search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கண்காட்சி"

    • நிறைவு நாளான 6-ந்தேதி நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார்.
    • கண்காட்சியில் கட்டிடம் மற்றும் வீடுகளுக்கு தேவையான அனைத்து பொருட்களும் ஒரே இடத்தில்

    நாகர்கோவில் :

    பில்டர்ஸ் அசோசியேசன் ஆப் இந்தியா கன்னியாகுமரி சென்டர் சார்பாக கட்டிட பொருட்களின் கண்காட்சி நாகர்கோவில் பெருமாள் திருமண மண்டபத்தில் நாளை (4-ந்தேதி) தொடங்கி வருகிற 6-ந்தேதி வரை 3 நாட்கள் காலை 10.30 மணி முதல் இரவு 9 மணி வரை நடக்கிறது. கண்காட்சிக்கு இலவச அனுமதி வழங்கப்பட்டுள்ளது.கட்டிட பொருட்களின் கண்காட்சியை நாகர்கோவில் மாநகராட்சி கமிஷனர் ஆனந்த் மோகன் திறந்து வைக்கிறார். பில்டர்ஸ் அசோசியேசன் ஆப் இந்தியா அகில இந்திய முன்னாள் தலைவர் என்ஜினீயர் வேதானந்து சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார். பில்டர்ஸ் அசோசியேசன் ஆப் இந்தியா கன்னியாகுமரி சென்டர் நிறுவன தலைவர் என்ஜினீயர் ஜஸ்டின்பால் கவுரவ விருந்தினராக கலந்துகொள்கிறார். கட்டிட பொருட்களின் கண்காட்சியின் நிறைவு நாளான 6-ந்தேதி நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார்.

    இந்த கண்காட்சியில் கட்டிடம் மற்றும் வீடுகளுக்கு தேவையான அனைத்து பொருட்களும் ஒரே இடத்தில் கண்டுகளிக்க மற்றும் அதன் உபயோகத்தை தெரிந்து கொள்வதற்கு வசதியாக அமைந்துள்ளது. கட்டிட பொருட்களின் கண்காட்சிக்கான ஏற்பாடுகளை பில்டர்ஸ் அசோசியேசன் ஆப் இந்தியா கன்னியாகுமரி சென்டர் தலைவர் என்ஜினீயர் காசிநாதன், பில்ட் எக்ஸ்போ தலைவர் என்ஜினீயர் கோவிந்தன், பில்ட் எக்ஸ்போ துணை தலைவர் என்ஜினீயர் சரவணா சுப்பையா, பில்ட் எக்ஸ்போ செயலாளர் என்ஜினீயர் தாமஸ் பிரேம்குமார், பில்டர்ஸ் அசோசியேசன் ஆப் இந்தியா கன்னியாகுமரி சென்டர் செயலாளர் என்ஜினீயர் சந்திரசேகர், பில்ட் எக்ஸ்போ துணை செயலாளர் என்ஜினீயர் ராஜேஷ் குமார், பில்ட் எக்ஸ்போ பொருளாளர் ஆல்பர்ட் நெல்சன் மற்றும் முன்னாள் தலைவர்கள், செயற்குழு உறுப்பினர்கள், நிர்வாகிகள், உறுப்பினர்கள் ஆகியோர் இணைந்து செய்து வருகிறார்கள். 

    • புதுக்கோட்டை 6வது புத்தகத் திருவிழாவில் 112 அரங்குகளில், 3 லட்சம் புத்தகங்கள்
    • அமைச்சர் மெய்யநாதன் தகவல்

