search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Prashant Kishor"

    • கடந்த 10 ஆண்டுகளாக ராகுல் காந்தியால் காங்கிரஸ் கட்சிக்கு வெற்றியை தேடித்தர முடியவில்லை.
    • ராகுல் காந்தி தனக்கு எல்லாம் தெரியும் என்று நினைக்கிறார் என்று நான் நினைக்கிறேன்.

    புதுடெல்லி:

    பீகார் மாநிலத்தை சேர்ந்த பிரபல தேர்தல் வியூக நிபுணரான பிரசாந்த் கிஷோர் செய்தி நிறுவனம் ஒன்றிற்கு அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது:-

    கடந்த 10 ஆண்டுகளாக ராகுல் காந்தியால் காங்கிரஸ் கட்சிக்கு வெற்றியை தேடித்தர முடியவில்லை. ஆனாலும் தற்போதும் அவர் தான் காங்கிரஸ் கட்சியை வழிநடத்தி வருகிறார். மற்றவர்கள் கட்சியை வழிநடத்த அவர் அனுமதிக்கவில்லை.

    நடைமுறையில் என்னென்ன வழிகள் எல்லாம் இருக்கிறதோ அத்தனையையும் ராகுல் காந்தி முயற்சி செய்து பார்த்து வருகிறார். ஆனாலும் கடந்த 10 ஆண்டுகளில் அவரால் கட்சியை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல முடியவில்லை. மேலும் வேறு யாரையும் வழிநடத்தவும் அவர் விடவில்லை. என்னை பொறுத்தவரை இது ஜனநாயக விரோதம்.

    கடந்த 10 வருடமாக இந்த வேலையை செய்து வெற்றி பெறாமல் இருக்கும் போது அவர் ஓய்வெடுத்து எடுத்துக் கொள்வதில் எந்த தவறும் இல்லை. 5 ஆண்டுகள் வேறு யாரிடமாவது பொறுப்பை ஒப்படைக்கலாம். இதனால் கட்சிக்கு எந்த பாதிப்பும் ஏற்பட்டு விடாது. ராஜீவ் காந்தி இறந்த போது சோனியா காந்தி இதை செய்தார்.

    ராகுல் காந்தி தனக்கு எல்லாம் தெரியும் என்று நினைக்கிறார் என்று நான் நினைக்கிறேன். உங்களுக்கு உதவி தேவை என்பதை உணரவில்லை. என்றால் யாராலும் உங்களுக்கு உதவ முடியாது. தான் நினைப்பதை செய்யக்கூடிய ஒருவர் நமக்கு தேவை என்று அவர் நம்புகிறார். அது சாத்தியமில்லை.

    2019-ம் ஆண்டு காங்கிரஸ் படுதோல்வி அடைந்த போது கட்சி தலைவர் பதவியில் இருந்து விலகுவதாகவும், கட்சியை வேறு யாராவது வழி நடத்தட்டும் என்றும் அவர் எழுதினார். ஆனால் அவர் சொன்னதுக்கு மாறாக நடந்து வருகிறார். தலைவர் பதவியை ராஜினாமா செய்தாலும் முக்கிய முடிவுகள் எடுப்பதில் ராகுல் தான் இறுதியானவர்.


    ஒரு தொகுதி தொடர்பான முடிவுகளுக்கு கூட ராகுல் காந்தியின் ஒப்புதல் தேவை என்பதை பல தலைவர்கள் தனிப்பட்ட முறையில் ஒப்புக்கொள்வார்கள்.

    எந்த ஒரு தனிநபரையும் விட காங்கிரசும், அதன் ஆதரவாளர்களும் பெரியவர்கள் என்பதால் கட்சிக்கு வழிவிடுவதில் ராகுல் காந்தி பிடிவாதமாக இருக்கக் கூடாது. காங்கிரசில் ஒரு கட்சியாக மட்டும் பார்க்க கூடாது. நாட்டின் அது பிரதிநிதித்துவப்படுத்தும் இடத்தை ஒரு போதும் முடிவுக்கு கொண்டு வந்து விட முடியாது. அது சாத்திய மில்லை.

    காங்கிரஸ் அதன் வரலாற்றில் பல முறை பரிணாம வளர்ச்சி அடைந்து, மறு பிறவி எடுத்துள்ளது. தேர்தல் ஆணையம், நீதித்துறை மற்றும் ஊடகங்கள் போன்ற அமைப்புகள் சமரசம் செய்து கொண்டதால் தனது கட்சி தேர்தலில் பின்னடைவை சந்தித்து வருகிறது என்று ராகுல் காந்தி கூறுவது உண்மையல்ல.

