search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "உண்ணாவிரதம்"

    • நீட் தேர்வை ரத்து செய்ய மறுப்பதை கண்டித்து நடந்தது
    • 1000-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டையில் தி.மு.க.வின் இளைஞர் அணி,மாணவர் அணி, மருத்துவர் அணிகளின் சார்பில் நீட் தேர்வை ரத்து செய்ய மறுக்கும் மத்திய அரசையும், ஆளுநரையும் கண்டித்து முத்துக்கடை பஸ் நிலையம் அருகில் உண்ணாவிரத போராட்டம் நடந்தது.

    மாநில சுற்றுச்சூழல் அணி துணை செயலாளர் வினோத் காந்தி தலைமை தாங்கினார்.

    மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் ஈஸ்வரப்பன்.எம்.எல்.ஏ முன்னிலை வகித்தார். மாவட்ட மாணவர் அணி அமைப்பாளர் வினோத் வரவேற்று பேசினார்.

    உண்ணாவிரத போராட்டத்தை முன்னாள் மத்திய மந்திரி, அரக்கோணம் பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர்.எஸ். ஜெகத்ரட்சகன் தொடங்கி வைத்து பேசினார்.

    தகவல் தொழில்நுட்ப அணி மாநில ஆலோசகர் லெனின் கண்டன உரையாற்றுகிறார்

    உண்ணாவிரத போராட்டத்தில் மாவட்ட நிர்வாகிகள் சுந்தரமூர்த்தி, சிவானந்தம், துரைமஸ்தான், ஏ.வி.சாரதி, தலைமை செயற்குழு உறுப்பினர்கள் சுந்தரம், அசோகன், கண்ணையன்,மாவட்ட ஊராட்சி குழு தலைவர் ஜெயந்தி , வாலாஜா ஒன்றிய குழு தலைவர் வெங்கட்ரமணன், ராணிப்பேட்டை ,வாலாஜா நகர மன்ற தலைவர்கள் சுஜாதா,ஹரிணி,அம்மூர் பேரூராட்சிமன்ற தலைவர் சங்கீதா மகேஷ்,

    நகர செயலாளர்கள் பூங்காவனம், தில்லை உள்பட ஒன்றிய,நகர, பேரூர் நிர்வாகிகள், மாவட்ட அணிகளின் அமைப்பாளர்கள், இளைஞரணி, மாணவரணி , மருத்துவர் அணி நிர்வாகிகள் உள்பட சுமார் 1000-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

    முடிவில் மருத்துவ அணி அமைப்பாளர் சரவணன் நன்றி கூறுகிறார்.

    • பெற்றோர்கள், கல்வி யாளர்கள், சமூகச் செயற்பா ட்டாளர்கள் கலந்து கொண்டு பேசி வருகின்றனர்.
    • இந்த உண்ணா விரதப் போராட்டம் இன்று மாலை 5 மணிவரை நடைபெறவுள்ளது.

    விழுப்புரம்:

    நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி தி.மு.க. சார்பில் விழுப்புரத்தில் இன்று உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது. புதிய பஸ் நிலையம் அருகில் உள்ள நகராட்சி திடலில் இன்று காலை தொடங்கிய உண்ணாவிரதப் போராட்ட த்திற்கு அமைச்சர் பொன்முடி தலைமை தாங்கினார். அமைச்சர் செஞ்சி மஸ்தான், எம்.எல்.ஏ.க்கள் புகழேந்தி, லட்சுமணன், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் ஜெயச்சந்திரன் உள்ளிட்டோர் பேசினர். இதில் விழுப்புரம் மாவட்ட மாணவ, மாணவி கள், பெற்றோர்கள், கல்வியாளர்கள், சமூகச் செயற்பா ட்டாளர்கள் கலந்து கொண்டு பேசி வருகின்றனர்.