    புதுக்கோட்டை,

    புதுக்கோட்டை நகர மன்றத்தில் மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் இணைந்து நடத்தும், 6வது புதுக்கோட்டை புத்தகத் திருவிழாவில் சுற்றுச்சூழல் மற்றும்காலநிலை மாற்றத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் கலந்து கொண்டு, பார்வையிட்டார். பின்னர் அவர் கூறும்போது, இந்த புத்தக திருவிழாவில் தமிழகத்தைச் சேர்ந்த 75 பதிப்பகங்களிலிருந்து சுமார் 3 லட்சத்திற்கும் மேற்பட்ட பொதுஅறிவு, அறிவியல், அரசியல், கவிதைகள், வரலாறுகள் உள்ளிட்ட எண்ணற்றத் தலைப்புகளின்கீழ் புத்தகங்கள் கிடைக்கப்பெறுகின்றன. 112 அரங்குகளில் இதற்காக அமைக்கப்பட்டு உள்ளது. இந்த புத்தக திருவிழா ஆகஸ்ட் 6ம் தேதி வரை நடைபெறும் என்று அவர் தெரிவித்தார். இதில் நாடாளுமன்ற உறுப்பினர் அப்துல்லா, கந்தர்வக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர்சின்னத்துரை, வருவாய் கோட்டாட்சியர்முருகேசன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் மதியழகன், ஒருங்கிணைப்பாளர்தங்கம்மூர்த்தி, நகர்மன்ற உறுப்பினர்செந்தாமரை பாலு, உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

    • சுற்றுலா பயணிகள் பார்வையிட்டனர்
    • குமரி மாவட்ட அரசு அருங்காட்சியகத்தில் ஏராளமான அரும் பொருட்கள் உள்ளன.

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரி அரசு அருங்காட்சியகத்தில் ஜூலை மாத சிறப்பு காட்சிப்பொருள் கண்காட்சி தொடங்கப்பட்டுள்ளது. இந்த கண்காட்சியில் பாக்கு வெட்டி காட்சிபடுத்தப்பட்டு உள்ளன.

    குமரி மாவட்ட அரசு அருங்காட்சியகத்தில் ஏராளமான அரும் பொருட்கள் உள்ளன. ஒவ்வொரு பொருள்களும் பல்வேறு வரலாற்று சிறப்பு மிக்கவை. அத்தனை சிறப்பு மிக்க பொருள்களின் முக்கியத்துவத்தை எடுத்துக் கூறும் விதமாக இதுபோன்று மாதம் ஒரு சிறப்பு காட்சி பொருள் கண்காட்சி நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

    ஒவ்வொரு மாதமும் அருங்காட்சியகத்தின் இருப்பில் உள்ள அரும் பொருட்கள் ஏதேனும் ஒன்றினை காட்சிப்படுத்தி அப்பொருளைபற்றிய விளக்கமும் வைக்கப்பட்டு இருக்கும். ஒரு மாதம் முழுவதும் இந்த பொருள் பொதுமக்களின் பார்வைக்காக அருங்காட்சிய கத்தில் வைக்கப்பட்டிருக்கும். இவ்வாறாக கன்னியாகுமரி அரசு அருங்காட்சியகத்தில் உள்ள ஒவ்வொரு பொருள்க ளின் முக்கியத்துவத்தை குமரி மாவட்ட மக்களிடையே எடுத்துச் செல்வதற்கான ஒரு முயற்சிதான் இந்த சிறப்பு காட்சி பொருள் கண்காட்சி. இந்த மாதத்துக்கான இந்த கண்காட்சியில் பாக்கு வெட்டி இடம்பெற்றுள்ளது. பழங்காலத்தில் இருந்த வெற்றிலை, பாக்கு தமிழர் பண்பாட்டோடு கலந்த பொருளாக இருந்து வருகிறது.

    தெய்வ வழிபாட்டிலும், திருமணம் முதலிய நிகழ்ச்சிகளிலும் வெற்றிலை, பாக்கு முக்கிய இடத்தை பெறுகிறது. வெற்றிலை, பாக்கு மகிழ்வுக்குரிய ஒன்றாக இன்ப உணர்ச்சியை தூண்டும் ஒன்றாக தமிழரின் அகவாழ்வில் கலந்திருந்த வரலாறு அரியத்தக்க ஒன்றாகும்.

    "வெற்றிலை இந்தியாவின் பூர்வீக பயிர்வகை கிடையாது. இறக்குமதி செய்யப்பட்ட ஒன்று. இது மலேயா நாட்டிலிருந்து தமிழகம் வந்திருக்கலாம்' என்று வரலாற்று பேராசிரியர் பி.டி.சீனிவாச ஐயங்கார் கூறியுள்ளார். "வெற்றிலை, பாக்குப் போடும் பழக்கம் தமிழர்களிடையே சங்க காலத்திற்கு பின் தோன்றியதாக இருக்கலாம் என்று வரலாற்று பேராசிரியர் நீலகண்ட சாஸ்திரியார் கூறியுள்ளார். ஆனால் சங்க இலக்கியங்களில் வெற்றிலை பாக்கு போடுவது பற்றிய குறிப்புகள் நிறைய காணப்படுகின்றன.

