search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கபடி போட்டி"

    • தேசிய கபடி போட்டியில் மானாமதுரை பள்ளி மாணவர்கள் தங்கப்பதக்கங்கள் வென்று சாதனை படைத்துள்ளனர்.
    • லோகேஸ்வரன், ஆனந்தகிருஷ்ணன் ஆகியோர் தமிழக அணியின் சார்பில் தேர்வு செய்யப்பட்டு போட்டியில் பங்கேற்றனர்.

    மானாமதுரை

    கோவாவில் பள்ளி மாணவர்களுக்கிடையிலான தேசிய கபடி போட்டி நடந்தது. யூத் நேஷனல் ஸ்போர்ட்ஸ் கவுன்சில் ஆப் இந்தியா சார்பில் நடந்த இப்போட்டியில் தமிழக அணியின் சார்பில் ராமநாத புரத்தை சேர்ந்த பயிற்சியாளர் புவனேஸ்வரன் தலைமையில் மானா மதுரை செயின்ட் ஜோசப் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளியின் 11-ம் வகுப்பு மாணவர்கள் லோகேஸ்வரன், ஆனந்தகிருஷ்ணன் ஆகியோர் தமிழக அணியின் சார்பில் தேர்வு செய்யப்பட்டு போட்டியில் பங்கேற்றனர்.

    போட்டியின் இறுதி சுற்றில் ராஜஸ்தான் அணியை வீழ்த்தி தமிழக அணி வெற்றிபெற்றது. இதையடுத்து இந்த அணியில் பங்கேற்ற மாணவர்கள் லோகேஸ்வரன், ஆனந்தகிருஷ்ணன் இருவருக்கும் தங்கப்பதக்கங்களும் தலா ரூ.35 ஆயிரம் ரொக்க பரிசும் வழங்கப்பட்டது. வெற்றி பெற்ற மாணவர்களை செயின்ட் ஜோசப் கல்வி நிறுவனங்களின் செயலர் கிறிஸ்டிராஜ், தலைமை முதல்வர் அருள் ஜோசப்பின் பெட்ஷி, மேல்நிலைப்பள்ளியின் முதல்வர் பிருந்தா மற்றும் ஆசிரியைகள், மாணவ-மாணவிகள் பாராட்டினர்.

    • கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு கபடி போட்டி நடைபெற்றது.
    • இந்நிகழ்ச்சிக்கு மாரண்ட்‌அள்ளி பேரூராட்சி தலைவர் வெங்கடேசன் தலைமை தாங்கினார்.

    மாரண்டஅள்ளி,

    தருமபுரி மாவட்டம், மாரண்டஅள்ளி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு கபடி போட்டி நடைபெற்றது.

    இந்நிகழ்ச்சிக்கு மாரண்ட்அள்ளி பேரூராட்சி தலைவர் வெங்கடேசன் தலைமை தாங்கினார்.

    இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக முன்னாள் அமைச்சரும் தருமபுரி மேற்கு மாவட்ட செயலாளர் பழனியப்பன் கலந்துகொண்டு போட்டியை தொடங்கி வைத்தார்.

    இதில் வெற்றி பெற்ற அணிகளுக்கு கோப்பை மற்றும் பரிசு தொகையை வழங்கி சிறப்புரையாற்றினார்.

    இந்நிகழ்ச்சியில் மாநில விவசாய துணை செயலாளர் சூடப்பட்டி சுப்பிரமணி, மாவட்டத் துணைச் செயலாளர் ராஜகுமாரி மணிவண்ணன், மாவட்ட பொருளாளர் முருகன், ஒன்றிய செயலாளர்கள் அன்பழகன், கோபால் முனியப்பன், கிருஷ்ணன், பாலக்கோடு பேரூராட்சி தலைவர் முரளி, மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளர் ஆனந்தன், மாவட்ட மகளிர் தொண்டரணி அமைப்பாளர் ஜெயா மற்றும் மாரண்டஅள்ளி பேரூராட்சி துணைத் தலைவர் கார்த்திகா பன்னீர்செல்வம், கவுன்சில ர்கள் சத்யா சிவகுமார், வெங்கடேசன், யதிந்தர், கார்த்திகேயன், ரீனா, கீதா, லட்சுமி, அபிராமி, சுகந்தி, மற்றும் கழக நிர்வாகிகள் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    • போட்டியில் 100-க்கும் மேற்பட்ட கபடி அணியினர் கலந்து கொண்டனர்.
    • வெற்றி பெற்ற அணிகளுக்கு சுழற்கோப்பை, பரிசு தொகை வழங்கப்பட்டது.

