search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "குப்பை கிடங்கு"

    • பொதுமக்கள் காத்திருப்பு போராட்டம்
    • 5 ஏக்கர் இடத்தில் குப்பை

    திருவண்ணாமலை,

    திருவண்ணாமலை அருகே குப்பை கிடங்கு அமைக்க எதிர்ப்பு தெரி வித்து பொதுமக்கள் 2-வது நாளாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    குப்பை கிடங்கு அமைக்க எதிர்ப்பு

    திருவண்ணாமலை ஒன்றி யத்தில் உள்ள தேவனந்தல் ஊராட்சியில் புனல்காடு அருகில் உள்ள மலையை ஒட் டிய 5 ஏக்கர் இடத்தில் குப்பை கிடங்கு அமைக்கும் பணி நடைபெற்று வருகின்றது. இதற்கு அருகில் உள்ள புனல் காடு. கலர்கொட்டாய்.

    ஆடையூர் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களுக்கு ஆதரவாக விவ சாயிகள் சங்கத்தினரும். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட் சியினரும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    கடந்த 8-ந் தேதியன்று குப்பை கிடங்கு அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பொது மக்கள் கலெக்டர் அலுவலகத் தில் ஒப்பாரி வைத்து போராட்டத்தில் ஈடுபட்ட னர். இதையடுத்து அந்த இடத்தில் குப்பை கொட்டும் பணி நிறுத்தப்பட்டது.

    இந்த நிலையில் குப்பை கிடங்கு அமைக்கப்பட்டு உள்ள இடத்தை சுற்றி சுற்றுசுவர் கட்டும் பணிகள் நடைபெற்று வருகின்றது.

    காத்திருப்பு போராட்டம்

    இந்த பணியை நிறுத்தக் கோரி மீண்டும் நேற்று முன்தி னம் முதல் புனல்காடு பகுதியை சேர்ந்த பொதுமக்கள் . குப்பை கிடங்கு அமைக்கும் இடத்தின் அருகில் உள்ள மரத்தடியில் காத்திருப்பு, போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்தநிலையில் நேற்று அங்கேயே கஞ்சி காய்ச்சி 2-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    குப்பை கிடங்கு அமைக்கும் பணியை நிறுத்தும் வரை காத்திருப்பு போராட்டம் தொடரும் என்று அவர்கள் தெரிவித்தனர்.

    • ஜே.சி.பி. எந்திரங்கள் மூலமாக குப்பைகள் கிளறப்பட்டு தீயை அணைக்கும் பணி நடந்து வருகிறது.
    • காற்று வேகமாக வீசுவதால் அந்த பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சி அளிக்கிறது.

    நாகர்கோவில்:

    நாகர்கோவில் பீச் ரோட்டில் வலம்புரி விளை குப்பை கிடங்கு உள்ளது. இங்கு கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு தீ விபத்து ஏற்பட்டது. இதையடுத்து தீயணைப்பு வீரர்கள் தீயணைக்கும் பணியில் ஈடு பட்டனர்.

    தீ விபத்தின் காரணமாக அந்த பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சி அளித்தது. தீயணைப்பு வீரர்கள் தீயணைக்க நடவடிக்கை மேற்கொண்டனர். ஆனால் தீயை கட்டுப்படுத்த முடியவில்லை. தொடர்ந்து எரிந்து கொண்டே உள்ளது. நேற்று 2-வது நாளாக தீயணைக்கும் பணியில் வீரர்கள் ஈடுபட்டு இருந்தனர். இருப்பினும் தீ கட்டுப்படுத்த முடிய வில்லை.

    இன்று காலையில் 3-வது நாளாக தீ அணைக்கும் பணி நடந்து வருகிறது. நாகர்கோவில் கன்னியாகுமரி திங்கள் சந்தை பகுதியில் இருந்து தீயணைப்பு வீரர்கள் வரவழைக்கப்பட்டு தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். ஜே.சி.பி. எந்திரங்கள் மூலமாக குப்பைகள் கிளறப்பட்டு தீயை அணைக்கும் பணி நடந்து வருகிறது. இருப்பினும் தீ எரிந்து கொண்டே உள்ளது. காற்று வேகமாக வீசுவதால் அந்த பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சி அளிக்கிறது.

    புகை மண்டலத்தின் காரணமாக இன்று 3-வது நாளாக அந்த பகுதியில் உள்ள சாலையில் பொதுமக்கள் வாகனம் ஓட்டுவதற்கு சிரமப்பட்டனர். மேலும் அந்த பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சி அளித்து வருவதையடுத்து பொது மக்கள் பரிதவிப்பிற்கு ஆளாகியுள்ளனர். வலம்புரிவிளை குப்பை கிடங்கையொட்டி உள்ள பகுதியில் குடியிருக்கும் மக்கள் வீடுகளை காலி செய்து விட்டு அவர்களின் உறவினர் வீடுகளுக்கு செல்லும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

    புகை மண்டலத்தின் காரணமாக குழந்தைகள் பெரியவர்கள் மட்டுமின்றி அனைத்து தரப்பினருமே பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர். மாநகராட்சி அதிகாரிகளும் வலம்புரி விளையில் முகாமிட்டு தீயை அணைப்பதற்கான நடவடிக்கைகளில் உதவிகரமாக உள்ளனர் .

