search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சாம்பியன் கோப்பையுடன் ராஜராஜன் பொறியியல் கல்லூரி அணி வீரர்கள் உள்ளனர்.
    X
    சாம்பியன் கோப்பையுடன் ராஜராஜன் பொறியியல் கல்லூரி அணி வீரர்கள் உள்ளனர்.

    கோவில் திருவிழாவையொட்டி கபடி போட்டிக்கு ராஜராஜன் கல்லூரிக்கு சாம்பியன் பட்டம்

    கோவில் திருவிழாவையொட்டி கபடி போட்டிக்கு ராஜராஜன் கல்லூரிக்கு சாம்பியன் பட்டம் பெற்றவர்களை படத்தில் காணலாம்.
    காரைக்குடி

    சிவகங்கை மாவட்டம் காரைக்குடி கொப்புடையம்மன் கோவில் செவ்வாய் திருவிழாவை முன்னிட்டு மாநில அளவிலான மின்னொளி கபடி போட்டி செஞ்சை குடிக்காத்தான் திடலில் நடந்தது.

    2 நாட்கள் நடந்த போட்டிகளில்தூத்துக்குடி,கன்னியாகுமாரி, திருச்செங்கோடு உள்பட தமிழ்நாடு முழுவதும் இருந்து 20-க்கும் மேற்பட்ட அணிகள் கலந்துகொண்டன.நாக் அவுட் முறையில் நடைபெற்ற போட்டிகளில் அமராவதி புதூர் ராஜராஜன் பொறியியல் கல்லூரி அணியும், காரைக்குடி லலிதா பேக்ஸ் அணியும், இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றன.

    இதில் ராஜராஜன் பொறியியல் கல்லூரி அணி  வெற்றிபெற்று முதல் பரிசான ரூ.50 ஆயிரத்தை வென்றது.2-ம் பரிசான ரூ.30 ஆயிரத்தை காரைக்குடி லலிதா பேக்ஸ் அணியும்.3-வது, 4-வது பரிசுகளை  ராயல் சர்வா அணியும்,சுப்பையா பிரதர்ஸ் அமராவதி புதூர் அணியினரும் பெற்றனர்.

    போட்டிக்கான ஏற்பாடுகளை  சிவகங்கை மாவட்ட அமெச்சூர் கழக சேர்மன் வேலு, நாம் தமிழர் கட்சி மாநில செயலாளர் மாறன், ஆறுமுகம், செழியன், கார்த்திக்நேரு உள்பட காரைக்குடி,செஞ்சை மண்ணின் மைந்தர்கள்   செய்திருந்தனர்.
    Next Story
    ×