search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பரிசளிப்பு விழா"

    • பல்வேறு விளையாட்டுகளில் வெற்றி பெற்று சாதனை புரிந்த 450க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா நடைபெற்றது.
    • முன்னதாக இந்நிகழ்ச்சிக்கு வந்தவர்களை பள்ளியின் முதல்வர் பிரமோதினி வரவேற்றார்.

    திருப்பூர்:

    திருப்பூர் காந்திநகர் பகுதியில் அமைந்துள்ள ஏ.வி.பி. டிரஸ்ட் பப்ளிக் சீனியர் செகண்டரி பள்ளியில் 2023-2024 ம் கல்வி ஆண்டிற்கான மன்ற போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா பள்ளியின் தாளாளர் கார்த்திகேயன் அருள்ஜோதி தலைமையில் பள்ளியின் கலையரங்கில் நடைபெற்றது.

    பள்ளியில் செயல்பட்டு வரும் பல்வேறு மன்றங்களின் சார்பாக நடத்தப்பட்ட போட்டிகளிலும், மாநில மற்றும் மாவட்ட அளவில் நடைபெற்ற கராத்தே, டேக்வாண்டோ, சதுரங்கம்,கேரம்,நீச்சல், இறகுப்பந்து, கோ - கோ மற்றும் சகோதயா கூட்டமைப்பு பள்ளிகளின் சார்பாக நடைபெற்ற பல்வேறு விளையாட்டுகளில் வெற்றி பெற்று சாதனை புரிந்த 450க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா நடைபெற்றது. இவ்விழாவிற்கு சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட பள்ளியின் பொருளாளர் லதா கார்த்திகேயன் மற்றும் தாளாளர் கார்த்திகேயன் அருள்ஜோதி ஆகியோர் மாணவர்களுக்கு பரிசுகளையும், பாராட்டுச் சான்றி தழ்களையும், கேடயங்களையும் வழங்கினர்.

    முன்னதாக இந்நிகழ்ச்சிக்கு வந்தவர்களை பள்ளியின் முதல்வர் பிரமோதினி வரவேற்றார். முடிவில் பள்ளியின் கலைநிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் நித்யா நன்றி கூறினார். நிகழ்ச்சிக்கான அனைத்து ஏற்பாடுகளையும் பள்ளியின் ஒருங்கிணைப்பாளர் மோகனா மற்றும் ஆசிரியர்கள் செய்திருந்தனர்.

    • இதில் பள்ளி மாணவ, மாணவியர்கள் ஏராளமா–னோர் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.
    • பள்ளியின் சேர்மன் எவரெஸ்ட் முனிரத்தினம் கலந்து கொண்டு மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டி னார்.

    கடத்தூர்,

    தருமபுரி மாவட்டம், கடத்தூரில் உள்ள கிரீன்பார்க் சி.பி.எஸ்.சி, மெட்ரிக்பள்ளியில் கர்மவீரர் காமராஜர் பிறந்த நாளை முன்னிட்டு பேச்சுப்போட்டி, கட்டுரை போட்டி, கவிதை போட்டி, உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டது.

    இதில் பள்ளி மாணவ, மாணவியர்கள் ஏராளமா–னோர் ஆர்வத்துடன் பங்கேற்றனர். நிகழ்ச்சியில் பள்ளியின் சேர்மன் எவரெஸ்ட் முனிரத்தினம் கலந்து கொண்டு மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டி னார்.

    நிர்வாக அலுவலர் ராஜா மற்றும் ஆசிரியர்கள் மாணவ, மாணவியர்கள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

    • நான் வருவதற்கு முன்பாகவே ஏன் நிகழ்ச்சியை துவங்கினீர்கள் என்று கலெக்டர் விஷ்ணு சந்திரனிடம் கேட்டார்.
    • அமைச்சருக்கும், எம்.பி.க்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

    ராமநாதபுரம்:

    ராமநாதபுரம் மாவட்ட அளவிலான முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற வீரர்-வீராங்கனைகளுக்கு பரிசளிப்பு விழா மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள மேல்நிலைப்பள்ளியில் நேற்று நடந்தது.

