search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "காத்திருப்பு போராட்டம்"

    • கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தாசில்தார் பணிநீக்கம் எதிரோலியாக நடந்தது
    • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    ராணிப்பேட்டை

    ராணிப்பேட்டை மாவட்ட தமிழ்நாடு வருவாய் துறை அலுவலர்கள் சங்கம் சார்பில் கலெக்டர் அலுவலக வளாகத்தில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    போராட்டத்திற்கு சங்கத்தின் மாவட்டத்தலைவர் பாபு தலைமை தாங்கினார். மாவட்ட நிர்வாகிகள் செல்வகுமார், விஜயசேகரன், வினோத் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    போராட்டத்தில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தாசில்தார் மனோஜ் முனியன் என்பவரை தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதை ரத்து செய்ய வேண்டுமென கோரிக்கை விடுத்தனர். இதில் வருவாய்த்துறையினர் பலர் கலந்து கொண்டனர்.

    • வருவாய்த்துறை சங்கம் சார்பில் காத்திருப்பு போராட்டம் நடந்தது.
    • வட்ட வழங்க அலுவலர்கள், அனைத்து வருவாய் ஆய்வா ளர்கள், பணியாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    முதுகுளத்தூர்

    ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் வட்டம் தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் கிளை சங்கம் சார்பில் முதுகுளத் தூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் வட்டார தலைவர் சிங்க முத்து தலைமையில் மாநில செயற்குழு உறுப்பினர்கள் பெரியசாமி, சாந்தி, வட்டாட்சியர் சடையாண்டி மற்றும் வட்ட செயலாளர் தினேஷ் பிரபு ஆகியோர் முன்னிலையில் நீதிமன்ற உத்தரவுப்படி மாவட்ட கலெக்டரின் அனுமதியுடன் ஆக்கிர மிப்பை அகற்ற நடவடிக்கை எடுத்த கள்ளக்குறிச்சி வட்டாட் சியர் மனோஜ் முனியன் அவர்களை பணி நீக்கம் செய்ததை கண்டித்து காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது. இதில் தலைமை துணை வட்டாட்சியர், மண்டல துணை வட்டாட்சியர் கள், வட்ட வழங்க அலுவலர்கள், அனைத்து வருவாய் ஆய்வா ளர்கள், பணியாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வருவாய்த்துறை ஊழியர்கள் காத்திரு ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    • காத்திருப்பு போராட்டத்தையொட்டி சூரம்பட்டி போலீசார் பலத்த பாதுகா ப்பு பணியில் ஈடுபட்டனர்.

    ஈரோடு:

    கள்ளக்குறிச்சி மாவட்ட தாசில்தாரை பணியிட நீக்கம் செய்ததை கண்டித்து ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வருவாய்த் துறை ஊழியர்கள் காத்திரு ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இந்த போராட்டத்திற்கு சங்கத்தின் மாவட்ட தலை வர் ராஜ்குமார் தலைமை தாங்கினார். துணைத்த லைவர் தினகரன் முன்னி லை வகித்தார்.

    ஆர்ப்பாட்ட த்தில் கலந்து கொண்டவர்கள் சென்னை உயர் நீதிமன்றம் உத்த ரவுப்படி ஆக்கிரமிப்பு களை அகற்றிய கள்ளக்கு றிச்சி மாவட்ட தாசில்தாரின் பணி இடைநீக்கத்தை திரும்ப பெற கோரியும், ரிஷிவந்தியம் தொகுதி எம்.எல்.ஏ. வருவாய்த்துறை ஊழியர்களை தரக்குறை வாக பேசுவதை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பினர்.

    இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்தி ருந்த வருவாய்துறை ஊழிய ர்கள் கலந்து கொண்டனர். காத்திருப்பு போராட்டத்தையொட்டி சூரம்பட்டி போலீசார் பலத்த பாதுகா ப்பு பணியில் ஈடுபட்டனர்.

