என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
கோவை கலெக்டர் அலுவலகம் முன்பு பொதுமக்கள் காத்திருப்பு போராட்டம்
- சுமார் 25000 பேர் வசித்து வருகின்றோம்.
- விவசாயம் சார்ந்த உபதொழில்களுக்கும் பயன்படுத்தி வருகின்றோம்.
கோவை,
கோவை சூலூர் பாரப்பட்டி ஊராட்சியில் உள்ளது குளத்துப்பாளையம் கிராமம். இந்த கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் இன்று காலை கோவை கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிடுவதற்காக கலெக்டர் அலுவலகத்தை நோக்கி வந்தனர்.
அவர்களை அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் தடுத்து நிறுத்தினர். இதனைத் தொடர்ந்து ெபாதுமக்கள் கலெக்டர் அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அதன் பின்னர் அவர்கள் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:-
கோவை சூலூர் தாலுகாவில் வாரப்பட்டி, கந்தம்பாளையம், சடையஞ்செட்டிபாளையம், பூசாரிபாளையம் வி. குளத்துப்பா ளையம், புளிய மரத்து பாளையம், சுல்தான்பேட்டை பகுதியில் 421.41 ஏக்கரில் மிகப்பெரிய தமிழ்நாடு தொழில் வளர்ச்சிக்கழகத்தின் தொழில் முனையம் அமைய உள்ளதாக அறிந்தோம்.
மேற்கண்ட நிலத்தின் மி அருகே வாரப்பட்டி, பூசாரிபாளையம், வி.சந்திராபுரம், கந்தம்பாளையம், சடையஞ்செட்டிபாளையம், புளியமரத்துப்பாளையம், குளத்துப்பாளையம், சுல்தான்பேட்டை ஆகிய கிராமங்கள் உள்ளன.
இக்கிராமங்களில் சுமார் 25000 பேர் வசித்து வருகின்றோம்.மேலும் செலக்கரிச்சல் ஊராட்சி, மல்லேகவுண்டம்பாளையம் ஊராட்சி, கிருஷ்ணாபுரம் ஊராட்சி மற்றும் புளியம்பட்டி ஊராட்சி ஆகிய கிராமங்கள் இப்பகுதியை சுற்றி உள்ளது.
இப்பகுதிகளில் மிக குறைவான மழைப்பொழிவு காரணமாக நாங்கள் அனைவரும் காய்கறி, தென்னை, வாழை சார்ந்த விவசாயம் செய்வதுடன், ஆடு, மாடு, கோழி வளர்த்து எங்கள் வாழ்க்கையை நடத்தி வருகின்றோம்.
கிராமங்களில் கிணறு மற்றும் ஆழ்துளை கிணறுகளில் கிடைக்கப்பெரும் நீரை குடிநீராகவும் விவசாயம் மற்றும் விவசாயம் சார்ந்த உபதொழில்களுக்கும் பயன்படுத்தி வருகின்றோம்.
இந்த இடத்தில் தமிழ்நாடு தொழில் வளர்ச்சிக்கழகத்தின் தொழில் முனையத்தில் பவுண்டரிகள் மற்றும் கெமிக்கல் தயாரிப்பு நிறுவனங்கள் வர உள்ளதாக தெரிந்து கொண்டோம். மேற்கண்ட ஆலைகள் அமைந்தால் அவர்கள் வெளியேற்றும் கழிவு நீர் நிலத்தடி நீரில் கலந்தால் உபயோகமற்றதாக மாறிவிடும் அபாயம் உள்ளது.
மேலும் தொழிற்சா லையில் இருந்து வெளியேறும் நச்சு புகையால் மக்களின் வாழ்வாதாரம் மற்றும் சுற்றுச்சூழல் பாதிக்கப்படும்.
எங்கள் பகுதியில் தமிழ்நாடு தொழில் வளர்ச்சிக்கழகத்தின் தொழில் முனையம் அமைக்க நிலம் கையகப்படு த்துவதாக மாவட்ட கலெக்டர் அறிவித்துள்ளார். நிலம் கையகப்படுத்துவதை தவிர்த்தும், தமிழ்நாடு தொழில் வளர்ச்சிக்கழகத்தின் தொழில் முனையம் அமைப்பதை தவிர்த்து எங்களின் வாழ்வாதாரத்தை பாதுக்காக்கும்படியும் எங்களின் வருங்கால சந்ததிகளின் முன்னேற்றத்திற்கு உதவும்படியும் கேட்டுக்கொள்கிறோம்.
இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்