search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஐக்கிய ஜனதா தளம்"

    • ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் பீகார் முதல்வராக நிதிஷ் குமார் உள்ளார்.
    • இந்தியா கூட்டணி உருவாக முக்கிய காரணமாக இருந்தவர் நிதிஷ் குமார்.

    பீகார் மாநில முதல்வராக இருக்கும் நிதிஷ் குமார், ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் தலைவர் பதவியை ஏற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    தற்போது ராஜிவ் ரஞ்சன் சிங் என்ற லாலன் சிங் ஐக்கிய ஜனதா தள கட்சியின் தலைவராக உள்ளார். வருகிற 29-ந்தேதி இந்த கட்சியின் செயற்குழு கூட்டம் நடைபெற இருக்கிறது. அப்போது இந்த முடிவு எடுக்கப்படலாம் எனத் தெரிகிறது. கட்சியின் பெரும்பாலான மூத்த தலைவர்கள் இதே கருத்தை வலியுறுத்தியுள்ளனர்.

    அதேவேளையில் வேறு ஒருவர் தலைவராக நியமிக்கபடலாம் எனவும் தகவல் தெரிவிக்கின்றன. ஆனால், அது கட்சியில் உள்ள தலைவர்களிடையே பிளவை ஏற்படுத்தும் எனவும் கருதுகின்றனர்.

    லாலன் சிங்- பீகார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவ் இடையிலான நட்பு தற்போது சிறப்பான முறையில் வளர்ந்து வருவது நிதிஷ் குமாரை அப்செட்டில் ஆழ்த்தியதாக தெரிகிறது.

    சமீபத்தில் நடைபெற்ற இந்தியா கூட்டணியில் ஜனவரி மாதத்திற்குள் பாராளுமன்ற தேர்தலுக்கான தொகுதியை பங்கீட்டை முடிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

    இந்தியா கூட்டணி நிதிஷ் குமார் அந்த கூட்டணியின் ஒருங்கிணைப்பாளர் என அறிவிக்க தயக்கம் காட்டுவதாகவும், அதனால் அவர் டெல்லியில் நடைபெற்ற கூட்டத்தில் இருந்து பாதிலேயே வெளியேறியதாகவும் தகவல் வெளியானது. இதை ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் பொதுச் செயலாளர் மறுத்துள்ளார்.

    • இந்தியா கூட்டணியின் நான்காவது சந்திப்பு புது டெல்லியில் நடைபெற்றது
    • கடந்த முறை டீ, பிஸ்கட், சமோசா வழங்கினர் என்றார் பின்டு

    அடுத்த வருடம் நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலில் தற்போதைய ஆளும் பா.ஜ.க.வை எதிர்த்து கடந்த ஜூலை மாதம் காங்கிரஸ் உள்ளிட்ட பல மாநிலங்களின் முக்கிய கட்சிகளை உள்ளடக்கிய 25 கட்சிகளுக்கும் மேற்பட்டவர்கள் இணைந்து ஒரு கூட்டணியை உருவாக்கினர்.

    இக்கூட்டணியின் முதல் சந்திப்பு பாட்னாவிலும், இரண்டாவது சந்திப்பு பெங்களூரூவிலும், 3-வது சந்திப்பு மும்பையிலும் நடந்தது.

    நான்காவது சந்திப்பு இரு தினங்களுக்கு முன் புது டெல்லியில் நடைபெற்றது.

    இச்சந்திப்பில், தேர்தலில் கூட்டணி கட்சிகளின் இட பங்கீடு, பேரணிகள், பிரதமர் வேட்பாளர் உள்ளிட்ட பல முக்கிய விஷயங்கள் விவாதிப்பதாக இருந்தது.

    பிரதமர் வேட்பாளர் பெயரில் இந்த சந்திப்பில் எந்த ஒருமித்த கருத்தும் எட்டப்படவில்லை.

