என் மலர்

    உள்ளூர் செய்திகள்

    பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 2,900 கன அடியாக குறைந்தது
    X

    பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 2,900 கன அடியாக குறைந்தது

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • நீர்ப்பிடிப்பு பகுதியில் கடந்த சில நாட்களாக மழைப்பொழிவு இல்லாததால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து குறைய தொடங்கியுள்ளது.
    • இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணைக்கு வினாடிக்கு 2,900 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது.

    ஈரோடு:

    பவானிசாகர் அணையின் நீர்பிடிப்பு பகுதியான நீலகிரி மலைப்பகுதியில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வந்தது. இதன் காரணமாக 105 அடி கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணையின் நீர்மட்டம் கடந்த மாதம் 5-ந் தேதி 102 அடியை எட்டியது.

    அணையின் பாதுகாப்பு கருதி அணைக்கு வரும் உபரிநீர் அப்படியே பவானி ஆற்றுக்கு திருப்பி விடப்ப ட்டது. பின்னர் மழைப்பொ ழிவு இல்லாத போது நீர்வரத்து குறைவதும், மழை பொழிவின்போது நீர்வரத்து அதிகரிப்பதும் என மாறி மாறி வந்து கொண்டு இருக்கிறது.

    இந்நிலையில் நீர்ப்பிடிப்பு பகுதியில் கடந்த சில நாட்களாக மழைப்பொழிவு இல்லாததால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து குறைய தொடங்கியுள்ளது.

    இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணைக்கு வினாடிக்கு 2,900 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து பாசனத்திற்காகவும், குடிநீருக்காகவும் 2,800 கன அடி வீதம் தண்ணீர் வெளி யேற்றப்பட்டு வருகிறது.

    இதேப்போல் மாவட்டத்தில் உள்ள பிரதான அணைகளில் நீர்வரத்து சற்று அதிகரித்து ள்ளது. 41.75 அடி கொண்ட குண்டேரி பள்ளம் அணை யின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 36.04 அடியாக உள்ளது.

    30.84 அடி கொண்ட பெரும்பள்ளம் அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 21.26 அடியாக உள்ளது. இதேபோல் 33.50 அடி கொண்ட வரட்டுபள்ளம் அணியின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 33.46 அடியாக உள்ளது.

    Next Story
    ×