search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "காத்திருப்பு போராட்டம்"

    • பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நடந்தது
    • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டையில் தமிழ்நாடு அரசு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று முத்துக்கடை பஸ் நிறுத்தம் அருகே காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது.

    போராட்டத்திற்கு சங்கத்தின் மாவட்ட தலைவர் கலைமணி தலைமை தாங்கினார்.மாநில இணை செயலாளர் அமிர்தவள்ளி கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்.

    போராட்டத்தில் சங்கத்தின் மாவட்ட நிர்வாகிகள் மற்றும் ஆற்காடு, வாலாஜா, சோளிங்கர், நெமிலி, அரக்கோணம் வட்டார நிர்வாகிகள், உள்பட அங்கன்வாடிகள் ஊழியர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    நேற்று மாலையிலிருந்து தொடர்ந்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    • 150 கிராம அலுவலர்கள் பங்கேற்பு
    • அனைத்து கிராம நிர்வாக அலுவலர்களும் ஒரு நாள் விடுப்பு எடுத்து போராட்டம்

    கன்னியாகுமரி:

    கிள்ளியூர் வட்டம் கீழ்மிடாலம் பி கிராம நிர்வாக அலுவ லராக ராஜேஷ் என்பவர் பணி புரிந்து வருகிறார்.

    இந்நிலையில் அவர், திடீரென பணியிடை மாற்றம் செய்யப்பட்டார். பணியிடம் மாற்றம் செய்யப்பட்டதை ரத்து செய்யக்கோரி தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர் சங்கம் சார்பில் பத்மநாபபுரம் சப்-கலெக்டர் அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டம் நடந்தது. போராட்டத்திற்கு மாவட்ட தலைவர் செந்தில் குமார் தலைமை தாங்கினார். செயலாளர் நாகேஸ்வரன், பொருளாளர் ஈஸ்வரி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இந்த போராட்டத்தில் அகஸ்தீஸ்வரம், தோவாளை, கல்குளம் திருவட்டார், கிள்ளியூர், விளவங்கோடு ஆகிய வட்டங்களை சேர்ந்த கிராம நிர்வாக அலுவலர்கள், 40 பெண்கள் உள்பட 150 பேர் கலந்து கொண்டனர்.

    மேலும் இன்று 11-ந்தேதி அனைத்து கிராம நிர்வாக அலுவலர்களும் ஒரு நாள் விடுப்பு எடுத்து போராட்டத்தில் ஈடுபடு கின்றனர்.

    • தூய்மை பணியாளர்கள் முழு தொகை ஊதியமாக வழங்கவும் கோரி காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    • இந்நிலையில் ஒப்பந்த முழு ஊதியம் வழங்க ஏற்று கொண்டதால் காத்திருப்பு போராட்டம் வாபஸ் பெற்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு அரசு மருத்துவ மனையில் தனியார் ஒப்பந்த நிறுவனம் மூலம் 132 தூய்மை பணியாளர்கள், காவல் பணியா ளர்கள் என பல்வேறு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர் .

    இவர்களுக்கு மாவட்ட நிர்வாகம் வழங்கும் தினக்கூலி, 707 ரூபாய் வழங்காமல், 310 ரூபாயை வழங்குகின்றனர். இதுபற்றி புகார் தெரிவித்த 16 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.

    இவர்களுக்கு மீண்டும் பணி வழங்கவும், முழு தொகை ஊதியமாக வழங்கவும் கோரி காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இந்நிலையில் நேற்று ஒப்பந்த நிறுவனம், ஏ.ஐ.டி.யு.சி., தொழிற்சங்கம், மருத்துவ துறை அலுவலர்கள் பங்கேற்ற பேச்சுவார்த்தையில் பணியிடை நீக்கம் செய்யப்பட்டவர்களுக்கு மீண்டும் பணி வழங்கவும், முழு ஊதியம் வழங்கவும் ஒப்பந்த நிறுவனம் ஏற்று கொண்டதால் காத்திருப்பு போராட்டம் வாபஸ் பெற்றனர்.