    மாவட்ட கலெக்டர் விஷ்ணு சந்திரன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள அமைச்சர் ராஜ கண்ணப்பன் மற்றும் நவாஸ்கனி எம்.பி ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.நிகழ்ச்சிக்கான அழைப்பிதழில் சரியாக 3 மணிக்கு விழா தொடங்கும் என குறிப்பிடப்பட்டிருந்தது.

    அமைச்சர் ராஜ கண்ணப்பன் 10 நிமிடத்திற்கு முன்பாக வந்ததால் நிகழ்ச்சி தொடங்கப்பட்டது. இந்நிலையில் சரியாக 3 மணிக்கு விழா மேடைக்கு நவாஸ்கனி எம்.பி. வந்தார். அப்போது நிகழ்ச்சி நடந்து கொண்டிருப்பதை கண்ட அவர், நான் வருவதற்கு முன்பாகவே ஏன் நிகழ்ச்சியை துவங்கினீர்கள் என்று கலெக்டர் விஷ்ணு சந்திரனிடம் கேட்டார்.

    இதனை கண்ட அமைச்சர் ராஜகண்ணப்பன், நவாஸ்கனி எம்.பி.யை சமாதானம் செய்ய முயன்றார். இதனால் ஆத்திரமடைந்த நவாஸ்கனி எம்.பி. நான் வருவதற்கு முன்பாக நிகழ்ச்சியை தொடங்குவதாக இருந்தால், உங்களை வைத்தே நிகழ்ச்சியை நடத்தியிருக்கலாமே? என்னை எதற்காக அழைக்க வேண்டும்? என கடுமையாக சாடினார்.

    இதனால் அமைச்சருக்கும், எம்.பி.க்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. அவர்கள் மேடையில் வைத்தே வாக்குவாதம் செய்தனர். ஒரு பக்கம் அமைச்சர், மறு பக்கம் எம்.பி., நடப்பதோ அரசு நிகழ்ச்சி என்பதால் என்ன செய்வதென்று தெரியாமல் கலெக்டர் விஷ்ணு சந்திரன் இருவரையும் சமாதானம் செய்ய முயற்சித்தார்.

    அப்போது அருகிலிருந்த நவாஸ் கனி எம்.பி.யின் ஆதரவாளர்கள் கலெக்டர் விஷ்ணு சந்திரனை தள்ளி விட்டனர். இதில் கலெக்டர் நிலைதடுமாறி கீழே விழுந்தார். அவரை அவரது உதவியாளர்கள் தூக்கினர். இதனால் அரசு விழாவில் பரபரப்பு ஏற்பட்டது.இறுதியில் நிகழ்ச்சியை புறக்கணித்த நவாஸ் கனி வெளிநடப்பு செய்தார்.

    ஏற்கனவே மாவட்ட செயலாளர் காதர்பாட்சா முத்துராமலிங்கத்திற்கும், அமைச்சர் ராஜகண்ணப்பனுக்கும் மோதல் போக்கு தொடர்ந்து வரும் நிலையில் முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற வீரர்-வீராங்கனைகளுக்கு பரிசு வழங்கும் அரசு நிகழ்ச்சியில் நேருக்கு நேராக அமைச்சரும், எம்.பி.யும் வாக்கு வாதத்தில் ஈடுபட்டது பார்வையாளர்களை முகம் சுளிக்க வைத்தது.

    இந்நிலையில் அரசு விழாவில் கலெக்டர் தள்ளி விடப்பட்ட விவகாரம் குறித்து ராமநாதபுரம் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை அலுவலர் தினேஷ்குமார், கேணிக்கரை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் கலெக்டரை தள்ளிவிட்டதாக நவாஸ்கனி எம்.பி.யின் உதவியாளரான சாயல்குடியை சேர்ந்த விஜயராமு என்பவர் மீது போலீசார் இன்று வழக்கு பதிந்தனர்.

