ரூ.600-க்கு விற்பனையா னது.

    இந்த நிலையில் சத்தியமங்கலம் மார்க்கெட்டுக்கு பூக்கள் வரத்து அதிகரித்தது. ஆனால் பூக்களை கொள் முதல் செய்ய வியாபாரிகள் பலர் வரவில்லை. இதனால் தற்போது 1 கிலோ மல்லிகை ப்பூ ரூ.300-க்கு விற்பனை யானது. இதே போல் ரூ.300-க்கு விற்பனை செய்யபப்ட்ட முல்லைப்பூ ரூ.100 ஆக குறைந்தது. ேமலும் மற்ற பூக்களின் விலையும் குறைந்தது. இதனால் விவசாயிகள் வேதனை அடைந்தனர்.

    • சத்தியமங்கலம் பூ மார்க்கெட்டில் முகூர்த்த தினங்கள் இல்லாததால் மல்லிகைப்பூ விலை குறைந்து ரூ.௩௫௦-க்கு விற்பனையானது.
    • மல்லிகை விலை கடும் வீழ்ச்சி அடைந்ததால் விவசாயிகள் வேதனை அடைந்தனர்.

    சத்தியமங்கலம்:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள விவசாயிகள் பல்வேறு வகையான பயிர்களை அதிகளவில் பயிரிட்டு அறுவடை செய்து வருகிறார்கள்.

    இதே போல் சத்திய மங்கலம், பு.புளியம்பட்டி, பவானிசாகர், சிக்கரசம் பட்டி, புது வடவள்ளி, ராஜன் நகர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் விவசாயிகள் பலர் மல்லிகைப்பூ உள்பட பல்வேறு பூக்கள் பயிரிட்டு உள்ளனர்.

    இந்த பகுதிகளில் விளையும் பூக்களை சத்தியமங்கலம் பஸ் நிலையம் அருகே செயல்படும் பூ மார்க்கெட்டுக்கு கொண்டு வரப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    சத்தியமங்கலத்தில் விற்பனை செய்யப்படும் மல்லிகைப் பூக்கள் உள்ளூர் மற்றும் வெளியூர், வெளி மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. இங்கு விற்பனை செய்யப்படும் பூக்கள் பொதுமக்கள் விரும்பி வாங்குகிறார்கள். இதனால் வியாபாரிகள் மற்றும் வாடிக்கையாளர்கள் ஏராளமானோர் இங்கு வந்து பூக்களை அதிகளவில் கொள்முதல் செய்கிறார்கள்.

    மேலும் இந்த பகுதிகளில் விளையும் மல்லிகைப் பூக்கள் சிங்கப்பூர், துபாய், சார்ஜா உள்பட பல வெளி நாடுகளுக்கு நறுமணப் பொருட்கள் தயாரிக்க ஏற்றுமதி செய்யப்படுகிறது.

    இதனால் இங்கு மல்லிகைப்பூ சாதாரண நாட்களில் ரூ.500 வரையும் முகூர்த்தம் மற்றும் விழாக் காலங்களில் ரூ.3 ஆயிரம் வரையும் வியாபாரிகள் கொள்முதல் செய்கிறார்கள். கேரளா மாநிலத்தில் நடக்கும் விஷேச நாட்களில் விலை மேலும் உயர்ந்து காணப்படும்.

    இந்த நிலையில் கடந்த 2 வாரங்களுக்கு முன்பு முகூர்த்த நாட்கள் தொடர்ச்சியாக வந்தது. இதனால் மல்லிகைப்பூக்கள் தேவை அதிகரித்தது. இதன் காரணமாக மல்லிகைப் பூ ரூ.3 ஆயிரம் முதல் ரூ.4 ஆயிரம் வரை விற்பனை செய்யப்பட்டது.

    இந்த நிலையில் கடந்த சில நாட்களாக முகூர்த்த நாட்கள் இல்லாததால் சத்தியமங்கலம் பூ மார்க்கெட்டில் மல்லிகை பூ விலை குறைந்தது. கடந்த ஒரு மாதமாக 1 கிலோ மல்லிகைப்பூ ரூ.2 ஆயிரத்துக்கு மேல் விற்பனையானது.

    ஆனால் முகூர்த்தம் மற்றும் விஷேச நாட்கள் இல்லாததால் வியாபாரிகள் ஒரு சிலர் மட்டுமே வந்திருந்தனர்.

    இதனால் நேற்று 1 கிலோ மல்லிகை ரூ.350-க்கு விற்பனை செய்யப்பட்டது. மல்லிகை விலை கடும் வீழ்ச்சி அடைந்ததால் விவசாயிகள் வேதனை அடைந்தனர்.

    சத்தியமங்கலம் பூ மார்க்கெட்டி பூக்கள் விலை நிலவரம் வருமாறு:

    மல்லிகை ரூ.350, முல்லை ரூ.100, காக்கடா ரூ.75, செண்டு மல்லி ரூ.28, கனகாம்பரம் ரூ.550, சம்பங்கி ரூ.10, அரளி ரூ.50, செவ்வந்தி ரூ.120 விற்பனையானது.

    • மதுரையில் மல்லிகைப்பூ விலை கிடுகிடு உயர்ந்துள்ளது.
    • 200-க்கும் மேற்பட்ட சில்லறை மற்றும் மொத்த விற்பனை மலர் வியாபாரிகள் உள்ளனர்.

    மதுரை

    மதுரை மாட்டுத்தாவணி பஸ்நிலையம் அருகே ஒருங்கிணைந்த மலர் வணிக வளாகம் உள்ளது. இங்கு 200-க்கும் மேற்பட்ட சில்லறை மற்றும் மொத்த விற்பனை மலர் வியாபாரிகள் உள்ளனர்.

    இங்கு மதுரை மட்டுமன்றி விருதுநகர், ராமநாதபுரம், சிவகங்கை, திண்டுக்கல், தேனி உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்தும் பல்வேறு வகையான பூக்கள் விற்பனைக்கு வருகின்றன. எனவே மாட்டுத்தாவணி மலர் சந்தையில் நாள்தோறும் சராசரியாக 50முதல் 60 டன்னுக்கும் மேலாக பூக்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.

    மாட்டுத்தாவணி மலர் சந்தையில் கடந்த சில நாட்களாக ரூ500 முதல் ரூ700 வரை மல்லிகைப்பூ விற்பனை செய்யப்பட்டு வந்தது. இந்தநிலையில் இன்று அதன் விலை கிலோ ரூ.1600ஆக உயர்ந்தது. அதேபோல பிச்சி கிலோ ரூ.400, முல்லைரூ.300, செண்டு மல்லி ரூ.70, பட்டன் ரோஸ் ரூ.80 விலைக்கு விற்கப்பட்டு வருகின்றன.

    மதுரை மாட்டுத்தாவணி சில்லரை மலர் வணிகர் சங்கத் தலைவர் ராமச்சந்திரனிடம் கேட்டபோது, "மதுரையில் அடுத்த சில நாட்கள் முகூர்த்த காலம் என்பதால், மல்லிகைப்பூவின் விலையில் மாற்றம் இருக்காது" என்று தெரிவித்தார்.

    ×