    தமிழர்களோடு ஒன்றிணைந்த இந்த பண்டைய தமிழகத்தில் அரசருடன் இருக்கும் ஒரு குழு எண்பேராயம் என்று குறிப்பிடப்படுகிறது. இந்தக் குழுவில் வெற்றிலை பாக்கு வைத்திருக்கும் ஒருவரும் அடங்குவர். இவரை அடைப்புக்காரன் என்று குறிப்பிடுவர் இதிலிருந்து வெற்றிலை பாக்கு தமிழர் வாழ்வில் எவ்வளவு முக்கியம் பங்கு பெற்றிருக்கிறது என்பதை அறிகிறோம்.

    தாம்பூலம் தரித்தல் என்பது ஒரு பழக்கமாக, பண்பாடாக, நம் முன்னோரால் கடைபிடிக்கப்பட்டு வந்தது. பாக்கினை வெட்டுவதற்கான கருவிதான் பாக்கு வெட்டி. குறடு போன்று தோற்றமளிக்கும், இரு கை பிடிகள், முனையில், இரு கூர் முனைகள். இரு கூர்மையான முனைகளுக்கு இடையில், பாக்கினை வைத்து வெட்டி, சிறு சிறு துண்டுகளாக்கி மெல்லுவார்கள். இந்த பாக்கு வெட்டிக்குப் பல பயன்கள் உண்டு.

    நமது முன்னோர்கள் பயன்படுத்திய இந்த அரும் பொருட்களின் முக்கியத்துவத்தை இன்றைய தலைமுறையினர் அனை வருக்கும் தெரிவிப்பதே இக்கண்காட்சியில் நோக்கமாகும் என இக்கண்காட்சியை தொடங்கி வைத்த நெல்லை மாவட்ட காப்பாட்சியர் சிவ. சத்திய வள்ளி தெரிவித்தார்.

    கன்னியாகுமரி அரசு அருங்காட்சியகத்தில் தொடங்கப்பட்டுள்ள இந்தக்கண்காட்சியை ஏராளமான சுற்றுலா பயணிகள், பொதுமக்கள், மாணவ-மாணவிகள் உள்பட பலர் பார்வையிட்டனர்.

    • திருச்சியில் இன்று வேளாண் கண்காட்சியை முதல் -அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
    • தகுதியான பெண்கள் ஒருவரும் விடுபடக்கூடாது என அறிவுறுத்தினார்.

    தஞ்சாவூர்:

    திருச்சியில் இன்று வேளாண் கண்காட்சியை முதல் -அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

    பின்னர் அவர் தஞ்சையில் நடைபெறும் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் முடிவடைந்த பணிகளின் திறப்பு விழா மற்றும் பந்தல் சிவா இல்ல திருமண வரவேற்பு விழா ஆகிய நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக காரில் தஞ்சைக்கு புறப்பட்டார்.

    அப்போது அவர் தஞ்சை மாவட்டம் செங்கிப்பட்டி அருகே உள்ள மனையே றிப்பட்டி கிராமத்தில் திடீரென இறங்கி அங்கு நடைபெறும் கலைஞர் மகளிர் உரிமை தொகை விண்ணப்ப பதிவு முகாமுக்கு சென்று ஆய்வு நடத்தினார்.

    முகாம் எவ்வாறு நடைபெறுகிறது, இன்றைய தினம் எத்தனை விண்ணப்பங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன போன்ற பல்வேறு விவரங்களை அதிகாரி களிடம் கேட்டறிந்தார்.

    தகுதியான பெண்கள் ஒருவரும் விடுபடக்கூடாது என அறிவுறுத்தினார்.

    இதையடுத்து அங்கிருந்து காரில் புறப்பட்டு தஞ்சைக்கு வந்தார்.