    அவர் மீது 506 (ii), 294 (பி) உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதியப்பட்டது. இந்நிலையில் விஜயராமுவை போலீசார் கைது செய்தனர். அவரை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    அரசு விழாவில் கலெக்டர் தள்ளி விடப்பட்ட விவகாரத்தில் எம்.பி.யின் உதவியாளர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் ராமநாதபுரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • 5 பிரிவுகளில் குழு விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டன.
    • வருகிற 21-ந் தேதி விளையாட்டு அரங்கில், பரிசுத் தொகை, சான்றிதழ் வழங்கப்பட உள்ளன.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் மகேஸ்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    கிருஷ்ணகிரி மாவட்ட விளையாட்டு அரங்கில், கடந்த 2022-2023-ம் ஆண்டின் முதல் அமைச்சர் கோப்பைக்கான மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகள் கடந்த பிப்ரவரி 7-ந் தேதி முதல் பிப்ரவரி 27-ந் தேதி வரை பள்ளி, கல்லூரி, அரசு ஊழியர்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் பொதுப்பிரிவு என 5 பிரிவுகளில் பல்வேறு வகையான தனிநபர் மற்றும் குழு விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டன.

    இந்த போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுத் தொகை, சான்றிதழ் மற்றும் பதக்கங்கள் வருகிற 21-ந் தேதி மாலை 3.30 மணிக்கு கிருஷ்ணகிரி மாவட்ட விளையாட்டு அரங்கில், அமைச்சர், எம்.பி., எம்.எல்.ஏ., கலெக்டர் ஆகியோரால் வழங்கப்பட உள்ளன. முதல் அமைச்சர் கோப்பைக்கான தனிநபர் மற்றும் குழு விளையாட்டுப் போட்டியில் முதல் மூன்று இடங்களில் வெற்றி பெற்ற வீரர், வீராங்கனைகள் தவறாது பரிசளிப்பு விழாவில் மாலை 3.30 மணிக்கு கலந்து கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா நடந்தது.
    • விழாவில் ராமநாதபுரம் வனஅலுவலர்கள் நவநீதன், ராஜேஸ் பங்கேற்றனர்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்டம் மன்னார் வளைகுடா உயிர்கோள காப்பகம் வனத்துறை அலுவலகத்தில் சுற்றுச்சூழல் தின போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா நடந்தது. மன்னார் வளைகுடா உயிர்கோள காப்பகம் காப்பாளர் பகான் ஜெகதீஸ் சுதாகர் தலைமை தாங்கினார். உதவி வன அலுவலர் சுரேஷ்குமார் முன்னிலை வகித்தார். சுற்றுச்சூழல் விழிப்புணர்வு குறித்து ஜூன் 1-ந்தேதி முதல் 4 வரை மாணவர்களுக்கான ஓவியம் வரைதல், கவிதை, வினாடி-வினா போட்டிகள் நடந்தது. இதில் மீனவ கிராமங்களை சேர்ந்த 200 மாணவர்கள் பங்கேற்றனர். இவர்களில் 12 பேர் தேர்வு செய்யப்பட்டு கேடயம், சான்றிதழ் வழங்கப்பட்டது. விழாவில் ராமநாதபுரம் வனஅலுவலர்கள் நவநீதன், ராஜேஸ் பங்கேற்றனர்.

    • பொதுப் பிரிவு, பள்ளி, கல்லூரி, மாற்றுத் திறனாளிகள், அரசு ஊழியா்கள் என மொத்தம் 5 பிரிவுகளாக நடைபெற்றன.
    • பரிசளிப்பு விழா திருப்பூா் ஜெய்வாபாய் மாநகராட்சிப் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஜூன் 10 -ந் தேதி மாலை 3 மணி அளவில் நடைபெறுகிறது.

    திருப்பூர்:

    திருப்பூா் மாவட்டத்தில் நடைபெற்ற முதல்வா் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற வீரா், வீராங்கனைகளுக்கான பரிசளிப்பு விழா ஜூன் 10-ந் தேதி நடைபெறுகிறது.