    இந்நிலையில், இச்சந்திப்பில் பங்கேற்ற பீகார் மாநில ஐக்கிய ஜனதா தள எம்.பி. சுனில் குமார் பின்டு இந்த கூட்டம் குறித்து தெரிவித்ததாவது:

    பல பெரிய தலைவர்கள் பங்கேற்றனர். சில தினங்களுக்கு முன் காங்கிரஸ் நிதி நெருக்கடியில் இருப்பதனால் மக்களிடம் நன்கொடை கேட்டது.

    கடந்த சில சந்திப்புகளில் டீ, பிஸ்கட், சமோசா அளித்து உபசரித்தனர்.

    ஆனால், இந்த முறை சமோசா இல்லை; டீ, பிஸ்கட் மட்டும்தான்.

    இடப்பங்கீடு, பிரதமர் வேட்பாளர் என எந்த விஷயத்திலும் முடிவும் எட்டப்படாமல்தான் சந்திப்பு நிறைவடைந்தது.

    இவ்வாறு பின்டு கூறினார்.

    • பாகிஸ்தானை விட சட்டம் ஒழுங்கு பீகாரில் மோசமாக இருப்பதாக அவர்கள் எப்படி சொல்ல முடியும்?
    • பல்வேறு காரணிகளில் இந்தியா பாகிஸ்தானை விட பின்னால் உள்ளது

    பா.ஜனதா தலைவர் சஞ்சய் ஜெய்ஸ்வால், ''பீகாரில் சட்டம்- ஒழுங்கு பாகிஸ்தானை விட மோசமாகியுள்ளது'' எனக் குறிப்பிட்டிருந்தார்.

    இதற்கு நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் கட்சி கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது. இதுகுறித்து அந்த கட்சியின் தலைமை செய்தி தொடர்பாளர் நீரஜ் குமார் கூறுகையில் ''பா.ஜனதா தலைவர் பீகாரின் சட்டம்- ஒழுங்கு சூழ்நிலையை எப்படி பாகிஸ்தான் போன்ற நாட்டுடன் ஒப்பிட முடியும்?. பாகிஸ்தானை விட சட்டம் ஒழுங்கு பீகாரில் மோசமாக இருப்பதாக அவர்கள் எப்படி சொல்ல முடியும்?. அவர்கள் பாகிஸ்தானின் ஏஜென்டா?. பல்வேறு காரணிகளில் இந்தியா பாகிஸ்தானை விட பின்னால் உள்ளது என்று நான் சொல்லுவேன்.

    ஜனநாயக பூமியான பீகாரை, ஜனநாயகம் இல்லாத பாகிஸ்தானுடன் ஒப்பிட்டு, அவமதித்து விட்டார்கள். இந்தியாவின் வளர்ச்சி குறித்து இந்திய தரவரிசை அமைப்புகள் பாராட்டியதை பிரதமர் மோடி சுதந்திர தின விழாவின் போது சுட்டிக்காட்டியிருந்தார். ஆனால், பா.ஜனதா தலைவர்களுக்கு நான் கண்ணாடியை காட்டுகிறேன்.

    பத்திரிகை சுதந்திரம், உலக மகிழ்ச்சி குறியீடு, உலகளாவிய பசி குறியீடு, உலகளாவிய போட்டித்திறன் குறியீடு போன்றவற்றில் பாகிஸ்தானை விட இந்தியா மோசமான நிலையில் உள்ளது. மேலும், நீங்கள் சட்டம்- ஒழுங்கு குறித்து பேசுகிறீர்கள். 2021 கால்அப் (Gallup) குறியீட்டின்படி, பாகிஸ்தானை விட இந்தியாவின் நிலை மோசமாக இருந்தது'' என்றார்.

    • பா.ஜனதா, ஜனதா தளம் (எஸ்) கட்சிகளை நம்ப வேண்டாம்.
    • தயவு செய்து நீங்கள் எங்களை நம்பி வாக்களிக்க வேண்டும்.