    அந்த பகுதியில் உள்ள பள்ளிக்கு புகை மண்டலத்தின் காரணமாக கடந்த 2 நாட்களாக விடுமுறை விடப்பட்டிருந்தது. இன்றும் புகை மண்டலமாக அந்த பகுதி காட்சி அளித்தது. மாணவ-மாணவிகள் நலன் கருதி இன்றும், பள்ளிக்கு விடுமுறை விடப்பட்டது.

    இந்நிலையில் வலம்புரிவிளை குப்பை கிடங்கை மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எம்.ஆர். காந்தி எம்.எல்.ஏ. தலைமையில் மாநகராட்சி கவுன்சிலர்கள் கலெக்டரை சந்தித்து வலியுறுத்தி உள்ளனர். 

    • தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்க போராட்டம்
    • இந்த குப்பை கிடங்கை மாற்றுவதாக வாக்குறுதி அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

    நாகர்கோவில்:

    நாகர்கோவில் பீச் ரோட்டில் மாநகராட்சிக்கு சொந்தமான வலம்புரி விளை குப்பை கிடங்கு உள்ளது. இங்கு நாகர்கோ வில் மாநகரப் பகுதியில் சேகரிக்கப்படும் குப்பைகள் கொட்டப்பட்டு வந்தது. இதனால் அங்கு மலைபோல் குப்பைகள் தேங்கி கிடப்பதுடன் துர்நாற்றம் வீசுகிறது. தற்பொழுது நாகர்கோவில் நகரில் சேகரிக்கப்படும் குப்பைகள் மக்கும் குப்பை மக்காத குப்பை என பிரித்து வாங்கப்பட்டு வருகிறது.

    மக்கும் குப்பைகள் உரமாக்கப்பட்டு வரும் நிலையில் மக்காத குப்பைகளை மட்டும் குப்பை கிடங்கில் கொட்டி வருகிறார்கள். இந்த குப்பை கிடங்கில் அடிக்கடி தீ விபத்து ஏற்படுவது வாடிக்கையாகிவிட்டது. இந்த நிலையில் இன்று காலை 8 மணி அளவில் குப்பை கிடங்கில் இருந்து புகைமண்டலங்கள் வந்தது. இதை பார்த்த மாநகராட்சி ஊழியர்கள் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்

    பின்னர் இது குறித்து நாகர்கோவில் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரி விக்கப்பட்டது.உடனடியாக நாகர்கோவில் நிலைய தீயணைப்பு வீரர்கள் வலம்புரி விளை குப்பை கிடங்கிற்கு விரைந்து சென்றனர். அங்கு எரிந்த தீயை தண்ணீரை பீச்சு அடித்து அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.ஜே.சி.பி. எந்திரம் மூலமாக குப்பைகள் கிளறப்பட்டு தீ அணைக்கப்பட்டது. தீ கொழுந்து விட்டு எரிந்ததால் அந்த பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சியளித்தது.மேலும் துர்நாற்றமும் வீசி வருகிறது. இதனால் பொதுமக்கள் கடும் அவதிக்கு ஆளாகி உள்ளனர்.

    இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில் நாகர்கோவில் நகரில் மைய பகுதியில் அமைந்துள்ள இந்த குப்பை கிடங்கை மாற்ற மாநகராட்சி அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். ஏற்கனவே இந்த குப்பை கிடங்கை மாற்றுவதாக வாக்குறுதி அளித்து வருகிறார்கள்.ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இங்கிருந்து வரும் துர்நாற்றத் தின் காரணமாகவும் புகை மண்டலத்தின் காரணமாக வும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பாதிப்புகுள்ளாகி உள்ளனர். எனவே மேயர் மகேஷ் இந்த விவகாரத்தில் தனி கவனம் செலுத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

    • ரூ.641 கோடி மதிப்பீட்டில் பிரித்தெடுத்து நிலத்தை மீட்டெடுக்கும் பணிகள் மேற்கொள்ள அரசின் நிர்வாக அனுமதி பெறப்பட்டுள்ளது.
    • இரண்டு ஆண்டுகளுக்குள் நிறைவு பெற்று நிலம் மீட்டெடுக்கப்படும் என்று சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

    சென்னை:

    கொடுங்கையூர் குப்பைக்கொட்டும் வளாகத்தில் சுமார் 252 ஏக்கர் நிலப்பரப்பில் கடந்த 40 ஆண்டுகளுக்கு மேலாக கொட்டப்பட்டு வரும் சுமார் 66.52 லட்சம் மெட்ரிக் டன் திடக்கழிவுகள் ஆறு சிப்பங்களாக பிரிக்கப்பட்டு, தூய்மை இந்தியா திட்டநிதி, மாநில அரசுநிதி மற்றும் பெருநகர சென்னை மாநகராட்சி நிதி பங்களிப்பின் மூலம் பயோ-மைனிங் முறையில் செயல்படுத்தப்படுகிறது.

