என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கபடி போட்டி"

    • இந்திய அணி என்று பெயரிட்டது கடைசி வரை எனக்கு தெரியாது.
    • கடந்த காலங்களில் இந்தியா, பாகிஸ்தான் வீரர்கள் தனியார் அணிக்காக இணைந்து விளையாடி இருக்கிறார்கள்.

    கராச்சி:

    பக்ரைனில் கடந்த 16-ந்தேதி தனியார் அமைப்பு சார்பில் ஜி.சி.சி. கோப்பைக்கான கபடி போட்டி நடத்தப்பட்டது. இதில் இந்தியா, பாகிஸ்தான், கனடா, ஈரான் போன்ற பெயரில் அணிகள் உருவாக்கப்பட்டு அதன் சார்பில் வீரர்கள் ஜாலியாக பங்கேற்றனர். பெரும்பாலான அணிகளில் அந்தந்த நாட்டை சேர்ந்தவர்களே இடம் பெற்றிருந்தனர்.

    ஆனால் இந்திய அணியின் சார்பில் களம் இறங்கிய வீரர்களில் பாகிஸ்தானைச் சேர்ந்த சர்வதேச கபடி வீரர் உபைதுல்லா ராஜ்புத்தும் ஒருவர். அவர் இந்திய அணிக்குரிய சீருடை அணிந்தும், தேசிய கொடியை உற்சாகமாக அசைத்தப்படியும் இருக்கும் வீடியோ காட்சிகள் வெளியாகி அவருக்கு சிக்கலை ஏற்படுத்தி இருக்கிறது.

    இதனை கவனத்தில் கொண்டுள்ள பாகிஸ்தான் கபடி சம்மேளனம் அவர் மீது கடுமையான ஒழுங்கு நடவடிக்கை எடுக்க முடிவு செய்துள்ளது. இதற்காக வருகிற 27-ந்தேதி அவசர கூட்டத்தை கூட்டியுள்ளனர்.

    பாகிஸ்தான் கபடி சம்மேளன செயலாளர் ராணா சர்வார் கூறுகையில், 'இந்தியாவைச் சேர்ந்த வீரர்கள், இந்திய தனியார் அணியை பிரதிநிதித்துவப்படுத்தினர். ஆனால் அவர்களுக்காக உபைதுல்லா ஆடியதை ஏற்றுக்கொள்ள முடியாது. அவர் கபடி சம்மேளனத்திடமோ அல்லது பாகிஸ்தான் விளையாட்டு வாரியத்திடமே எந்த அனுமதியும் பெறாமல் சென்றுள்ளார். அவர் மட்டுமல்ல இவ்வாறு 16 வீரர்கள் பக்ரைன் சென்றுள்ளனர். அவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார்.

    உபைதுல்லா ராஜ்புத் கூறுகையில், 'இது தனியார் போட்டி. இதில் இந்தியா, பாகிஸ்தான் பெயரை பயன்படுத்த வேண்டாம் என்று நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களிடம் கேட்டுக் கொண்டேன். ஆனால் அவர்கள் இந்திய அணி என்று பெயரிட்டது கடைசி வரை எனக்கு தெரியாது. கடந்த காலங்களில் இந்தியா, பாகிஸ்தான் வீரர்கள் தனியார் அணிக்காக இணைந்து விளையாடி இருக்கிறார்கள். ஆனால் ஒரு போதும் இந்தியா அல்லது பாகிஸ்தான் பெயரில் விளையாடவில்லை. தவறுதலாக இந்தியாவின் பெயரில் விளையாடியதற்காக மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்' என்றார்.

    • பஹ்ரைனில் நடைபெற்ற 3வது ஆசிய இளைஞர் விளையாட்டுப் போட்டி நடைபறெ்றது.
    • சர்வதேச அரங்கில் வெற்றிக்கொடி நாட்டி தமிழ்நாட்டுக்குப் பெருமைத் தேடித்தந்துள்ளனர்.

    பஹ்ரைனில் நடைபெற்ற 3rd Asian Youth Games-ல் நடைபறெ்ற கபடி போட்டியில் தங்கம் வென்ற தமிழ்நாடு வீரர்களுக்கு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    பஹ்ரைனில் நடைபெற்ற 3rd Asian Youth Games-ல், இந்திய கபடி அணி Boys மற்றும் Girls பிரிவில் தங்கப் பதக்கங்களை வென்றது அறிந்து மகிழ்ந்தோம்.

