search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "குப்பை கிடங்கு"

    • தந்தையை மகன் அடித்து கொன்று வீடியோ வெளியாகி பரபரப்பானது.
    • டிஜிபி அவர்களின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு அதன் மீது நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.

    சென்னை:

    சென்னையில் கொளுத்தி வரும் கோடை வெயிலில் குப்பை கிடங்குகளில் தீ விபத்து ஏற்படாமல் தடுக்க மாநகராட்சி முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

    சென்னை பெருநகரத்தில் சேகரிக்கப்படும் குப்பைகள் பெருங்குடி, கொடுங்கையூர் ஆகிய இரண்டு கிடங்குகளுக்கு கொண்டு செல்லப்படுகிறது.

    தினமும் 5 ஆயிரம் மெட்ரிக் டன் குப்பை நகரின் பல்வேறு பகுதிகளில் இருந்து சேகரித்து தரம் பிரிக்கப்படுகிறது. இந்த குப்பை கிடங்குகளில் மலை போல் குவிந்திருக்கும் குப்பைகள் சுட்டெரிக்கும் வெயிலால் தீப்பிடித்து எரிவதையோ, சிறு தீப்பொறி மூலம் விபத்து ஏற்படுவதையோ தடுக்க பாதுகாப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    ஜூன் மாதம் வரை குப்பை கிடங்குகளில் உள்ள குப்பைகளில் தண்ணீர் தெளிப்பது உள்ளிட்ட நடவடிக்கைகள் தொடரும் என்று திடக்கழிவு மேலாண்மை கண்காணிப்பு பொறியாளர் பாலமுரளி தெரிவித்தார். 2018 மற்றும் 2022-ம் ஆண்டுகளில் இந்த இரண்டு கிடங்குகளிலும் பெரும் தீ விபத்துகள் ஏற்பட்டுள்ளன.

    பெருங்குடியில் 225.16 ஏக்கர் குப்பை கிடங்கை கமிஷனர் ராதாகிருஷ்ணன் சமீபத்தில் ஆய்வு செய்தார்.

    பெருங்குடி குப்பை கிடங்கில் 2021-ம் ஆண்டு சிறிய தீ விபத்து ஏற்பட்டது. அது உடனே கட்டுப்படுத்தப்பட்டது. தனியாரிடம் இருந்து 3 டேங்கர்கள் வாடகைக்கு எடுத்து குப்பை மீது தண்ணீர் தெளிக்கப்பட்டது. மேலும் 3 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட தண்ணீர் தொட்டியும் 2 கிடங்கிலும் கட்டப்பட்டு தண்ணீர் சேமித்து வைக்கப்பட்டுள்ளது.

    மாநகராட்சி லாரிகள் மூலம் தொட்டிக்கு தண்ணீர் கொண்டு வரப்படுகிறது. குப்பை குவியல்களுக்கு இடையே 3 மீட்டர் அகலமுள்ள வழித்தடங்களும் தீ பரவாமல் தடுக்க அமைக்கப்பட்டுள்ளது. வெயில் தாக்கத்தை பொறுத்து ஒரு நாளைக்கு 2 முறை அல்லது அதற்கு மேல் தண்ணீர் தெளிக்கப்படுகிறது என்று அதிகாரி தெரிவித்தார்.

    இது தவிர தீயணைப்பு வாகனங்கள் அங்கு தயார் நிலையில் நிறுத்தப்பட்டுள்ளன. மேலும் பீடி, சிகரெட் துண்டுகளால் ஏற்படும் தீ விபத்தை தடுக்க மாநகராட்சி ஊழியர்கள் அந்த பகுதியில் தீவிரமாக கண்காணிக்கிறார்கள். குப்பை கிடங்கில் புகை ஏற்பட்டால் உடனடியாக அதனை அணைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    கோடை காலம் முடியும் வரை குப்பை கிடங்குகள் தீவிரமாக கண்காணிக்கப்படும் என்று அதிகாரி கூறினார்.

    • பல்வேறு ஐ.டி நிறுவனங்கள் மற்றும் தனியார் நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன.
    • துர்நாற்றமும் வீசி வருவதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டி உள்ளனர்.

    வேளச்சேரி:

    சோழிங்கநல்லூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பெரும்பாக்கம் பகுதி வேகமாக வளர்ச்சி அடைந்து வருகிறது.

    பெரும்பாக்கம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் பல்வேறு ஐ.டி நிறுவனங்கள் மற்றும் தனியார் நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இதனால் அப்பகுதியில் தற்போது அதிக அளவில் குடியிருப்புகள் பெருகி மக்கள் தொகை அதிகரித்து உள்ளது. இதே போல் வாகன போக்குவரத்தும் பல மடங்கு உயர்ந்து விட்டது. இந்த நிலையில் பெரும் பாக்கம் ஊராட்சியின் பின் பகுதியில் ஜல்லடியான் பேட்டை பிரதான சாலையில் உள்ள காலி இடம் குப்பைகளை சேகரிக்கும் இடமாக மாற்றப்பட்டு உள்ளது. இங்கு சேகரிக்கப் படும் குப்பைகள் பின்னர் அங்கிருந்து வாகனங்கள் மூலம் ஓரகடம் அருகே உள்ள குப்பை கிடங்கிற்கு கொண்டு செல்லப்பட்டு வருகின்றன. சுற்றிலும் குடியிருப்புகள் உள்ள நிலையில் குப்பை சேகரிக்கும் இடம் தற்போது குப்பை கிடங்காக மாறி விட்டது. இங்கு கொட்டப்படும் குப்பை கழிவுகள் உடனுக்குடன் அகற்றப்படாமல் அங்கேயே குவிந்து கிடப்பதால் தெருநாய்கள் மற்றும் மாடுகள் அந்த பகுதியில் அதிக அளவில் சுற்றி வருகின்றன.