    இந்த ஆய்வின்போது அமைச்சர்கள் கே.என்.நேரு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி, கலெக்டர் தீபக் ஜேக்கப் மற்றும் பலர் உடன் இருந்தனர்.

    • மக்கள் தொடர்பு அலுவலகம், பள்ளிகல்வித் துறைசார்பில் புகைப்பட கண்காட்சி, செயல்பாடுகள் இடம் பெற்றன.
    • 200-க்கும் மேற்பட்ட அரியவகை மரக்கன்றுகளின் கண்காட்சி இடம்பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

    தருமபுரி, 

    தருமபுரியில் மாவட்ட நிர்வாகம் சார்பில் தமிழ்நாடு நாள் எனும் சிறப்பு நிகழ்ச்சி அவ்வையார் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் நடந்தது.

    இதில் பாரம்பரிய மிக்க 200-க்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை கண்காட்சியில் வைத்து மாணவிகள் அசத்தினர்.

    தமிழ்நாடு நாள் நிகழ்ச்சி அவ்வையார் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் நடந்தது. மக்கள் தொடர்பு அலுவலகம், பள்ளிகல்வித் துறைசார்பில் புகைப்பட கண்காட்சி, செயல்பாடுகள் இடம் பெற்றன.

    இதில் அவ்வையார் பள்ளி மாணவிகளின் பாரம்பரிய மிக்க 200-க்கும் மேற்பட்ட அரியவகை மரக்கன்றுகளின் கண்காட்சி இடம்பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

    இக்கண்காட்சியில் மாணவிகள் தேடி திரட்டிய அரிய வகை மரக்கன்றுகளான ருத்திராட்சை மரம், திருவோடு மரம், மகாவில்வம், சிவகுண்டலம், சொர்க்க மரம், நாகலிங்கம், குதிரை பிடுக்கன், ஆகிய மரக்கன்றுகள் வைத்திருந்தனர்.

    மேலும் தான்றிக்காய், பதிமுகம் மரம், அசோகமரம், வெள்வேல், கூந்தல் பனை, தாளிப் பனை, பம்ளிமாஸ், பிரியாணி இலை, ஓதியன், ஈட்டி, சந்தனம், ஏழிலை பாலை, ரப்பர், ராம் சீத்தா, யூக்லிப்டிஸ், சோப்பு காய், பபூரசு மரம், நோனி, மற்றும் கீரை விதைகள், கிழங்கு வகைகள் இக்கண்காட்சியில் வைத்து மாணவிகள் அசத்தினர்.

    இக்கண்காட்சியை திறந்து வைத்த கலெக்டர் சாந்தி, எஸ்.பி. ஸ்டீபன் ஜேசுபாதம், மற்றும் நகர்மன்ற தலைவர் லட்சுமி நாட்டான் மாது, முன்னாள் எம்.எல்.ஏ. தடங்கம் சுப்பிரமணி, தலைமை ஆசிரியை கலைச்செல்வி ஆகியோர் மாணவிகளை வெகுவாக பாராட்டினர்.

    • அமைச்சர் மனோ தங்கராஜ் பங்கேற்பு
    • முத்தாலங்குறிச்சி காமராசு எழுதிய களரி அடிமுறை பாகம்-1 நூல் வெளியீட்டு நிகழ்ச்சி நடை பெற்றது.

    கன்னியாகுமரி:

    தக்கலையில் இந்திய பாரம்பரிய கலை இலக்கிய பேரவை சார்பில் புத்தக கண்காட்சி நடைபெற்று வருகிறது. இந்த கண்காட்சி 15 நாட்கள் நடைபெறுகிறது. இதில் முத்தாலங்குறிச்சி காமராசு எழுதிய களரி அடிமுறை பாகம்-1 நூல் வெளியீட்டு நிகழ்ச்சி நடை பெற்றது.