    Girls அணியில் சென்னை கண்ணகி நகரைச் சேர்ந்த தங்கை கார்த்திகாவும், Boys அணியில் தம்பி அபினேஷ் மோகன்தாஸும் இடம்பெற்றிருந்தது நமக்கெல்லாம் பெருமை.

    தம்பி அபினேஷ் தேனியில் உள்ள நமது SDAT விடுதியில் தங்கி பயிற்சி எடுத்தவர் என்பதும், தங்கை கார்த்திகா எளிய பின்புலத்தில் இருந்து புறப்பட்டு இந்த உயரத்தை அடைந்திருக்கிறார் என்பதும் கூடுதல் சிறப்பு.

    சர்வதேச அரங்கில் வெற்றிக்கொடி நாட்டி தமிழ்நாட்டுக்குப் பெருமைத் தேடித்தந்துள்ள கார்த்திகா மற்றும் அபினேஷை வாழ்த்தி மகிழ்கிறோம். இவர்கள் இருவரும் மென்மேலும் பல வெற்றிகளை குவிக்கட்டும்!

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • ஆசிய இளைஞர் விளையாட்டுப் போட்டி 2025 தற்போது பஹ்ரைனில் நடைபெற்று வருகிறது.
    • இதில் 45 நாடுகளைச் சேர்ந்த வீரர்கள் வீராங்கனைகள் 19 விளையாட்டுகளில் போட்டியிடுகின்றனர்.

    ஆசிய இளைஞர் விளையாட்டுப் போட்டி 2025 (3வது பதிப்பு) தற்போது பஹ்ரைனில் (மனாமா) நடைபெற்று வருகிறது. இதில் 45 நாடுகளைச் சேர்ந்த வீரர்கள் வீராங்கனைகள் 19 விளையாட்டுகளில் போட்டியிடுகின்றனர்.

    இதில் இந்தியா கபடி போட்டியில் இரு தங்கங்களை வென்றுள்ளது: ஆண்கள் அணி ஈரானை 35-32 என்ற கணக்கில் தோற்கடித்து தங்கம் வென்றது. அதேபோல் பெண்கள் அணியும் ஈரானுக்கு எதிரான இறுதியில் வென்று தங்கப்பதக்கத்தை வென்றது.

    இந்த வெற்றிகளால் இந்தியாவின் மொத்த பதக்கங்கள் 10 ஆக உயர்ந்துள்ளன (2 தங்கம், 3 வெள்ளி, 5 வெண்கலம்).

    தற்போதைய பதக்கப் பட்டியலின்படி, சீனா 7 தங்கப் பதக்கங்களுடன் முன்னிலை வகிக்கிறது. அதில் தடகளத்தில் மட்டும் 5 தங்கங்களை வென்றுள்ளது. அவர்களைத் தொடர்ந்து தாய்லாந்து 6 தங்கங்களுடன் உள்ளது குறிப்பிடத்தக்கது.

    • இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் பாகிஸ்தானுடன் கைகுலுக்க மறுத்தனர்
    • அதேபோல மகளிர் இந்திய அணி வீராங்கனைகளும் பாகிஸ்தானுடன் கைகுலுக்க மறுத்தனர்.

    ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி சமீபத்தில் ஐக்கிய அரபு எமிரேட்சில் நடைபெற்றது. இதில் சூர்ய குமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி சாம்பியன் பட்டம் பெற்றது. இந்தப் போட்டித் தொடரில் இந்திய அணி 3 முறையும் பாகிஸ்தானை தோற்கடித்து இருந்தது.

    ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் பாகிஸ்தான் வீரர்களுடன் இந்திய வீரர்கள் கைகுலுக்க மறுத்துவிட்டனர். பகல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு எதிரொலியாக இந்திய வீரர்கள் இந்த முடிவை எடுத்தனர். இது மிகுந்த சர்ச்சையை ஏற்படுத்தியது.

    மேலும் ஆசிய கோப்பையை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவரும், அந்நாட்டு மந்திரியுமான மோஷின் நக்வியிடம் இருந்து வாங்க சூர்யகுமார் யாதவ் மறுத்து விட்டார்.