    நாய்கள் கழிவுகளை இழுத்து சாலையோரம் போட்டு செல்வதால் வாகன ஓட்டிகள் மற்றும் அப்பகுதி மக்கள் கடும் அவதி அடைந்து வருகிறார்கள். கடும் துர்நாற்றமும் வீசி வருவதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டி உள்ளனர்.

    இங்கு கொட்டப்படும் குப்பைகளை உடனுக்குடன் அகற்றி கிடங்கிற்கு மாற்ற ஊராட்சி நிர்வாகம் கடும் சிரமம் அடைந்து வருகிறது. இதனால் அப்பகுதி குப்பை மேடாக மாறி உள்ளது. இதனை தடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்து உள்ளது. இதுகுறித்து பொதுமக்கள் கூறும்போது, முறையாக பராமரிக்கப்படாத குப்பை கொட்டும் நிலையத்துக்குள் தெருநாய்கள், கால்நடைகள் அதிக அளவில் சுற்றி வருவதால் பெரும்பாக்கத்தில் இருந்து பள்ளிக்கரணை செல்லும் வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனர். பெரும்பாலான நாட்களில், சேகரிக்கப்படும் குப்பை கழிவுகளில் பாதி மட்டுமே குப்பை கிடங்கிற்கு மாற்றப்படுகிறது. எனவே இந்த பகுதியில் உள்ள குப்பை சேகரிப்பு மையத்தை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என்றனர்.

    • தேர்தல் நேரங்களில் அரசியல் கட்சியினர் பலரும் குப்பை கிடங்கை மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று வாக்குறுதி அளித்து வருகிறார்கள்.
    • தீயை கட்டுப்படுத்த முடியவில்லை. தீ வேகமாக பரவியதால் அந்த பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சியளித்தது.

    நாகர்கோவில்:

    நாகர்கோவில் பீச் ரோடு பகுதியில் வலம்புரி விளை குப்பை கிடங்கு உள்ளது. மாநகர பகுதியில் சேகரிக்கப்படும் குப்பைகள் இங்கு கொட்டப்பட்டு வருகிறது. இதனால் குப்பைகள் மலை போல் குவிந்து கிடக்கின்றன.

    நாகர்கோவில் நகரின் மையப்பகுதியில் உள்ள இந்தக் குப்பை கிடங்கை மாற்ற வேண்டும் என்று அதன் சுற்றுவட்டார பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வருகிறார்கள். தேர்தல் நேரங்களில் அரசியல் கட்சியினர் பலரும் குப்பை கிடங்கை மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று வாக்குறுதி அளித்து வருகிறார்கள்.

    ஆனால் இதுவரை குப்பை கிடங்கு மாற்றப்படவில்லை. இந்த குப்பை கிடங்கில் குப்பைகள் மலை போல் தேங்கி கிடப்பதால் அவ்வப்போது தீ விபத்து ஏற்படுவது வாடிக்கையாகிவிட்டது. இன்று அதிகாலையில் வலம்புரி விளை குப்பை கிடங்கில் இருந்து புகை மண்டலம் வந்தது. இதை பார்த்த அங்கு பணியில் இருந்த ஊழியர்கள், மாநகராட்சி அதிகாரிகளுக்கும், நாகர்கோவில் தீயணைப்பு நிலையத்திற்கும் தகவல் தெரிவித்தனர்.

    அதன்பேரில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அதற்குள் தீ மளமளவென்று பரவி கொழுந்து விட்டு எரிந்தது. அதனை தீயணைப்பு வீரர்கள் அணைக்க முயன்றனர். ஆனால் தீயை கட்டுப்படுத்த முடியவில்லை. தீ வேகமாக பரவியதால் அந்த பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சியளித்தது.

    காற்றும் வீசியதால் அந்த பகுதியை சுற்றியுள்ள குடியிருப்புகளை புகை மண்டலம் சூழ்ந்தது. இதனால் அங்கு வசிக்கும் மக்கள் அவதிக்குள்ளானார்கள். நேரம் செல்ல செல்ல புகை அதிகரித்து இருளப்பபுரத்திலிருந்து பீச் ரோடு வரும் சாலை முழுவதும் புகை மண்டலமாக காட்சியளித்தது.

    அந்த பகுதி வழியாக வாகனங்கள் வர முடியாத நிலை ஏற்பட்டது. எதிரே வரும் வாகனங்கள் தெரியாத அளவிற்கு இருந்ததால் பொதுமக்கள் மிகவும் சிரமத்திற்கு ஆளானார்கள். இந்நிலையில் தக்கலையில் இருந்தும் தீயணைப்பு வாகனம் வரவழைக்கப்பட்டது. தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்க தற்பொழுது போராடி வருகிறார்கள். ஜே..சி.பி. எந்திரம் மூலமாக குப்பைகள் கிளறப்பட்டு தீயை அணைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

    தீ விபத்து பற்றி தகவல் அறிந்ததும் மாநகராட்சி மேயர் மகேஷ் மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டனர். தீயை கட்டுப்படுத்த தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்குமாறு அறிவுறுத்தினார்கள்.

    இது குறித்து அந்த பகுதி மக்கள் கூறுகையில், நாகர்கோவில் மாநகரப் பகுதியில் சேகரிக்கப்படும் குப்பைகள் தொடர்ந்து வலம்புரி விளை குப்பை கிடங்கில் கொட்டப்பட்டு வருகிறது. குப்பை கிடங்கில் இருந்து துர்நாற்றமும் வீசுவதால் அந்த பகுதியில் உள்ள மக்கள் மூக்கை பிடித்து கொண்டு வாழ வேண்டிய நிலை உள்ளது. குப்பை கிடங்கை மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று அனைத்து கட்சியினரும் தெரிவித்து வருகிறார்கள். ஆனால் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை.