    விழாவுக்கு பேரவை தலைவர் சிவனி சதீஷ் தலைமை தாங்கினார். ராச கோகிலா அறக்கட்டளை தலைவர் வக்கீல் ராஜ கோபால், வேநாடு அகாடமி கவுரவ தலைவர் சுவாமி யார்மடம் கிறிஸ்துதாஸ் ஆகியோர் முன்னிலை வகித்த னர். அமைச்சர் மனோ தங்கராஜ் சிறப்பு விருந்தின ராக கலந்துகொண்டு நூலை வெளியிட களரி அடிமுறை உலக கூட்டமைப்பு செயல் அதிகாரி செந்தில் ராஜகுமார் பெற்று கொண்டார். களரி அடிமுறை உலக கூட்டமைப்பு நிறுவனர் ரமேஷ் ரத்தின குமார், முத்தாலங்குறிச்சி காமராசு ஆகியோர் தமிழக கலை குறித்து பேசினார். கொல்லன்விளை மது நன்றி கூறினார். நிகழ்ச்சியை சமூக ஆர்வலர் கிரிஜா மணி தொகுத்து வழங்கினார்.

    • புத்தக கண்காட்சி நடத்துவது அறிவு சார்ந்த சமுதாயத்தை உருவாக்கும்.
    • பங்கேற்பாளர்களுக்கு பரிசு கூப்பன் வழங்கப்பட்டு புத்தகங்கள் பரிசாக வழங்கப்படும்.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் மாவட்ட நிர்வாகம் மற்றும் பொது நூலக இயக்ககம் இணைந்து நடத்தும் 6-ம் ஆண்டு தஞ்சாவூர் புத்தகத் திருவிழா இன்று அரண்மனை வளாகத்தில் தொடங்கியது.

    வருகிற 24 ஆம் தேதி வரை காலை 10 மணி முதல் இரவு 9 மணி வரை புத்தக திருவிழா நடைபெறுகிறது.

    இன்று புத்தக திருவிழாவை கலெக்டர் தீபக் ஜேக்கப் முன்னிலையில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தொடக்கி வைத்தார்.

    புத்தக திருவிழாவில் பல்வேறு பதிப்பகங்கள் சார்பில் 110 அரங்குகள் அமைக்கப்பட்டு விற்பனைக்காக வைக்கப்ப ட்டுள்ளது.

    2 லட்சத்திற்கும் மேற்பட்ட புத்தகங்கள் இடம் பெற்றுள்ளன.

    முதல் முறையாக மாவட்ட காவல்துறை சார்பில் புத்தக தானம் செய்யும் பெட்டி அறிமுகப்படு த்தப்பட்டுள்ளது.

    இதில் ஏராளமான சிறை கைதிகளுக்காக புத்தகங்களை தானமாக வழங்கி வருகின்றனர்.

    மாணவர்களை ஊக்குவி ப்பதற்காக நாள்தோறும் பல்வேறு போட்டிகள் நடைபெற்று பரிசுகள் வழங்கப்பட உள்ளது. பங்கேற்பாளர்களுக்கு பரிசு கூப்பன் வழங்கப்பட்டு குலுக்கல் முறையில் நாள்தோறும் மூவர் தேர்ந்தெடுக்கப்பட்டு புத்தகங்கள் பரிசாக வழங்கப்படும்.

    முன்னதாக அமைச்சர் அன்பில்ம கேஸ்பொய்யாமொழி அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-

    புத்தக கண்காட்சி, இலக்கிய விழாக்கள் நடத்துவது அறிவு சார்ந்த சமுதாயத்தை உருவாக்க பயனுள்ளதாக இருக்கும்.

    மக்களின் பொழுதுபோக்கு இல்லாமல் உலக அளவில் அறிவை வளர்த்துக்கொள்ள வேண்டும் என்றால் புத்தகங்கள் தான் பயனுள்ளதாக இருக்கும்.

    ஆசிரியர்கள் பணியிடம் நிரப்புவது தொடர்பாக சான்றிதழ் சரிபார்ப்பு , டெட் உள்ளிட்ட போட்டி தேர்வுகள் முடிவடைந்த நிலையில் தொடர்ந்து ஆலோசனை செய்யப்பட்டு வருகிறது.

    ஆசிரியர் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளும் வைத்துள்ளனர்.

