search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கபடி போட்டி"

    • சிவகாசியில் மின்னொளி கபடி போட்டி நடந்தது.
    • இந்த போட்டியை முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி தொடங்கி வைத்தார்

    சிவகாசி

    முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 75-வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு விருதுநகர் மேற்கு மாவட்ட அ.தி.மு.க., விருதுநகர் மேற்கு மாவட்ட எம்.ஜி.ஆர். மன்றம் இணைந்து சின்னமருது கபடி குழு மற்றும் பன்னீர்செல்வம் கபடி குழுவினர் நடத்தும் முதலாம் ஆண்டு மின்னொளி கபடி போட்டியை சிவகாசி அருகே ரிசர்வ்லைன் மினி ஸ்டேடியத்தில் 2நாட்கள் நடத்தியது.

    எம்.ஜி.ஆர். மன்ற துணைச்செயலாளர் சுப்பிரமணியம் தலைமை தாங்கினார். அ.தி.மு.க. அமைப்புச்செயலாளரும், விருதுநகர் மேற்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கே.டி.ராஜேந்திரபாலாஜி, மதுரை மண்டல தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளரும், தமிழ்நாடு ஒலிம்பிக் கமிட்டி சங்க துணைத் தலைவருமான ராஜ்சத்யன் ஆகியோர் போட்டியை தொடங்கி வைத்து வெற்றி பெற்ற அணிகளுக்கு கோப்பை, பரிசு தொகை வழங்கினர்.

    இந்த போட்டியில் விருதுநகர், மதுரை தேனி, திண்டுக்கல், நெல்லை உட்பட தென் மாவட்டங்களில் இருந்து 100 அணிகள் கலந்துகொண்டு விளையாடின. இறுதிப்போட்டியில் தமிழ்பாடி அணி வெற்றி பெற்று கோப்பையை வென்றது. முதல் பரிசாக 12 அடி கோப்பை மற்றும் ரூ.15ஆயிரமும், 2-ம் பரிசாக 10 அடி கோப்பை ரூ.12ஆயிரமும், 3-ம் பரிசாக 8 அடி கோப்பை ரூ.10ஆயிரமும் வழங்கப்பட்டது.

    4-ம் பரிசாக 6 அடி கோப்பை மற்றும் ரூ.8 ஆயிரம், 5-ம் பரிசு முதல் 8-ம் பரிசு வரை 4 அடி கோப்பை மற்றும் ரூ.4 ஆயிரம் 9-வது பரிசு முதல் 12-ம் பரிசு வரை 2 அடி கோப்பை மற்றும் ரூ.2 ஆயிரம் பரிசு தொகை வழங்கப்பட்டது.

    மாவட்ட மருத்துவர் அணி செயலாளர் விஜய் ஆனந்த், வழக்கறிஞர் மாரீசுவரன், சிவகாசி ஒன்றிய செயலாளர்கள் கருப்பசாமி, வெங்கடேஷ், லட்சுமி நாராயணன், ஆரோக்கியராஜ், சிவகாசி மாநகர பகுதி செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, சரவண குமார், கருப்பசாமி பாண்டியன், பொதுக்குழு உறுப்பினர் சித்துராஜபுரம் பாலாஜி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • கே.சி.வீரமணி தொடங்கி வைத்தார்
    • 30 அணியினர் கலந்து கொண்டனர்

    ஜோலார்பேட்டை:

    நாட்டறம்பள்ளி அடுத்த பச்சூர் பகுதியில் அ.தி.மு.க. சார்பில் மாபெரும் கபடி போட்டி நடைபெற்றது இந்தப் போட்டிக்கு நாட்டறம்பள்ளி ஒன்றிய செயலாளர் சீனிவாசன் தலைமை தாங்கினார்.

    கபடி போட்டியை அ.தி.மு.க. மாவட்ட செயலாளர், முன்னால் அமைச்சர் மாவட்ட தடகள சங்க தலைவருமான கே.சி. வீரமணி தொடங்கி வைத்தார்.

    மாவட்ட தடகள சங்க உறுப்பினர் செந்தில்குமார் எம்.எல்.ஏ. மற்றும் மாவட்ட கபடி கழகம் தலைவர் எஸ். பி. சீனிவாசன் இளைஞர் பாசறை மாவட்ட செயலாளர் புலவர் ரமேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கபடி போட்டியில் வேலூர் கிருஷ்ணகிரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து சுமார் 30 அணியினர் கலந்து கொண்டனர்.