    இதனையடுத்து நடைபெற்ற மகளிர் ஆசிய கோப்பை கிரிக்கெட்டிலும் பாகிஸ்தான் அணி வீராங்கனைகளுடன் இந்திய அணி வீராங்கனைகள் கைகுலுக்க மறுத்தனர்.

    அதனை தொடர்ந்து ஹாக்கி போட்டியில் இந்தியா - பாகிஸ்தான் வீரர்கள் ஹைபை கொடுத்துக்கொண்டது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

    இந்நிலையில் ஆசிய இளைஞர் விளையாட்டு போட்டிகள் பஹ்ரைன் நாட்டின் மனாமா நகரில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் கபடி விளையாட்டு முதல் தடவையாக சேர்க்கப்பட்டுள்ளது.

    இதில் இந்தியா- பாகிஸ்தான் அணிகள் மோதின. இந்த போட்டியில் பாகிஸ்தானை 81-26 என்ற கணக்கில் எளிதாக இந்தியா வீழ்த்தி வெற்றி பெற்றது.

    முன்னதாக இந்த போட்டி தொடங்குவதற்கு முன்பு இரு அணி கேப்டன்களும் கைகுலுக்க வேண்டும் என்ற நிலையில் பாகிஸ்தான் அணி கேப்டன், கை நீட்டினார். ஆனால் அதனை இந்திய கேப்டன் கொஞ்சம் கூட கவனிக்காமல் இருந்தார். இதனை சற்று எதிர்பார்க்காத பாகிஸ்தான் வீரர், ஷாக் ஆனது போல் நின்று கொண்டிருந்தார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    • திருச்சி சமது மேல்நிலைப்பள்ளியில் மாநில அளவிலான கபடி போட்டிகள் கடந்த 27, 28 ஆகிய தேதிகளில் நடைபெற்றது.
    • விழாவிற்கு சமது பள்ளியின் தலைவர் டக்டர். ஏ.கே.காஜா நஜீமுதீன் தலைமை தாங்கினார்.

    திருச்சி,

    திருச்சி காஜா நகரில் உள்ள சமது மேல்நிலைப்பள்ளியின் ராக்சிட்டி சகோதயா-2022 ஆம் ஆண்டிற்கான மாநில அளவிலான கபடி போட்டிகள் கடந்த 27, 28 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. இவ்விழாவிற்கு சமது பள்ளியின் தலைவர் டக்டர். ஏ.கே.காஜா நஜீமுதீன் தலைமை தாங்கினார்.

    சமது பள்ளியின் செயலாளரும், தாளாளருமான டக்டர். வி.எஸ்.ஏ.ஷேக் முஹம்மது சுேஹல் சிறப்பு விருந்தினராக கழந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார். சமது பள்ளியின் பொருளாளர் ஏ.எஸ்.காஜாமியான் அக்தர், பள்ளியின் கல்வி இயக்குநர் ஏ.எம்.அப்துஸ் சலாம்,

    பள்ளியின் நிர்வாக உறுப்பினர் எ.எம்.முகமது ஆஷிக், பள்ளியின் முதல்வர் டக்டர். சி.ஜெ.சாக்கோ, குட்ஷெப்பர்டு பள்ளியின் முதல்வர் டக்டர்.ஜாய் தாமஸ், பள்ளியின் துணை முதல்வர் மும்தாஜ் பேகம், மேலும் இப்போட்டிகளின் ஒருங்கிணைப்பாளரான சமது பள்ளியின் உடற்கல்வி இயக்குநர் டி.உமா மகேஷ்வரன் மற்றும் ஸ்ரீராம் ஆகியோர் அனைத்து ஏற்பாடுகளையும் செய்திருந்தனர். மேலும் அவர்கள் போட்டியில் பங்கேற்ற மாணவர்களை ஊக்கப்படுத்தி வாழ்த்தினர்.

    • மாவட்ட அளவிலான கபடி போட்டி நடந்தது
    • மாணவர்களுக்கு தலைமையாசிரியை பாராட்டு

    வாணியம்பாடி:

    திருப்பத்தூர் மாவட்ட அளவில் பள்ளிகளுக்கு இடையேயான கபடி போட்டி ஜோலார்பேட்டை தொன்போஸ்கோ மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது.