    மண்டியா :

    மண்டியாவில் நடைபெற்ற காங்கிரஸ் கட்சியின் மக்கள் குரல் பொதுக்கூட்டத்தில் எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா பேசியதாவது:-

    கடந்த 2018-ம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலின்போது, மண்டியாவில் உள்ள 7 தொகுதிகளில் ஒன்றில் கூட காங்கிரசை வெற்றி பெற வைக்கவில்லை. அனைத்து இடங்களிலும் ஜனதா தளம் (எஸ்) கட்சியையே வெற்றி பெற வைத்தீர்கள். சூரியன் கிழக்கில் உதிப்பது எவ்வளவு உண்மையோ அதே போல் கர்நாடகத்தில் காங்கிரஸ் வெற்றி பெற்று ஆட்சிக்கு வருவதும் உண்மையே. மக்களின் மனநிலையை அறிந்து நான் இதை கூறுகிறேன்.

    காங்கிரஸ் ஆட்சி அமைக்கும்போது, அதில் உங்களின் பங்கும் இருக்க வேண்டும் இல்லையா?. அதனால் இந்த மாவட்டத்தில் இருந்து குறைந்தது இடங்களில் ஆவது காங்கிரசை வெற்றி பெற வையுங்கள். மண்டியா விவசாயிகளுடன் நாங்கள் உள்ளோம். உங்களுக்காக நாங்கள் பணியாற்றுவோம். தயவு செய்து நீங்கள் எங்களை நம்பி வாக்களிக்க வேண்டும்.

    பா.ஜனதா, ஜனதா தளம் (எஸ்) கட்சிகளை நம்ப வேண்டாம். இந்த மாவட்டத்தை பொறுத்தவரையில் காங்கிரஸ் மற்றும் ஜனதா தளம் (எஸ்) கட்சிக்கு இடையே தான் போட்டி. 123 தொகுதிகளில் வெற்றி பெறுவோம் என்று ஜனதா தளம் (எஸ்) சொல்கிறது. நான் அந்த கட்சியில் இருந்தபேது அந்த எண்ணிக்கையை தொட முடியவில்லை. 59 தொகுதிகளில் தான் வெற்றி பெற்றோம். அதனால் அந்த கட்சி ஆட்சிக்கு வராது. அதற்கான வாய்ப்பும் இல்லை.

    இந்த முறை அந்த கட்சி அதிகபட்சமாக 20 தொகுதிகளில் வெற்றி பெறலாம். இதுவே அதிகம். இதை வைத்து கொண்டு அக்கட்சி ஆட்சிக்கு வர முடியுமா?. மதவாத கட்சி ஆட்சிக்கு வரக்கூடாது என்பதற்காகவே ஜனதா தளம் (எஸ்) கட்சிக்கு நாங்கள் கடந்த முறை வாய்ப்பு அளித்தோம். குமாரசாமியை முதல்-மந்திரி ஆக்கினோம். ஆனால் எம்.எல்.ஏ.க்களின் நம்பிக்கையை தக்க வைத்து கொள்ளாமல், அவர் வெஸ்ட் என்ட் ஓட்டலில் இருந்தபடி ஆட்சி செய்தார். அதனால் 17 எம்.எல்.ஏ.க்கள் பா.ஜனதாவுக்கு சென்றனர். கூட்டணி ஆட்சி கவிழ்ந்தது.

    ஆனால் கூட்டணி ஆட்சி கவிழ்ந்ததற்கு நான் தான் காரணம் என்று குமாரசாமி அடிக்கடி சொல்கிறார். அப்படி என்றால் ஜனதா தளம் (எஸ்) கட்சியை சேர்ந்த 3 எம்.எல்.ஏ.க்கள் விலகினார்களே, அதற்கு யார் பொறுப்பு?. நாங்கள் இலவச மின்சாரம், பெண்களுக்கு ரூ.2,000 வழங்குவதாக அறிவிப்புகளை வெளியிட்டுள்ளோம். இதை கண்டு பா.ஜனதா மற்றும் ஜனதா தளம் (எஸ்) கட்சிகள் பயந்துபோய் உள்ளன. காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் மண்டியா சர்க்கரை ஆலையை நவீனமயம் ஆக்குவோம். அதை அரசே தொடர்ந்து நடத்த நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு சித்தராமையா பேசினார்.