    ரூ.641 கோடி மதிப்பீட்டில் பிரித்தெடுத்து நிலத்தை மீட்டெடுக்கும் பணிகள் மேற்கொள்ள அரசின் நிர்வாக அனுமதி பெறப்பட்டுள்ளது. அதனடிப்படையில் ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டு பணிகள் தொடங்கப்பட உள்ளது.

    இந்தப் பணிகள் அண்ணா பல்கலைக்கழகத்தின் தொழில்நுட்ப வல்லுநர்களை உள்ளடக்கிய திட்ட கண்காணிப்புக் குழுவின் மூலம் மேற்கொள்ளப்பட உள்ளது. இப்பணிகள் இரண்டு ஆண்டுகளுக்குள் நிறைவு பெற்று நிலம் மீட்டெடுக்கப்படும் என்று சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

    • மேயர் மகேஷ் தகவல்
    • வேதநகர் பகுதியில் இருந்து நாகர்கோவிலுக்கு மினி பஸ் போக்குவரத்தை தொடங்கி வைப்பு

    நாகர்கோவில்:

    நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ் 52 வார்டுகளிலும் ஆய்வு பணியை மேற்கொண்டார்.

    இந்த நிலையில் வடசேரி பஸ் நிலையத்தில் நேற்று திடீர் ஆய்வு செய்தார். பீச் ரோடு பகுதியில் உள்ள வலம்புரி விளை குப்பை கிடங்கில் இன்று மேயர் மகேஷ் ஆய்வு செய்தார். அப்போது அங்குள்ள குப்பை களை அப்புறப்படுத்துவது குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண் டார். பின்னர் மேயர் மகேஷ் நிருபர்களிடம் கூறியதா வது:-

    நாகர்கோவில் நகரின் மையப்பகுதியில் வலம்புரி விளை குப்பை கிடங்கு உள்ளது. ஏற்கனவே நாகர் ேகாவில் நகரப்பகுதியில் சேகரிக்கப்படும் குப்பை கள் கொட்டப்பட்டு உள் ளது. இங்கு அடிக்கடி தீ விபத்துகளும் நடந்து வருவதால் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகிறார்கள். இந்த குப்பை கிடங்கை மாற்றவேண்டும் என்று பொதுமக்கள் மட்டுமின்றி அனைத்து தரப்பினரும் கோரிக்கை வைத்தனர்.

    இந்த குப்பை கிடங்கை மாற்ற அனைத்து நடவ டிக்கைகளும் மேற் கொள் ளப்பட்டு வருகிறது. ஏற்க னவே குப்பை கிடங்கில் உள்ள குப்பைகளை தரம் பிரித்து எடுக்க நடவடிக்கை மேற்கொண்டு உள்ளோம்.பிளாஸ்டிக் தவிர்த்து மற்ற குப்பைகளை உரமாகவும் நடவடிக்கை எடுக்கப்படும் இன்னும் ஆறு மாத காலத் திற்குள் இந்த குப்பை கிடங்கை மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும்.

    நாகர்கோவில் நகரில் பொதுமக்களின் பிரச்சினை களுக்கு முன்னுரிமை அளித்து பல்வேறு பிரச்சி னைகளை தீர்க்க நடவ டிக்கை மேற்கொண்டு வரு கிறோம். கழிவுநீர் ஓடைகள் அனைத்தும் சீரமைக்கப் பட்டு வருகிறது. பொது மக்க ளுக்கு தங்கு தடை யின்றி குடிநீர் வழங்கவும் நடவடிக்கை மேற் கொண்டு வருகிறோம். விரைவில் புத்தன் அணை குடிநீர் திட்டம் மக்களின் செயல்பாட்டிற்கு கொண்டு வரப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதைத் தொடர்ந்து வி.என். காலனி பகுதியில் உள்ள பூங்காவை ஆய்வு செய்த மேயர் மகேஷ் அந்த பூங்காவை உடனடியாக சீரமைக்க மாநகராட்சி ஊழியர்களுக்கு உத்தர விட்டார். இதைத்தொடர்ந்து வேதநகர் பகுதியில் இருந்து நாகர்கோவிலுக்கு மினி பஸ் போக்குவரத்தை தொடங்கி வைத்தார்.