    விரைவில் கோரிக்கைகள் குறித்து நிதி அமைச்சகம், அரசு துறைசார்ந்த அரசு அதிகாரிகள் உள்ளிட்டோரிடம் கலந்து ஆலோசித்து வருகிறோம். பரிசீலித்து எதை உடனடியாக செய்ய வேண்டுமோ அதை செய்ய உள்ளோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    புத்தக திருவிழா தொடக்க நிகழ்ச்சியில் அரசு தலைமை கொறடா கோவி.செழியன், எம்.எல்.ஏ.க்கள் துரை.சந்திரசேகரன், டி.கே.ஜி.நீலமேகம், மாநகராட்சி மேயர் சண்.ராமநாதன், துணை மேயர அஞ்சுகம பூபதி, மாவட்ட ஊராட்சி குழு தலைவர் உஷாபுண்ணியமூர்த்தி உள்பட பலர் கலந்து கொண்டன்.

    • ராமநாதபுரத்தில் தொல்பொருட்கள் கண்காட்சி நடந்தது.
    • இந்த கண்காட்சியில் பழைய, புதிய, நுண் கற்காலக் கருவிகள், கருப்பு சிவப்பு நிற பானை ஓடுகள், எழுத்தாணிகள் ஆகியவை காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்டம் நயினார்கோவில் வட்டாரத்தில் உள்ள நடுநிலைப் பள்ளிகளில் தொன்மை பாதுகாப்பு மன்றம் துவக்க விழா மற்றும் தொல்பொருட்கள் கண்காட்சி பாண்டியூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் நயினார்கோயில் வட்டாரக் கல்வி அலுவலர் மு.வாசுகி தலைமையில் நடந்தது.

    மற்றொரு வட்டாரக் கல்வி அலுவலர் பாஸ்கரன் முன்னிலை வகித்தார். பாண்டியூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் உமாதேவி அனைவரையும் வரவேற்றார்.

    இதில் தொன்மை பாதுகாப்பு மன்றம் மூலம் மாணவர்கள் தங்கள் பகுதியில் அழியும் நிலையில் உள்ள தொல்லியல் தடயங்களைக் கண்டறிந்து பாதுகாக்க உதவ வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.

    சிறப்பு விருந்தினராக ராமநாதபுரம் மாவட்ட தொன்மைப்0 பாதுகாப்பு மன்றங்களின் ஒருங்கிணைப்பா ளரும் தொல்லியல் ஆய்வாளரு மான ராஜகுரு கலந்து கொண்டு பேசினார். தேர்த்தங்கால் நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் நாகலெட்சுமி நன்றி கூறினார்.

    நிகழ்ச்சியை பார்வை யிட்டு ஆய்வு செய்த ராமநாதபுரம் மாவட்டக் கல்வி அலுவலர் (தொடக்க கல்வி) பிரின்ஸ் ஆரோக்கிய ராஜ் அனைத்துப் பள்ளி களிலும் இம்மன்றத்தை தொடர்ந்து செயல் படுத்திடவேண்டும் என ஆசிரியர்களைக் கேட்டுக் கொண்டார்.

    பின்னர் நடந்த தொல்பொருட்கள் கண்காட்சியில் பழைய, புதிய, நுண் கற்காலக் கருவிகள், கருப்பு சிவப்பு நிற பானை ஓடுகள், ரோமானிய, சீன நாட்டுப் பானை ஓடுகள், இரும்புத் தாதுக்கள், இரும்புக்கழிவுகள், வட்டச் சில்லுகள், கூரை ஓடுகள், மான் கொம்புகள், பானைக் குறியீடுகள், புதைபடி மங்கள், கல்வெட்டுகளின் மைப்படிகள், ஓலைச் சுவடிகள், எழுத்தாணிகள் ஆகியவை காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. நயினார்கோயில் வட்டார தொன்மைப் பாதுகாப்பு மன்றங்களின் பொறுப்பாசி ரியர்கள், பள்ளி மாணவ, மாணவிகள் அறிந்து கொண்டனர்.

    • ஆழ்கடல் மீன்களின் குகை கண்காட்சிைய காதர்பாட்சா முத்துராமலிங்கம் எம்.எல்.ஏ. திறந்து வைக்கிறார்.
    • இதற்கான ஏற்பாடுகளை பொருட்காட்சி அமைப்பா ளர்கள் பாபு உள்ளிட்டோர் செய்து வருகின்றனர்.