    முதல் பரிசை கண்ணாலபட்டிக்கும், இரண்டாவது பரிசை கோயம்புத்தூர் ராமகிருஷ்ணா அணியும், மேலூர் எம்.பி.ஸ்டார் அணி மூன்றாம் பரிசு பெற்றது வெற்றி பெற்ற அணியினருக்கு விழா குழுவினரால் பரிசுகள் வழங்கப்பட்டன.

    • அனுப்பட்டி கிராமத்தில், மாநில அளவிலான கபடி போட்டி துவக்க விழா நடைபெற்றது.
    • கபடி போட்டி அமைப்பாளர்கள், வீரர்கள் பொதுமக்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

     பல்லடம் :

    பல்லடம் அருகே உள்ள அனுப்பட்டி கிராமத்தில், மாநில அளவிலான கபடி போட்டி துவக்க விழா நடைபெற்றது.

    கபடி போட்டியை திருப்பூர் தெற்கு தொகுதி எம்.எல்.ஏ.,செல்வராஜ் துவக்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் பல்லடம் திமுக மேற்கு ஒன்றிய செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, பொங்கலூர் சேர்மன் வக்கீல் குமார், திருப்பூர் மாநகர செயலாளர் டி.கே. டி.நாகராஜன், செயற்குழு உகாயனுர் கனகராஜ், மற்றும் திமுக நிர்வாகிகள் ராஜேஸ்வரன், சாமிநாதன், துரைமுருகன்,பழனிசாமி, கபடி போட்டி அமைப்பாளர்கள், வீரர்கள் பொதுமக்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    • போட்டிக்கு ராஜா எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார்.
    • பல்வேறு பகுதிகளில் இருந்து 18 அணிகள் போட்டிகளில் பங்கேற்றன.

    சங்கரன்கோவில்:

    சங்கரன்கோவில் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு பெண்களுக்கான கபடி போட்டி நடந்தது.

    வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் ராஜா எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். மாவட்ட துணை செயலாளர் புனிதா, முன்னாள் எம்.பி. விஜிலா சத்தியானந்த், ஒன்றிய செயலாளர்கள் பெரியதுரை, பூசை பாண்டியன், நகராட்சி சேர்மன்கள் சங்கரன்கோவில் உமா மகேஸ்வரி, புளியங்குடி விஜயா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.நகர செயலாளர் பிரகாஷ் வரவேற்றார்.

    போட்டிகளில் பல்வேறு பகுதிகளில் இருந்து 18 அணிகள் பங்கேற்றன. இதில் ஆலங்குளம் காளத்திமடம் அணி 3-வது இடமும், சேரன்மாதேவி ஏ.வி.எஸ். கபடி குழு 2-வது இடமும், குற்றாலம் பராசக்தி கல்லூரி அணி முதலிடமும் பெற்றது.

    இதில் முதலிடம் பெற்ற அணிக்கு ரூ.15ஆயிரம், 2-வது இடம் பிடித்த அணிக்கு ரூபாய் 10ஆயிரமும், 3 மற்றும் 4-ம் இடங்களை பிடித்த அணிகளுக்கு தலா ரூ.5 ஆயிரமும் வழங்கப்பட்டது.

    நிகழ்ச்சியில் நகர அவைத் தலைவர் முப்பிடாதி, இளைஞர் அணி சரவணன், மாவட்ட உடற்கல்வி இயக்குனர் நாராயணன், தி.மு.க. நகர துணை செயலாளர்கள் கே.எஸ். எஸ். மாரியப்பன், முத்துக்குமார், சுப்புத்தாய், வக்கீல் சதீஷ் மாவட்ட ஆதிதிராவிடர் நல குழு உறுப்பினர் சங்கர், வார்டு செயலாளர்கள் வீரமணி, வீரா, சிவா, கோமதிநாயகம்,காளிசாமி மற்றும் பிரகாஷ் ஜெயக் குமார், கேபிள்கணேசன், முருகன், வைரவேல், குமார், கோமதிசங்கர், பிர பாகரன் மற்றும் தி.மு.க. நிர்வாகிகள், நகராட்சி கவுன்சிலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • கோல போட்டியில் முதல் பரிசாக பிரிட்ஜ் வழங்கப்படுகிறது.
    • கபடி போட்டியில் பங்கேற்கும் பெண்களுக்கு முதல் பரிசாக ரூ.15ஆயிரம் வழங்கப்படும்.

