search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Goal competition"

    • சிவகங்கையில் கோலப்போட்டி பரிசளிப்பு விழா நடந்தது.
    • போட்டிகளில் திறமைகளை வெளிப்படுத்திய 80-க்கும் மேற்பட்டோருக்கு பரிசு வழங்கப்பட்டது.

    நெற்குப்பை

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள நடுவிக்கோட்டை கிராமத்தில் "கொண்டாடுவோம் ஒன்றி ணைவோம்'' என்ற தலைப்பில் கோலப் போட்டிக்கான பரிசளிப்பு விழா நடந்தது. இதில் உள்ளூர் மற்றும் சுற்றுவட்டார கிராமங்கள், அமெரிக்கா,சிங்கப்பூர் நாடுகளில் இருந்தும் போட்டியாளர்கள் பங்கேற்றனர். இவர்களை போட்டி ஒருங்கிணைப்புக் குழுவினர் ரோஜாக்கூட்டம், மல்லிகைத் தோட்டம், தாமரைத் தடாகம், செம்பருத்திப் பூக்கள், சூரியகாந்தி குடும்பம் என 5 குழுக்களாக வகைப்படுத்தினர். போட்டிகளில் திறமைகளை வெளிப்படுத்திய 80-க்கும் மேற்பட்டோருக்கு பரிசு வழங்கப்பட்டது. முதல் பரிசாக கொங்கரத்தி கிராமத்தை சேர்ந்த செல்வி நாராயணன் சிறந்த கோலநாயகியாக தேர்ந்தெடுக்கப்பட்டு தங்கக்காசு பெற்றார். மற்ற வெற்றியாளர்களுக்கு வெள்ளிக்காசுகளும், எவர்சில்வர் பாத்திரங்களும் வழங்கப்பட்டன.

    போட்டியில் வெற்றி பெற்றவர்களில் 3 பேரை அதிர்ஷ்டக் குலுக்கல் முறையில் தேர்வு செய்து பரிசுகள் வழங்கப்பட்டது. விழாவிற்கான ஏற்பாடுகளை வல்லத்தரசு காளிதாசன், பாஸ்கரன், ஆறுமுகம், கிருஷ்ணன் சக்தி, வெள்ளைக்கண்ணு, ஜெயக்கண்ணன், போஸ், சத்திய நாராயணன் ஆகியோர் செய்திருந்தனர். பரிசளிப்பு விழா பணிகளில் ராமநாதன் கவுதமன், ஆண்டாளியார், ஜெயக்குமார், பாஸ்கரன், அன்புச்செழியன், முருகானந்தம், சிவராஜன், கண்ணதாசன் ஈடுபட்டனர்.

    • உதயநிதி பிறந்தநாள் விழா:
    • விராலிமலையில் தி.மு.க சார்பில் கோலப்போட்டி

    புதுக்கோட்டை:

    தி.மு.க. இளைஞரணி செயலாளர், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு, 35-வது நிகழ்ச்சியாக, மாவட்ட தி.மு.க. செயலாளர் வழக்கறிஞர் கே.கே செல்லப்பாண்டியன் தலைமையில் விராலிமலை மேற்கு ஒன்றியம், விராலிமலை ஊராட்சி 5-வது வார்டில் விராலிமலையில் தகவல் தொழில்நுட்ப அணி தொகுதி ஒருங்கிணைப்பாளர் சுகுமாறன் ஏற்பாட்டில் கோலப்போட்டி நடைபெற்றது.இதில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு வண்ண வண்ண கோலங்கள் வரைந்தனர். நிகழ்வில், ஒன்றிய செயலாளர் இளங்குமரன், தலைமை பொதுக்குழு உறுப்பினர் தென்னலூர் எம்.பழனியப்பன், தகவல் தொழில்நுட்ப அணி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் டாக்டர் செ.குறிஞ்சிவாணன், ஒன்றிய நிர்வாகிகள், ஏ.பி.ஆர்.ராஜாங்கம், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் சிவா விராலிமலை ஊராட்சி மன்ற தலைவர் ரவி, பிரபாகரன் பாஸ்கர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்


    ×