    இதுகுறித்து திருப்பூா் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞா் நலன் அலுவலா் ராஜகோபால் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    திருப்பூா் மாவட்டத்தில் முதல்வா் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகள் பொதுப் பிரிவு, பள்ளி, கல்லூரி, மாற்றுத் திறனாளிகள், அரசு ஊழியா்கள் என மொத்தம் 5 பிரிவுகளாக நடைபெற்றன. இதில், தடகளம் மற்றும் குழு விளையாட்டுப் போட்டிகள் கபடி, சிலம்பம், இறகுப்பந்து, வாலிபால், கூடைப்பந்து, கால்பந்து, ஹாக்கி, மேசைப்பந்து மற்றும் நீச்சல் என 25 வயதுக்கு உள்பட்ட ஆண்கள், பெண்கள் என இருபாலருக்கும் போட்டிகள் நடத்தி முடிக்கப்பட்டன.

    இதில் முதல் இடம் பிடித்தவா்களுக்கு தலா ரூ.3 ஆயிரம், இரண்டாம் இடம் பிடித்தவா்களுக்கு ரூ.2 ஆயிரம், மூன்றாம் இடம் பிடித்தவா்களுக்கு ரூ.1000 என மொத்தம் 1,675 வீரா், வீராங்கனைகள் வெற்றி பெற்றுள்ளனா். இதில், வெற்றி பெற்றவா்களுக்கான பரிசளிப்பு விழா திருப்பூா் ஜெய்வாபாய் மாநகராட்சிப் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஜூன் 10 -ந் தேதி மாலை 3 மணி அளவில் நடைபெறுகிறது.

    இந்த பரிசளிப்பு விழாவில் தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன், திருப்பூா் தெற்கு சட்டப் பேரவை உறுப்பினா் க.செல்வராஜ், மாவட்ட கலெக்டர் தா.கிறிஸ்துராஜ் உள்ளிட்டோா் கலந்து கொண்டு பரிசுகளை வழங்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • காரைக்குடி அருகே சிறுவர் கால்பந்து போட்டியை ப.சிதம்பரம் தொடங்கி வைத்தார் .
    • பரிசளிப்பு விழாவில் கோட்டையூர் பேரூராட்சி தலைவர் கே.எஸ்.கார்த்திக் சோலை கலந்து கொண்டு பரிசுகளை வழங்கினார்.

    காரைக்குடி

    சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே உள்ள கோட்டையூர் வேலங்குடி புளூஸ் கால்பந்து கழகம் சார்பில் 13 மற்றும் 15 வயதுக்குட்பட்டோருக்கான மாநில அளவிலான ஐவர் கால்பந்து போட்டி நடந்தது. இதில் தூத்துக்குடி, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருச்சி, சென்னை உள்பட பல்வேறு ஊர்களில் இருந்து அணிகள் கலந்து கொண்டன. 13 வயதுக்குட்பட்டோர் பிரிவில் காரைக்குடி ஆரோகிக் அகாடமி முதலிடத்தையும், ஒரத்தநாடு ஒய்.பி.ஆர். அகாடமி 2-ம் இடத்தையும், கோட்டையூர் முத்தையா அழகப்பா பள்ளி3-ம் இடத்தையும் வென்றன. 15 வயதுக்குட்பட்டோர் பிரிவில் காரைக்குடி காட்டுத்தலைவாசல் அப்பாஸ் மெமோரியல் அணி முதலிடத்தையும், சென்னை அணி 2-ம் இடத்தையும், ஒய்.பி.ஆர். அணி 3-ம் இடத்தையும் வென்றன.

    போட்டிகளை முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம், மாங்குடி எம்.எல்.ஏ., சாக்கோட்டை மேற்கு ஒன்றிய செயலாளரும், சிவகங்கை மாவட்ட கால்பந்து கழக தலைவருமான கே.ஆர்.ஆனந்த் மற்றும் பலர் தொடங்கி வைத்தனர். பரிசளிப்பு விழாவில் கோட்டையூர் பேரூராட்சி தலைவர் கே.எஸ்.கார்த்திக் சோலை கலந்து கொண்டு பரிசுகளை வழங்கினார்.