    இதனால் இந்த பகுதியைச் சேர்ந்த முதியவர்கள், குழந்தைகள் அனைவரும் பாதிக்கப்பட்டு உள்ளனர். அவர்களுக்கு மூச்சு திணறலும் ஏற்பட்டு வருகிறது. இதற்கு நிரந்தர தீர்வாக குப்பை கிடங்கை மாற்றுவதைத் தவிர வேறு வழி இல்லை. மாநகராட்சி நிர்வாகம் உடனடியாக குப்பை கிடங்கை மாற்றாவிட்டால் போராட்டம் நடத்தப்படும் என்றனர்.

    • கங்கை கரையில் குப்பை கிடங்கை அகற்ற ராஜபாளையம் வழக்கறிஞர் ராம்சங்கர் போராடுகிறார்.
    • அரசும் அதிகாரிகளை கண்டிக்க வேண்டும் என்பதை உணரவேண்டும்.

    ராஜபாளையம்

    கடந்த 2015ஆம் ஆண்டு புனிதமான கங்கை நதி கரையில் மிகப்பெரிய அளவில் குப்பைகள் மற்றும் கழிவுகள் குவிந் திருக்கிறது. இவை கங்கை நதியில் கலக்கக்கூடாது என்பதை தடுக்க கோரி ராஜ பாளை யம் வழக்கறிஞர் ராம்சங்கர் தேசிய பசுமை தீர்ப்பா யத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

    பல்வேறு கட்ட விசாரணைக்கு பின் மேற்படி குப்பை கிடங்கை அகற்ற கோரி 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு உத்தரவிட்டது. இதுகுறித்து வழக்கறிஞர் ராம்சங்கர் கூறியதாவது:-

    5 நீதிபதிகள் கொண்ட அமர்வின் உத்தரவை செயல்படுத்தாத உத்தர காண்ட் அரசின் தலைமை செயலாளர் ஒரு மாத காலத்திற்குள் மேற்கண்ட குப்பை கிடங்கை அகற்றி அதன் அறிக்கையை நீதி மன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும். தவறும் பட்சத்தில் அவரது சம்பளம் நிறுத்தப்பட வேண்டும் என 2018-ல் உத்தரவிடப்பட்டது.

    ஆனால் இன்று வரை கங்கை நதிக்கரையில் கொட்டப்பட்டும் மேற்படி மலை போல் குவிந்துள்ள குப்பை கிடங்கு அகற்றப் படாமல் உள்ளது. அதை எதிர்த்து தமிழ் வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில், அரசு மூத்த அதிகாரிகள் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப் பட்டுள்ளது. இந்த வழக்கு 27 செப்டம்பர் 2023ல் விசார ணைக்கு வந்தது. அப்போது, வழக்கு விசார ணைக்கு எடுத்துக் கொண்ட நீதிமன்றம், 6 வாரத்திற்குள் மேற்கண்ட குப்பை கிடங்கை அகற்ற வேண்டும். ஆறு வாரக் காலத்திற்குள் அரசு அதிகாரிகள் நீதிமன்ற த்தில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டது.

    அரசு அதிகாரி களின் அலட்சியம், பொறுப்பு இல்லாமல் இருப்பது போன்றவை அரசுக்கே கெட்டப் பெயரை ஏற்படுத்தும். இதுபோன்ற உத்தரவுகளை உடனடியாக செய்ய வேண்டும் என்று அரசும் அதிகாரிகளை கண்டிக்க வேண்டும் என்பதை உணரவேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • காரைக்கால் நகராட்சிக்கு சொந்தமான குப்பை கிடங்கு, காரைக்கால் பறவை பேட் பகுதியில் இயங்கி வருகிறது.
    • கலெக்டர் சம்பந்தப்பட்ட நகராட்சி ஆணையர் சத்யாவிடம் கேட்டுக் கொண்டார்.

    புதுச்சேரி:

    காரைக்கால் நகராட்சிக்கு சொந்தமான குப்பை கிடங்கு, காரைக்கால் பறவை பேட் பகுதியில் இயங்கி வருகிறது. இந்த குப்பை கிடங்கை கலெக்டர் குலோத்துங்கன் நேற்று மாலை ஆய்வு செய்தார். குப்பையை பிரித்து எடுக்கும் (பயோ மைனிங்) பணியை ஆய்வு மேற்கொண்ட மாவட்ட கலெக்டர், எச் .ஆர் .ஸ்கொயர் தனியார் நிறுவனம் மூலம் வீடு தோறும் எடுக்கப்பட்டு வரும் குப்பைகளை தரம் பிரித்து எடுக்கும் இயந்தி ரத்தை நிறுவு வதற்கான பணிகளையும் பார்வையிட்டார். மேலும் இப்பணிகளை விரைந்து முடிக்கும்படி கலெக்டர் சம்பந்தப்பட்ட நகராட்சி ஆணையர் சத்யாவிடம் கேட்டுக் கொண்டார்.

    ஆய்வின்போது நகராட்சி செயற்பொறியாளர் லோகநாதன் மற்றும் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் கலந்து கொண்டார்கள். மேலும் இந்த கிடங்கு மற்றும் பணியில் வேலை செய்யும் மகளிர் மற்றும் பிறருக்கு கை உறை உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்கள் அவசியம் வழங்கப்பட வேண்டும். அவை இல்லாமல் பணி செய்ய க்கூடாது என கலெக்டர் குலோத்துங்கன் அதிகா ரிகளுக்கு அறிவுறுத்தினார்.

    • புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.
    • கழிவுகளை அகற்ற ரூ.47 லட்சத்து 50 ஆயிரம் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது என்றார்.

    வடகிழக்கு பருவமழையில் புழல் ஏரி நிரம்பும்போது கொசஸ்தலை ஆற்றில் உபரிநீர் திறந்துவிடப்படும். அதிக அளவு உபரிநீர் திறந்து விடப்படும்போது கொசஸ்தலை ஆற்றின் கரையோர குடியிருப்புகளில் புகுந்து பலத்த சேதமும் ஏற்படும்.