    ஆய்வின் போது மண்டல தலைவர் ஜவகர், தி.மு.க. தலைமை செயற்குழு உறுப்பினர் சதாசிவம், உதயநிதி ஸ்டாலின் நற்பணி மன்ற தலைவர் பிரபா ராமகிருஷ்ணன், கவுன்சிலர் ஸ்டாலின் பிரகாஷ் மற்றும் ஷேக் மீரான் உள்பட நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

    • வெள்ளப்பாக்கம் கிராமத்தில் சுமார் 40 ஏக்கரில் குப்பை கிடங்கு அமைப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக தகவல் பரவியது.
    • கூடாரத்தில் தங்கள் கோரிக்கை வலியுறுத்தி உண்ணாவிரத போரா ட்டத்தில் ஈடுபட்டனர்.

    கடலூர்:

    கடலூர் மாநகராட்சி க்குட்பட்ட 45 வார்டுகளில் அகற்றப்படும் குப்பைகள் கொட்டுவதற்கு குப்பை கிடங்கு இல்லாததால் ஆங்காங்கே ஆற்று ஓரமாகவும், சாலைகளில் குப்பைகளை கொட்டி எரித்து வருவதால் பொதுமக்கள் பாதிப்ப டைந்து வருகின்றனர். இந்த நிலையில் மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜா அறிவுறுத்தலின் பேரில் ஆணையாளர் நவேந்திரன் மற்றும் அதிகாரிகள் ஆங்காங்கே அகற்றப்படும் குப்பைகளை மக்கும் குப்பை மக்காத குப்பை என தரம் பிரித்து நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். 

    அதன்படி கடலூர் அருகே வெள்ளப்பாக்கம் கிராமத்தில் சுமார் 40 ஏக்கரில் குப்பை கிடங்கு அமைப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக தகவல் பரவியது. இதனை தொடர்ந்து ஏற்கனவே இந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் குப்பை கிடங்கு அமைக்கும் பணிக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்ததோடு இதன் மூலம் விவசாய நிலம் முற்றிலும் பாதிக்கப்படும் என கூறி இந்த திட்டத்தை கைவிட வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி பல்வேறு கட்ட போராட்டம் செய்து வந்தனர். இது தொடர்பாக கடந்த சில தினங்களுக்கு முன்பு குப்பை கிடங்கு அமைப்பது தொடர்பாக வருவாய் கோட்டாட்சியர் அதியமான் கவியரசு தலைமையில் கூட்டம் நடைபெற்றதில், பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வெளிநடப்பு செய்தனர்.

    இந்த நிலையில் குப்பை கிடங்கு அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து உண்ணாவிரத போராட்டம் நடைபெறும் என ஊர் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் கூட்டமைப்பு சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி இன்று காலை வெள்ளப்பாக்கம், மருதாடு, வரக்கால்பட்டு, அழகிய நத்தம், இராண்டாயிரம் வளாகம், குமராபுரம் ஆகிய ஊரை சேர்ந்த அனைத்து கிராம மக்கள் மற்றும் விவசாயிகள் கூட்டமைப்பு சார்பில் மாநகராட்சி மற்றும் நகராட்சி குப்பைகளை கொட்ட திட்டமிடுவதை கைவிட வேண்டும். அரசு விதைப்பண்ணை நிலத்தை மீண்டும் விவசாய பண்ணையாக மாற்ற முன்வர வேண்டும்.

    அரசு விதை பண்ணை நிலம் அருகில் பள்ளிகள் உள்ளதால் மாணவர்களின் உடல் நலம் பாதிப்பு ஏற்படும். தென்பெண்ணையாறு அருகாமையில் உள்ளதால் மழைக்காலங்களில் வெள்ள பாதிப்பு தொட ர்ந்து ஏற்படுவதால் இந்த திட்டத்தை கைவிட வேண்டும் உள்ளிட்ட கோரி க்கைகளை வலியுறுத்தி இன்று காலை முதல் கிராம மக்கள் மற்றும் விவசாயிகள் பெருமளவில் வெள்ளப்பாக்கம் பகுதியில் திரண்டனர். பின்னர் அங்கு அமைக்க ப்பட்டிருந்த கூடாரத்தில் தங்கள் கோரிக்கை வலியுறுத்தி உண்ணாவிரத போரா ட்டத்தில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து தங்கள் கோரிக்கைகள் வலியுறுத்தி அரசியல் கட்சி பிரமுகர்கள், பல்வேறு அமைப்பை சேர்ந்த நிர்வாகிகள், ஊர் பொதுமக்கள், விவசாயிகள் என தொடர்ந்து குப்பை கிடங்கு அமைப்பதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து பேசி வருகின்றனர் . 