    • கபடி போட்டி பரிசளிப்பு விழா நடந்தது.
    • தேசிய நடுவர் காளிதாஸ் வீரர்களுக்கான ஏற்பாடுகளை செய்திருந்தார்

    ராஜபாளையம்

    விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் ராம்கோ தொழில் நிறுவனங்களின் ஸ்தாபகர் பி.ஏ.சி.ராமசாமி ராஜா நினைவு விளையாட்டு மன்றம் சார்பில் 60-வது மணிவிழா ஆண்டு கபடி போட்டி ஊர்க்காவல் படை மைதானத்தில் நடந்தது. இறுதிப் போட்டியில் மீனாட்சிபுரம் செவன் லைன்ஸ் அணியும், வத்திராயிருப்பு வீ.கே.ஏ.என். அணியும் மோதியது. இதில் மீனாட்சிபுரம் அணி வெற்றி பெற்றது. வத்திராயிருப்பு அணிக்கு 2-வது பரிசு கிடைத்தது. கிருஷ்ணாபுரம் கே.எஸ்.சி. அணிக்கு 3-வது பரிசும், சோலைசேரி ஜாம்பவான் கபடி குழு அணிக்கு 4-வது பரிசும் கிடைத்தன. பின்னர் நடந்த பரிசளிப்பு விழாவில் கே.எஸ்.ஆர். பஸ் அதிபர் ஜெகதீஷ் சவுந்தர் பரிசுகளை வழங்கினார். சுப்பிரமணிய ராஜா வரவேற்றார். ராமராஜ், ராதாகிருஷ்ண ராஜா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். இதற்கான ஏற்பாடுகளை விருதுநகர் மாவட்ட கபடி குழு தலைவர் சுப்பிரமணிய ராஜா, செயலாளர் கனி முத்து குமரன், துணைத் தலைவர் சம்சுதீன் உள்ளிட்ட குழுவினர் செய்திருந்தனர். தேசிய நடுவர் காளிதாஸ் வீரர்களுக்கான ஏற்பாடுகளை செய்திருந்தார்.

    • 2022-2023 ஆம் கல்வியாண்டில் சிறந்து விளங்கிய மாணவர்களுக்கு பரிசுகளையும், பாராட்டுச் சான்றிதழ்களையும் வழங்கினர்.
    • மாணவர்களிடையே உழைப்பின் நோக்கம் வெற்றி என்னும் தலைப்பில் சிறப்புரையாற்றினர்.

    திருப்பூர் :

    திருப்பூர்,காந்திநகர் பகுதியில் அமைந்துள்ள ஏ.வி.பி. டிரஸ்ட் பப்ளிக் சீனியர் செகண்டரி பள்ளியில் 2022-2023 ஆம் கல்வி ஆண்டுக்கான பரிசளிப்பு மற்றும் பாராட்டு விழா நடைபெற்றது.இந்நிகழ்ச்சிக்கு கோவை பேன்டெக்ஸ் நிறுவனத் தலைவரும் ரொட்டேரியனுமான ஏ.கே.எஸ்.பி.தனசேகர் மற்றும் பொள்ளாச்சி பாரதி வித்யா பவன் பள்ளியின் நிறுவனத் தலைவரும் ரொட்டேரியனுமான