    • தென்னை மற்றும் பனையிலிருந்து கள் இறக்கிடவும், விற்கவும் அனுமதிக்க வேண்டும்.
    • 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தை வேளாண்மை பணிகளுக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

    அரூர்,

    தருமபுரி மாவட்டம், அரூரில் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் சார்பில் தொடர் காத்திருப்பு போராட்டம் நேற்று தொடங்கியது.

    இதில் விவசாயிகளின் அனைத்து உற்பத்திப ்பொருட்களுக்கும் குறைந்த பட்ச ஆதார விலையை நிர்ணயிக்க வேண்டும். நெல் குவிண்டாலுக்கு ரூ. 3ஆயிரம், சின்ன வெங்காயம் டன்னுக்கு ரூ. 45 ஆயிரம், கரும்பு டன்னுக்கு ரூ.5ஆயிரம், மரவள்ளிக்கிழங்கு டன்னுக்கு ரூ. 12ஆயிரம், மஞ்சள் குவிண்டலுக்கு ரூ. 15ஆயிரம் என்ற விலையை நிர்ணயிக்க வேண்டும்.

    தென்னை மற்றும் பனையிலிருந்து கள் இறக்கிடவும், விற்கவும் அனுமதிக்க வேண்டும். 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தை வேளாண்மை பணிகளுக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது.

    போராட்டத்தை தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க நிறுவனர் ஈசன் முருகசாமி தொடங்கி வைத்தார். மாநில இளைஞரணி துணை செயலாளர் உதயகுமாரன், மாநில கரும்பு விவசாயிகள் அணி ஒருங்கிணைப்பாளர் சண்முகம், தருமபுரி கிழக்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ராஜகுமாரன் ஆகியோர் போராட்டம் குறித்து விளக்க உரையாற்றினார்.

    போராட்டத்தில் 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்றனர்.

    • கூரபாளையம் பஸ் நிறுத்தம் அருகே விவசாயிகள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
    • காத்திருப்பு போராட்டம் இன்று 4-வது நாளாக நீடித்து வருகிறது.

    ஈரோடு:

    தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில் இந்திய அரசு எம்.எஸ்.சாமிநாதன் ஆணையத்தின் படி உற்பத்தி செலவுடன் 50 சதவீதம் கூடுதலாக சேர்த்து உழவர்களின் அனைத்து உற்பத்தி பொருட்களுக்கும் குறைந்தபட்ச ஆதார விலையை நிர்ணயம் செய்ய வேண்டும். அரசின் கொள்முதலை அனைத்துப் பொருட்களுக்கும் உத்தரவாதப்படுத்த வேண்டும். குறைந்தபட்ச ஆதார விலையை சட்டம் இயற்றி பாதுகாக்க வேண்டும்.

    தமிழக அரசு நெல் குவிண்டாலுக்கு ரூ.3000, கரும்பு டன்னுக்கு ரூ. 5000, மரவள்ளி கிழங்கு டன்னுக்கு ரூ.12,000, மஞ்சள் குவிண்டாலுக்கு ரூ.15,000, மக்காச்சோளம் குவிண்டாலுக்கு ரூ.3000, மாட்டுப்பால் லிட்டர் ரூ.50, எருமை பால் லிட்டர் ரூ. 75 வழங்கிட வேண்டும்.பட்டுப்புழுவிற்கு குறைந்தபட்ச ஆதார விலை கிலோ ரூ.700 நிர்ணயம் செய்ய வேண்டும்.