    • ஒப்பந்த நிறுவனம் கோரிக்கைளை நிறைவேற்றாததால் நேற்றிரவு முதல் காத்திருப்பு போராட்டத்தை தொடங்கி உள்ளனர்.
    • இன்று 2-வது நாளாக தூய்மை பணியாளர்களின் காத்திருப்பு போராட்டம் தொடங்கியுள்ளது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் தந்தை பெரியார் அரசு தலைமை மருத்துவமனையில் தூய்மை பணியாளர்கள், காவலர்கள் உள்பட 132 ஒப்பந்த பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.

    பல ஆண்டுகளாக பணியாற்றி வரும் இப்பணியாளா்களுக்கு தனியார் ஒப்பந்த நிறுவனம் மூலம் ஊதியம் வழங்கப்பட்டு வருகின்றது.

    தூய்மை பணியாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியமாக நாளொன்றுக்கு ரூ.707 வழங்க வேண்டும் என்று மாவட்ட நிர்வாகம் நிர்ணயித்துள்ளது.

    ஆனால் மாவட்ட நிர்வாகம் நிர்ணயித்துள்ள ஊதியத்தை விட குறைவாக நாளொன்று க்கு ரூ.395 மட்டுமே ஒப்பந்த நிறுவனம் வழங்கி வருவதாக தூய்மை பணியாளர்கள் குற்றம் சாட்டி உள்ளனர்.

    எனவே மாவட்ட நிர்வாகம் நிர்ணயித்துள்ள குறைந்தபட்ச ஊதியத்தை வழங்க வேண்டும். போராட்டம் காரணமாக வேலை நீக்கம் செய்யப்பட்ட தொழிலாளர்களுக்கு மீண்டும் வேலை வழங்க வேண்டும்.

    தொழிலாளர் நல சட்டங்களின் படியான சட்டபூர்வமான பலன்களை உடனடியாக வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் கடந்த சில நாட்களுக்கு முன்பு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதையடுத்து நடத்தப்பட்ட பேச்சு வார்த்தையை தொடர்ந்து போராட்டத்தை கைவிட்டு பணிக்கு திரும்பினர்.

    ஆனால் ஒப்பந்த நிறுவனம் கோரிக்கைளை நிறைவேற்றாததால் நேற்றிரவு முதல் மீண்டும் அரசு மருத்துவமனை வளாகத்தில் தொடர் காத்திருப்பு போராட்டத்தை தொடங்கி உள்ளனர்.

    இரவு முழுவதும் கடும் பனியை பொறுப்படுத்தாமல் தூய்மை பணியாளர்கள் தலைமை அரசு மருத்துவமனை வளாகத்தில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இப்போராட்டத்திற்கு ஏ.ஐ.டி.யு.சி. ஈரோடு மாவட்ட மருத்துவத்துறை பணியாளர்கள் சங்கம் ஆதரவு தெரிவித்துள்ளது.

    இந்நிலையில் இன்று 2-வது நாளாக தூய்மை பணியாளர்களின் காத்திருப்பு போராட்டம் தொடங்கியுள்ளது.

    எங்கள் கோரிக்கைகள் நிறைவேறும் வரை எங்கள் காத்திருப்பு போரா ட்டம் தொடரும் என தூய்மை பணியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

    • எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் பல்வேறு கட்சிகள் மற்றும் அமைப்புகள் ஆர்பாட்டங்களை செய்து வருகின்றனர்.
    • விவசாய உபகரணங்கள் களப்பை மற்றும் கருப்பு கொடியை பறக்க விட்டு 15-வது நாளாக உத்தனப்பள்ளி ஆர்.ஐ அலுவலகம் அருகே தொடர்ந்து காத்திப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர்.

     சூளகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம் - சூளகிரி தாலுகா உத்தனப்பள்ளி ஊராட்சி மற்றும் அயர்னப்பள்ளி, நாகமங்களம் ஊராட்சி பகுதிகளான விளை நில பகுதிகளில் 6-வது சிப்காட் நில எடுப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் பல்வேறு கட்சிகள் மற்றும் அமைப்புகள் ஆர்பாட்டங்களை செய்து வருகின்றனர்.

    இந்நிலையில் விவசாய உபகரணங்கள் களப்பை மற்றும் கருப்பு கொடியை பறக்க விட்டு 15-வது நாளாக உத்தனப்பள்ளி ஆர்.ஐ அலுவலகம் அருகே தொடர்ந்து காத்திப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர். 

    • கிராம நிா்வாக அலுவலா் சாம்சனை குந்தா வட்டத்துக்கு மாவட்ட நிா்வாகம் இடமாற்றம் செய்தது.
    • மாவட்ட நிா்வாகத்தை கண்டித்து கிராம நிா்வாக அலுவலா்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட

    ஊட்டி

    ஊட்டி, கூக்கல் பகுதியை சோ்ந்த கிராம நிா்வாக அலுவலா் சாம்சனை குந்தா வட்டத்துக்கு மாவட்ட நிா்வாகம் இடமாற்றம் செய்தது. இது பழி வாங்கும் நடவடிக்கை என்று கூறி கிராம நிா்வாக அலுவலா்கள் சங்கத்தின் சாா்பில் தலைவா் அருள் ரத்தினம் தலைமையில் மாவட்டத் தலைவா் தீபக் முன்னிலையில் குன்னூரில் தாசில்தார் அலுவலகம் முன்பு மாவட்ட நிா்வாகத்தை கண்டித்து கிராம நிா்வாக அலுவலா்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனா்.

    • தமிழக அரசு கடந்த ஆண்டைப் போலவே பொங்கல் பரிசுத் தொகுப்புக்கு விவசாயிகளிடம் இருந்து கரும்பைக் கொள்முதல் செய்ய வேண்டும்.
    • வரும் செவ்வாய்க்கிழமை காலை 10 மணிக்கு இந்தப் போராட்டம் தொடங்க உள்ளது.

    திருப்பூர்:

    தமிழக அரசு பொங்கல் பரிசுத் தொகுப்புக்கு விவசாயிகளிடம் இருந்து கரும்பு கொள்முதல் செய்யக்கோரி சென்னை தலைமைச் செயலகம் முன்பு வருகிற 27-ந்தேதி முதல் போராட்டம் நடைபெறும் என தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் தெரிவித்துள்ளது.

    இது குறித்து தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் நிறுவனா் ஈசன் முருகசாமி, மாநிலத் தலைவா் ஆா்.சண்முகசுந்தரம், மாநிலப் பொதுச் செயலாளா் எஸ்.முத்துவிஸ்வநாதன் ஆகியோா் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-

    தமிழக அரசு கடந்த ஆண்டைப் போலவே பொங்கல் பரிசுத் தொகுப்புக்கு விவசாயிகளிடம் இருந்து கரும்பைக் கொள்முதல் செய்ய வேண்டும். இந்த கோரிக்கை நிறைவேறும் வரை தலைமைச் செயலகத்தின் முன்பு போராட்டம் நடத்த உள்ளோம். வரும் செவ்வாய்க்கிழமை காலை 10 மணிக்கு இந்தப் போராட்டம் தொடங்க உள்ளது. இந்த கோரிக்கை தொடா்பாக பல்வேறு விவசாய சங்கத் தலைவா்கள், சம்பந்தப்பட்ட அமைச்சா்களிடமும், துறையின் செயலாளரிடமும் கோரிக்கை வைத்தும் எவ்வித முன்னேற்றமும் இல்லை. ஒரு ஏக்கருக்கு ரூ. 2 லட்சம் செலவு செய்து, கடன் பெற்று கரும்பு பயிரிட்டுள்ள விவசாயிகள் தமிழக அரசு பொங்கல் கரும்பை கொள்முதல் செய்யாவிட்டால் தற்கொலை செய்வதைத் தவிர வேறு வழியில்லை என்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனா்.ஆகவே கரும்பு பயிரிட்டுள்ள விவசாயிகளிடமிருந்து அந்தந்த மாவட்டங்களிலேயே கொள்முதல் செய்து பொங்கல் பரிசுத்திட்டத்தில் கரும்பு வழங்கிட உத்தரவு பிறப்பிக்க வேண்டும். இந்த கோரிக்கை நிறைவேறும் வரையில் தொடா் காத்திருப்பு போராட்டத்தை நடத்த உள்ளோம் என்றனா். 