    கீழக்கரை

    ராமநாதபுரம் மாவட்டம் ராஜா மேல்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானத்தில் மிகப்பிரமாண்டமான ஆழ்கடல் மீன்களின் குகை கண்காட்சி மற்றும் வீட்டு உபயோக பொருட்காட்சி நாளை (7-ந்தேதி) தொடங்கு கிறது.

    இக்கண்காட்சியினை ராமநாதபுரம் தி.மு.க. மாவட்ட செயலாளர் காதர்பாட்சா முத்துராம லிங்கம் எம்.எல்.ஏ. திறந்து வைக்கிறார். பொழுது போக்கு பூங்கா, ஷாப்பிங் திருவிழா, நுகர்வோர் ஸ்டால், உணவு திருவிழா உள்ளிட்ட ஏராளமான அரங்குகளுடன் பெரிய வர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவரும் கண்டு களிக்கும் வகையில் சிறப்பாக அமைக்கப்பட்டு உள்ளது.

    இந்த பொருட்காட்சி தினமும் மாலை 4 மணிக்கு தொடங்கி இரவு 10 மணி வரை நடைபெறுகிறது.இப்பொருட்காட்சி திறப்பு விழா ராமநாதபுரம் நகர சபை தலைவர் ஆர்.கே. கார்மேகம், துணைத் தலை வர் டி.ஆர்.பிரவீன் தங்கம், ராஜா நாகேந்திர சேதுபதி ஆகியோர் முன்னிலையில் நடைபெற உள்ளது.

    இதற்கான ஏற்பாடுகளை பொருட்காட்சி அமைப்பா ளர்கள் பாபு உள்ளிட்டோர் செய்து வருகின்றனர்.

    • தத்ரூபமாக வரைந்திருந்த மனிதர்களும் ஆடுகளின் நிகழ்வுகளும் கண்காட்சி.
    • ஏராளமான மாணவர்கள் கலந்து கொண்டு பிடித்தமான ஓவியங்களை வாங்கி சென்றனர்.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் மாவட்ட மைய நூலகத்தில் ஓவிய கண்காட்சி நடைபெற்றது. கலை பண்பாட்டு துறை மற்றும் தமிழ்நாடு நுண் கலைக்குழு சார்பில் நடத்தப்பட்ட இந்த நிகழ்ச்சியில் படைப்பாளர் திருநாவுக்கரசு தத்ரூபமாக வரைந்திருந்த மனிதர்களும் ஆடுகளின் நிகழ்வுகளும் பற்றிய ஓவியங்கள் கண்காட்சி மற்றும் விற்பனைக்காக வைக்கப்ப ட்டிருந்தது.

    இந்த ஓவிய கண்காட்சியை தஞ்சை மாவட்ட நூலக அலுவலர் முத்து, ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் முனைவர் அய்யாறு புகழேந்தி ஆகியோர் திறந்து வைத்து குத்து விளக்கேற்றி பார்வையிட்டனர்.

    இந்த ஓவிய கண்காட்சியை ஏராள மான மாணவ- மாணவிகள், பொதுமக்கள் பார்த்து ரசித்தனர் . அவர்களுக்கு பிடித்தமான ஓவியங்களை வாங்கி சென்றனர்.

    • திருப்பரங்குன்றத்தில் பா.ஜ.க. அரசின் சாதனை விளக்க கண்காட்சியை தேசிய இணை ஒருங்கிணைப்பாளர் பார்வையிட்டார்.
    • சசிகுமார் முன்னிலை வகித்தார்.

    திருப்பரங்குன்றம்

    மதுரை திருப்பரங்குன்றத்தில் பா.ஜ.க. சார்பில் சாதனை விளக்க கண்காட்சி நடந்தது. மேற்கு மாவட்ட விவசாய அணி தலைவர் ரத்தினசாமி தலைமை தாங்கினார். மேற்கு மாவட்ட பா.ஜ.க. தலைவர் சசிகுமார் முன்னிலை வகித்தார். தேசிய இணை ஒருங்கிணைப்பாளர் சுதாகர் ரெட்டி கண்காட்சியை தொடங்கி வைத்து பார்வையிட்டார்.