    சங்கரன்கோவில்:

    தென்காசி வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் ராஜா எம்.எல்.ஏ. விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தி.மு.க. தலைவர், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் மற்றும் மகளிர் தினத்தை முன்னிட்டு பெண்களுக்கான மாபெரும் கோலப்போட்டி, கபடி போட்டி மற்றும் புத்தக வெளியீட்டு விழா நிகழ்ச்சி சங்கரன்கோவில் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நாளை நடைபெறுகிறது. இதில் அனைவரும் பங்கேற்கலாம். கோல போட்டியில் முதல் பரிசாக பிரிட்ஜ், 2-ம் பரிசாக கிரைண்டரும், 3-வது பரிசாக மிக்ஸி வழங்கப்படுகிறது. தொடர்ந்து 12 பேருக்கு ஆறுதல் பரிசாக பிரஷர் குக்கர் வழங்கப்படுகிறது. கபடி போட்டியில் பங்கேற்கும் பெண்களுக்கு முதல் பரிசாக ரூ.15ஆயிரம், 2-ம் பரிசாக ரூ.10ஆயிரம், 3-ம் பரிசு மற்றும் 4-ம் பரிசு ரூ.5ஆயிரம் வழங்கப்படும். இதில் பங்கேற்க விருப்பம் உள்ளவர்கள் 9080404049 தொலைபேசி எண்ணிற்கு தொடர்பு கொள்ளவும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • ரெயில்வே பாதுகாப்பு படையினருக்கான மண்டல அளவிலான கபடி போட்டி இன்று தொடங்கியது.
    • தொடக்க விழாவில் மதுரை கோட்ட ெரயில்வே கூடுதல் கோட்ட மேலாளர் ரமேஷ்பாபு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

    மதுரை

    மதுரை ெரயில்வே காலனி செம்மண் திடலில் ெரயில்வே பாதுகாப்பு படை சார்பில் மண்டலங்களுக்கு இடையேயான 31-வது கபடி போட்டி இன்று தொடங்கியது. தொடக்க விழாவில் மதுரை கோட்ட ெரயில்வே கூடுதல் கோட்ட மேலாளர் ரமேஷ்பாபு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பாதுகாப்பு படை வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார்.

    மதுரை கோட்ட பாதுகாப்பு படை அதிகாரி அன்பரசு பேசினார். கூடுதல் கோட்ட மேலாளர் ரமேஷ்பாபு கொடியசைத்து கபடி போட்டியை தொடங்கிவைத்தார். இதில் சென்னை, திருவனந்தபுரம், மதுரை, திருச்சி, சேலம் ஆகிய 5 ரெயில்வே கோட்டங்களை சேர்ந்த அணி வீரர்கள் கலந்துகொண்டனர்.

    ெரயில்வே பாதுகாப்பு படை வீரர்களுக்கு இடையேயான கபடி போட்டியில் இன்று லீக் சுற்றுகள் நடக்கிறது. சென்னை, திருவனந்தபுரம், மதுரை, திருச்சி, சேலம் ஆகிய அணிகளுக்கு இடையே கடும் போட்டி ஏற்பட்டது. இதன் காரணமாக ஆரம்பம் முதலே ஆட்டத்தில் அனல் பறந்தது.

    இதில் வெற்றி பெறும் அணிகள் இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும். மதுரை ெரயில்வே காலனி சிமெண்ட் திடலில் நாளை(4-ம் தேதி) இறுதிப்போட்டி நடக்க உள்ளது. இதில் மதுரை கோட்ட ரயில்வே மேலாளர் பத்மநாபன் அனந்த் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு வெற்றி பெற்ற அணி மற்றும் வீரர்களுக்கு சிறப்பு பரிசுகள் வழங்க உள்ளார்.

    • கதிர் ஆனந்த் எம்.பி. தொடங்கி வைத்தார்
    • ஏராளமான மாணவர்கள் கலந்து கொண்டனர்

    வேலூர்:

    முதல்-அமைச்சர் கோப்பைக்கான மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகள் நடந்து வருகிறது. மகளிர் காண கபடி விளையாட்டு போட்டி காட்பாடியில் உள்ள மாவட்ட விளையாட்டு மைதானத்தில் இன்று நடந்தது.