    இந்நிலையில் புழல் பகுதியில் உள்ள கொசஸ்தலை ஆற்றின் ஒரு பகுதி திருவள்ளூர் நகர பஞ்சாயத்துகளில் வசிக்கும் மக்கள் குப்பை கொட்டும் இடமாக மாறி உள்ளது. இதுகுறித்து புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

    கடந்த வாரம் நாரவாரி குப்பம் ஊராட்சியை சேர்ந்த லாரி ஒன்று புழல் நீர்தேக்கப்பகுதியில் கழிவுகளை கொட்டியதால் சுமார் 250 மீட்டர் தூரத்துக்கு துர்நாற்றம் வீசியது. இந்நிலை நீடித்தால் புழல் ஏரியில் இருந்து உபரிநீர் திறக்கப்படும்போது கழிவுகளும் அடித்து செல்லப்பட்டு குடியிருப்புகளுக்குள் வர வாய்ப்பு இருப்பதாக அப்பகுதியில் குடியிருப்பவர்கள் கூறுகின்றனர்.

    இதுகுறித்து மாதவரம் குடியிருப்பு நலசங்க தலைவர் நீலகண்ணன் கூறும்போது, கடந்த 2017-ம் ஆண்டு முதல் இதேநிலை தான் நீடிக்கிறது. 2019-ல் இப்பகுதியில் பூங்கா ஒன்று அமைக்க திட்டம் வகுக்கப்பட்டு அது கிடப்பில் போடப்பட்டது. பிறகு மீண்டும் இப்பகுதி குப்பை கூடமாக மாறியது. 2020-ல் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் பொதுபணித் துறைக்கு நீர்தேக்கத்தை தூர்வாரி அப்பகுதியை சுற்றி வேலி அமைக்க உத்தரவிட்டது. நாரவாரி குப்பம் பஞ்சாயத்து அதிகாரிகள் குப்பைகளை தரம் பிரிக்கும் பகுதி அருகே ஒரு மயானம் உள்ளது. தற்போது அவர்கள் நீர்தேக்கத்தின் அருகிலேயே கழிவுகளை கொட்டுகின்றனர். பெரும்பாலும் அவர்கள் இரவு நேரங்களில் தான் கழிவுகளை கொட்டுகின்றனர் என்றார்.

    இதுகுறித்து நாரவாரி குப்பத்தின் நிர்வாக அதிகாரி கூறும்போது, கழிவுகளை அகற்ற வேறு இடங்களை தேடி வருகிறோம். இதற்கான இடம் பாடிய நல்லூரில் தேர்வு செய்யப்பட்டு உள்ளது. மேலும் கழிவுகளை அகற்ற ரூ.47 லட்சத்து 50 ஆயிரம் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது என்றார்.

    இந்த விவகாரம் குறித்து பரிசீலித்து வருவதாக கலெக்டர் ஆல்பி ஜான் வர்க்கீஸ் தெரிவித்துள்ளார்.

    • ராமையன்பட்டி குப்பை கிடங்கில் கடந்த 20-ந்தேதி திடீரென தீப்பற்றியது.
    • தீ காரணமாக எழுந்த புகையானது மாநகரில் 5 கிலோ மீட்டர் சுற்றளவில் பரவியது.

    நெல்லை:

    நெல்லை மாநகராட்சியில் சேகரிக்கப்படும் குப்பைக் கழிவுகள் ராமையன்பட்டி யில் உள்ள குப்பை கிடங்கில் சேகரிக்கப்பட்டு வருகிறது. அங்குள்ள குப்பைகள் ஒரு சில நேரங்களில் தீப்பிடித்து வருகிறது. இந்நிலையில் ராமையன்பட்டி குப்பை கிடங்கில் கடந்த 20-ந்தேதி திடீரென தீப்பற்றியது.

    5 கிலோ மீட்டர்

    அப்போது காற்றின் வேகத்தால் மளமளவென பற்றி எரிந்தது. இதைத்தொடர்ந்து தீயை அணைக்கும் முயற்சியில் பாளை மற்றும் பேட்டை தீயணைப்பு நிலைய வீரர்கள் சுமார் 50-க்கும் மேற்பட்டோர் ஈடுபட்டனர். பெரும்பகுதி தீ அணைக்கப்பட்ட நிலையில் தீ காரணமாக எழுந்த புகையானது மாநகரில் 5 கிலோ மீட்டர் சுற்றளவில் பரவியது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்தனர்.

    அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் கடந்த 4 நாட்களாக மூச்சுத் திணறல் காரணமாக அவதிப்பட்டனர். இன்று 4-வது நாளாக குப்பைகளை ஜே.சி.பி. எந்திரம் மூலம் கிளறி அதில் தீப்பிடித்திருந்தால் தண்ணீர் பீய்ச்சி அடித்து அதனை அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டனர். அதேபோல் லாரிகள் மூலம் மணல் கொண்டு வரப்பட்டு அதனை கொட்டும் பணியிலும் ஈடுபட்டனர்.

    இதனால் பெரும்பாலான இடங்களில் தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. தொடர்ந்து தீயை அணைக்கும் முயற்சியில் வீரர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இன்று குறிப்பிட்ட சில இடங்களில் புகை மூட்டம் காணப்பட்டது.  

    • மாநகராட்சி சார்பில் நாள்தோறும் 110 டன் வரை குப்பைகள் சேகரிக்கப்பட்டு கொட்டப்பட்டு வருகிறது.
    • குப்பை கிடங்கு முழுவதும் தீ பரவிய காரணத்தினால் தீயை அணைக்க முடியாமல் தீயணைப்பு வீரர்கள் போராடினர்.

