என் மலர்
உள்ளூர் செய்திகள்

ஒடுகத்தூரில் நடந்த கபடிப்போட்டியில் முதலாவது பரிசு பெற்ற ஜெய் அனுமன் அணியினர் 10 அடி உயர கோப்பையுடன் உள்ள காட்சி.
கபடி போட்டியில் 50 அணிகள் பங்கேற்பு
- 20-க்கும் மேற்பட்ட கோப்பை, பரிசுகள் வழங்கப்பட்டது
- ஏராளமானோர் கலந்து கொண்டனர்
அணைக்கட்டு:
ஒடுகத்தூரில் ஸ்ரீ முனீஸ்வரன் ஆலய கும்பாபிஷேகம விழாவை முன்னிட்டு மாபெரும் கபடிப்போட்டி நடைப்பெற்றது. இதில் வெற்றிப்பெற்ற அணிகளுக்கு பரிசுகள் கோப்பைகள் வழங்கப்பட்டன.
ஒடுகத்தூரில் உள்ள ஸ்ரீ மகா முனீஸ்வரன் கோவிலில் மகா கும்பாபிஷேகம் விழா நடைபெற உள்ளது. உதனைத் தொடர்ந்து 2 நாட்களாக மாபெரும் கபடிப்போட்டி நடைப்பெற்றது.
இதில் அண்டை மாநிலம் உட்பட வேலூர், ராணிப்பேட்டை, ஈரோடு, திருப்பத்தூர், சென்னை ஆகிய மாவட்டத்தில் இருந்து சுமார் 50-க்கும் மேற்ப்பட்ட அணிகள் கலந்துக்கொண்டன.
இதில் 5 பிரிவுகளாகவும், 2 நாட்களாக நடைபெற்ற போட்டியானது நேற்று மாலை முடிவுக்கு வந்தது. இதில் சிறப்பாக விளை யாடி வெற்றிப்பெற்ற சிறந்த அணிகள் மற்றும் வீரர்களுக்கு பரிசுகளும், கோப்பைகளும் வழங்கப்பட்டது.
மேலும் விளையாட்டில் முடிவில் முதலாவது பரிசாக 10 அடி கோப்பையை மற்றும் 10 ஆயிரம் ரொக்கப்பணத்தையும் ஏரியூரை சேர்ந்த ஜெய் அணுமான் அணியும், 2-வது பரிசாக 9 அடி கோப்பை மற்றும் 8 ஆயிரம் ரொக்கப்பணத்தை வாணியம்பாடி அணியும் தட்டிச்சென்றது.
இதனைத்தொடர்ந்து சுமார் 20 அணிகள் வெற்றிப்பெற்று கோப்பையும் ரொக்க பணத்தையும் தட்டிச்சென்றனர்.
2 நாட்களாக விறுவி றுப்பாக நடைப்பெற்ற ஆட்டத்தில் ஊர் பொதுமக்கள் மற்றும் கபடி ரசிகர்கள் என சுமார் ஆயி ரத்திற்கும் மேற்பட்டோர் கலந்துக்கொண்டனர்.