    போட்டியை கதிர் ஆனந்த் எம்.பி., கலெக்டர் குமாரவேல் பாண்டியன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

    4 பிரிவுகளாக கபடி போட்டி நடந்தது. இதில் பள்ளிக்கல்வித்துறை சார்பில் 8அணிகளும், கல்லூரி பிரிவு சார்பில் 5, அணிகளும் பொது பிரிவில் 2 அணிகள் மற்றும் அரசு ஊழியர்கள் பிரிவில் 2 அணிகள் என மொத்தம் 17 அணிகள் பங்கேற்றன.

    நிகழ்ச்சியில் மாநகராட்சி துணை மேயர் சுனில்குமார், 1-வது மண்டல தலைவர் புஷ்பலதா வன்னிய ராஜா, கவுன்சிலர் விமலா சீனிவாசன், மாவட்ட விளையாட்டு அலுவலர் நோயலின் ஜான் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • கபடி விளையாட்டு பயிற்சியாளரின் குடும்பத்தினர் மற்றும் அவரது மாணவர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதல்களையும் தெரிவித்து கொள்கிறேன்.
    • உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு ரூ.2 லட்சம் முதலமைச்சர் பொது நிவாரண நிதியில் இருந்து வழங்கவும் உத்தரவிட்டுள்ளேன்.

    சென்னை:

    முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    குளித்தலை வட்டம் குளித்தலை குறுவட்டம் சத்தியமங்கலம் கிராமம் கணக்குப்பிள்ளையூரில் சிறுவர்கள் இடையேயான கபடி போட்டி (ஊர் சார்ந்த தனி விளையாட்டு குழு) விளையாட்டிற்கு வந்திருந்த சிறுவர்களை அழைத்து வந்த திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் வட்டம், பாளையம் அஞ்சல் கரிச்சிகாரன் பட்டியைச் சேர்ந்த பயிற்சியாளர் மாணிக்கம் தங்கவேல் (வயது 26) என்பவர் சிறிது நெஞ்சுவலி இருந்தும் தொடர்ந்து பயிற்சி அளித்துள்ளார்.

    போட்டியில் வெற்றி பெற்ற பிறகு நெஞ்சுவலி மிகுதியாக இருந்ததால் அவரை அய்யர்மலை தனியார் மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டு அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக அரசு மருத்து வமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்தார் என்ற செய்தியினைக் கேட்டு மிகுந்த வேதனையடைந்தேன்.

    உயிரிழந்த கபடி விளையாட்டு பயிற்சியாளரின் குடும்பத்தினர் மற்றும் அவரது மாணவர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதல்களையும் தெரிவித்துக் கொள்வதோடு உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு ரூ.2 லட்சம் முதலமைச்சர் பொது நிவாரண நிதியில் இருந்து வழங்கவும் உத்தரவிட்டுள்ளேன்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • கபடி போட்டியினை கடையம் பெரும்பத்து ஊராட்சி மன்ற தலைவர் பொன் ஷீலா பரமசிவன் தொடங்கி வைத்தார்.
    • வெற்றி பெற்ற அணியினருக்கு வெற்றி கோப்பை மற்றும் பரிசுகள் வழங்கப்பட்டது.

    கடையம்:

    கடையம் அருகேயுள்ள கானாவூரில் கபடி போட்டி 2 நாட்கள் நடைபெற்றது. போட்டியினை கடையம் பெரும்பத்து ஊராட்சி மன்ற தலைவர் பொன் ஷீலா பரமசிவன் தொடங்கி வைத்தார். போட்டியில் கருத்தப்பிள்ளையூர், கானாவூர், வெய்க்கால்பட்டி, புலவனூர், குறும்பலாப்பேரி, ஆவுடையானூர் உள்பட பல்வேறு பகுதியை சார்ந்த 70-க்கும் மேற்படட கபடி அணியை சேர்ந்த வீரர்கள் கலந்து கொண்டு விளையாடினர்.