    தென்காசி:

    பாவூர்சத்திரம் அருகே உள்ள திப்- மீனாட்சிபுரம் கிராமத்தில் காமராஜர் பிறந்த நாளை முன்னிட்டு வேங்கை கபடி குழு மற்றும் மீனாட்சிபுரம் ஊர் பொதுமக்கள் இணைந்து மாவட்ட அளவிலான மாபெரும் மின்னொளி கபடி போட்டியினை நடத்தினர். இதில் மாவட்டம் முழுவதிலும் இருந்து 100-க்கும் மேற்பட்ட கபடி அணியினர் கலந்து கொண்டனர். இறுதி போட்டியில் வேங்கை கபடி அணியினர் வெற்றி பெற்று முதல் பரிசு ரூ. 15 ஆயிரத்தை தட்டி சென்றனர். முதல் பரிசை பாலாஜி நயினார் நாகேந்திரன் ஸ்பான்சர் செய்திருந்தார். பரிசு வழங்கும் விழாவில் தொழிலதிபர் விஜய் என்கிற சண்முக நயினார் கலந்து கொண்டு வெற்றி பெற்ற அணிகளுக்கு சுழற்கோப்பை மற்றும் பரிசு தொகையினை வழங்கினார்.

    விழாவில் தென்காசி மாவட்ட பா.ஜனதா இளைஞரணி செயலாளர் சரவணமுருகன், பா.ஜனதா மாவட்ட இளைஞரணி துணைத்தலைவர் விவேக், பொன்னுதுரை, பொன் செல்வன், ஜெகன், பொன்னுசாமி, நாராயணன், ராமு, ராஜா மற்றும் திப்- மீனாட்சிபுரம் ஊர் பொது மக்கள் கலந்து கொண்டனர்.

    • கோவில் கொடை விழாவை முன்னிட்டு மின்னொளி கபடி போட்டி நடந்தது.
    • 2-வது இடம் பிடித்த அணிக்கு ரூ. 17 ஆயிரம் ரொக்கம், கோப்பை வழங்கப்பட்டது.

    தென்காசி:

    ஆலங்குளம் அருகே குருவன்கோட்டை மாரியம்மன் கோவில் கொடை விழாவை முன்னிட்டு அம்மன் பிளவர்ஸ் கபடி கிளப் சார்பில் மாவட்ட அளவிலான ஒரு நாள் மின்னொளி கபடி போட்டி நடந்தது. இதனை ஸ்ரீ மாரியம்மன் கோவில் நிர்வாக குழுத்தலைவர் கண்ணன் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார்.

    60 கபடி அணியினர்

    போட்டியில் தென்காசி, நெல்லை மாவட்டங்களில் இருந்து 60-க்கும் மேற்பட்ட கபடி அணியினர் கலந்து கொண்டு விளையாடினர். இதில் குருவன்கோட்டை அம்மன் பிளவர்ஸ் கபடி அணியினர் வெற்றி பெற்றது. அந்த அணிக்கு முதல் பரிசாக ரூ. 20 ஆயிரம் ரொக்கமும், கோப்பையும் வழங்கப்பட்டது.

    2-வது இடம் பிடித்த லட்சுமிபுரம் வி.ஆர்.என். அணிக்கு ரூ. 17 ஆயிரம் ரொக்கம், கோப்பை வழங்க ப்பட்டது. 3-வது பரிசை கல்லூத்து வெண்புறா அணி பிடித்தது. அந்த அணிக்கு ரூ. 15 ஆயிரம் ரொக்கம், கோப்பை வழங்கப்பட்டது.

    தொடக்க விழா

    முன்னதாக நடந்த தொடக்க விழாவில் ஆலங்குளம் யூனியன் சேர்மன் திவ்யா மணி கண்டன், எழில்வாணன், மதுரை நாடார் சங்க தலைவர் வெங்கடேஷ் ராஜா, வெங்கடேஸ்வரபுரம் கிராம கமிட்டி மேல் நிலை ப்பள்ளி தலைமை ஆசிரியர் குகன், ஆலங்குளம் தெற்கு ஒன்றிய அ.தி.மு.க. செய லாளர் பால கிருஷ்ணன், தொழி லதிபர் ராமர், தெ ன்காசி மாவட்ட அமெச்சூர் கபடி கழக இணைச் செய லாளர்கள் அலெக்சாண்டர் தங்கம், ஹரிஹரசுதன் ஆகி யோர் கலந்து கொண்டனர்.