    இந்த நிலையில் துணை போலீஸ் சூப்பிரண்டு சபியுல்லா, கடலூர் தாசில்தார் பூபாலச்சந்திரன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது இந்த பகுதியில் குப்பை கிடங்கு அமைக்க வேண்டு மானால் மக்களாகிய உங்கள் அனுமதியை முழுமையாக பெற்ற பிறகு குப்பை கிடங்கு அமைக்கப்படும். ஆகையால் உங்கள் போராட்டத்தை கைவிட்டு முக்கிய பிரமுகர்கள் 10 நபர்கள் கடலூர் வருவாய் கோட்டாட்சியரிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு நடவடிக்கை மேற்கொள்ளுங்கள் என தெரிவித்தனர். அப்போது போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள், ஏற்கனவே நாங்கள் போராட்டத்தில் ஈடுபட்ட போது இது போன்று அதிகாரிகள் தெரிவித்துவி ட்டு சென்றனர். ஆனால் இதனால் வரை இதற்கு தீர்வு ஏற்படவில்லை. மேலும் இந்த பகுதியில் குப்பை கிடங்கு அமைப்பதற்கு அரசு முழு வீச்சில் நடவடி க்கை மேற்கொண்டு உள்ளனர். மேலும் வருவாய் கோட்டாட்சியர் போராட்ட களத்திற்கு நேரில் வருகை தந்து இந்த பகுதியில் குப்பை கிடங்கு அமைக்க மாட்டோம் என உத்தரவாதம் அளித்தால் தான் எங்கள் போராட்டத்தை கைவிடுவோம் என திட்ட வட்டமாக தெரிவித்தனர். மேலும் அசம்பாவிதம் நடைபெறாமல் இருக்க அப்பகுதியில் 50-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்க ப்பட்டு உள்ளனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பாக காணப்பட்டு வருகின்றது.

    • கடலூர் அருகே வெள்ளப்பாக்கம் மற்றும் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த பொதுமக்கள் குண்டு சாலையில் திரண்டனர்.
    • 15 பேரை அழைத்துச் சென்று கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்து கோரிக்கைகள் தொடர்பாக பேச அழைத்து சென்றனர்.

    கடலூர்:

    கடலூர் அருகே வெள்ளப்பாக்கத்தில் மாநகராட்சியில் சேகரிக்கப்படும் குப்பைகளை கொட்டுவதற்கு குப்பை கிடங்கு அமைக்க நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது.

    இதனை தொடர்ந்து கடலூர் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் குப்பை கிடங்கு அமைப்பது தொடர்பாக வருவாய் கோட்டாட்சியர் அதியமான் கவியரசு தலைமையில் கிராம பொது மக்களிடம் கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற பொதுமக்கள் குப்பை கிடங்கு அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து வெளிநடப்பு செய்தனர்.

    இன்று காலை கடலூர் கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்ப்பு கூட்டம் நடைபெற்று வருகின்றது. இதனை தொடர்ந்து கடலூர் அருகே வெள்ளப்பாக்கம் மற்றும் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த பொதுமக்கள் குண்டு சாலையில் திரண்டனர்.

    பின்னர் அங்கிருந்து ஊர்வலமாக நடந்து வந்து கடலூர் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு சாலையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    அப்போது அவர்கள் வைத்திருந்த கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது-

    வெள்ளப்பாக்கம் ஊராட்சி மற்றும் சுற்றுவட்டார பகுதியில் மருதாடு, அழகியநத்தம், இரண்டாயிர விளாகம், நத்தப்பட்டு, முள்ளி கிராம்பட்டு பகுதியில் சுமார் 40 ஆயிரம் மக்கள் வசித்து வருகின்றோம்‌. எங்களின் குடிநீர் ஆதாரமாகவும் மற்றும் கடலூர் மக்களின் குடிநீர் ஆதாரமாகவும் உள்ள தென்பெண்ணை ஆற்றின் அருகே மாநகராட்சி குப்பையை கொட்டுவதால் குடிநீர் பாதிப்பு ஏற்படுவதோடு மக்களின் வாழ்வாதாரமாக விளங்கும் விவசாயத்தையும் அதனை சார்ந்து வாழும் விவசாயக் கூலி மக்களின் வாழ்க்கை கேள்விக்குறியாகிவிடும்.

    மேலும் சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்கும் இத்திட்டத்தினை உடனடியாக கைவிட வேண்டும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது.

    இதனை தொடர்ந்து போலீஸ் டிஎஸ்.பி. கரிகால் பாரிசங்கர், இன்ஸ்பெக்டர் குருமூர்த்தி ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்ட பொது மக்களிடம் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். இதில் உங்கள் கோரிக்கைகள் தொடர்பாக மனுவாக வழங்கி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என தெரிவித்தனர்.

    இதனை தொடர்ந்து 15 பேரை அழைத்துச் சென்று கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்து கோரிக்கைகள் தொடர்பாக பேச அழைத்து சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதி பரபரப்பாக காணப்பட்டது.