    கடந்த மக்களவை தேர்தலில் மோடிக்காக வியூகங்களை வகுத்த பிரசாந்த் கிஷோர், பீகார் முதல்வர் நிதிஷ் குமார் தலைமையில் இன்று ஐக்கிய ஜனதா தளம் கட்சியில் இணைந்துள்ளார். #PrashantKishor #NitishKumar #JDU
    பாட்னா:

    பிரபல தேர்தல் வியூக நிபுணரான பிரசாந்த் கிஷோர், அரசியல் கட்சிகள் தேர்தல்களில் வெற்றி பெறும் வகையில் பல திட்டங்களை வகுத்து கொடுப்பதுடன், பிரசாரத்தை ஒருங்கிணைப்பதில் சிறந்தவர் என்ற பெயரை பெற்றவர். கடந்த 2012-ம் ஆண்டு குஜராத் சட்டசபை தேர்தலின் போதும், 2014 மக்களவை தேர்தலில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் பா.ஜ.க. ஆட்சியை பிடிக்க கிஷோர் பணியாற்றினார்.

    பின்னர் பீகார் சட்டசபை தேர்தலில் நிதிஷ் குமார் தலைமையில் ஐக்கிய ஜனதா தளம் கூட்டணிக்காக பணியாற்றி வெற்றியை தேடிக் கொடுத்தார். ஆனால், உ.பி.,யில் காங்கிரஸ் சார்பாக களமிறங்கிய அவரது வியூகம் வெற்றி பெறவில்லை. இதனால், சில நாட்கள் அவர் அமைதியாக இருந்தார். 

    இந்நிலையில், இன்று பாட்னாவில் பீகார் முதல்வரும், ஐக்கிய ஜனதா தள கட்சி தலைவருமான நிதிஷ்குமார் முன்னிலையில், அக்கட்சியில் பிரசாந்த் கிஷோர் இணைந்தார். 
    பாஜக தலைமையிலான ஜனநாயக கூட்டணியில் மற்றும் பீகாரில் கூட்டணி ஆட்சியில் இருக்கும் ஐக்கிய ஜனதா தளம் கட்சி, ஜார்கண்ட் மாநில பாஜக அரசை கண்டித்து போராட்டம் தொடங்க உள்ளது. #NDA #BJP #JDU
    ராஞ்சி:

    பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் கட்சி அங்கம் வகிக்கிறது. மேலும், பீகாரில் இந்த இரண்டு கட்சிகளும் இணைந்து கூட்டணி ஆட்சி அமைத்துள்ளன. இந்நிலையில், ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் ஜார்கண்ட் மாநில பிரிவு அம்மாநில பாஜக அரசுக்கு எதிராக கொடி பிடித்துள்ளது.

    பீகாரை விட ஜார்காண்ட் அதிக கனிம வளங்களை கொண்டது. ஆனாலும், மக்களின் அடிப்படை தேவைகள் பூர்த்தி செய்யப்படவில்லை. இதனை கண்டித்து மாநிலம் முழுவதும் வரும் 25-ம் தேதி போராட்டம் தொடங்க உள்ளோம். பீகாரில் மட்டுமே எங்கள் கட்சி பாஜகவுடன் கூட்டணி, ஜார்கண்டில் இல்லை. வரும் பாராளுமன்ற தேர்தலில் தனித்து போட்டியிடுவோம் என அம்மாநில ஐக்கிய ஜனதா தளம் கட்சி பொறுப்பாளர் ஷரவன் குமார் தெரிவித்துள்ளார்.
    ×