    ஏற்பாடுகளை அம்மன் பிளவர்ஸ் முன்னாள், இந்நாள் கபடி அணியினர் செய்திருந்தனர்.

    • சிங்கம்புணரியில் பெண்கள் கபடி போட்டி நடந்தது.
    • 16 பேர் கொண்ட குழுவினர் நடுவர்களாக செயல்பட்டனர்.

    சிங்கம்புணரி

    சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் தென்னிந்திய அளவில் 3-ம் ஆண்டு பெண்க ளுக்கான மின்னொளி கபடி போட்டி நடந்தது. போட்டியில் ஆந்திரா, கர்நாடகா, பாண்டிச்சேரி மற்றும் தமிழகத்தில் இருந்து 18 அணிகள் கலந்து கொண்டன. போட்டியில் முதல் பரிசை வென்ற அந்தியூர் சக்தி பிரதர்ஸ் அணிக்கு ரூ.1 லட்சத்து 70 ரொக்கப்பரிசு வழங்கப்பட்டது. 2-வது பரிசு ரூ.75 ஆயிரத்து 70 கர்நாடகா மாநிலம் மங்களூரு ஆழ்வாஸ் அணிக்கும், 3-வது பரிசு ரூ.50 ஆயிரத்து 70 சிங்கம்புணரி தெக்கூர் எஸ்.எஸ்.ஏ. கலை மற்றும் அறிவியல் கல்லூரி அணிக்கும், 4-வது பரிசு ரூ.25 ஆயிரத்து 70 ஒட்டன்சத்திரம் எஸ்.எம்.வி.கே.சி அணிக்கும் வழங்கப்பட்டன.

    இதில் சிறந்த ரைடராக அந்தியூர் சக்தி பிரதர்ஸ் சவுந்தருக்கும், சிறந்த தடுப்பாற்றல் வீராங்கனையாக கர்நாடகா மங்களூரு ஆல்வாஸ் அணியைச் சேர்ந்த விருந்தாவிற்கும் கூட்டுறவுத் துறை அமைச்சர் கே.ஆர். பெரியகருப்பன் சார்பில் வழங்கப்பட்டது. வெற்றி பெற்ற அனைத்து அணிக ளுக்கும் கோப்பைகள் வழங்கப்பட்டன. புரோ கபடி நடுவர் சிவனேசன் தலைமையிலான 16 பேர் கொண்ட குழுவினர் நடுவர்களாக செயல்பட்டனர்.

    • கபடி அணிகளுக்கு பரிசுகளை தங்கப்பாண்டியன் எம்.எல்.ஏ. வழங்கினார்.
    • ரூ. 1 லட்சத்தை முதல் பரிசாக கொண்டு மாபெரும் கபடி போட்டி நடத்தப்படும் என்றார்.

    ராஜபாளையம்

    ராஜபாளையம் அருகே உள்ள மீனாட்சியாபுரம் ஊராட்சி செவன் லயன்ஸ் கபடிக்குழு மற்றும் ஊர்பொதுமக்கள் இணைந்து நடத்திய கபடி போட்டியையும், ராஜ பாளையம் ஆவாரம்பட்டி யாழினி ஸ்போர்ட்ஸ் கிளப் நடத்திய கபடி போட்டியை யும் எம்.எல்.ஏ. தங்கப் பாண்டியன் தொடங்கி வைத்தார். இதில் வெற்றி பெற்ற அணிகளுக்கு அவர் ரொக்கப்பரிசுகளை வழங்கினார்.

    அப்போது அவர் பேசுகையில், விளையாட்டுத் துறைக்கு புத்துயிர் கொடுத்து அதனை முன்னேற்ற பாதைக்கு அழைத்து செல்வதில் நமது முதலமைச்சரும், விளை யாட்டுத்துறை அமைச்சரும் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர்.

    மேலும் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு ராஜபாளையம் தொகுதியில் ரூ. 1 லட்சத்தை முதல் பரிசாக கொண்டு மாபெரும் கபடி போட்டி நடத்தப்படும் என்றார்.

