search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    15 அணிகள் பங்கேற்ற கபடி போட்டி
    X

    15 அணிகள் பங்கேற்ற கபடி போட்டி

    • நல்லதம்பி எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்
    • வெற்றி பெற்ற அணிக்கு பரிசு வழங்கப்பட்டது

    திருப்பத்தூர்:

    திருப்பத்தூர் தாலுக்கா மாடப்பள்ளி ஊராட்சி அருகே உள்ள களரூர் கிராமத்தில் இரண்டு நாள் மின்னொளியில் கபடி போட்டி நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு எம். கண்ணன், பி. ராமகிருஷ்ணன் ஆர்.கர்ணன் ஆர்..கோவிந்தராஜ் கே.பாலாஜி திருமலைவாசன் தலைமை வகித்தனர். கபடி போட்டியை ஏ.நல்லதம்பி எம்எல்ஏ வீரர்களை அறிமுகம் செய்து தொடங்கிவைத்தார், கபடி போட்டி 15க்கும் மேற்பட்ட அணிகள் கலந்து கொண்டு மோதின.

    இதில் வெற்றி பெற்ற அணிகளுக்கு முதல் பரிசு ரூ 25 ஆயிரத்து 70, இரண்டாவது பரிசு ரூ 20 ஆயிரம் மூன்றாவது பரிசு ரூ15 ஆயிரம் உட்பட 5 பரிசுகளை திமுக மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் டி.சி. கார்த்தி முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் செல்வம், பஞ்சாட்சரம் பெருமாள் குணசேகரன் சிவக்குமார் மன்னன் விஜயா சின்னத்தாய், வழங்கினார்.

    நிகழ்ச்சியில் ஊராட்சி மன்ற தலைவர் கே கோமதி கார்த்திகேயன் ஒன்றிய கவுன்சிலர் கஸ்தூரி ரகு, முன்னாள் கவுன்சிலர் சிவலிங்கம், ராமச்சந்திரன், கூட்டுறவு துணைத் தலைவர் சாமிக்கண்ணு, ஊராட்சி மன்ற துணைத் தலைவர் தீபா வெங்கடேசன் ஆகியோர் பேசினர்.

    Next Story
    ×