search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "waiting struggle"

    • கனிம வளங்கள் எடுக்க அரசுக்கு வரி, ஜிஎஸ்டி, வருமானவரி, ராயல்டி உள்ளிட்ட எதுவும் செலுத்தப்படுவதில்லை.
    • கூட்டத்தில் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    பல்லடம்:

    பல்லடம் அருகே சுக்கம்பாளையத்தில், தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்ட கனிமவள பாதுகாப்பு, இயற்கை சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க நிறுவனர் வக்கீல் ஈசன் தலைமையில் நடைபெற்றது அப்போது அவர் கூறியதாவது:-

    தமிழகத்தில் கனிம வளங்களை கடத்தி எம். சாண்ட் ஜல்லிக்கற்க்கள் மற்றும் கட்டுமான பொருட்கள் என்ற பெயரில் கேரளா, கர்நாடகா, மற்றும் வெளிநாடுகளுக்கு சட்ட விரோதமாக எடுத்துச் செல்லப்பட்டு வருகின்றது. திருப்பூர், கோவை, தேனி, தென்காசி, கிருஷ்ணகிரி, கன்னியாகுமரி, என கனிம வளம் கடத்தப்படும் பகுதிகளின் பட்டியல் நீண்டு கொண்டு செல்கிறது. 20 டன்னுக்கு மேல் கிராமசாலைகளில் எடுத்துச் செல்ல அனுமதி இல்லை, ஆனால் மிகப்பெரிய கனரக வாகனங்களை பயன்படுத்தி,சுமார் 60 டன்னுக்கும் அதிகமாக கனிம வளங்கள் எடுத்துச் செல்லப்படுவதால், சாலைகள் சேதமடை கின்றன. மேலும் கனிம வளங்கள் எடுக்க அரசுக்கு வரி, ஜிஎஸ்டி, வருமானவரி, ராயல்டி உள்ளிட்ட எதுவும் செலுத்தப்படுவதில்லை. சட்டவிரோதமாக வெடி மருந்துகளையும் வாங்கி பயன்படுத்துகின்றனர். இதில் பல்லடம் சுக்கம்பாளையத்தில் கடந்த சில தினங்களாக அளவுக்கு அதிகமான கனிம வளங்கள் கடத்தப்பட்டு வருகின்றது என்றார். பின்னர் ஆலோசனைக் கூட்டத்தில் கனிம வள கொள்ளையை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். லாரிகளை சிறை பிடித்து போராட்டத்தில் ஈடுபடும் பொதுமக்களை மிரட்டும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கவும் வலியுறுத்தி, வரும் மே 16ந்தேதி செவ்வாய்க்கிழமை பல்லடம் தாலுகா அலுவலகம் முன்பு காத்திரு ப்புப் போராட்டத்தில் ஈடுபடுவது என முடிவு செய்யப்பட்டது. இந்தக் கூட்டத்தில் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • தமிழக அரசு கடந்த ஆண்டைப் போலவே பொங்கல் பரிசுத் தொகுப்புக்கு விவசாயிகளிடம் இருந்து கரும்பைக் கொள்முதல் செய்ய வேண்டும்.
    • வரும் செவ்வாய்க்கிழமை காலை 10 மணிக்கு இந்தப் போராட்டம் தொடங்க உள்ளது.

    திருப்பூர்:

    தமிழக அரசு பொங்கல் பரிசுத் தொகுப்புக்கு விவசாயிகளிடம் இருந்து கரும்பு கொள்முதல் செய்யக்கோரி சென்னை தலைமைச் செயலகம் முன்பு வருகிற 27-ந்தேதி முதல் போராட்டம் நடைபெறும் என தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் தெரிவித்துள்ளது.

    இது குறித்து தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் நிறுவனா் ஈசன் முருகசாமி, மாநிலத் தலைவா் ஆா்.சண்முகசுந்தரம், மாநிலப் பொதுச் செயலாளா் எஸ்.முத்துவிஸ்வநாதன் ஆகியோா் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-

    தமிழக அரசு கடந்த ஆண்டைப் போலவே பொங்கல் பரிசுத் தொகுப்புக்கு விவசாயிகளிடம் இருந்து கரும்பைக் கொள்முதல் செய்ய வேண்டும். இந்த கோரிக்கை நிறைவேறும் வரை தலைமைச் செயலகத்தின் முன்பு போராட்டம் நடத்த உள்ளோம். வரும் செவ்வாய்க்கிழமை காலை 10 மணிக்கு இந்தப் போராட்டம் தொடங்க உள்ளது. இந்த கோரிக்கை தொடா்பாக பல்வேறு விவசாய சங்கத் தலைவா்கள், சம்பந்தப்பட்ட அமைச்சா்களிடமும், துறையின் செயலாளரிடமும் கோரிக்கை வைத்தும் எவ்வித முன்னேற்றமும் இல்லை. ஒரு ஏக்கருக்கு ரூ. 2 லட்சம் செலவு செய்து, கடன் பெற்று கரும்பு பயிரிட்டுள்ள விவசாயிகள் தமிழக அரசு பொங்கல் கரும்பை கொள்முதல் செய்யாவிட்டால் தற்கொலை செய்வதைத் தவிர வேறு வழியில்லை என்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனா்.ஆகவே கரும்பு பயிரிட்டுள்ள விவசாயிகளிடமிருந்து அந்தந்த மாவட்டங்களிலேயே கொள்முதல் செய்து பொங்கல் பரிசுத்திட்டத்தில் கரும்பு வழங்கிட உத்தரவு பிறப்பிக்க வேண்டும். இந்த கோரிக்கை நிறைவேறும் வரையில் தொடா் காத்திருப்பு போராட்டத்தை நடத்த உள்ளோம் என்றனா். 