    நெல்லை:

    நெல்லை மாநகராட்சிக்கு சொந்தமான குப்பை கிடங்கு மற்றும் கழிவுநீர் சுத்திகரிப்பு மையம் நெல்லை ராமையன்பட்டி பகுதியில் சுமார் 110 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது.

    இதில் 32.5 ஏக்கர் பரப்பளவில் மாநகராட்சி பகுதியில் சேகரிக்கப்படும் குப்பைகளை கொட்டும் இடம் அமைந்திருக்கிறது. இங்கு மாநகராட்சி சார்பில் நாள்தோறும் 110 டன் வரை குப்பைகள் சேகரிக்கப்பட்டு கொட்டப்பட்டு வருகிறது.

    வழக்கமாக தென்மேற்கு பருவக்காற்று காலத்தின் போது இங்கு காற்றின் வேகத்தால் திடீரென தீ பற்றி மளமளவென எரிவதும், அதனை தீயணைப்புத் துறையினர் வந்து அணைப்பதும் வாடிக்கையாகிவிட்டது. இந்த நிலையில் நேற்று இரவு 8 மணி அளவில் குப்பை கிடங்கில் திடீரென தீ பற்றி எரிந்தது.

    உடனே அக்கம் பக்கத்தினர் பாளை மற்றும் பேட்டை தீயணைப்பு நிலையங்களுக்கு தகவல் தெரிவித்தனர். அதன் அடிப்படையில் 3 லாரிகளில் தீயணைப்பு வீரர்கள் அங்கு விரைந்து சென்று தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர் . நள்ளிரவு வரை நடந்த இந்த பணியினை மாநகராட்சி கமிஷனர் சிவகிருஷ்ண மூர்த்தி மற்றும் அதிகாரிகள் நேரில் சென்று பார்வையிட்டனர்.

    காற்றின் வேகம் அதிகமாக இருந்த காரணத்தினால் தீ மளமளவென பரவியது. இதனால் ராமையன்பட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் புகை மண்டலமாக காட்சியளிக்க தொடங்கியது. குப்பை கிடங்கு முழுவதும் தீ பரவிய காரணத்தினால் தீயை அணைக்க முடியாமல் தீயணைப்பு வீரர்கள் போராடினர்.

    தொடர்ந்து இன்று 2-வது நாளாக காலையில் இருந்து பற்றி எரிந்து வரும் தீயை அணைக்க தீயணைப்பு வீரர்கள் பல்வேறு யுக்திகளை கையாண்டு வருகின்றனர். இதற்கிடையே குப்பை கிடங்கில் இருந்து வெளியேறும் புகை மண்டலம் சுமார் 5 கிலோ மீட்டர் பரப்பளவு வரை விரிந்து இருப்பதால் அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி உள்ளனர்.

    ஒவ்வொரு ஆண்டும் ஜூன், ஜூலை மாதங்களில் இது போன்ற நிலைக்கு பொதுமக்கள் தொடர்ந்து தள்ளப்பட்டு வருகின்றனர் என்றும், சிலர் வேண்டுமென்றே குப்பை கிடங்கிற்கு தீ வைத்து விடுவதாகவும் அப்பகுதி மக்கள் புகார் கூறி வருகின்றனர்.

    நேற்றும், இன்றும் எரியும் குப்பை கிடங்கு தீயின் காரணமாக வெளியேறும் புகை மூட்டத்தினால் குப்பை கிடங்கு அருகில் உள்ள வீடுகளில் வசிக்கும் பொதுமக்கள் மாற்று இடங்களுக்கு தற்காலிகமாக சென்றுள்ளனர்.

    தொடர்ந்து இதே நிலை நீடித்து வருவதால் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை சுவாச கோளாறு உள்ளிட்ட பிரச்சனைகளால் பாதிக்கப்படலாம் எனவும் பொதுமக்கள் வேதனையுடன் தெரிவித்தனர்.

    • சென்னையின் சுற்றுச் சூழல் அமைப்புக்கு இந்த ஆறு பங்களிக்கிறது.
    • திருவிக ஆற்றுப்பாலத்தின் வழியாக தினமும் பல ஆயிரக்கணக்கான பஸ்,கார், சென்று வருகின்றன.

    சென்னை நகரில் ஓடும் முக்கிய ஆறுகளில் ஒன்று அடையாறு ஆகும். காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள செம்பரம்பாக்கம் ஏரிக்கு அருகில் மணிமங்கலத்தில் இந்த ஆறு உருவாக்குகிறது. இந்த ஆறு சென்னையில் உள்ள அடையாறு முகத்துவாரம் பகுதியில் வங்க கடலில் கலக்கிறது. இந்த ஆறு 42.5 கிலோமீட்டர் நீளம் கொண்டது ஆகும்.

    சென்னையின் சுற்றுச் சூழல் அமைப்புக்கு இந்த ஆறு பங்களிக்கிறது. அதிக மாசு அளவு இருந்தபோதிலும், படகு மற்றும் மீன்பிடித்தல் இந்த ஆற்றில் நடைபெறுகிறது. சென்னை நகரத்தின் மழைநீர், சிறிய ஓடைகள் நீர், ஏரிநீர், போன்ற இடங்களிலிருந்து வரும் உபரி நீர் இந்த ஆற்றில் கலக்கிறது.

    இந்த நிலையில் சென்னை அடையாறு ஆற்றங் கரையோரப் பகுதியான ஈக்காட்டுத் தாங்கல், கிண்டி தொழிற்பேட்டைக்கு பின்புறம் உள்ள பகுதிகள் குப்பை கொட்டும் இடமாக மாறி உள்ளது. இதுபற்றி புகார் எழுந்ததையடுத்து சென்னை மாநகராட்சி 6 மாதங்களுக்கு முன் குப்பை கொட்டிய கரையோர பகுதிகளை சுத்தம் செய்தது. இந்த நிலையில் தற்போது மீண்டும் அப்பகுதி குப்பை கொட்டும் இடமாக மாறி உள்ளது. அதன் முந்தைய பரிதாப நிலையே அங்கு மீண்டும் உருவாகி உள்ளது. இதனை தடுக்க எந்த நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை.