    இந்த நிகழ்வில் நகர செயலாளர் (தெற்கு) ராமமூர்த்தி, மாவட்ட மீனவரணி அமைப்பாளர் நவமணி, பொன்னுத்தாய், அசோக்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • கபடி போட்டி பரிசளிப்பு விழா நடந்தது.
    • தேசிய நடுவர் காளிதாஸ் வீரர்களுக்கான ஏற்பாடுகளை செய்திருந்தார்

    ராஜபாளையம்

    விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் ராம்கோ தொழில் நிறுவனங்களின் ஸ்தாபகர் பி.ஏ.சி.ராமசாமி ராஜா நினைவு விளையாட்டு மன்றம் சார்பில் 60-வது மணிவிழா ஆண்டு கபடி போட்டி ஊர்க்காவல் படை மைதானத்தில் நடந்தது. இறுதிப் போட்டியில் மீனாட்சிபுரம் செவன் லைன்ஸ் அணியும், வத்திராயிருப்பு வீ.கே.ஏ.என். அணியும் மோதியது. இதில் மீனாட்சிபுரம் அணி வெற்றி பெற்றது. வத்திராயிருப்பு அணிக்கு 2-வது பரிசு கிடைத்தது. கிருஷ்ணாபுரம் கே.எஸ்.சி. அணிக்கு 3-வது பரிசும், சோலைசேரி ஜாம்பவான் கபடி குழு அணிக்கு 4-வது பரிசும் கிடைத்தன. பின்னர் நடந்த பரிசளிப்பு விழாவில் கே.எஸ்.ஆர். பஸ் அதிபர் ஜெகதீஷ் சவுந்தர் பரிசுகளை வழங்கினார். சுப்பிரமணிய ராஜா வரவேற்றார். ராமராஜ், ராதாகிருஷ்ண ராஜா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். இதற்கான ஏற்பாடுகளை விருதுநகர் மாவட்ட கபடி குழு தலைவர் சுப்பிரமணிய ராஜா, செயலாளர் கனி முத்து குமரன், துணைத் தலைவர் சம்சுதீன் உள்ளிட்ட குழுவினர் செய்திருந்தனர். தேசிய நடுவர் காளிதாஸ் வீரர்களுக்கான ஏற்பாடுகளை செய்திருந்தார்.

    • ராமநாதபுரம் அருகே கிராமிய கபடி போட்டி நடந்தது.
    • பால்க்கரை கிராம மக்கள் மற்றும் மகளிர் மன்றம் இணைந்து கிராமிய கபடி போட்டியை நடத்தியது.

    கீழக்கரை

    ராமநாதபுரம் அருகில் உள்ள பால்க்கரை கிராமத்தில் சமூக ஆர்வலர் அலெக்சின் 12-ம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு அலெக்சின் வெள்ளி நிலா, காந்தாரி அம்மன் கபடி கழகம், பால்க்கரை கிராம மக்கள் மற்றும் மகளிர் மன்றம் இணைந்து கிராமிய கபடி போட்டியை நடத்தியது. இதில் முதல் பரிசு

    ரூ. 50 ஆயிரத்தை அலெக்சின் வெள்ளி நிலா பால்க்கரை அணியும், 2-ம் பரிசு ரூ.40 ஆயிரத்தை ஆய்க்குட்டி தேசிய பறவை அணியும், 3-ம் பரிசு ரூ.30 ஆயிரத்தை சாமிப்பட்டி லவ் பேர்ட்ஸ் அணியும் பெற்றன.

    இதில் ராமநாதபுரம் ஒன்றிய சேர்மன் கே.டி.பிரபாகரன், ஆர்.எஸ்.மடை ஊராட்சி மன்ற தலைவர் விஜயகுமார், ஓ.பி.எஸ். அணி ஒன்றிய செயலாளர் வக்கீல் முத்து முருகன், அ.மு.மு.க. ஒன்றிய செயலாளர் முத்தீஸ்வரன், பால்க்கரை கிராமத்தை சேர்ந்த பொறியாளர் சிங்கப்பூர் சிவசாமி, விடுதலை சிறுத்தைகள் கட்சி நகர பொருளாளர் பாலமுருகன், தங்க நகை தயாரிப்பாளர் சிவக்குமார், ராஜீவ்காந்தி, பால்க்கரை கேங்குராஜ், நவநீதன், முனியப்பா,தினேஷ்,வைசவா,கூரி,ரவி பத்மநாபன்,அஜித்குமார், சசிகுமார், இளங்கோ உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

    • கபடி போட்டியை தி.மு.க. இளைஞரணி செயலாளரும், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் துவக்கி வைத்தார்.
    • கபடி போட்டிகளின்போது உயிரிழந்த மூன்று பேர் குடும்பத்திற்கு தலா ஒரு லட்சம் ரூபாயை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்.