    • சுல்தான்பேட்டையில் தென்னை விவசாயிகள் கோரிக்கை மாநாடு நடந்தது.
    • தென்னை விவசாயம் பிரதானமாக நடந்து வரும் சூழலில் விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்ற அரசு முன்வர வேண்டும்.

    பல்லடம் : 

    சூலூர் தாலுகா சுல்தான்பேட்டையில் தென்னை விவசாயிகள் கோரிக்கை மாநாடு நடந்தது. இந்திய விவசாய சங்க தலைவர் ராகேஷ் திகையர் மாநாட்டை துவக்கி வைத்தார்.

    இதில் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் மாநிலத் தலைவர் ஈசன் தலைமை வகித்து பேசியதாவது:- தென்னை விவசாயிகளின் கோரிக்கைகளை அரசு செவி சாய்த்து கேட்பதில்லை.தேங்காய் கொள் முதல் விலையை உயர்த்தி வழங்க வேண்டும். கொள்முதல் 250 கிலோவில் இருந்து 500 கிலோவாக மாற்றி அமைக்க வேண்டும். ரேஷன் கடைகள் மூலம் தேங்காய் எண்ணெய் விற்பனை செய்வதன் மூலம் எண்ணற்ற தென்னை விவசாயிகள் பயன்பெறுவார்கள்.

    ஆனால் விவசாயிகள் பலமுறை கோரிக்கை வைத்தும் ஆட்சியாளர்கள் நடவடிக்கை எடுக்க மறுத்து வருகின்றனர். தென்னையில் ஏற்படும் வாடல் நோய், விலை கிடைக்காதது உள்ளிட்டவற்றால் தென்னை விவசாயம் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர்.

    திருப்பூர், கோவை மாவட்டங்களில் தென்னை விவசாயம் பிரதானமாக நடந்து வரும் சூழலில் விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்ற அரசு முன்வர வேண்டும். இல்லையெனில் டெல்லியில் நடந்தது போல் மாபெரும் விவசாயிகள் காத்திருப்பு போராட்டம் தமிழகத்திலும் நடக்கும். இவ்வாறு அவர் பேசினார்.

    • காரேகவுண்டம்பாளையம் ஊராட்சி 3-வது வார்டு பெரியார் நகரில் சுமார் 100-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளது.
    • உடனடியாக தலையிட்டு பொதுமக்களுக்கு கழிப்பிட வசதியை ஏற்படுத்தித் தருமாறு வேண்டுகோள் வைத்துள்ளனர்.

    அன்னூர்,

    கோவை மாவட்டம் அன்னூர் அடுத்த காரேகவுண்டம்பாளையம் ஊராட்சி 3-வது வார்டு பெரியார் நகரில் சுமார் 100-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளது.

    இந்த பகுதியில் பொதுக்கழிப்பிடம் வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வந்தனர். இதையடுத்து 2 மாதங்களுக்கு முன்பு கழிப்பறை கட்டுவதற்கு அடிக்கல் நாட்டு பூஜை நடைபெற்றது.