    போட்டியில் வெற்றி பெற்ற எட்டு அணியினருக்கு வெற்றி கோப்பை மற்றும் பரிசுகள் வழங்கப்பட்டது. இதில் கருத்தப்பிள்ளையூரை சேர்ந்த வீரத்தமிழன் அணியினர் முதல் பரிசை பெற்றனர். இரண்டாவது பரிசை 7 கிங்ஸ் அணியினர் பெற்றனர். பரிசு கோப்பையை கடையம் பெரும்பத்து தி.மு.க. நிர்வாகியும், தொழிலதிபருமான பரமசிவன் வழங்கினார். விழாவிற்கான ஏற்பாடுகளை தாமஸ், ஆசீர், துரை மற்றும் 7 கிங்ஸ் கபடி குழு, 7 டிரைவர்ஸ் குழு மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர். 

    • தென்னிந்திய அளவிலான போட்டி குடியாத்தத்தில் நடந்தது
    • பெண்கள் பிரிவில் ஒட்டன்சத்திரம் அணி முதலிடம் பெற்றது

    குடியாத்தம்:

    வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த எர்த்தாங்கல் கிராமத்தில் தென்னிந்திய அளவிலான கபடி போட்டிகள் 4 நாட்கள் நடைபெற்றது.

    இந்த தென்னிந்திய அளவிலான கபடி போட்டிகளில் தென்னிந்திய அளவில் மிகச் சிறந்த 44 கபடி அணிகள் ஆண்கள் பிரிவிலும், பெண்கள் பிரிவில் 28 சிறந்த அணிகள் என மொத்தம் 72 அணிகள் பங்கேற்றன. 1000-க்கும் மேற்பட்ட வீரர்கள் வீராங்கனைகள் கலந்து கொண்டனர்.

    மேலும் வெளிமாநிலங்களில் இருந்து கலந்து கொள்ளும் இந்த கபடி அணிகளில் புரோ கபடி லீக்கில் விளையாடிய வீரர்களும் வீராங்கனைகளும் கலந்து கொண்டது சிறப்பம்சமாகும்.

    இந்த தென்னிந்திய கபடி போட்டிகள் தொடக்க விழா வியாழக்கிழமை இரவு தொடங்கி 4 நாட்கள் நடைபெற்றது.

    நேற்று காலையில் பெண்கள் பிரிவில் இறுதிப் போட்டிகளை தி.மு.க. மாவட்ட செயலாளர் ஏ.பி. நந்தகுமார் எம்.எல்ஏ. தொடங்கி வைத்தார்.

    இந்நிகழ்ச்சியில் அமலு விஜயன் எம்.எல்ஏ. மாவட்ட ஊராட்சி குழு தலைவர் பாபு, குடியாத்தம் ஒன்றிய குழு தலைவர் சத்யானந்தம், நகர் மன்ற தலைவர் சவுந்தரராசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    தொடர்ந்து போட்டிகள் நடைபெற்றது நேற்று இரவு நடைபெற்ற இறுதிப் போட்டியில் ஆண்கள் பிரிவில் கேரளா காசர்கோடு ஜேகே அகடமி, சென்னை வேல்ஸ் பல்கலைக்கழகமும் மோதின பரபரப்பாக நடைபெற்ற போட்டியில் கேரளா ஜேகே அகடமி அணி வெற்றி பெற்றது. சென்னை வேல்ஸ் பல்கலைக்கழகம் இரண்டாம் இடம் பெற்றது பெங்களூர் மதராஸ் என்ஜினீயரிங் குரூப்ஸ் ராணுவ அணியும் அளந்தகரை ஏ டூ இசட் அணியும் கூட்டாக 3-ம் இடம் பெற்றது.

    பெண்கள் பிரிவில் திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தைச் சேர்ந்த சண்முகா மெமோரியல் வெண்ணிலா கபடி குழு அணி முதல் இடமும், அந்தியூர் சக்தி பிரதர்ஸ் இரண்டாம் இடமும், மூன்றாம் இடம் கூட்டாக நெல்லை பாரதி ஸ்போர்ட்ஸ் கிளம்பும் சென்னை சிட்டி போலீஸ் அணியும் பெற்றது.