    2014-ம் ஆண்டு தேர்தலில் பா.ஜ.க.வுக்கு எந்த ஒரு அதிகாரமும் இல்லை. ஆனால் அப்போதே 206 இடங்களில் இருந்த காங்கிரஸ் வெறும் 44 இடங்களில் மட்டுமே வெற்றி பெற முடிந்தது. காங்கிரஸ் கட்சியின் கட்டமைப்பிலேயே குறைபாடுகள் இருக்கிறது. அதை சரிசெய்வது வெற்றிக்கு அவசியம்.

    நீங்கள் கடந்த 1984-ம் ஆண்டு முதல் தேர்தல்களை பார்த்தீர்கள் என்றால் அதில் வாக்கு சதவிகிதம் மற்றும் மக்களவை, சட்டமன்ற தொகுதிகளில் தொடர்ந்து சரிவையே சந்தித்து வருகிறது. காங்கிரசில் இப்போது சிக்கல் என்பது தனிப்பட்ட நபர்களால் வருவது அல்ல. அது கட்சியின் கட்டமைப்பில் இருக்கும் சிக்கல்.

    மீண்டும் மீண்டும் தோல்வி அடைந்தாலும் கட்சியை நான்தான் அதில் இருந்து மீட்பேன் என்று ராகுல் காந்தி பிடிவாதமாக இருக்கக் கூடாது. வருகிற பாராளுமன்ற தேர்தலில் காங்கிரசுக்கு எதிர்பார்த்த வெற்றி கிடைக்காவிட்டால் ராகுல் காந்தி ஒதுங்கி வழிவிட வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தேர்தல் வியூக அமைப்பாளர்கள் பல நூறு கோடி கட்டணம் பெறுகின்றனர்
    • ராகுல், 10 வருடங்களில் பல தோல்விகளுக்கு பிறகும் சரியான பாதையில் செல்கிறார்

    இவ்வருடம் ஏப்ரல்-மே மாதங்களில் பாராளுமன்றத்தின் 543 இடங்களுக்கு பொதுத்தேர்தல் நடைபெறவுள்ளது.

    2014 பொதுத்தேர்தலில் தொடங்கி அரசியல் கட்சிகளுக்கு தேர்தலில் வெல்வதற்கான வியூகங்களை அமைத்து தரும் நிபுணர்கள் முன்னிலை வகிக்க ஆரம்பித்தனர். அவர்கள் வகுத்து தரும் திட்டங்களுக்கு ஏற்ப கட்சிகள் தேர்தல் நேரங்களில் செயல்படத் தொடங்கின.

    பல நூறு கோடிகளை கட்டணமாக வசூலித்த இத்தகைய அரசியல் வியூக அமைப்பாளர்களின் திட்டங்கள், சில நேரங்களில் சில கட்சிகளுக்கு வெற்றியை கொடுத்தது.

    தேர்தல் வியூக நிபுணர்களில் முதன்மையானவராக கருதப்படுபவர், பீகார் மாநில ரோஹ்தாஸ் மாவட்டத்தை சேர்ந்த "பிகே" என அழைக்கப்படும் பிரசாந்த் கிஷோர் (Prashant Kishor).


    தற்போதைய அரசியல் நிலவரம் குறித்து பிகே தெரிவித்ததாவது:

    புலனாய்வு அமைப்புகளினால் விசாரிக்கப்பட்டு வரும் ஒரு அரசியல் பிரமுகர், பா.ஜ.க.வில் இணைந்து விட்டால், அவர் மீது நடவடிக்கைகள் நின்று விடுகின்றன. இது பிரதமர் நரேந்திர மோடி கூறி வரும் நிலைப்பாட்டிற்கு நேர் எதிரானது.

    பா.ஜ.க. பெரிதளவு மோடியை சார்ந்தே இருப்பது அக்கட்சியின் எதிர்காலத்திற்கு ஆபத்தாக முடியலாம்.

    அடுத்து வரும் தேர்தல்களில் 90 சதவீதம் பா.ஜ.க. தோற்றால் மோடி மக்களை சந்திக்க தயங்குவார்.

    ஆனால், ராகுல் காந்தி கடந்த 10 வருடங்களில் பல தோல்விகளுக்கு பிறகும், நேர்மறையாக, தான் செல்ல நினைக்கும் பாதையிலேயே சரியாக செல்கிறார்.

    ராகுலுக்கு மன உறுதி அதிகம்.

