search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கடையம் அருகே கபடி போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு கோப்பை
    X

    போட்டியில் வெற்றி பெற்ற கபடி அணியினருக்கு கோப்பை வழங்கபட்டது.

    கடையம் அருகே கபடி போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு கோப்பை

    • கபடி போட்டியினை கடையம் பெரும்பத்து ஊராட்சி மன்ற தலைவர் பொன் ஷீலா பரமசிவன் தொடங்கி வைத்தார்.
    • வெற்றி பெற்ற அணியினருக்கு வெற்றி கோப்பை மற்றும் பரிசுகள் வழங்கப்பட்டது.

    கடையம்:

    கடையம் அருகேயுள்ள கானாவூரில் கபடி போட்டி 2 நாட்கள் நடைபெற்றது. போட்டியினை கடையம் பெரும்பத்து ஊராட்சி மன்ற தலைவர் பொன் ஷீலா பரமசிவன் தொடங்கி வைத்தார். போட்டியில் கருத்தப்பிள்ளையூர், கானாவூர், வெய்க்கால்பட்டி, புலவனூர், குறும்பலாப்பேரி, ஆவுடையானூர் உள்பட பல்வேறு பகுதியை சார்ந்த 70-க்கும் மேற்படட கபடி அணியை சேர்ந்த வீரர்கள் கலந்து கொண்டு விளையாடினர்.

    போட்டியில் வெற்றி பெற்ற எட்டு அணியினருக்கு வெற்றி கோப்பை மற்றும் பரிசுகள் வழங்கப்பட்டது. இதில் கருத்தப்பிள்ளையூரை சேர்ந்த வீரத்தமிழன் அணியினர் முதல் பரிசை பெற்றனர். இரண்டாவது பரிசை 7 கிங்ஸ் அணியினர் பெற்றனர். பரிசு கோப்பையை கடையம் பெரும்பத்து தி.மு.க. நிர்வாகியும், தொழிலதிபருமான பரமசிவன் வழங்கினார். விழாவிற்கான ஏற்பாடுகளை தாமஸ், ஆசீர், துரை மற்றும் 7 கிங்ஸ் கபடி குழு, 7 டிரைவர்ஸ் குழு மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.

    Next Story
    ×