    மேலும் அடையாறு ஆற்றுப்பாலத்தில் சரிவர பராமரிப்பு செய்யப்படாததால் பாலத்தின் சுவர்களில் செடி, கொடிகள் வளர்ந்து படர்ந்து உள்ளன. எனவே அதனை முறையாக பராமரிப்பு பணிகள் செய்து பாலத்தை சீரமைக்க வேண்டும்.

    அடையாறு திருவிக ஆற்றுப்பாலத்தின் வழியாக தினமும் பல ஆயிரக்கணக்கான பஸ்,கார், வேன், மோட்டார் சைக்கிள்கள் சென்று வருகின்றன. ஏராளமான பொதுமக்களும் இந்த பாலத்தின் வழியாக நடந்து சென்று வருகிறார்கள்.

    இந்த நிலையில் இப்பாலம் பழுதடைந்து உள்ளது. இந்த பாலத்தின் பக்கவாட்டு சுவர்களில், தூண்களில் மரம், செடி, கொடிகள் முளைத்து வளர்ந்து உள்ளன. பாலத்தை சரிவர பராமரிப்பு செய்யாததால் பழுதடைந்த நிலையில் உள்ளது.

    பாலத்துக்கு கேடு விளைவிக்கும் மரம், செடிகளை உடனடியாக அகற்ற வேண்டும். பாலத்தின் கரையோர பகுதிகளில் குப்பைகள் குவிந்து கிடக்கின்றன. இதன் அருகில் உள்ள புதர்களில் விஷ பூச்சிகள், பாம்புகள் நடமாட்டம் உள்ளன. மேலும் இந்த பாலத்தில் வாகன ஓட்டிகள் பயத்துடன் பயணம் செய்ய வேண்டிய அவல நிலை ஏற்பட்டு உள்ளது.

    அடையாறு ஆற்றங்கரையோர பகுதிகளில் குப்பைகள் கொட்டுவதால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது. குப்பைகள் மலைபோல் தேங்கி கிடக்கின்றன. வரும் மழைக்காலங்களின் போது இவைகள் தண்ணீர் போக்குவரத்தை தடைசெய்ய வாய்ப்புகள் உருவாகும்.

    அடையாறு ஆற்றில் உள்ள ஆகாய தாமரை செடிகள், குப்பைகள் அகற்ற வேண்டும். அடையாறு ஆற்றின் கரையினை மேலும் விரிவுபடுத்த வேண்டும். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஊருக்குள் பெருவெள்ளம் புகுந்தது போன்ற நிலை மீண்டும் உருவாகக்கூடாது. எனவே இதுகுறித்து அதிகாரிகள் விழிப்புடன் செயல்பட வேண்டும்.

    கூவம் ஆற்றின் கரை யோரப் பகுதிகளிலும் குப்பைகள் கொட்டப்பட்டு வருகின்றன. எனவே அவற்றையும் அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

    இதுகுறித்து அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

    பொதுப்பணித்துறை, நீர்வளத்துறை மற்றும் சென்னை நதி மறுசீரமைப்பு அறக்கட்டளை ஆகியவை ஒருங்கிணைந்து, ஆறுகள் மற்றும் கால்வாய்களில் குப்பைகளை கொட்டக் கூடாது என்பதை வலியுறுத்தி மக்களிடையே விழிப்புணர்வு செய்கிறது.

    தமிழகஅரசு அதிகநிதி செலவழித்து அடையாறு மறுசீரமைப்பு திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இதில் ஆற்றங்கரையில் ஆக்கிரமிப்பு குடிசைகளில் வசித்த மக்கள் அகற்றப்பட்டு மறு குடியமர்வு செய்யப்படுகிறார்கள்.

    தூர்வாருதல் மற்றும் ஆற்றின் கரையோரம் விரிவாக்கம் செய்யப்படுகிறது. பிளாஸ்டிக் கழிவுகள் அகற்றப்படுகின்றன. 24 கி.மீ. தூரத்திற்கு வேலி அமைக்க திட்டமிட்டு 50 சதவீத பணிகள் முடிந்துவிட்டன. கரையோர பகுதிகளில் குப்பைகளை அகற்றும் பணி நடைபெற்று வருகிறது. கரையோர பகுதிகளில் 4.53 லட்சம் மரக்கன்றுகள் நடப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • நகராட்சி குப்பை கிடங்குகளில் மக்கும் குப்பையிலிருந்து, உரம் தயாரிக்கும் பணி நடக்கிறது.
    • மக்காத குப்பை கிடங்கிலிருந்து மறுசுழற்சிக்கு உதவும், பிளாஸ்டிக் உள்ளிட்ட மக்கா குப்பைகள் சேகரிக்கப்பட்டு தொழிற்சாலைகளுக்கு அனுப்பப்படும்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி நகராட்சி தலைவர் பரிதா நவாப் நிருபர்களிடம் கூறியதாவது:-

    கிருஷ்ணகிரி நகராட்சிக்குட்பட்ட 4 குப்பை கிடங்குகளில் சேர்ந்துள்ள குப்பைகளை அகற்றும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. தற்போது, கிருஷ்ணகிரி நகராட்சிக்கு உட்பட்ட நவீன தகன மேடை அருகில், ரூ.43 லட்சம் மதிப்பில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தில் "மெட்டீரியல் ரெகவி பெசிலிட்டீஸ்" எனும் மறுசுழற்சிக்கு பயன்படும் மக்கா குப்பை சேமிப்பு கிடங்கு கட்டுமான பணி முடியும் தருவாயில் உள்ளது.