    ஏ. செந்தில்குமார் காளிய ங்கராயர் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டு மாணவ ர்களிடையே உழைப்பின் நோக்கம்வெற்றி என்னும் தலைப்பில் சிறப்புரை யாற்றினர்.இதனைத் தொடர்ந்து 2022-2023 ஆம் கல்வியாண்டில் கல்வி,விளையாட்டு, தமிழ் மன்றம், ஆங்கில மன்றம் போன்ற பல மன்றச் செயல்பாடுகளில் சிறந்து விளங்கிய மாணவர்க ளுக்கும், ஐஐடி, ஜேஇஇ ஒலிம்பியாய்டு, விவிஎம் ஆகிய போட்டி தேர்வில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவ ர்களுக்கும், மாவட்ட, மாநில மற்றும் தேசிய அளவில் கல்வி,விளையாட்டுப் போ ட்டிகளில் சிறந்து விளங்கிய மாணவர்களுக்குப் பரிசுகளையும் பாராட்டுச் சான்றிதழ்களையும் வழங்கிப் பாராட்டினர்.முன்னதாகப் பள்ளியின் கலையரங்கில் நடைபெற்ற இந்நிகழ்விற்கு ஏ.வி.பி.கல்விக் குழுமங்களின் தாளாளர். கார்த்திகேயன் அருள்ஜோதி தலைமை தாங்கினார். பள்ளியின் பொருளாளர் .லதா கார்த்திகேயன் முன்னிலை வகித்தார். பள்ளியின் முதல்வர் .ஜி பிரமோதினி வரவேற்றுப் பேசினார்.இறுதியாகப் பள்ளியின் கலை நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் எஸ்.நித்யா நன்றியுரை வழ ங்கினார். நிகழ்ச்சிக்கான அனைத்து ஏற்பாடுகளையும் பள்ளியின் ஒருங்கிணைப்பாளர் வி. மோகனாவுடன் இணைந்து பள்ளியின் மாணவர் மன்றத்தினர் செய்திருந்தனர்.

    • முதுகுளத்தூர் பள்ளிவாசல் பள்ளிகளில் பரிசளிப்பு விழா நடந்தது.
    • பேரூராட்சி சேர்மன் ஷாஜகான் பங்கேற்றார்.

    முதுகுளத்தூர்

    ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் பள்ளிவாசல் மழலையர் பள்ளி மற்றும் தொடக்கப்பள்ளியின் 25-ம் ஆண்டு பரிசளிப்பு விழா பெரிய பள்ளிவாசல் ஜமாத் தலைவர் எஸ்.முகம்மது இக்பால் தலைமையில் நடந்தது.

    பெரிய பள்ளிவாசல் தலைமை இமாம் எஸ்.அகம்மது பசீர் சேட் ஆலிம், துணைத் தலைவர்கள் இக்பால், அ.காதர் முகைதீன், முன்னாள் பேரூராட்சி உதவி சேர்மன் பாசில்அமீன், வாவா ராவுத்தர் முன்னிலை வகித்தனர்.

    பள்ளிவாசல் மழலையர் பள்ளி தாளாளர் எம்.செய்யது அபுதாஹீர் வரவேற்றார். மாணவ, மாணவிகளுக்கு பள்ளிவாசல் மேல்நிலைப்பள்ளியின் தாளாளரும், பேருராட்சி சேர்மனுமான ஏ.ஷாஜஹான் பரிசு வழங்கி பாராட்டினார்.

    விழாவில் முன்னாள் தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியர் எம்.எஸ்.லியாகத் அலி, பள்ளிவாசல் மேல்நிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியர் முகம்மது சுல்தான் அலாவுதீன், முன்னாள் தலைமை ஆசிரியர் காதர் முகைதீன், ஆசிரியை பொன்னா மீனாள் பேகம், தொடக்கப்பள்ளி தாளாளர் எம்.எம்.கே.எம் சீனி முகம்மது மற்றும் கல்வி குழுவினர் கலந்து கொண்டனர். மாணவ-மாணவிகளின் பட்டிமன்றமும், கலைநிகழ்ச்சிகளும் நடந்தன.

    • 3-வது இடத்தை மொத்தம் 9 பேர், சிறந்த ஓவியம் வரைந்ததற்காக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
    • இவர்களுக்கு பரிசளிப்பு விழா, பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.

    ஓசூர்,

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே பேடரபள்ளியில் உள்ள ஊராட்சி ஒன்றிய அரசு நடுநிலைப்பள்ளியில், தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் ஒரு தனியார் நிறுவனம் இணைந்து பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு குறித்த ஓவியப்போட்டியை நடத்தின.