    • தீயணைப்பு வீரர்கள் போராடி தீயை அணைத்தனர்
    • குடியாத்தம் நகர் மன்ற தலைவர் ஆய்வு

    குடியாத்தம்:

    குடியாத்தம் நகராட்சியில் சேகரிக்கப்படும் குப்பைகளின் ஒரு பகுதி குடியாத்தம் தரணம் பேட்டை வீரபத்திர மேஸ்திரி தெருவில் உள்ள நகராட்சிக்கு சொந்தமான வணிக வளாகத்தின் அருகே உள்ள காலி இடத்தில் தற்காலிகமாக சேகரிக்கப்பட்டு வருகிறது.

    இந்நிலையில் இந்த குப்பை கிடங்கில் நேற்று மதியம் திடீரென தீ விபத்து ஏற்பட்டு புகை மண்டலமாக காட்சியளித்தது. இந்த குப்பை கிடங்குக்கு அருகில் பஜார் பகுதி உள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    உடனடியாக குடியாத்தம் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. விரைந்து வந்த குடியாத்தம் தீயணைப்பு வீரர்கள் ஒரு மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்து முற்றிலும் அணைத்தனர்.

    தீ விபத்து குறித்து தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு குடியாத்தம் நகர் மன்ற தலைவர் எஸ்.சவுந்தரராசன், துணைத்தலைவர் பூங்கொடி மூர்த்தி, நகராட்சி பொறியாளர் சிசில் தாமஸ், நகர மன்ற உறுப்பினர்கள் என்.கோவிந்தராஜ், எம். எஸ்.குகன் உள்ளிட்டோர் விரைந்து சென்று பார்வையிட்டு தீ அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

    • ரூ.10 கோடி செலவில் குப்பையை அகற்றும் பணி நடந்து வருகிறது.
    • மேயர் மகேஷ் தகவல்

    நாகர்கோவில்:

    நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ் நிருபர்களிடம் கூறியதாவது:-

    நாகர்கோவில் மாநக ராட்சிக்கு தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ரூ.74.54 கோடி வளர்ச்சி திட்டங்களை தந்துள்ளார் கள். நாகர்கோவில் மாநக ராட்சி பகுதியில் ஒருவருக்கு தினமும் 135 லிட்டர் குடிநீர் கிடைக்கும் வகையில் ஆம்ரூத் திட்டத்தின் கீழ் ரூ.296 கோடியில் வேலை நடந்து வருகிறது.

    அந்தப் பணியும் முடியும் தருவாயில் உள்ளது. பாதாள சாக்கடை பணி 17 வார்டு பகுதிகளில் முடிந்துள்ளது. மற்ற வார்டுகளில் பணிகள் நடந்து வருகிறது.

    நகர்ப்புற சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் மாநகரப் பகுதியில் கோர்ட்டு ரோடு, பெண்கள் கிறிஸ்தவ கல்லூரி சாலைகள் ரூ.3.50 கோடியில் அழகுப்படுத்தும் பணி தொடங்கப்பட்டுள்ளது. கோணம் தொழில்கல்வி நிலையம் அருகே ரூ.2.50 கோடி செலவில் நவீன படிப்பகம் அமைக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது.

    நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 8 பூங்காக்கள் ரூ.1 கோடி செலவில் பணிகள் தொடர்ந்து நடந்து வருகிறது.

    அதேபோல் சுகாதாரத் துறையில் தொல்லைவிளை, கிருஷ்ணன் கோவில் ஆகிய இரண்டு ஆரம்ப சுகாதார நிலையம் ரூ.3 கோடியில் நவீனப்படுத்தப்பட்டு வருகிறது. அதுபோல் 10 இடங்களில் நலவாழ்வு மையங்கள் ரூ.2.50கோடியில் அமைக்கப்பட்டு வருகிறது. இதில் இரண்டு இடங்களில் பணி முடியும் தருவாயில் உள்ளது.

    சரலூர் மீன் சந்தையில் ரூ.1.5 கோடி செலவில் நவீன வணிக வளாகம் அமைக்கப்பட உள்ளது. வடசேரி கிறிஸ்டோபர் பஸ் நிலையம், வடசேரி ஆம்னி பஸ் நிலையம், அண்ணா பஸ் நிலையம் ஆகிய 3 பஸ் நிலையங் களும் ரூ.8.35 கோடியில் நவீனப்படுத்தப்பட உள்ளது. வீடு இல்லாமல் சாலையோரம் தூங்கு பவர்கள் தூங்கும் வகையில் ரூ.50 லட்சம் செலவில் செட் அமைக்கப்பட உள்ளது.

    வலம்புரிவிளையில் உள்ள உரக்கிடங்கு பயோ மைனிங் முறையில் ரூ.10 கோடி செலவில் குப்பையை அகற்றும் பணி நடந்து வருகிறது. இந்த வருட இறுதிக்குள் இந்த பணிகள் முடிந்து விடும். ரூ.10.50 கோடி செலவில் மாநகராட்சி புதிய அலுவலகம் கட்டப் பட்டுள்ளது. அது விரைவில் திறக்கப்பட உள்ளது.