    ஆனால் இதுவரை எந்த ஒரு பணியும் நடைபெறவில்லை. இதன்காரணமாக பொதுமக்கள் நாளை மறுநாள் காரைக்கவுண்டம்பாளையம் ஊராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு காத்திருப்பு போராட்டம் நடத்தப்படும் என்று பொதுமக்கள் கூறியுள்ளனர். எனவே சம்மந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக தலையிட்டு பொதுமக்களுக்கு கழிப்பிட வசதியை ஏற்படுத்தித் தருமாறு வேண்டுகோள் வைத்துள்ளனர்.

    • சுமார் 25000 பேர் வசித்து வருகின்றோம்.
    • விவசாயம் சார்ந்த உபதொழில்களுக்கும் பயன்படுத்தி வருகின்றோம்.

    கோவை,

    கோவை சூலூர் பாரப்பட்டி ஊராட்சியில் உள்ளது குளத்துப்பாளையம் கிராமம். இந்த கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் இன்று காலை கோவை கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிடுவதற்காக கலெக்டர் அலுவலகத்தை நோக்கி வந்தனர்.

    அவர்களை அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் தடுத்து நிறுத்தினர். இதனைத் தொடர்ந்து ெபாதுமக்கள் கலெக்டர் அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அதன் பின்னர் அவர்கள் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

    அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:-

    கோவை சூலூர் தாலுகாவில் வாரப்பட்டி, கந்தம்பாளையம், சடையஞ்செட்டிபாளையம், பூசாரிபாளையம் வி. குளத்துப்பா ளையம், புளிய மரத்து பாளையம், சுல்தான்பேட்டை பகுதியில் 421.41 ஏக்கரில் மிகப்பெரிய தமிழ்நாடு தொழில் வளர்ச்சிக்கழகத்தின் தொழில் முனையம் அமைய உள்ளதாக அறிந்தோம்.

    மேற்கண்ட நிலத்தின் மி அருகே வாரப்பட்டி, பூசாரிபாளையம், வி.சந்திராபுரம், கந்தம்பாளையம், சடையஞ்செட்டிபாளையம், புளியமரத்துப்பாளையம், குளத்துப்பாளையம், சுல்தான்பேட்டை ஆகிய கிராமங்கள் உள்ளன.

    இக்கிராமங்களில் சுமார் 25000 பேர் வசித்து வருகின்றோம்.மேலும் செலக்கரிச்சல் ஊராட்சி, மல்லேகவுண்டம்பாளையம் ஊராட்சி, கிருஷ்ணாபுரம் ஊராட்சி மற்றும் புளியம்பட்டி ஊராட்சி ஆகிய கிராமங்கள் இப்பகுதியை சுற்றி உள்ளது.

    இப்பகுதிகளில் மிக குறைவான மழைப்பொழிவு காரணமாக நாங்கள் அனைவரும் காய்கறி, தென்னை, வாழை சார்ந்த விவசாயம் செய்வதுடன், ஆடு, மாடு, கோழி வளர்த்து எங்கள் வாழ்க்கையை நடத்தி வருகின்றோம்.

    கிராமங்களில் கிணறு மற்றும் ஆழ்துளை கிணறுகளில் கிடைக்கப்பெரும் நீரை குடிநீராகவும் விவசாயம் மற்றும் விவசாயம் சார்ந்த உபதொழில்களுக்கும் பயன்படுத்தி வருகின்றோம்.

    இந்த இடத்தில் தமிழ்நாடு தொழில் வளர்ச்சிக்கழகத்தின் தொழில் முனையத்தில் பவுண்டரிகள் மற்றும் கெமிக்கல் தயாரிப்பு நிறுவனங்கள் வர உள்ளதாக தெரிந்து கொண்டோம். மேற்கண்ட ஆலைகள் அமைந்தால் அவர்கள் வெளியேற்றும் கழிவு நீர் நிலத்தடி நீரில் கலந்தால் உபயோகமற்றதாக மாறிவிடும் அபாயம் உள்ளது.