    இப்போட்டியில் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளின் அணிகள் கலந்துக் கொண்டு விளையாடினர். திங்கள்கிழமை நடைபெற்ற 19 வயதுக்குட்பட்ட பெண்கள் பிரிவில் வாணியம்பாடி அடுத்த உதயேந்திரம் புனித அந்தோணியார் மேல்நிலைப்பள்ளியை சேர்ந்த மாணவிகள் முதலிடம் பெற்று சாம்பியன் பட்டம் வென்றனர்.

    இதன் மூலம் திருவண்ணாமலையில் நடைபெறவுள்ள மாநில அளவிலான போட்டிக்கு தகுதிப் பெற்றனர்.

    சாதனை படைத்த மாணவிகளை பள்ளி தாளாளர் மாறன், தலைமையாசிரியை சுகந்தி, ஆசிரியர்கள் அந்தோணி தாஸ், பிரசாத், இசைவாணி மற்றும் பெற்றோர்கள், மாணவர்கள் பாராட்டினர்.

    • திருச்சியில் நடைபெற்ற மாநில அளவிலான கபடி போட்டியில் சமது பள்ளி மாணவர்கள் வெற்றி பெற்று முதலிடம் பிடித்தனர்
    • சமது பள்ளியின் கபடி மாணவர்கள் 19 வயதுக்கு உட்பட்டோர் பிரிவில் முதலிடம் பெற்று சாதனை படைத்து பள்ளிக்கு பெருமை சேர்த்தனர்

    திருச்சி:

    திருச்சி ராக்சிட்டி சகோதயா சார்பாக 2022 ஆம் ஆண்டிற்கான மாநில அளவிலான கபடி போட்டி கடந்த மாதம் 27, 28 ஆகிய தேதிகளில் திருச்சி காஜா நகர் சமது மேல்நிலைப்பள்ளியில் மூன்று பிரிவுகளாக நடைபெற்றது. இப்போட்டியில் மாநில அளவில 30-க்கும் மேற்பட்ட பள்ளிகளில் இருந்து 500-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர்.

    இப்போட்டியில் சமது பள்ளியின் கபடி மாணவர்கள் 19 வயதுக்கு உட்பட்டோர் பிரிவில் முதலிடம் பெற்று சாதனை படைத்து பள்ளிக்கு பெருமை சேர்த்தனர். வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பள்ளி வளாகத்தில் பாராட்டு விழா நடைபெற்றது. விழாவிற்கு சமது பள்ளியின் தலைவர் டாக்டர். ஏ.கே.காஜா நஜிமுதீன் தலைமை தாங்கினார். சமது பள்ளியின் செயலாளரும், தாளாளருமான டாக்டர். வி.எஸ்.ஏ.ஷேக் முஹம்மது சுேஹல் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு வெற்றி பெற்ற மாணவர்களுக்கு கோப்பைகள் மற்றும் சான்றிதழ்களை வழங்கி பாராட்டினார்.

    மேலும் சமது பள்ளியின் பொருளாளர் ஏ.எஸ்.காஜாமியான் அக்தர், பள்ளியின் கல்வி இயக்குநர் ஏ.எம்.அப்துஸ் சலாம், பள்ளியின் நிர்வாக உறுப்பினர் எ.எம்.முகமது ஆஷிக், பள்ளியின் முதல்வர் டாக்டர். சி.ஜெ.சாக்கேர், காவேரி குளோபல் பள்ளியின் முதல்வர் எம்.சரஸ்வதி, பள்ளியின் துணை முதல்வர் ஜெ.மும்தாஜ் பேகம் ஆகியோர் வெற்றி பெற்ற மாணவர்களை வாழ்த்தினர்.

    இப்போட்டிகளின் ஒருங்கிணைப்பாளரான சமது பள்ளியின் உடற்கல்வி இயக்குநர் டி.உமா மகேஷ்வரன் மற்றும் எஸ்.ஸ்ரீராம் ஆகிேயார் விழாவிற்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்திருந்தனர்.

    • பள்ளபாளையம் கார்த்திக் நினைவாக நேதாஜி பெருமாள் பிரதர்ஸ் மற்றும் அலை ஓசை நண்பர்கள் சார்பில் தொடர் கபடி போட்டி நடைபெற்றது.
    • மடத்துக்குளம் சட்டமன்ற உறுப்பினரும் மாவட்ட செயலாளருமான சி.மகேந்திரன் துவக்கி வைத்தார்.