    இதில், 6, 7, மற்றும் 8 ஆம் வகுப்பை சேர்ந்த 75 மாணவ, மாணவியர் கலந்து கொண்டனர். போட்டியில் 3 வகுப்புகளிலும், முதலாம் இடம், 2-வது இடம் மற்றும் 3-வது இடத்தை மொத்தம் 9 பேர், சிறந்த ஓவியம் வரைந்ததற்காக தேர்ந்தெடுக்கப்பட்டனர். இவர்களுக்கு பரிசளிப்பு விழா, பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. விழாவிற்கு, தமிழ்நாடு மாசுகட்டுப்பாட்டு வாரிய உதவி செயற்பொறியாளர் சுனிதா தலைமை தாங்கினார். பள்ளி தலைமையாசிரியர் பொன். நாகேஷ் வரவேற்றார். தனியார் நிறுவன மேலாளர் அனில்குமார் வெற்றிபெற்ற மாணவ, மாணவியருக்கு கேடயம், பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கி பாராட்டினார். மேலும் இதில் பள்ளி ஆசிரியர்கள், தனியார் நிறுவன அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • மாணவர்களுக்கு பள்ளியின் சார்பாக கேடயமும் வழங்கப்பட்டது.
    • முடிவில் பள்ளி ஒருங்கிணைப்பாளர் ஆபிதாபானு நன்றி கூறினார்.

     திருப்பூர்:

    திருமுருகன்பூண்டி ஏ.வி.பி. பள்ளியில் 33வது ஆண்டு பரிசளிப்பு விழா நடைபெற்றது. விழாவில் பள்ளியின் தாளாளர் கார்த்திகேயன் தலைமை தாங்கி பேசினார். பொருளாளர் லதா கார்த்திகேயன் குத்து விளக்கேற்றி விழாவினை தொடங்கி வைத்தார். பள்ளி முதல்வர் பிரியாராஜா வரவேற்று பேசினார். 2021-22ம் கல்வி ஆண்டில் பாடவாரியாக 100 / 100மதிப்பெண்கள் பெற்ற 78 மாணவர்களுக்கு பாரத் டையிங் முருகநாதன் ரொக்கப்பரிசு வழங்கி பாராட்டினார். மாணவர்களுக்கு பள்ளியின் சார்பாக கேடயமும் வழங்கப்பட்டது.

    இதைத்தொடர்ந்து 2022 -23 நடப்பு கல்வியாண்டில் பயிலும் மாணவர்களில் வகுப்புவாரியாக முதல் 3 மதிப்பெண்கள் பெற்றவர்களுக்கு விடுமுறை எடுக்காமல் 100 சதவீதம் வருகை புரிந்த மாணவர்களுக்கு காமராசரின் பிறந்த நாளான கல்வி வளர்ச்சி நாள், தந்தையர் தினம், நிறுவனர் தினம், குழந்தைகள் தினம், ஏ.பி.ஜே அப்துல்கலாம் பிறந்த தினம், தீரன் சின்னமலை பிறந்த தினம் போன்ற விழாக்களில் நடைபெற்ற போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு மெல்வின் கார்மெண்ட்ஸ் நிர்வாக இயக்குனர் ரோட்டேரியன் பாபு அந்தோணி, ஆதவன் காட்டன்ஸ் நிர்வாக இயக்குனர் ரோட்டேரியன் பூபதி சான்றிதழும், கேடயமும் வழங்கி பாராட்டினர். ஆண்டு விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு நேச்சர் சொசைட்டி ஆப் திருப்பூர் தலைவர் ரவீந்திரன் காமாட்சி, ஏ.வி.பி. டிரஸ்ட் பிரதாப், நட்ராஜ் சான்றிதழும், பதக்கமும் வழங்கி பாராட்டினர். விழாவில் 1060 மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. விழாவில் பெற்றோர்கள், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். முடிவில் பள்ளி ஒருங்கிணைப்பாளர் ஆபிதாபானு நன்றி கூறினார். 

    ×