    தொடர்ந்து நடைபெற்ற பரிசளிப்பு விழாவிற்கு குடியாத்தம் ஒன்றிய குழு துணை தலைவரும் ஊர் பெரிய தனக்காரமான அருண்முரளி தலைமை தாங்கினார்.ஊர் கவுண்டர் ராமன், தர்மகர்த்தா ராஜேந்திரன், முன்னாள் ஒன்றிய குழு உறுப்பினர் பழனி, ஊராட்சி மன்ற தலைவர் அம்மு, பார்த்திபன், சுரேஷ்குமார் உள்பட ஊர் முக்கிய பிரமுகர்கள் முன்னிலை வகித்தனர்.

    நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக குடியாத்தம் அமலுவிஜயன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு முதல் பரிசு பெற்ற கேரளா ஜிகே அகாடமி அணிக்கு ஒரு லட்ச ரூபாயும் கோப்பையும் வழங்கினார். 2-ம் இடம் பெற்ற வேல்ஸ் பல்கலைக்கழகம் அணிக்கு கோப்பையும் 75 ஆயிரம் வழங்கினார்.

    பெண்கள் பிரிவில் முதலிடம் பெற்ற சண்முகா மெமோரியல் வெண்ணிலா கபடி குழு அணிக்கு 50 ஆயிரம் ரூபாயும் கோப்பையும், இரண்டாம் பரிசு பெற்ற அந்தியூர் சக்தி பிரதர் அணிக்கு 30 ஆயிரம் கோப்பையும் வழங்கினார்கள். மற்றும் கலந்து கொண்ட பரிசு பெற்ற அணிகளுக்கு ரொக்கப் பரிசு, கோப்பைகளும் வழங்கப்பட்டது.

    நிகழ்ச்சியில் பேர்ணாம்பட்டு ஒன்றிய குழு தலைவர் சித்ரா ஜனார்தனம், திமுக ஒன்றிய செயலாளர் கள்ளூர்ரவி, வேலூர் மாவட்ட கபடி கழக நிர்வாகிகள் பூஞ்சோலை சீனிவாசன், சீவூர்சேட்டு, ஞானசேகரன்உள்பட மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த கபடி கழக நிர்வாகிகள், அரசியல் கட்சி பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    ஏற்பாடுகளை கிராம பொதுமக்களும், விழா குழுவினரும் செய்திருந்தனர். தென்னிந்திய அளவிலான ஆண்கள், பெண்கள் கபடி போட்டிகளை காண சுற்றுப்புற பகுதிகளை சேர்ந்த 25 ஆயிரத்திற்கும் அதிகமானோர் திரண்டு இருந்தனர். குடியாத்தம் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் கணபதி தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    • குடியாத்தம் அடுத்த எர்த்தாங்கல் கிராமத்தில் நடந்தது
    • 750 வீரர், வீராங்கனைகள் பங்கேற்பு

    குடியாத்தம்:

    வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த எர்த்தாங்கல் கிராமத்தில் தென்னிந்திய அளவிலான கபடி போட்டிகள் நான்கு நாட்கள் நடைபெறுகிறது முதல் பரிசாக ஒரு லட்சம் ரூபாயும், இரண்டாம் பரிசாக 75 ஆயிரம் மூன்றாம் பரிசாக 50,000 உள்ளிட்ட பல்வேறு ரொக்க பரிசுகளும் கோப்பைகளும் வழங்கப்படுகிறது.

    தென்னிந்திய அளவிலான கபடி போட்டிகளில் தென்னிந்திய அளவில் மிகச்சிறந்த அணிகளான ஆண்கள் பிரிவில் சென்னை வருமான வரித்துறை, திருச்சி தமிழ்நாடு போலீஸ், சென்னை சிட்டி போலீஸ், ஹைதராபாத் ஆர்டிஐ, பெங்களூர் மெட்ராஸ் என்ஜினியரிங் குரூப்ஸ் ராணுவ அணி, ஜே கே அகாடமி கேரளா, எஸ் ஆர் எம் பல்கலைக்கழகம், வேல்ஸ் பல்கலைக்கழகம் உள்ளிட்ட 25க்கும் மேற்பட்ட மிகச்சிறந்த ஆண்கள் அணியும், பெண்கள் பிரிவில் ஒட்டன்சத்திரம், அந்தியூர் சக்தி பிரதர்ஸ், பெங்களூர் நேஷனல் ஸ்போர்ட்ஸ், சென்னை பிரண்ட்ஸ் உள்பட 25க்கும் மேற்பட்ட சிறந்த அணிகள் என மொத்தம் 750 க்கும் மேற்பட்ட வீரர்கள் வீராங்கனைகள் கலந்து கொள்கின்றனர்.