    அரசு தென்னை, பனையில் இருந்து கள் இறக்கி விற்க அனுமதிக்க வேண்டும். தேங்காய், கடலை, நல்லெண்ணெய் உள்ளிட்ட எண்ணெய் வகைகளை விவசாயிகளிடமிருந்து நேரடியாக கொள்முதல் செய்து மானிய விலையில் நியாயவிலைக் கடைகளில் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    கொப்பரை தேங்காவுக்கு குறைந்தபட்ச ஆதார விலையாக ரூ. 150 நிர்ணயம் செய்ய வேண்டும். 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தை அனைத்து வேளாண் பணிகளுக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும். 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தில் விவசாயிகள் அவர்களது சொந்த நிலத்திலேயே உழைப்பை செலுத்திட அனுமதி வழங்க வேண்டும்.

    பயிர் காப்பீடு திட்டத்தை காப்பீடு செய்த ஒவ்வொரு விவசாயிகளுக்கும் தனிப்பட்ட முறையில் இழப்பீடு பெறும் வகையில் மாற்றியமைக்க வேண்டும். பாண்டியாரு- புன்னம்புழா திட்டத்தை நிறைவேற்ற வேண்டும். பவானி ஆற்றை மாசுபடுத்துவதற்காக கொண்டு வரப்பட்டுள்ள அன்னூர் பவானிசாகர் சிப்காட் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஈரோடு பெருந்துறை ரோடு அடுத்த கூரபாளையம் பஸ் நிறுத்தம் அருகே விவசாயிகள் கடந்த 5-ந்தேதி முதல் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    விவசாயிகளின் காத்திருப்பு போராட்டம் இன்று 4-வது நாளாக நீடித்து வருகிறது. இன்றைய காத்திருப்பு போராட்டத்திற்கு தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் நலச்சங்க பொருளாளர் ராமசாமி தலைமை தாங்கினார். மேற்கு மாவட்ட செயலாளர் சண்முகசுந்தரம், தெற்கு மாவட்ட செயலாளர் மோகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இனாம் விவசாயிகள் இணை ஒருங்கிணைப்பாளர் கருணா மூர்த்தி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். இந்த காத்திருப்பு போராட்டத்தில் 50-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்.

    • 100 நாள் வேலை திட்டத்தை விவசாய பணிகளுக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும்
    • பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி நடந்தது

    நெமிலி:

    பனப்பாக்கத்தை அடுத்து கல்பலாம்பட்டு கிராமத்தில் தமிழக விவசாயிகள் பாது காப்பு சங்கம் சார்பில் 10 அம்ச கோரிக்கைகளை நிறை வேற்றக்கோரி தொடர் காத்திருப்பு போராட்டம் நடை பெற்றது.

    மாவட்ட ஒருங்கிணைப்பாளர் வஜ்ஜிரவேல் தலைமை தாங்கினார். மாவட்ட நிர்வா கிகள் இயற்கை விவசாயி பிர பாகரன், பாலாஜி, கோபிக் ஆகியோர் முன்னிலை வகித்த.னர். சிறப்பு அழைப்பாளராக சங்க மாநில தலைவர் ஈசன் முருகசாமி கலந்துகொண்டார்.

    உழவர்களின் அனைத்து உற்பத்தி பொருட்களுக்கும் குறைந்த பட்ச ஆதார விலையை நிர்ணயம் செய்ய வேண்டும். .

    தென்னை, பனையிலிருந்து கள் இறக்கி விற்க அனுமதிக்க வேண்டும். 100 நாள் வேலை திட்டத்தை விவசாய பணிகளுக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும். பயிர் காப்பீடு திட்டத்தில் மாற்றங்களை ஏற்ப டுத்தவேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி போராட்டம் நடைபெற்றது.

    இதில் நெமிலி, பனப்பாக்கம், பாணாவரம், காவேரிப்பாக் கம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் கலந்து கொண்டனர்.

    • 10 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரிக்கை
    • 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தை விவசாய பணிகளுக்கு மட் டுமே பயன்படுத்த வேண்டும்

    கீழ்பென்னாத்தூர்:

    கீழ்பென்னாத்தூரில் 10 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி விவசாயிகள் இன்று 4-வது நாளாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    திருவண்ணாமலை தெற்கு மாவட்ட தமிழக விவசாயி கள் பாதுகாப்பு சங்கம் சார் பில் 10 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி கீழ்பென் னாத்தூரில் உள்ள மார்க் கெட்கமிட்டி எதிரில்தொடர் காத்திருப்பு போராட்டத்தில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர்.