    தாம்பரம்:

    கலைஞரின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தாம்பரம் மாநகர திமுக மற்றும் தமிழ்நாடு அமெச்சூர் கபடி கழகம் இணைந்து நடத்தும் மாபெரும் கபடி போட்டி தாம்பரம் எம்.எல்.ஏ. எஸ்.ஆர்.ராஜா தலைமையில் மேற்கு தாம்பரம், டி.டி.கே.நகர் பகுதியில் உள்ள கலைஞர் திடலில் நடைபெற்றது.

    மண்டல குழு தலைவர் டி.காமராஜ் அனைவரையும் வரவேற்றார்.

    கபடி போட்டியை தி.மு.க. இளைஞரணி செயலாளரும், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் துவக்கி வைத்தார்.

    முன்னதாக கபடி போட்டிகளின்போது உயிரிழந்த மூன்று பேர் குடும்பத்திற்கு தலா ஒரு லட்சம் ரூபாயை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்.

    தாம்பரம் மாநகர தி.மு.க. சார்பில் மாநில இளைஞர் அணி அறக்கட்டளைக்கு வளர்ச்சி நிதியாக 5 லட்சம் ரூபாயை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இடம் எம்.எல்.ஏ. எஸ்.ஆர்.ராஜா வழங்கினார்.

    இந்நிகழ்ச்சியில் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட செயலாளரும், அமைச்சருமான தா.மோ.அன்பரசன், தலைமை தீர்மான குழு செயலாளர் மீ.அ.வைத்தியலிங்கம், கள்ளக்குறிச்சி எம்.பி கௌதம் சிகாமணி, எம்.எல்.ஏ.க்கள் பல்லாவரம் இ.கருணாநிதி, வரலட்சுமி மதுசூதனன், தாம்பரம் மாநகராட்சி மேயர் வசந்த குமாரி கமலக்கண்ணன், துணைமேயர் கோ.காமராஜ், மண்டல குழு தலைவர் எஸ்.இந்திரன், நியமனக்குழு உறுப்பினர் பெருங்களத்தூர் சேகர் மாநகராட்சி கவுன்சிலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • தகவல் அறிந்ததும் அவர்களுடன் குளத்தூர் போலீசார் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர்.
    • 100-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணிக்காக குவிக்கப்பட்டுள்ளனர்.

    விளாத்திகுளம்:

    தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள குளத்தூர் பகுதியில் அம்பேத்கரின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு துலுக்கன்குளம் புதியபூக்கள் கபடி குழு சார்பாக கபடி போட்டி நடைபெற்றது.

    இதில் கலைஞானபுரம் அணியும், சிலுவைபுரம் அணியும் மோதினர். இதில் சிலுவைபுரம் அணி வெற்றி பெற்றது. இந்நிலையில் தோல்வி அடைந்த அணியை மற்றொரு அணியினர் கிண்டல் செய்ததாக கூறப்படுகிறது. மேலும் ஒரு தரப்பை சேர்ந்த 3 வாலிபர்கள் மோட்டார் சைக்கிளில் கலைஞானபுரம் தொண்டியம்மாள் என்பவர் வீட்டின் வழியாக சென்ற போது அதிகமான ஒலி எழுப்பியதாக கூறப்படுகிறது.

    இதனை தொண்டியம்மாள் என்பவர் கண்டித்துள்ளார். அப்போது அவர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டு தள்ளுமுள்ளாக மாறியது.

    தகவல் அறிந்ததும் ஒரு தரப்பினர் மற்றொரு தரப்பினர் கிராமத்திற்கு சென்று கற்களால் மாறி, மாறி தாக்கி கொண்டனர். அப்போது இருதரப்பினரும் காயம் அடைந்தனர். இதில் பொன்னுச்சாமி, பள்ளி மாணவி பிரியதர்ஷினி, மாடசாமி, பரமசிவம் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்டோர் தலையில் காயம் ஏற்பட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    இதைத்தொடர்ந்து தாக்குதலில் ஈடுபட்டவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கக்கோரி நள்ளிரவு துலுக்கன்குளத்தில் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்ததும் அவர்களுடன் குளத்தூர் போலீசார் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர்.