    உடுமலை :

    திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை ஒன்றியம், பள்ளபாளையம் கார்த்திக் நினைவாக நேதாஜி பெருமாள் பிரதர்ஸ் மற்றும் அலை ஓசை நண்பர்கள்சார்பில் தொடர் கபடி போட்டி நடைபெற்றது.

    போட்டியை மடத்துக்குளம் சட்டமன்ற உறுப்பினரும் மாவட்ட செயலாளருமான சி. மகேந்திரன் துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில் உடுமலை தெற்கு ஒன்றிய செயலாளர் த. போகநாதன், தளி பேரூர் செயலாளர் ராமலிங்கம், பள்ளபாளையம் ஊராட்சி மன்ற தலைவர் ராமச்சந்திரன், ஒன்றியக்குழு உறுப்பினர் நந்தக்குமார் மற்றும் நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

    • 50 அணிகள் பங்கேற்ற கபடி போட்டி
    • ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்

    அணைக்கட்டு:

    ஒடுகத்தூர் அருகே உள்ள கல்லுட்டை கிராமத்தில் முதலாம் ஆண்டு மாபெரும் கபடிப்போட்டி நடைப்பெற்றது.

    இதில் அண்டை மாநிலம் உட்பட வேலூர், ராணிப்பேட்டை, ஈரோடு, திருப்பத்தூர், சென்னை ஆகிய மாவட்டத்தில் இருந்து சுமார் 50 க்கும் மேற்ப்பட்ட அணிகள் கலந்துக்கொண்டன.

    5 பிரிவுகளாக, 2 நாட்களாக நடைபெற்ற போட்டி இன்று காலை நிறைவடைந்தது. இதில் சிறப்பாக விளையாடி வெற்றிப்பெற்ற சிறந்த அணிகள் மற்றும் வீரர்களுக்கு பரிசுகளும், கோப்பைகளும் வழங்கப்பட்டது.

    மேலும் விளையாட்டின் முடிவில் முதலாவது பரிசாக 9அடி கோப்பையை ஏரியூரை சேர்ந்த ஜெய் அணுமான் அணியும், 2-வது பரிசாக 8 அடி கோப்பை மற்றும் ரொக்கப்பணத்தை வாணியம்பாடி அணியும் தட்டிச்சென்றது.

    இதனைத்தொடர்ந்து சுமார் 20 அணிகள் வெற்றிப்பெற்று கோப்பையும் ரொக்க பணத்தையும் தட்டிச்சென்றனர்.

    2 நாட்களாக விறுவிறுப்பாக நடைப்பெற்ற ஆட்டத்தில் ஊர் பொதுமக்கள் மற்றும் கபடி ரசிகர்கள் என சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்துக்கொண்டனர்.

    • மாநில கபடி போட்டியில் முதலிடம் பிடித்த அரசு பள்ளி மாணவிகளுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
    • கலெக்டரை சந்தித்து பாராட்டு பெற்றனர்

    அரியலூர்:

    தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறையின் சார்பில் பாரதியார் தின விளையாட்டு போட்டிகளில் 19 வயதுக்கு உட்பட்ட பள்ளி மாணவிகளுக்கான மாநில அளவிலான கபடி போட்டி நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பொறியியல் கல்லூரியில் சமீபத்தில் நடந்தது. இதில் அரியலூர் மாவட்டம், விக்கிரமங்கலம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவிகள் அணி முதலிடம் பிடித்து தங்கப்பதக்கம் மற்றும் கோப்பையை வென்றனர். பின்னர் அந்த அணி வீராங்கனைகள் நேற்று அரியலூர் மாவட்ட கலெக்டர் ரமணசரஸ்வதியை சந்தித்து பாராட்டு பெற்றனர். அப்போது மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் விஜயலெட்சுமி, பள்ளி தலைமை ஆசிரியர் வினோத்குமார், உடற்கல்வி ஆசிரியர்கள் ஆகியோர் உடனிருந்தனர்.