    ஆனால், தேர்தலுக்கு சில மாதங்களே உள்ள நிலையில் அவர் பாத யாத்திரை செல்வது சரியான முடிவு அல்ல. போர் நடக்கும் போது தளபதி, தலைமையகத்தில் இருந்து தனது படையினருக்கு வழிகாட்ட வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • சந்திரபாபு நாயுடு மற்றும் பிரசாந்த் கிஷோர் இருவரும் 3 மணி நேரம் ஆலோசனை நடத்தினர்.
    • ஆந்திர அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    திருப்பதி:

    அரசியல் ஆலோசகரான பிரசாந்த் கிஷோர் கடந்த ஆந்திர சட்டப் பேரவை தேர்தலில் ஜெகன்மோகன் ரெட்டிக்கு தேர்தல் வியூகம் வகுத்தார். இதில் ஜெகன்மோகன் ரெட்டி மாபெரும் வெற்றி பெற்று முதல் மந்திரியானார்.

    இந்த நிலையில் இந்த முறையும் பிரசாந்த் கிஷோர் தான் ஜெகன்மோகன் ரெட்டிக்கு தேர்தல் வியூகத்தை வகுத்துக் கொடுப்பார் என எதிர்பார்த்தனர். ஆனால் யாருமே எதிர்பாராத விதத்தில் விஜயவாடா விமான நிலையத்தில் இருந்து பிரசாந்த் கிஷோர் மற்றும் சந்திரபாபு நாயுடுவின் மகன் லோகேஷ் இருவரும் ஒன்றாக வெளியே வந்தனர்.

    அதன் பிறகு இருவரும் ஒரே காரில் சந்திரபாபு நாயுடுவின் வீட்டிற்கு சென்றனர். அங்கு சந்திரபாபு நாயுடு மற்றும் பிரசாந்த் கிஷோர் இருவரும் 3 மணி நேரம் ஆலோசனை நடத்தினர்.

    கடந்த முறை ஜெகன்மோகன் ரெட்டிக்கு வெற்றி பாதை அமைத்து கொடுத்த பிரசாந்த் கிஷோர் இந்த முறை திடீரென தேர்தலுக்கு முன்பாக சந்திரபாபு நாயுடுவை சந்தித்தது ஆந்திர அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இதுகுறித்து பிரசாந்த் கிஷோர் கூறுகையில்:-

    சந்திரபாபு நாயுடு ஒரு மூத்த தலைவர். அவர் என்னை சந்திக்க வேண்டும் என விரும்பினார். அதன்படி அவரை சந்தித்தேன்.

    இது ஒரு மரியாதை நிமித்தமான சந்திப்பு மட்டுமே. வேறு எதுவும் இல்லை என்றார்.

    • பா.ஜ.க.வினர் இன்றைக்கு ஆட்சி அதிகாரத்தில் உள்ளனர்.
    • நான் சட்ட நிபுணர் அல்ல.

    புதுடெல்லி :

    ராகுல் காந்திக்கு அவதூறு வழக்கில் 2 ஆண்டு சிறைத்தண்டனை வழங்கி, எம்.பி. பதவி பறிக்கப்பட்ட விவகாரத்தில் அரசியல் கட்சித்தலைவர்கள் தொடர்ந்து கருத்து கூறி வருகின்றனர்.

    இந்நிலையில் பிரசாந்த் கிஷோர் (தேர்தல் வியூக வல்லுனர்) ராகுல் காந்திக்கு விதிக்கப்பட்ட தண்டனை குறித்து கருத்து தெரிவித்துள்ளார். இதில் அவர்...

    நான் சட்ட நிபுணர் அல்ல. இருப்பினும் ராகுல் காந்திக்கு விதிக்கப்பட்டுள்ள தண்டனை அதிகப்படியானதாக தோன்றுகிறது. இது முதல் நிகழ்வும் அல்ல, கடைசி நிகழ்வாகவும் இருக்காது.

    சிறிய இதயம் படைத்த யாரும் மாமனிதர்களாக மாற மாட்டார்கள் என்ற அடல்பிகாரி வாஜ்பாயியின் பிரபலமான வரியை மத்திய அரசுக்கு நினைவுபடுத்த விரும்புகிறேன்.

    பா.ஜ.க.வினர் இன்றைக்கு ஆட்சி அதிகாரத்தில் உள்ளனர். அவர்கள் பெரிய மனதைக் காட்டி இருக்க வேண்டும். அவர்கள் இன்னும் சில நாட்கள் காத்திருந்து இருக்க வேண்டும். ராகுல் காந்தி மேல்முறையீடு செய்து, அங்கு நிவாரணம் கிடைக்காதபோது நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர் பீகாரில் பாத யாத்திரை நடத்தி வருகிறார்.
    • அப்போது பேசிய அவர், நிதிஷ்குமார் பா.ஜ.கவுடன் இன்னும் தொடர்பில் உள்ளார் என்றார்.

