search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தொல்பொருட்கள் கண்காட்சி
    X

    தொல்பொருட்கள் கண்காட்சி

    • ராமநாதபுரத்தில் தொல்பொருட்கள் கண்காட்சி நடந்தது.
    • இந்த கண்காட்சியில் பழைய, புதிய, நுண் கற்காலக் கருவிகள், கருப்பு சிவப்பு நிற பானை ஓடுகள், எழுத்தாணிகள் ஆகியவை காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்டம் நயினார்கோவில் வட்டாரத்தில் உள்ள நடுநிலைப் பள்ளிகளில் தொன்மை பாதுகாப்பு மன்றம் துவக்க விழா மற்றும் தொல்பொருட்கள் கண்காட்சி பாண்டியூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் நயினார்கோயில் வட்டாரக் கல்வி அலுவலர் மு.வாசுகி தலைமையில் நடந்தது.

    மற்றொரு வட்டாரக் கல்வி அலுவலர் பாஸ்கரன் முன்னிலை வகித்தார். பாண்டியூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் உமாதேவி அனைவரையும் வரவேற்றார்.

    இதில் தொன்மை பாதுகாப்பு மன்றம் மூலம் மாணவர்கள் தங்கள் பகுதியில் அழியும் நிலையில் உள்ள தொல்லியல் தடயங்களைக் கண்டறிந்து பாதுகாக்க உதவ வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.

    சிறப்பு விருந்தினராக ராமநாதபுரம் மாவட்ட தொன்மைப்0 பாதுகாப்பு மன்றங்களின் ஒருங்கிணைப்பா ளரும் தொல்லியல் ஆய்வாளரு மான ராஜகுரு கலந்து கொண்டு பேசினார். தேர்த்தங்கால் நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் நாகலெட்சுமி நன்றி கூறினார்.

    நிகழ்ச்சியை பார்வை யிட்டு ஆய்வு செய்த ராமநாதபுரம் மாவட்டக் கல்வி அலுவலர் (தொடக்க கல்வி) பிரின்ஸ் ஆரோக்கிய ராஜ் அனைத்துப் பள்ளி களிலும் இம்மன்றத்தை தொடர்ந்து செயல் படுத்திடவேண்டும் என ஆசிரியர்களைக் கேட்டுக் கொண்டார்.

    பின்னர் நடந்த தொல்பொருட்கள் கண்காட்சியில் பழைய, புதிய, நுண் கற்காலக் கருவிகள், கருப்பு சிவப்பு நிற பானை ஓடுகள், ரோமானிய, சீன நாட்டுப் பானை ஓடுகள், இரும்புத் தாதுக்கள், இரும்புக்கழிவுகள், வட்டச் சில்லுகள், கூரை ஓடுகள், மான் கொம்புகள், பானைக் குறியீடுகள், புதைபடி மங்கள், கல்வெட்டுகளின் மைப்படிகள், ஓலைச் சுவடிகள், எழுத்தாணிகள் ஆகியவை காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. நயினார்கோயில் வட்டார தொன்மைப் பாதுகாப்பு மன்றங்களின் பொறுப்பாசி ரியர்கள், பள்ளி மாணவ, மாணவிகள் அறிந்து கொண்டனர்.

    Next Story
    ×