    • ஜெயலலிதா நினைவு நாள் கபடி போட்டி நடந்தது.
    • பாகனேரிசரவணன், மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்டம் மதகுபட்டியை அடுத்துள்ள ஏரியூர் கிராமத்தில் அ.தி.மு.க. இளைஞர் இளம்பெண் பாசறை மாவட்ட செயலாளர் ஆபரத்தனபட்டி பிரபு, சிங்கம்புணரி ஒன்றிய தலைவர் திவ்யாபிரபு ஏற்பாட்டில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 6-ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு கபடி போட்டி நடந்து வருகிறது. இதில் சிவகங்கை, மதுரை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 20-க்கும் மேற்பட்ட அனிகள் பங்கேற்று விளையாடுகின்றன.

    முதலிடம் பிடிக்கும் அணிக்கு ரூ.15 ஆயிரம், 2-ம் பரிசாக ரூ.12 ஆயிரம், 3, 4-ம் பரிசாக தலா ரூ.8 ஆயிரம் ரொக்கமும், அம்மா நினைவு கோப்பைகளும் வழங்கப்பட உள்ளன. இந்த போட்டியை மாவட்ட செயலாளரும், சிவகங்கை எம்.எல்.ஏ.வுமான செந்தில்நாதன் தொடங்கி வைத்தார். 2 நாட்கள் போட்டி நடக்கிறது. தொடக்க நிகழ்வில் மாவட்ட ஊராட்சி குழு தலைவர் பொன்பாஸ்கரன், முன்னாள் எம்.எல்.ஏ. நாகராஜன், மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் ராஜா, மாவட்ட அவைத்தலைவர் நாகராஜன், ஒன்றிய செயலாளர் அருள்ஸ்டிபன், வழக்கறிஞர் மணிமாறன், பாகனேரிசரவணன், மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • 20-க்கும் மேற்பட்ட கோப்பை, பரிசுகள் வழங்கப்பட்டது
    • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    அணைக்கட்டு:

    ஒடுகத்தூரில் ஸ்ரீ முனீஸ்வரன் ஆலய கும்பாபிஷேகம விழாவை முன்னிட்டு மாபெரும் கபடிப்போட்டி நடைப்பெற்றது. இதில் வெற்றிப்பெற்ற அணிகளுக்கு பரிசுகள் கோப்பைகள் வழங்கப்பட்டன.

    ஒடுகத்தூரில் உள்ள ஸ்ரீ மகா முனீஸ்வரன் கோவிலில் மகா கும்பாபிஷேகம் விழா நடைபெற உள்ளது. உதனைத் தொடர்ந்து 2 நாட்களாக மாபெரும் கபடிப்போட்டி நடைப்பெற்றது.

    இதில் அண்டை மாநிலம் உட்பட வேலூர், ராணிப்பேட்டை, ஈரோடு, திருப்பத்தூர், சென்னை ஆகிய மாவட்டத்தில் இருந்து சுமார் 50-க்கும் மேற்ப்பட்ட அணிகள் கலந்துக்கொண்டன.

    இதில் 5 பிரிவுகளாகவும், 2 நாட்களாக நடைபெற்ற போட்டியானது நேற்று மாலை முடிவுக்கு வந்தது. இதில் சிறப்பாக விளை யாடி வெற்றிப்பெற்ற சிறந்த அணிகள் மற்றும் வீரர்களுக்கு பரிசுகளும், கோப்பைகளும் வழங்கப்பட்டது.

    மேலும் விளையாட்டில் முடிவில் முதலாவது பரிசாக 10 அடி கோப்பையை மற்றும் 10 ஆயிரம் ரொக்கப்பணத்தையும் ஏரியூரை சேர்ந்த ஜெய் அணுமான் அணியும், 2-வது பரிசாக 9 அடி கோப்பை மற்றும் 8 ஆயிரம் ரொக்கப்பணத்தை வாணியம்பாடி அணியும் தட்டிச்சென்றது.

    இதனைத்தொடர்ந்து சுமார் 20 அணிகள் வெற்றிப்பெற்று கோப்பையும் ரொக்க பணத்தையும் தட்டிச்சென்றனர்.

    2 நாட்களாக விறுவி றுப்பாக நடைப்பெற்ற ஆட்டத்தில் ஊர் பொதுமக்கள் மற்றும் கபடி ரசிகர்கள் என சுமார் ஆயி ரத்திற்கும் மேற்பட்டோர் கலந்துக்கொண்டனர்.

    ×