    பாட்னா:

    பீகாரில் பாத யாத்திரை நடத்தி வரும் பிரபல தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர் செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:

    பீகார் முதல் மந்திரியும், ஐக்கிய ஜனதா தள தலைவருமான நிதிஷ்குமார் பா.ஜ.க.வுடன் தொடர்பில் உள்ளார்.

    பா.ஜ.க.வுக்கு எதிராக நிதிஷ்குமார் தேசிய அளவில் கூட்டணி உருவாக்கி வருவதாக மக்கள் நினைத்து வருகின்றனர். ஆனால் அவர் பா.ஜ.க.வுடன் தொடர்பு வைத்திருப்பதை அறியும்போது அவர்கள் மிகுந்த அதிர்ச்சி அடைவார்கள். ஏனெனில் அவர் தனது கட்சி எம்.பி.யும், மாநிலங்களவை துணைத்தலைவருமான ஹரிவன்ஷ் மூலம் பா.ஜ.க.வுடன் தொடர்பில் உள்ளார்.

    இதற்காகவே அவரது மாநிலங்களவை பதவியை ராஜினாமா செய்யுமாறு நிதிஷ்குமார் கேட்கவில்லை.

    தேவை ஏற்படும்போதெல்லாம் மீண்டும் பா.ஜ.க.வுக்குச் சென்று அவரால் இணைந்து செயல்பட முடியும் என்பதை மக்கள் மனதில் கொள்ள வேண்டும். அப்படி கூட்டணி வைத்தால் ஆச்சரியம் இல்லை என தெரிவித்தார்.

    பிரசாந்த் கிஷோரின் இந்த குற்றச்சாட்டை ஐக்கிய ஜனதாதளம் மறுத்துள்ளது.

    • அரசியலில் நிதிஷ் குமார் தனிமைப்படுத்தப்பட்டு விட்டார்.
    • நிதிஷ் குமார் அர்த்தமற்று பேசி வருகிறார்.

    பாட்னா :

    பீகார் முதல்-மந்திரி நிதிஷ் குமாருக்கும், தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோருக்கும் இடையே நல்லுறவு நிலவிய காலம் என்று ஒன்று உண்டு. நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதாதளம் கட்சியின் தேசிய துணைத்தலைவர் என்ற நிலைக்கெல்லாம் பிரசாந்த் கிஷார் உயர்ந்தார்.

    ஆனால் அதன் பின்னர் 'ஒரே உறையில் இரு வாள்' பிரச்சினை வெடித்தது. இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் வளர்ந்தன. அதன் விளைவாக பிரசாந்த் கிஷோர் அந்தக் கட்சியில் இருந்து வெளியேறி விட்டார்.

    தற்போது பிரசாந்த் கிஷோர், நிதிஷ் குமார் அரசை விமர்சித்து வருகிறார்.

    இந்த நிலையில் சில தினங்களுக்கு முன்பு நிதிஷ்குமார், பிரசாந்த் கிஷோர் மீது ஒரு குற்றச்சாட்டை வைத்தார்.

    அதாவது அவர், "பிரசாந்த் கிஷோர் பா.ஜ.க.வுக்காக வேலை செய்து வருகிறார், ஒரு கால கட்டத்தில் ஐக்கிய ஜனதாதளம் கட்சியை காங்கிரசில் இணைத்து விடுமாறு எனக்கு அவர் ஆலோசனை வழங்கினார்" என்ற தகவலை வெளியிட்டார்.

    இது பீகார் அரசியல் அரங்கில் சலசலப்பை ஏற்படுத்தியது.

    இந்த நிலையில் தற்போது பீகாரில் 3,500 கி.மீ. தொலைவிலான பாதயாத்திரையை தொடங்கி உள்ள பிரசாந்த் கிஷோர், நிதிஷ் குமாருக்கு பதிலடி கொடுத்து, ஒரு வீடியோ பதிவு வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறி இருப்பதாவது:-

    நிதிஷ் குமாருக்கு (வயது 71) வயோதிகம் ஒரு பிரச்சினையாகி வருகிறது. அவர் மாயையில் சிக்கி இருப்பதாக தோன்றுகிறது.

    ஒன்றைச் சொல்லிவிட்டு, அவர் முடிக்கும்போது தொடர்பே இல்லாத வேறொன்றுக்கு தாவி விடுகிறார். நான் பா.ஜ.க.வுக்கு வேலை செய்வதாக அவர் நம்புகிறார் என்றால், காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்த வேண்டும் என்று நான் அவருக்கு எதற்காக நான் ஆலோசனை கூறப்போகிறேன்?