    கலெக்டர் அலுவலக சந்திப்பில் அமைக்கப்படும் ரவுண்டாவினை தொடர்ந்து செட்டி குளத்திலும் ரவுண் டான அமைக்கப்பட உள்ளது. மாநகரப் பகுதியில் உள்ள ஆக்கிரமிப்பு எந்த வித பாரபட்சமின்றி அகற் றப்படும். மாநகர பகுதி யில் உள்ளச் சாலை கள் அனைத்தும் இரு வழிச்சாலை களாக ஆக்கி னால் மட்டுமே போக்கு வரத்து நெருக்கடி குறையும்.

    முதற்கட்டமாக செட்டிகுளம் முதல் சவேரி யார் கோவில் சந்திப்பு வரை இருவழிப்பாதையாக ஆக்கப்பட உள்ளது.இதை தொடர்ந்து மணிமேடை சந்திப்பு முதல் வடசேரி வரையும் இருவழிப்பாதை ஆக்கப்பட உள்ளது. நாகர்கோவில் மாநகரத்தை மாசில்லா மாநகரமாக மாற்றும் பணி தொடங்கப்பட உள்ளது.

    குப்பைகளை தரம் பிரித்து வழங்குவது குறித்து பள்ளி மாணவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப் பட்டு வருகிறது. இதனை தொடர்ந்து கல்லூரி மாண வர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த உள்ளோம். மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்ட பிறகு மக்கள் அதனை பின்பற்ற வில்லை என்றால் அபராதம் விதிக்கப்படும்.

    கோட்டார் ரோடு ரூ.20.60 லட்சம் செலவில் சாலை போடப்பட உள்ளது. மாநகர பகுதியில் வாகனம் நிறுத்தும் வகையில் நவீன வாகனங்கள் நிறுத்தம் அமைக்கப்படும். தமிழக அரசு பல திட்டங்களை குமரிக்கு வழங்கி வரு கிறது. அந்த வகையில் அற நிலையத்துறை கோவில் களை மராமத்து செய்ய ரூ.5.61 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பேட்டியின் போது ஆணையர் ஆனந்த் மோகன், பொறியாளர் பாலசுப்பிரமணியன் ஆகியோர் உடன் இருந்தனர்.

    • வலம்புரி விளை குப்பை கிடங்கில் நேற்று முன்தினம் தீ பிடித்தது.
    • நேற்று மதியம் நாகர்கோவிலில் கன மழை கொட்டி தீர்த்தது.

    நாகர்கோவில்:

    நாகர்கோவில் பீச் ரோட்டில் உள்ள வலம்புரி விளை குப்பை கிடங்கில் நேற்று முன்தினம் தீ பிடித்தது.

    இதையடுத்து நாகர் கோவில், கன்னியாகுமரி, திங்கள் சந்தையில் இருந்து தீயணைப்பு வீரர்கள் வரவழைக்கப்பட்டு தீயை அணைக்கும் பணி நடந்தது. நேற்று 2-வது நாளாகவும் தீயணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டிருந்தனர். ஆனால் தீயை கட்டுப்படுத்த முடிய வில்லை.

    நேற்று மதியம் நாகர்கோவிலில் கொட்டி தீர்த்த மழையின் காரணமாக குப்பை கிடங்கில் ஏற்பட்ட தீ முற்றிலுமாக அணைந்தது.

    இதையடுத்து தீயணைப்பு வீரர்கள் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.

    • கன்னியாகுமரி, நாகர்கோவில், திங்கள்சந்தை பகுதியில் உள்ள தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
    • ஜே.சி.பி. எந்திரம் மூலமாக குப்பைகள் கிளறப்பட்டு தீ அணைக்கும் பணி நடந்தது.

    நாகர்கோவில், ஜூன்.30-

    நாகர்கோவில் பீச் ரோடு பகுதியில் வலம்புரி விளை குப்பை கிடங்கு உள்ளது. இந்த குப்பை கிடங்கில் நாகர்கோவில் மாநகரப் பகுதியில் சேகரிக்கப்படும் குப்பைகள் கொட்டப்பட்டு வருகிறது. இதனால் அந்த பகுதியில் குப்பைகள் மலைபோல் குவிந்து கிடக்கிறது. குப்பை கிடங்கில் அடிக்கடி தீ விபத்து ஏற்படுவது வாடிக்கையாகி விட்டது. இந்த நிலையில் கடந்த வாரம் குப்பை கிடங்கில் தீ விபத்து ஏற்பட்டது. சூறைக்காற்றும் வீசியதால் தீ கொழுந்துவிட்டு எரிந்தது.

    இதையடுத்து கன்னியாகுமரி, நாகர்கோவில், திங்கள்சந்தை பகுதியில் உள்ள தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். ஜே.சி.பி. எந்திரம் மூலமாக குப்பைகள் கிளறப்பட்டு தீ அணைக்கும் பணி நடந்தது. 7 நாட்களாக நடந்த தீயணைக்கும் பணி நேற்று நிறைவு பெற்றுள்ளது.