    இந்த கண்காட்சியில் மத்திய அரசின் திட்டங்கள், மகளிர் சுய உதவி குழுவினருக்கு வழங்கும் கடனுதவி திட்டங்கள், ஏழை மக்களுக்கு வீடு கட்டும் திட்டம், பிரதமரின் மருத்துவ காப்பீடு திட்டம் போன்ற மத்திய அரசு திட்டங்கள் குறித்த விவரங்கள் இடம் பெற்றிருந்தன.

    நிகழ்ச்சியில் மத்திய அரசு நலத்திட்ட பிரிவு மாநில செயலாளர் சதீஷ் ஆசாத், மாநில திட்ட பொறுப்பாளர் ராஜசேகர், மாநில பொருளாதார பிரிவு செயலாளர் டாக்டர் தேவ்ஜில், மகளிரணி பொதுச்செயலாளர் அபிநயா, விவசாய அணி மாவட்ட பொதுச்செயலாளர் சுரேஷ், மாவட்ட செயலாளர்கள் பெருமாள், ரமேஷ் கண்ணன், விவசாய அணி திருங்கலம் தெற்கு மண்டல தலைவர் பாலசந்தர், மாவட்ட ஊடகப்பிரிவு தலைவர் காளிதாஸ், அவனியாபுரம் பாலதண்டாயுதபாணி ஆகியோர் கலந்துகொண்டனர்.

    • கலை நிகழ்ச்சிகளில் 15 மாநிலங்களை சேர்ந்த 400 கலைஞர்கள் கலந்து கொண்டனர்.
    • கைவினை கலைஞர்களின் பொருட்கள் கண்காட்சியும், உணவு திருவிழாவும் 5 நாட்கள் நடைபெறுகிறது.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் தென்னக பண்பாட்டு மையத்தில் இந்த ஆண்டு கோடை விழா நேற்று மாலை தொடங்கியது.

    இந்த விழா வருகிற 25-ந்தேதி வரை நடைபெறுகிறது.

    இதன் தொடக்க விழாவில் தென்னக பண்பாட்டு மைய இயக்குனர் கோபாலகிருஷ்ணன் வரவேற்றார். டி.கே.ஜி. நீலமேகம் எம்.எல்.ஏ., மேயர் சண்.ராமநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கோடைவிழாவை தஞ்சை மாவட்ட கலெக்டர் தீபக்ஜேக்கப், முரசு கொட்டி தொடங்கி வைத்தார். முன்னதாக விழாவில் பங்கேற்க வந்த சிறப்பு விருந்தினர்களை அனைத்து மாநில கலைஞர்களும் வரிசையாக நின்று தங்கள் பாரம்பரிய நடனங்களை ஆடி வரவேற்றனர்.

    பின்னர் கலை விழா தொடங்கியதும் குஜராத் மாநில கலைஞர்களின் நடன நிகழ்ச்சி நடைபெற்றது. அதன் பின்னர் திரைப்பட பாடகி சின்ன பொண்ணுவின் நாட்டுப்புற பாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. அதைத்தொடர்ந்து பல்வேறு மாநில கலைஞர்களின் நடன நிகழ்ச்சி நடைபெற்றது. இதனை ஏராளமான பொதுமக்கள் கண்டுகளித்தனர்.

    இந்த கலைவிழாவில் இந்தியாவின் 15 மாநிலங்களை சேர்ந்த 400 கலைஞர்கள் கலந்துகொண்டு கலை நிகழ்ச்சிகளை வழங்கினர். மேலும் கோடை விழாவையொட்டி பழங்குடியினர் கூட்டுறவு விற்பனை வளர்ச்சி கூட்டமைப்பு சார்பில் கைவினை கலைஞர்களின் பொருட்கள் கண்காட்சியும், உணவு திருவிழாவும் 5 நாட்கள் நடைபெறுகிறது. இந்த கலை விழா தினமும் மாலை 6.30 மணி முதல் இரவு 9 மணி வரை நடைபெறுகிறது. முடிவில் நிர்வாக அலுவலர் சீனிவாசன் அய்யர் நன்றி கூறினார்.

    ×