    • தாசில்தார் அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் சார்பில் கோரிக்கை வைத்தனர்.

    விழுப்புரம்:

    மேல்மலையனூர் ஒன்றியம் கரடிக்குப்பம் நொச்சலூர், பெருவளூர் ஆகிய ஊராட்சிகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு 100 நாள் வேலை திட்டத்தின் கீழ் வேலை வழங்கப்படவில்லை. .

    இதனால் அந்த 3 ஊராட்சிகளைச் சேர்ந்த மாற்றுத்திறனாளிகள் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மா ர்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வட்ட அமைப்பாளர் குமார் தலைமையில், காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    தகவலறிந்த தாசில்தார் அலெக்சாண்டர், வட்டார வளர்ச்சி அலுவலர் சுப்பி ரமணியன், வளத்தி இன்ஸ்பெக்டர் சுரேஷ்பாபு மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பேச்சு வார்த்தை நடத்தி தாசில்தார் அலுவலகத்துக்கு சமதான கூட்டத்துக்கு வருமாறு கோரிக்கை விடுத்தனர். இதை ஏற்று அனைவரும் கலைந்து சென்றனர்.பின்பு தாசில்தார் அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் சார்பில் கோரிக்கை வைத்தனர்.

    அதன்படி கரடிக்கு ப்பம், நொச்சலூர், பெருவளூர் ஆகிய ஊராட்சிகளில் அனைத்து மாற்றுதிறனாளிகளுக்கும் தொடர்ந்து 100 நாள் வேலை வழங்கப்படும், நிலுவைத் தொகை வழங்காமல் இருந்தால் உடன டியாக வழங்கப்படும், 20-க்கும் மேற்பட்ட மாற்றுத்தி றனாளிகள் உள்ள கிராமங்களில் அவர்களுக்குள் ஒரு பணித்தள பொறு ப்பாளர்கள் நியமித்துக் கொள்ள அனுமதி அளிக்கவும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    • விக்கிரவாண்டியில் மாற்றுத்திறனாளிகள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.
    • அனைவருக்கும் எவ்வித நிபந்தனையின்றி நீல நிற அட்டை வழங்க வேண்டும்.

    விக்கிரவாண்டி, நவ.10- –

    விழுப்புரம் மாவட்ட புதிய அலை மாற்றுத்திறனாளிகள் கூட்டமைப்பு டிசம்பர் 3 இயக்கம் சார்பில் மாநில பொதுச் செயலாளர் அண்ணாமலை தலைமையில் மாவட்ட செயலாளர் தமிழரசி உட்பட 90பேர் கொண்ட குழுவினர் விக்கிரவாண்டி பி.டி.ஓ.,அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர் .பின்னர் அவர்கள் பி.டி.ஓ., சுமதியை நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்:- மனுவில் கூறியிருப்பதாவது: தேசிய மாற்றுத்திறனாளி அடையாள அட்டை வைத்திருக்கும் அனைவருக்கும் எவ்வித நிபந்தனையின்றி நீல நிற அட்டை வழங்க வேண்டும். தேசிய வேலை உறுதி திட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு மாதத்தில் 2 வாரம் பணி அளித்து, அவர்களுக்கு தகுந்த இடத்தை தேர்வு செய்து முழு ஊதியம் ரூ. 281 வழங்கிட வேண்டும்.

    அண்ணா மறு மலர்ச்சி திட்டத்தில் வீடு வழங்க வேண்டும், மாற்றுத்திறனாளிகள் அனைவரையும் வறுமை கோட்டின் கீழ் சேர்க்க வேண்டும். விக்கிரவாண்டி பி.டி.ஓ., அலுவலகத்தில் மாற்றுத்திறானாளிகள் தன்னிச்சையாக சென்று வர சாய்தள வசதி அல்லது லிப்ட் வசதி ஏற்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என கூறியுள்ளனர். விக்கிரவாண்டி ஒன்றியம் கொங்கராம்பூண்டியில் நேற்று நடந்த மக்கள் தொடர்பு திட்ட முகாமில் பங்கேற்ற அதிகாரிகள் சென்றதால் ஒன்றியத்தை சேர்ந்த மாற்றுத்திறனாளிகள் பி.டி.ஓ., அலுவலகம் முன்பு 3 மணி நேரம் அமர்ந்து காத்திருந்துமனு அளித்து சென்றனர்.

    ×