    எனினும் அதில் உடன்பாடு ஏற்படாததால் போராட்டம் இன்று காலை நீடித்தது. இதைத்தொடர்ந்து அசம்பாவிதம் நடைபெறாத வண்ணம் அப்பகுதியில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணிக்காக குவிக்கப்பட்டுள்ளனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    • நல்லதம்பி எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்
    • வெற்றி பெற்ற அணிக்கு பரிசு வழங்கப்பட்டது

    திருப்பத்தூர்:

    திருப்பத்தூர் தாலுக்கா மாடப்பள்ளி ஊராட்சி அருகே உள்ள களரூர் கிராமத்தில் இரண்டு நாள் மின்னொளியில் கபடி போட்டி நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு எம். கண்ணன், பி. ராமகிருஷ்ணன் ஆர்.கர்ணன் ஆர்..கோவிந்தராஜ் கே.பாலாஜி திருமலைவாசன் தலைமை வகித்தனர். கபடி போட்டியை ஏ.நல்லதம்பி எம்எல்ஏ வீரர்களை அறிமுகம் செய்து தொடங்கிவைத்தார், கபடி போட்டி 15க்கும் மேற்பட்ட அணிகள் கலந்து கொண்டு மோதின.

    இதில் வெற்றி பெற்ற அணிகளுக்கு முதல் பரிசு ரூ 25 ஆயிரத்து 70, இரண்டாவது பரிசு ரூ 20 ஆயிரம் மூன்றாவது பரிசு ரூ15 ஆயிரம் உட்பட 5 பரிசுகளை திமுக மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் டி.சி. கார்த்தி முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் செல்வம், பஞ்சாட்சரம் பெருமாள் குணசேகரன் சிவக்குமார் மன்னன் விஜயா சின்னத்தாய், வழங்கினார்.

    நிகழ்ச்சியில் ஊராட்சி மன்ற தலைவர் கே கோமதி கார்த்திகேயன் ஒன்றிய கவுன்சிலர் கஸ்தூரி ரகு, முன்னாள் கவுன்சிலர் சிவலிங்கம், ராமச்சந்திரன், கூட்டுறவு துணைத் தலைவர் சாமிக்கண்ணு, ஊராட்சி மன்ற துணைத் தலைவர் தீபா வெங்கடேசன் ஆகியோர் பேசினர்.

    கோவில் திருவிழாவையொட்டி கபடி போட்டிக்கு ராஜராஜன் கல்லூரிக்கு சாம்பியன் பட்டம் பெற்றவர்களை படத்தில் காணலாம்.
    காரைக்குடி

    சிவகங்கை மாவட்டம் காரைக்குடி கொப்புடையம்மன் கோவில் செவ்வாய் திருவிழாவை முன்னிட்டு மாநில அளவிலான மின்னொளி கபடி போட்டி செஞ்சை குடிக்காத்தான் திடலில் நடந்தது.

    2 நாட்கள் நடந்த போட்டிகளில்தூத்துக்குடி,கன்னியாகுமாரி, திருச்செங்கோடு உள்பட தமிழ்நாடு முழுவதும் இருந்து 20-க்கும் மேற்பட்ட அணிகள் கலந்துகொண்டன.நாக் அவுட் முறையில் நடைபெற்ற போட்டிகளில் அமராவதி புதூர் ராஜராஜன் பொறியியல் கல்லூரி அணியும், காரைக்குடி லலிதா பேக்ஸ் அணியும், இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றன.

    இதில் ராஜராஜன் பொறியியல் கல்லூரி அணி  வெற்றிபெற்று முதல் பரிசான ரூ.50 ஆயிரத்தை வென்றது.2-ம் பரிசான ரூ.30 ஆயிரத்தை காரைக்குடி லலிதா பேக்ஸ் அணியும்.3-வது, 4-வது பரிசுகளை  ராயல் சர்வா அணியும்,சுப்பையா பிரதர்ஸ் அமராவதி புதூர் அணியினரும் பெற்றனர்.

    போட்டிக்கான ஏற்பாடுகளை  சிவகங்கை மாவட்ட அமெச்சூர் கழக சேர்மன் வேலு, நாம் தமிழர் கட்சி மாநில செயலாளர் மாறன், ஆறுமுகம், செழியன், கார்த்திக்நேரு உள்பட காரைக்குடி,செஞ்சை மண்ணின் மைந்தர்கள்   செய்திருந்தனர்.
    ×