    மாவட்ட அவை தலைவர் குணசேகரன் தலைமை தாங்கினார். செயலாளர் ஏழு மலை, மாவட்ட மகளிரணிசெயலாளர் சாந்தா, கீழ்பென்னாத்தூர் ஒன்றிய செயலாளர் கேசவன், கொள்கைபரப்பு செயலாளர் முனிராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அமைப்பு செயலாளர் நடராஜன் வரவேற்றார்.

    சிறப்பு அழைப்பாளராக மாநில இளைஞரணிதுணை செயலாளர் ரமேஷ் கலந்து கொண்டுபோராட்டம் குறித் தும், 10 அம்ச கோரிக்கை களை விளக்கியும் பேசினார்.

    இதில் தமிழக அரசு நெல் குவிண் டாலுக்கு ரூ.3 ஆயிரமும், மணிலா குவிண்டாலுக்கு ரூ.12 ஆயிரமும், கரும்பு டன்னுக்கு ரூ.5 ஆயிரமும், உளுந்து குவிண்டாலுக்கு ரூ.10 ஆயிரமும், மக்காச்சோளம் குவிண்டாலுக்கு ரூ.3 ஆயிரமும், மர வள்ளிக்கிழங்கு டன்னுக்கு ரூ.12 ஆயிரமும், பசும்பால் லிட்டர் ஒன்றுக்கு ரூ.50-ம், எருமைப்பாலுக்கு ரூ.75-ம் வழங்க வேண்டும்.

    தமிழக அரசு 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தை விவசாய பணிகளுக்கு மட் டுமே பயன்படுத்த வேண்டும். மத்திய அரசு மின்சார திருத்த சட்டத்தை திரும்ப பெறவேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டபடி விவசாயிகள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து இன்றும் 4-வது நாளாக விவசாயிகள் கையில் கரும்பு ஏந்தி காத்திருப்பு போரா ட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

    இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    • பேச்சுவார்த்தை நடத்த மாவட்ட நிர்வாகம் முன் வரவில்லை
    • போராட்டத்தை தீவிரபடுத்த ஆலோசனை

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை அடுத்த புனல்காடு கிராமத்தில் அமைக்கப்பட்டுள்ள குப்பை கிடங்கை அகற்ற வலியுறுத்தி காஞ்சி சாலையில் 9-வது நாளாக விவசாயிகள் மற்றும் கிராம மக்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    நிலத்தடி நீர்மட்டம் பாதிக்கும், சுகாதார சீர்கேடு ஏற்படும் என்ற மக்களின் எச்சரிக்கையும் மீறி அமைக்கப்பட்டுள்ள குப்பை கிடங்கை அகற்றும் வரை போராட்டம் தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ஒவ்வொரு ஊராட்சிகளில் சேகரிக்கப்படும் குப்பைகளை அந்தந்த ஊராட்சிகளிலேயே கிடங்கு அமைத்துக் கொட்ட வேண்டும் என வலியுறுத்தினர்.

    காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்த மாவட்ட நிர்வாகம் முன் வராததால் போராட்டத்தை தீவிரபடுத்த ஆலோசித்து வருகின்றனர்.