    நிதிஷ் குமார் அர்த்தமற்று பேசி வருகிறார்.

    'டெல்யூஷனல்' (மாயை) என்ற ஆங்கில வார்த்தை, நிதிஷ்குமாருக்கு சரியாக பொருந்துகிறது. அரசியலில் அவர் தனிமைப்படுத்தப்பட்டு விட்டார். அவர் யாரை நம்பவில்லையோ, அவர்களைத்தான் சூழ்ந்து இருக்கிறார். இது அவருக்கு பயத்தை தருகிறது. அந்த நடுக்கத்தில்தான் அவர் அர்த்தமற்று பேசி வருகிறார்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    • வழிநெடுகிலும் அவரை ஏராளமான பொதுமக்கள் மலர் தூவி வரவேற்றனர்.
    • இந்த யாத்திரை 12 முதல் 15 மாதங்கள் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    பாட்னா :

    பிரபல தேர்தல் வியூக நிபுணரான பிரசாந்த் கிஷோர் தீவிர அரசியலில் ஈடுபட முடிவு செய்துள்ளார். இதற்காக 'ஜன் சுராஜ்' என்ற பெயரில் பிரசார தளம் ஒன்றை தொடங்கி உள்ளார். இதன் ஒரு பகுதியாக பீகாரில் பாதயாத்திரை நடத்தப்போவதாக அவர் அறிவித்து இருந்தார்.

    அதன்படி காந்தி பிறந்த தினமான நேற்று, பீகாரின் மேற்கு சம்பாரன் மாவட்டத்தில் உள்ள பிதிகர்வரா காந்தி ஆசிரமத்தில் இருந்து தனது பாதயாத்திரையை தொடங்கினார். வழிநெடுகிலும் அவரை ஏராளமான பொதுமக்கள் மலர் தூவி வரவேற்றனர்.

    மாநிலம் முழுவதும் 3,500 கி.மீ. தொலைவுக்கு தனது ஆதரவாளர்களுடன் பாதயாத்திரை மேற்கொள்ளும் பிரசாந்த் கிஷோர், ஒவ்வொரு பஞ்சாயத்துகளுக்கும் சென்று மக்களை சந்திக்க திட்டமிட்டு உள்ளார். இந்த யாத்திரை 12 முதல் 15 மாதங்கள் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    முன்னதாக பாதயாத்திரை குறித்து துனது டுவிட்டர் தளத்தில், 'மிகவும் பின்தங்கிய மற்றும் ஏழை மாநிலமான பீகாரின் அமைப்பு முறையை மாற்ற முடிவு செய்துள்ளேன்' என குறிப்பிட்டு இருந்தார்.

    கடந்த மக்களவை தேர்தலில் மோடிக்காக வியூகங்களை வகுத்த பிரசாந்த் கிஷோர், பீகார் முதல்வர் நிதிஷ் குமார் தலைமையில் இன்று ஐக்கிய ஜனதா தளம் கட்சியில் இணைந்துள்ளார். #PrashantKishor #NitishKumar #JDU
    பாட்னா:

    பிரபல தேர்தல் வியூக நிபுணரான பிரசாந்த் கிஷோர், அரசியல் கட்சிகள் தேர்தல்களில் வெற்றி பெறும் வகையில் பல திட்டங்களை வகுத்து கொடுப்பதுடன், பிரசாரத்தை ஒருங்கிணைப்பதில் சிறந்தவர் என்ற பெயரை பெற்றவர். கடந்த 2012-ம் ஆண்டு குஜராத் சட்டசபை தேர்தலின் போதும், 2014 மக்களவை தேர்தலில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் பா.ஜ.க. ஆட்சியை பிடிக்க கிஷோர் பணியாற்றினார்.

    பின்னர் பீகார் சட்டசபை தேர்தலில் நிதிஷ் குமார் தலைமையில் ஐக்கிய ஜனதா தளம் கூட்டணிக்காக பணியாற்றி வெற்றியை தேடிக் கொடுத்தார். ஆனால், உ.பி.,யில் காங்கிரஸ் சார்பாக களமிறங்கிய அவரது வியூகம் வெற்றி பெறவில்லை. இதனால், சில நாட்கள் அவர் அமைதியாக இருந்தார். 

    இந்நிலையில், இன்று பாட்னாவில் பீகார் முதல்வரும், ஐக்கிய ஜனதா தள கட்சி தலைவருமான நிதிஷ்குமார் முன்னிலையில், அக்கட்சியில் பிரசாந்த் கிஷோர் இணைந்தார். 
    ×