search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 5,400 கன அடியாக குறைந்தது
    X

    பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 5,400 கன அடியாக குறைந்தது

    • இன்று காலை மேலும் நீர் வரத்து குறைந்து பவானிசாகர் அணைக்கு 5ஆயிரம் கன அடியாக நீர் வரத்து குறைந்தது.
    • அணைக்கு வினாடிக்கு 5400 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அதே 5,400 கன அடி நீர் அப்படியே வெளியேற்றப்பட்டு வருகிறது.

    ஈரோடு:

    பவானிசாகர் அணையின் நீர் பிடிப்பு பகுதியான நீலகிரி மலைப்பகுதியில் கடந்த சில நாட்களாகவே கன மழை பெய்து வந்தது. இதன் காரணமாக கோவை மாவட்டம் பில்லூர் அணை நிரம்பியது. அங்கிருந்து உபரி நீர் முழுவதும் அப்படியே பவானிசாகர் அணைக்கு வருகிறது.

    இதன் காரணமாக கடந்த 5-ந் தேதி பவானிசாகர் அணை 102 அடியை எட்டியது. இதனைத் தொடர்ந்து அணையின் பாதுகாப்பு கருதி அணைக்கு வரும் உபரி நீர் அப்படியே வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனைத் தொடர்ந்து பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

    இதனால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கையும் விடுக்கப்பட்டது. முதலில் பவானிசாகர் அணைக்கு 25 ஆயிரம் கனஅடி நீர் வந்தது. மழை குறைந்ததால் நீர் வரத்தும் குறைந்தது.

    இன்று காலை மேலும் நீர் வரத்து குறைந்து பவானிசாகர் அணைக்கு 5ஆயிரம் கன அடியாக நீர் வரத்து குறைந்தது.

    இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணை 102 அடியில் தொடர்ந்து நீடிக்கிறது. அணைக்கு வினாடிக்கு 5400 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அதே 5,400 கன அடி நீர் அப்படியே வெளியேற்றப்பட்டு வருகிறது.

    Next Story
    ×