    • கனிம வளங்கள் எடுக்க அரசுக்கு வரி, ஜிஎஸ்டி, வருமானவரி, ராயல்டி உள்ளிட்ட எதுவும் செலுத்தப்படுவதில்லை.
    • கூட்டத்தில் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    பல்லடம்:

    பல்லடம் அருகே சுக்கம்பாளையத்தில், தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்ட கனிமவள பாதுகாப்பு, இயற்கை சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க நிறுவனர் வக்கீல் ஈசன் தலைமையில் நடைபெற்றது அப்போது அவர் கூறியதாவது:-

    தமிழகத்தில் கனிம வளங்களை கடத்தி எம். சாண்ட் ஜல்லிக்கற்க்கள் மற்றும் கட்டுமான பொருட்கள் என்ற பெயரில் கேரளா, கர்நாடகா, மற்றும் வெளிநாடுகளுக்கு சட்ட விரோதமாக எடுத்துச் செல்லப்பட்டு வருகின்றது. திருப்பூர், கோவை, தேனி, தென்காசி, கிருஷ்ணகிரி, கன்னியாகுமரி, என கனிம வளம் கடத்தப்படும் பகுதிகளின் பட்டியல் நீண்டு கொண்டு செல்கிறது. 20 டன்னுக்கு மேல் கிராமசாலைகளில் எடுத்துச் செல்ல அனுமதி இல்லை, ஆனால் மிகப்பெரிய கனரக வாகனங்களை பயன்படுத்தி,சுமார் 60 டன்னுக்கும் அதிகமாக கனிம வளங்கள் எடுத்துச் செல்லப்படுவதால், சாலைகள் சேதமடை கின்றன. மேலும் கனிம வளங்கள் எடுக்க அரசுக்கு வரி, ஜிஎஸ்டி, வருமானவரி, ராயல்டி உள்ளிட்ட எதுவும் செலுத்தப்படுவதில்லை. சட்டவிரோதமாக வெடி மருந்துகளையும் வாங்கி பயன்படுத்துகின்றனர். இதில் பல்லடம் சுக்கம்பாளையத்தில் கடந்த சில தினங்களாக அளவுக்கு அதிகமான கனிம வளங்கள் கடத்தப்பட்டு வருகின்றது என்றார். பின்னர் ஆலோசனைக் கூட்டத்தில் கனிம வள கொள்ளையை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். லாரிகளை சிறை பிடித்து போராட்டத்தில் ஈடுபடும் பொதுமக்களை மிரட்டும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கவும் வலியுறுத்தி, வரும் மே 16ந்தேதி செவ்வாய்க்கிழமை பல்லடம் தாலுகா அலுவலகம் முன்பு காத்திரு ப்புப் போராட்டத்தில் ஈடுபடுவது என முடிவு செய்யப்பட்டது. இந்தக் கூட்டத்தில் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • ரூ.721 ஊதியம் வழங்க வலியுறுத்தி பல்வேறு கட்ட போராட்டங்களை முன்னெடுத்து வந்தனர்
    • இதுகுறித்து கோவை மாவட்ட கலெக்டரிடம் கோரிக்கையை முன் வைப்பதாக தெரிவித்துள்ளனர்.

    கோவை,

    கோவை அரசு ஆஸ்பத்திரியில் பணிபுரிந்து வரும் ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் அரசு அறிவித்த ஊதியம் வழங்க கோரியும், பணி நிரந்தரம் செய்யகோரியும் பணியை புறக்கணித்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    கோவை அரசு மருத்துவமனையில் ஒப்பந்த தூய்மை பணியாளர்களாக சுமார் 300க்கும் மேற்பட்டோர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இந்தநிலையில் அவர்களுக்கு அரசாங்கம் கூறிய ரூ.721 ஊதியம் வழங்க வலியுறுத்தி பல்வேறு கட்ட போராட்டங்களை முன்னெடுத்து வந்தனர். இதனையடுத்து 3 மாதங்களுக்கு முன்பு மாவட்ட கலெக்டர் ரூ.721 வழங்க அறிவுறுத்தியதையடுத்து போராட்டங்களை கைவிட்டனர்.

