search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "400 cubic feet"

    • பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 74.51 அடியாக உள்ளது.
    • அணைக்கு வினாடிக்கு 4 ஆயிரத்து 428 கன அடியாக நீர் வரத்து அதிகரித்துள்ளது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்ட மக்க ளின் முக்கிய குடிநீர் ஆதா ரமாக உள்ளது பவானிசாகர் அணை. 105 அடி கொள்ள ளவு கொண்ட பவானிசாகர் அணையின் முக்கிய நீர் பிடிப்பு பகுதியாக நீலகிரி மலைப்பகுதி உள்ளது. '

    இந்நிலையில் நீர்ப்பிடிப்பு பகுதியான நீலகிரி மலை ப்பகுதியில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வருவதால் பவானிசாகர் அணைக்கு தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்துள்ளது.

    இதன் காரணமாக பவானி சாகர் அணையின் நீர்மட்ட மும் உயர்ந்து வந்தது. இந்நிலையில் நீர் பிடிப்பு பகுதியில் மழை பொழிவு இல்லாததால் அணைக்கு நீர் வரத்து குறைந்தது.

    நீர்வரத்தை விட பாசன த்திற்கு அதிக அளவில் தண்ணீர் திறந்து விடப்பட்டு வருவதால் அணையின் நீர்மட்டமும் குறைந்து வந்தது.

    இந்நிலையில் பவானிசாகர் அணையின் நீர் பிடிப்பு பகுதியில் பரவலாக மழை பெய்ததால் இன்று காலை பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிக ரித்துள்ளது.இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 74.51 அடியாக உள்ளது.

    பவானிசாகர் அணைக்கு வினாடிக்கு 4 ஆயிரத்து 428 கன அடியாக நீர் வரத்து அதிகரித்துள்ளது. பவானி சாகர் அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்கால் பாசனத்திற்கு 2 ஆயிரம் கன அடியாக நீர் திறந்து விடப்ப ட்டு வந்த நிலையில் 500 கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது.

    இதைப்போல் குண்டேரி ப்பள்ளம் அணையின் நீர்ம ட்டம் இன்று காலை நிலவர ப்படி 31.35 அடியாகவும், பெரும்பள்ளம் அணையின் நீர்மட்டம் 5.01 அடியாகவும், வரட்டுபள்ளம் அணையின் நீர்மட்டம் 29.56 அடியாகவும் உள்ளது.

    • இன்று காலை மேலும் நீர் வரத்து குறைந்து பவானிசாகர் அணைக்கு 5ஆயிரம் கன அடியாக நீர் வரத்து குறைந்தது.
    • அணைக்கு வினாடிக்கு 5400 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அதே 5,400 கன அடி நீர் அப்படியே வெளியேற்றப்பட்டு வருகிறது.

    ஈரோடு:

    பவானிசாகர் அணையின் நீர் பிடிப்பு பகுதியான நீலகிரி மலைப்பகுதியில் கடந்த சில நாட்களாகவே கன மழை பெய்து வந்தது. இதன் காரணமாக கோவை மாவட்டம் பில்லூர் அணை நிரம்பியது. அங்கிருந்து உபரி நீர் முழுவதும் அப்படியே பவானிசாகர் அணைக்கு வருகிறது.

    இதன் காரணமாக கடந்த 5-ந் தேதி பவானிசாகர் அணை 102 அடியை எட்டியது. இதனைத் தொடர்ந்து அணையின் பாதுகாப்பு கருதி அணைக்கு வரும் உபரி நீர் அப்படியே வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனைத் தொடர்ந்து பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

    இதனால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கையும் விடுக்கப்பட்டது. முதலில் பவானிசாகர் அணைக்கு 25 ஆயிரம் கனஅடி நீர் வந்தது. மழை குறைந்ததால் நீர் வரத்தும் குறைந்தது.

    இன்று காலை மேலும் நீர் வரத்து குறைந்து பவானிசாகர் அணைக்கு 5ஆயிரம் கன அடியாக நீர் வரத்து குறைந்தது.

    இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணை 102 அடியில் தொடர்ந்து நீடிக்கிறது. அணைக்கு வினாடிக்கு 5400 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அதே 5,400 கன அடி நீர் அப்படியே வெளியேற்றப்பட்டு வருகிறது. 

    ×