    நகராட்சி குப்பை கிடங்குகளில் மக்கும் குப்பையிலிருந்து, உரம் தயாரிக்கும் பணி நடக்கிறது. மக்காத குப்பை கிடங்கிலிருந்து மறுசுழற்சிக்கு உதவும், பிளாஸ்டிக் உள்ளிட்ட மக்கா குப்பைகள் சேகரிக்கப்பட்டு தொழிற்சாலைகளுக்கு அனுப்பப்படும். திருவண்ணாமலை சாலையில், இதே போல மற்றொரு மக்கா குப்பை சேமிப்பு கிடங்கும் கட்டப்பட உள்ளது. தொடர்ந்து "லேயிங் மிஷின்", "எக்ஸ்ட்ரூடர் மிஷின்" உள்ளிட்டவைகள் போடப்பட்டு, மக்கா குப்பையை இறுக்கி, தொழிற்சாலைகளுக்கு அனுப்பும் பணியும் தொடங்கப்படும். இதன் மூலம் நகரில் குப்பைகள் தேங்காத வண்ணம் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

    • ரூ. 15 லட்சம் செலவில் 12க்கும் மேற்பட்ட இடங்களில் சி.சி.டி.வி. கேமிராக்கள் பொருத்தப்பட உள்ளது.
    • ரூ.648 கோடி மதிப்பீட்டில் பயோ-மைனிங் முறையில் குப்பைகளை பிரித்தெடுத்து நிலத்தை மீட்டெடுக்கும் பணிகள்நடைபெற உள்ளன.

    சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் தினசரி சராசரியாக 5,100 மெட்ரிக் டன் குப்பைகள் சேகரிக்கப்படுகின்றன.

    இவை பெருங்குடி மற்றும் கொடுங்கையூரில் உள்ள குப்பை கொட்டும் கிடங்குகளில் கொட்டப்பட்டு வருகிறது. சுமார் 343 ஏக்கர் பரப்பளவில் உள்ள கொடுங்கையூர் குப்பைக் கொட்டும் கிடங்கில் சுமார் 252 ஏக்கர் நிலப்பரப்பில் கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக குப்பைகள் கொட்டப்படுகிறது. 1 முதல் 8 மண்டலங்களில் உள்ள குப்பைகளை இங்கே கொண்டுவரப்படுகின்றன. இதனால் சுமார் 66.52 லட்சம் மெட்ரிக் டன் குப்பைகளை குவிந்து கிடக்கின்றன. குப்பையில் இருந்து மீத்தேன் வாயு அதிக அளவு வெளியேறுவதால் வெயில் காலங்களில் அடிக்கடி தீ விபத்து ஏற்படுகிறது. இதனால் அங்கு தினமும் தீயணைப்பு வாகனங்கள் நிறுத்தப்பட்டுள்ளது. இதில். இரண்டு ஷிப்டுகளாக பிரிக்கப்பட்டு, 7 தீயணைப்பு வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    தீ விபத்தை தடுப்பதற்காக முன்எச்சரிக்கையாக இரண்டு குடிநீர் லாரிகள், பாதுகாப்புக்காக 24 மணி நேரமும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. மேலும்1.5 லட்சம் லிட்டர் தண்ணீர் கொள்ளளவு கொண்ட குப்பை கிடங்கு உள்ளே அமைக்கப்பட்டுள்ளது.

    குப்பைகளை பொறுக்கும் நபர்கள் இரும்பு, செம்பு கம்பிகளை எடுப்பதற்காக வயர்கள் உள்ளிட்ட பொருட்களை அவ்வபோது குப்பைகளை எரிக்கும் போது ஏற்படும் புகையால் அருகில் உள்ள குடியிருப்புகளில் வசிப்பவர்கள் மூச்சு திணறல், ஆஸ்துமா, நுரையீரல் பாதிப்பு உள்ளிட்ட நோய்களால் பாதிக்கப்பட்டு வருகிறார்கள்.

    மர்ம நபர்கள் குப்பைகளை தீ வைத்து கொளுத்துவதை கட்டுப்படுத்துவதற்காக ரூ. 15 லட்சம் செலவில் 12க்கும் மேற்பட்ட இடங்களில் சி.சி.டி.வி. கேமிராக்கள் பொருத்தப்பட உள்ளது.

    இதே போல் குப்பை கழிவுகளால் நிலத்தடி நீரும் மாசு பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. குப்பைகளில் கொட்டப்படும் `ப்ளோரசன்ட்' பல்புகளில் இருக்கும் பாதரசத்தின் ஆவியை சுவாசிப்பதால் சிறுநீரகம், நுரையீரல் பாதிப்புகள் ஏற்படுகின்றது. குப்பைகளில் இருந்து வெளிவரும் `கிரீன்ஹவுஸ்' வாயுக்கள், கார்பன் டை ஆக்ஸைடைவிட 20 மடங்கு அதிக நச்சுத் தன்மை கொண்டவை. இதைச் சுவாசிக்கும் மக்களுக்கு கடுமையான நுரையீரல் பாதிப்புகள், புற்றுநோய் ஏற்படவும் வாய்ப்பு இருப்பதாக கூறப்ப டுகிறது. இதை தொடர்ந்து கொடுங்கையூர் குப்பை கிடங்கை இடமாற்றம் செய்ய வேண்டும். அங்கு குவிந்து கிடக்கும் குப்பைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பல ஆண்டுகளாக பொதுமக்கள் அரசுக்கு தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர்.

    இதையடுத்து கொடுங்கையூர் குப்பை கிடங்கு பகுதி நிலத்தை பசுமையாக மாற்றுவதற்கான முயற்சியாக குப்பைகளை பிரித்தெடுக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட இருக்கிறது. ரூ.648 கோடி மதிப்பீட்டில் பயோ-மைனிங் முறையில் குப்பைகளை பிரித்தெடுத்து நிலத்தை மீட்டெடுக்கும் பணிகள்நடைபெற உள்ளன.