    • மதுரையில் ஜூனியர் பெடரேஷன் கபடி போட்டி நடந்தது.
    • அரியானா ஆண்கள், பெண்கள் அணிகளுக்கு சாம்பியன் கோப்பை இந்திய அணியில் இடம்பெற வாய்ப்புள்ளது.

    மதுரை

    உலககோப்பைக்கான இந்திய கபடி அணியை தேர்வு செய்யும் வகையில் தேசிய அளவிலான 6-வது ஜூனியர் பெடரேஷன் கோப்பைக்கான கபடி போட்டி மதுரை அமெரிக்கன் கல்லூரியில் உள்ள உள் விளையாட்டு அரங்கில் கடந்த 1-ந் தேதி தொடங்கி 3-ந் தேதி வரை நடந்தது.

    இதில் ஆண்கள் பிரிவில் ராஜஸ்தான், அரியானா, சண்டிகார், இந்திய விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், பீகார், மராட்டியம், டெல்லி, மத்திய பிரதேசம், தமிழ்நாடு ஆகிய 9 அணிகளும், பெண்கள் பிரிவில் அரியானா, பீகார், இமாச்சலப்பிரதேசம், இந்திய விளையாட்டு ஆணையம், தெலுங்கானா, மராட்டியம், சண்டிகர், மேற்கு வங்காளம், தமிழ்நாடு ஆகிய 9 அணிகளும் கலந்து கொண்டன.

    லீக் போட்டிகளில் முதல் 4 இடங்களை பிடித்த அணிகள் அரை இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது. 2 நாட்களாக நடந்த லீக் சுற்று முடிவில் ஆண்கள் பிரிவில் அரியானா, ராஜஸ்தான், சண்டிகார், இந்திய விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் ஆகிய அணிகள் தகுதி பெற்றன. பெண்கள் பிரிவில் அரியானா, பீகார் இந்திய விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், இமாச்சலப் பிரதேசம் ஆகிய அணிகள் தகுதி பெற்றன.

    நேற்று காலை ஆண்களுக்கான அரை இறுதி போட்டி நடந்தது. இதில் அரியானா அணி ராஜஸ்தான் அணியை 40- 37 என்ற புள்ளி கணக்கில் வென்றது. மற்றொரு போட்டியில் இந்திய விளையாட்டு மேம்பாட்டு ஆணைய அணி சண்டிகார் அணியை 60- 42 என்ற புள்ளிகளை வெற்றி பெற்றது. வெற்றி பெற்ற இரு அணிகளும் இறுதிப் போட்டியில் மோதின.

    இறுதி போட்டிகளை அமைச்சர் மூர்த்தி தொடங்கி வைத்தார். இந்த போட்டியில் அரியானா அணி, இந்திய விளையாட்டு மேம்பாட்டு ஆணைய அணியை 47-40 என்ற புள்ளிக்கணக்கில் வென்று சாம்பியன் கோப்பையை கைப்பற்றியது.

    பெண்களுக்கான இறுதிப்போட்டியில் அரியானா அணி, இந்திய விளையாட்டு மேம்பாட்டு ஆணைய அணியை 40-33 என்ற புள்ளி கணக்கில் வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றது.

    இறுதிப் போட்டிகளில் வெற்றி பெற்ற அரியானா மாநில ஆண்கள், பெண்கள் அணிகளுக்கு தமிழ்நாடு அெச்சூர் கபடி கழக தலைவர் சோலைராஜா, செயலாளர் சபியுல்லா, பொருளாளர் சண்முகம், உள்ளிட்ட பலர் வெற்றிக்கோப்பை மற்றும் பரிசுத்தொகைகளை வழங்கினர்.

    ஆண்கள் பிரிவில் வெற்றி பெற்ற வீரர்கள் மற்றும் சிறப்பாக ஆடிய வீரர்கள் வருகிற பிப்ரவரி மாதம் 26-ந்தேதி ஈரானில் நடைபெறும் உலகக்கோப்பை கபடி போட்டிக்கான இந்திய ஆண்கள் அணிக்கு தேர்வு செய்யப்படுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

    ×