    மேலும் தொழிற்சா லையில் இருந்து வெளியேறும் நச்சு புகையால் மக்களின் வாழ்வாதாரம் மற்றும் சுற்றுச்சூழல் பாதிக்கப்படும்.

    எங்கள் பகுதியில் தமிழ்நாடு தொழில் வளர்ச்சிக்கழகத்தின் தொழில் முனையம் அமைக்க நிலம் கையகப்படு த்துவதாக மாவட்ட கலெக்டர் அறிவித்துள்ளார். நிலம் கையகப்படுத்துவதை தவிர்த்தும், தமிழ்நாடு தொழில் வளர்ச்சிக்கழகத்தின் தொழில் முனையம் அமைப்பதை தவிர்த்து எங்களின் வாழ்வாதாரத்தை பாதுக்காக்கும்படியும் எங்களின் வருங்கால சந்ததிகளின் முன்னேற்றத்திற்கு உதவும்படியும் கேட்டுக்கொள்கிறோம்.

    இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.

    • தாசில்தார் அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் சார்பில் கோரிக்கை வைத்தனர்.

    விழுப்புரம்:

    மேல்மலையனூர் ஒன்றியம் கரடிக்குப்பம் நொச்சலூர், பெருவளூர் ஆகிய ஊராட்சிகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு 100 நாள் வேலை திட்டத்தின் கீழ் வேலை வழங்கப்படவில்லை. .

    இதனால் அந்த 3 ஊராட்சிகளைச் சேர்ந்த மாற்றுத்திறனாளிகள் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மா ர்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வட்ட அமைப்பாளர் குமார் தலைமையில், காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    தகவலறிந்த தாசில்தார் அலெக்சாண்டர், வட்டார வளர்ச்சி அலுவலர் சுப்பி ரமணியன், வளத்தி இன்ஸ்பெக்டர் சுரேஷ்பாபு மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பேச்சு வார்த்தை நடத்தி தாசில்தார் அலுவலகத்துக்கு சமதான கூட்டத்துக்கு வருமாறு கோரிக்கை விடுத்தனர். இதை ஏற்று அனைவரும் கலைந்து சென்றனர்.பின்பு தாசில்தார் அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் சார்பில் கோரிக்கை வைத்தனர்.

    அதன்படி கரடிக்கு ப்பம், நொச்சலூர், பெருவளூர் ஆகிய ஊராட்சிகளில் அனைத்து மாற்றுதிறனாளிகளுக்கும் தொடர்ந்து 100 நாள் வேலை வழங்கப்படும், நிலுவைத் தொகை வழங்காமல் இருந்தால் உடன டியாக வழங்கப்படும், 20-க்கும் மேற்பட்ட மாற்றுத்தி றனாளிகள் உள்ள கிராமங்களில் அவர்களுக்குள் ஒரு பணித்தள பொறு ப்பாளர்கள் நியமித்துக் கொள்ள அனுமதி அளிக்கவும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    • முறையாக நெல் கொள்முதல் செய்ய அனுமதிக்க வேண்டும். மானியத் திட்டங்களை அனைத்து விவசாயிகளுக்கும் பகிர்ந்து அளிக்க வேண்டும்,
    • உடுமலை அருகே உள்ள மடத்துக்குளம் தாலுகா அலுவலகத்தின் முன்பு விவசாயிகள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    மடத்துக்குளம்:

    உடுமலை அருகே உள்ள மடத்துக்குளம் தாலுகா அலுவலகத்தின் முன்பு விவசாயிகள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். முறையாக நெல் கொள்முதல் செய்ய அனுமதிக்க வேண்டும். மானியத் திட்டங்களை அனைத்து விவசாயிகளுக்கும் பகிர்ந்து அளிக்க வேண்டும், கிராம நிர்வாக அலுவலர் உரிமம் சான்று வழங்க விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடந்தது.

    ×