    ஆனால் மாவட்ட கலெக்டர் அறிவித்த ஊதியம் தற்போது வரை வழங்கப்படவில்லை. எனவே ஊதியத்தை தங்கள் நிறுவனம் உடனடியாக வழங்க வலியுறுத்தியும், இன்று கோவை அரசு மருத்துவமனையில் பணிபுரியும் ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் பணி புறக்கணித்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் இதுகுறித்து கோவை மாவட்ட கலெக்டரிடம் கோரிக்கையை முன் வைப்பதாக தெரிவித்துள்ளனர்.

    • கோடை விடுமுறை வழங்க வலியுறுத்தல்
    • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    வேலூர்:

    வேலூர் கலெக்டர் அலுவலகம் அருகே தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்கள் சங்கம் சார்பில் இன்று 2-வது நாளாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    போராட்டம்

    போராட்டத்துக்கு மாவட்டச் செயலாளர் ஜூலி தலைமை தாங்கினார். தலைவர் மல்லிகா, மாநில செயற்குழு உறுப்பினர் தேவி, பொருளாளர் சரஸ்வதி உள்ளிட்ட நிர்வாகிகள் கோரிக்கைகள் குறித்து விளக்கி பேசினர்.

    மாவட்டத் துணைச் செயலாளர் ரம்யா, துணைத் தலைவர் வேதவள்ளி, சி.ஐ.டி.யு. மாவட்ட செயலாளர் பரசுராமன், மாநில குழு உறுரப்பினர் எம்.பி. ராமச்சந்திரன், மாவட்டத் தலைவர் முரளி உள்ளிட்ட நிர்வாகிகள் வாழ்த்தி பேசினர்.

    கோடை காலமான மே மாதத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை வழங்கப்படுவது போன்று அங்கன்வாடி மையங்களுக்கும் மே மாதம் விடுமுறை வழங்கிட வேண்டும். அனைத்து சனிக்கிழமைகளிலும் விடுமுறை வழங்கிட வேண்டும்.

    அங்கன்வாடி ஊழியர்க ளுக்கு குறைந்தபட்சமாக மாதம் ரூ.26 ஆயிரம் ஊதியம் வழங்கிட வேண்டும். 10 ஆண்டுகள் பணி செய்த அங்கன்வாடி ஊழியர்க ளுக்கு நிபந்தனை இன்றி உடனடியாக பதவி உயர்வு வழங்கிட வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.

    • சங்கராபுரத்தில் பொது மக்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    • சங்கராபுரம் அருகே ஆரூர் கிராமத்தில் சுமார் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இங்குள்ள பாட்டை புறம்போக்கு நிலத்தை சிலர் ஆக்கிரமிப்பு செய்து பயன்படுத்தி வருகின்றனர்.

    கள்ளகுறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே ஆரூர் கிராமத்தில் சுமார் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இங்குள்ள பாட்டை புறம்போக்கு நிலத்தை சிலர் ஆக்கிரமிப்பு செய்து பயன்படுத்தி வருகின்றனர்.

    இது குறித்து அப்பகுதி மக்கள் புகார் அளித்தும் உரியநடவடிக்கை எடுக்கப்படவில்லை. இந்த நிலையில் ஆரூர் கிராமத்தை சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் சங்கராபுரம் வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு ஒன்று திரண்டனர். பின்னர் அவர்கள் பாட்டை புறம்போக்கு நிலத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை உடனே அகற்ற வேண்டும் என கோரி கோஷங்களை எழுப்பி அங்கு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இது குறித்த தகவலின் பேரில் சங்கராபுரம் போலீசார் மற்றும் வருவாய்த்துறையினர் சம்பவ இடத்துக்கு சென்று போராட்டத்தில் ஈடுபட்ட மக்களுடன் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது ஆக்கிரமிப்பு அகற்றுவது குறித்து சம்பந்தப்பட்ட உயர் அதிகாரிகளிடம் தெரிவித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் உறுதியளித்தனர். அதனை ஏற்று பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

    ×