    • கடலூர் மாநகராட்சியில் 50 ஏக்கர் பரப்பளவில் குப்பை கிடங்கு அமைக்கும் பணி தீவிரம்: அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் பேட்டி அளித்தார்.
    • பாதாள சாக்கடை பணியை மழைக்காலங்கள் தொடங்குவதற்கு முன்பு கட்டி முடித்து நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    கடலூர்:

    கடலூர் அரசு மருத்துவமனையில் குறிஞ்சிப்பாடி சட்டமன்ற மேம்பாட்டு நிதியிலிருந்து 25.5 லட்சம் மதிப்பிலான நவீன உயர் சிகிச்சை கருவிகள், மற்றும் 5.5 லட்சம் மதிப்பிலான பேரிடர் கால நவீன காணொளி காட்சி கட்டுப்பாட்டு அறை மற்றும் நோயாளிகளுக்கான பேட்டரி கார் சேவை தொடக்க விழா மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்றது. இதற்கு வேளாண்மை துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தலைமை தாங்கி உபகரணங்கள் வழங்கியும், கட்டுப்பாட்டு அறையை திறந்து வைத்தும் பேட்டரி கார் சேவையை தொடங்கி வைத்தார். பின்னர் வேளாண்மை துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் நிருபர்களிடம் கூறியதாவது:-

    கடலூர் அரசு மருத்துவமனைக்கு குறிஞ்சிப்பாடி சட்டமன்ற மேம்பாட்டு நிதியில் இருந்து 31 லட்சம் மதிப்பீட்டில் உபகரணங்கள் மற்றும் கட்டுப்பாட்டு அறை மக்கள் பயன்பாட்டிற்கு வழங்கப்பட்டுள்ளது. மேலும் என்.எல்.சி சி.எஸ்.ஆர் நிதியிலிருந்து நோயாளிகள் செல்வதற்காக பேட்டரி கார் வழங்கப்பட்டுள்ளது. கடலூர் மாநகராட்சி பகுதியில் மேயர் சுந்தரி ராஜா தலைமையில் துணை மேயர் தாமரைச்செல்வன் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள், கவுன்சிலர்கள் குப்பை கிடங்கு அமைப்பதற்கு நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் 50 ஏக்கர் பரப்பளவில் குப்பைக்கிடங்கு அமைப்பது தொடர்பாக நிலத்தை கையகப்படுத்த உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இது மட்டுமின்றி மக்கும் குப்பை, மக்காத குப்பை என தரம் பிரித்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் கடந்த பத்தாண்டு காலமாக குப்பை கிடங்கு இல்லாதது குறித்தும், குப்பைகள் மலைபோல் குவிந்து இருந்தது குறித்தும் யாரும் கேட்க திராணி இல்லாமல் இருந்து வந்தனர்.

    ஆனால் மாநகராட்சி தேர்தல் நடைபெற்று புதிதாக பொறுப்பேற்று 3 மாதமான நிலையில் மேயர், கலெக்டர் மற்றும் அதிகாரிகள் குப்பை கிடங்குகள் அமைப்பதற்கு தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கதாகும். மேலும் முடிவடையாத நிலையில் இருக்கும் பாதாள சாக்கடை பணியை மழைக்காலங்கள் தொடங்குவதற்கு முன்பு கட்டி முடித்து நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. இது மட்டுமின்றி வடிகால் வாய்க்கால் சரி செய்து கழிவுநீர் தங்கு தடை இன்றி செல்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. மேலும் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவுறுத்தலின் பேரில் வாரந்தோறும் ஒவ்வொரு பகுதியாக சென்று கழிவுநீர் மற்றும் குப்பைகள் அகற்றும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. இவ்வாறு அவர் கூறினார்.

    கலெக்டர் பாலசுப்ரமணியம் மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜா, துணை மேயர் தாமரைச்செல்வன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மருத்துவமனை துணை இயக்குனர் டாக்டர் ரமேஷ் பாபு வரவேற்றார். விழாவில் மருத்துவ பணிகள் இணை இயக்குனர் டாக்டர் மீரா, மாநகராட்சி திமுக செயலாளர் ராஜா, மருத்துவமனை கண்காணிப்பாளர் டாக்டர் சாய் லீலா, ஒருங்கிணைப்பாளர் டாக்டர் காரல், மாநகராட்சி மண்டல குழு தலைவர் கள் பிரசன்னா, இளையராஜா, சங்கீதா, சங்கீதா செந்தில் குமார், ஒன்றிய தி.மு.க. செயலாளர் தனஞ்செயன், வி.ஆர். அறக்கட்டளை விஜயசுந்தரம், மாநகராட்சி கவுன்சிலர்கள் பார்வதி, செந்தில் குமாரி இளந்திரையன், சுபாஷிணி ராஜா , சுதா அரங்கநாதன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×