    இந்த திட்டம் 6 பகுதிகளாக பிரித்து ஒவ்வொரு பகுதிக்கும் தனித்தனியாக டெண்டர் விடப்பட உள்ளது. இதன் மூலம் பல ஒப்பந்ததாரர்கள் போட்டி போட்டு பணிகளை மேற்கொள்ளும் போது சிறந்த முறையில் செய்வார்கள் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த திட்ட பணி ஆகஸ்ட் மாதம் தொடங்க இருக்கிறது. 2025-ம் ஆண்டில் முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்த திட்டத்தின் படி குப்பை கிடங்கு கழிவில் இருந்து மின்சாரம், கியாஸ், உரம் தாயரிக்கப்படும். இதற்காக திடக்கழிவு மேலாண்மை ஒருங்கிணைந்த செயலாக்க நிலையங்கள் அமைய உள்ளன.

    இதற்கிடையே கொடுங்கையூர் குப்பை கிடங்கில் செயல்படுத்தப்பட இருக்கும் பயோ மைனிங் திட்டம் குறித்து பொதுமக்களிடம் கருத்து கேட்கும் கூட்டம் தண்டையார் பேட்டையில் உள்ள காலரா தொற்று நோய் ஆஸ்பத்திரியில் உள்ள கலையரங்கத்தில் மாநகராட்சி சார்பில் நடைபெற்றது. இதில் கொடுங்கையூர், ஆர்.கே. நகர் பகுதியில் உள்ள பொதுமக்கள் குடியிருப்பு நலசங்க பிரதிநிதிகள் ஏராளமானோர் பங்கேற்றனர் அவர்கள் கொடுங்கையூர் குப்பை கிடங்கை மீட்டு எடுப்பதற்கான அரசின் நடவடிக்கைக்கு பாராட்டு தெரிவித்தனர்.

    இதில் திடக்கழிவு மேலாண்மை துறை தலைமை பொறியாளர் மகேஸ்வரன், தலைமையில், ஆர்.கே.நகர் ஜே.ஜே. எபினேசர் எம்.எல்.ஏ., மண்டல குழு தலைவர் நேதாஜி கணேசன், சென்னை மாநகராட்சி வடக்கு மண்டல துணை ஆணையர் சிவகுரு பிரபாகரன், மண்டல பொறுப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    குடியிருப்பு நலசங்க பிரதிநிதிகள் இந்த திட்டம் குறித்து பேசும்போது இந்த திட்டம் சிறப்பானது ஆகும். இதை கடந்த 3 ஆண்டுகளாக கிடப்பில் போட்டது போல் தற்போதும் கிடப்பில் போடாமல் விரைவில் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்றனர்.

    இது குறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறும்போது, இந்தத் திட்டத்திற்காக ரூ. 648 கோடி நிதி அரசால் ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் கட்டிடங்கள் மற்றும் மிகவும் நவீன வசதியுடன் கூடிய எந்திரங்கள் பொருத்தப்பட உள்ளது. இந்த பணியானது வருகின்ற ஆகஸ்ட் மாதம் தொடங்கி 2025-ம் ஆண்டுக்குள் முடித்து செயல்பாட்டிற்கு வரும். ஏற்கனவே பெருங்குடி குப்பை கிடங்கில் பயோமைனிங் திட்டத்திற்கான பணிகள் நடந்து வருகின்றன. இது 70 சதவீதம் முடிவடைந்து உள்ளது என்றனர்.

    • பொதுமக்கள் காத்திருப்பு போராட்டம்
    • 5 ஏக்கர் இடத்தில் குப்பை

    திருவண்ணாமலை,

    திருவண்ணாமலை அருகே குப்பை கிடங்கு அமைக்க எதிர்ப்பு தெரி வித்து பொதுமக்கள் 2-வது நாளாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    குப்பை கிடங்கு அமைக்க எதிர்ப்பு

    திருவண்ணாமலை ஒன்றி யத்தில் உள்ள தேவனந்தல் ஊராட்சியில் புனல்காடு அருகில் உள்ள மலையை ஒட் டிய 5 ஏக்கர் இடத்தில் குப்பை கிடங்கு அமைக்கும் பணி நடைபெற்று வருகின்றது. இதற்கு அருகில் உள்ள புனல் காடு. கலர்கொட்டாய்.

    ஆடையூர் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களுக்கு ஆதரவாக விவ சாயிகள் சங்கத்தினரும். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட் சியினரும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    கடந்த 8-ந் தேதியன்று குப்பை கிடங்கு அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பொது மக்கள் கலெக்டர் அலுவலகத் தில் ஒப்பாரி வைத்து போராட்டத்தில் ஈடுபட்ட னர். இதையடுத்து அந்த இடத்தில் குப்பை கொட்டும் பணி நிறுத்தப்பட்டது.

    இந்த நிலையில் குப்பை கிடங்கு அமைக்கப்பட்டு உள்ள இடத்தை சுற்றி சுற்றுசுவர் கட்டும் பணிகள் நடைபெற்று வருகின்றது.

    காத்திருப்பு போராட்டம்

    இந்த பணியை நிறுத்தக் கோரி மீண்டும் நேற்று முன்தி னம் முதல் புனல்காடு பகுதியை சேர்ந்த பொதுமக்கள் . குப்பை கிடங்கு அமைக்கும் இடத்தின் அருகில் உள்ள மரத்தடியில் காத்திருப்பு, போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்தநிலையில் நேற்று அங்கேயே கஞ்சி காய்ச்சி 2-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    குப்பை கிடங்கு அமைக்கும் பணியை நிறுத்தும் வரை காத்திருப்பு போராட்டம் தொடரும் என்று அவர்கள் தெரிவித்தனர்.

    ×