    உண்ணாவிரதத்தில் விழுப்புரம் மாவட்ட பொரு ளாளர் ஜனகராஜ், நகர செயலாளர் சக்கரை, நகர சபை தலைவர் தமிழ்செல்வி பிரபு, கோலியனூர் யூனியன் சேர்மன் சச்சி தானந்தம், ஒன்றிய செயலாளர்கள் தெய்வ சிகாமணி, மும்மூர்த்தி, முருகவேல், திருக்கோவிலூர் தங்கம், முன்னாள் எம்.எல்.ஏ சேதுநாதன், மாவட்ட இளைஞரணி செயலாளர் தினகரன், துணை அமைப் பாளர் பிரேம், மாவட்ட தொண்டர்படை அமைப்பா ளர் கபாலி, மாவட்ட மாண வரனி அமைப்பாளர் வினோத், மாவட்ட மருத்து வரணி செயலாளர் டாக்டர் செந்தில், மாவட்ட வர்த்தக அணி சங்கர், இலக்கிய அணி வல்லப்ப ராசு, நகர இளைஞர் அணி செயலாளர் மணிகண்டன், துணை அமைப்பாளர் சோமு ஆகியோர் உள்பட ஏராள மானோர் பங்கேற்றுள்ளனர். இந்த உண்ணா விரதப் போராட்டம் இன்று மாலை 5 மணிவரை நடைபெற வுள்ளது.

    • மாணவர் அணி, மருத்துவ அணி சார்பில் திருவள்ளூர் மருத்துவக்கல்லூரி நுழைவு வாயில் அருகே உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.
    • தெற்கு மாவட்ட செயலாளர் க.சுந்தர் எம்.எல்.ஏ தலைமை தாங்கினார்.

    செங்கல்பட்டு:

    நீட்தேர்வை ரத்து செய்ய கோரியும், நீட் தேர்வை தொடர்ந்து திணிக்கும் மத்திய அரசை கண்டித்தும், கவர்னர் ஆர்.என்.ரவியை கண்டித்தும் தி.மு.க. இளைஞர் அணி, மாணவர் அணி, மருத்துவர் அணி சார்பில் தமிழகம் முழுவதும் இன்று உண்ணாவிரத போராட்டம் நடந்தது.

    இதே போல் செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூரிலும் தி.மு.க.வினர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட தி.மு.க. இளைஞரணி, மாணவர் அணி, மருத்துவ அணி சார்பில் செங்கல்பட்டு அரசு மருத்துவமனை எதிரில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. இந்த உண்ணாவிரதத்தை மாவட்டக் செயலாளர் அமைச்சர் தா.மோ.அன்பரசன் தொடங்கி வைத்து கண்டன உரையாற்றினார்.

    இளைஞரணி அமைப்பாளர் கோல்டு டி.பிரகாஷ் தலைமை தாங்கினார். மாவட்ட மாணவரணி அமைப்பாளர் பேராசிரியர் பிரபு, மருத்துவ அணி அமைப்பாளர் செந்தில் குமார் வரவேற்றனர்.

    இதில் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, க.செல்வம் எம்.பி., மீ.அ.வைத்தியலிங்கம், எம்.எல்.ஏ.க்கள் இ.கருணாநிதி, வரலட்சுமி மதுசூதனன், எஸ்.ஆர்.ராஜா, முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் து.மூர்த்தி, விசுவநாதன், மாவட்ட ஊராட்சித் தலைவர் படப்பை ஆ.மனோகரன், செம்பருத்தி, துர்கேஷ், மேயர் வசந்தகுமாரி, துணை மேயர் காமராஜ் ஆகியோர் கண்டன உரையாற்றினர். உண்ணாவிரதத்தில் செல்வம் எம்.பி., எஸ்.எஸ்.பாலாஜி, பகுதி செயலாளர்கள் ஜோசப் அண்ணாதுரை, வந்தே மாதரம், பம்மல் வே.கருணாநிதி, ஏ.கே.கருணாகரன், உள்ளிட்ட ஏராளமான கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர்.

    திருவள்ளூர் ஒருங்கிணைந்த தி.மு.க. இளைஞர் அணி, மாணவர் அணி, மருத்துவ அணி சார்பில் திருவள்ளூர் மருத்துவக்கல்லூரி நுழைவு வாயில் அருகே உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.

    மாவட்ட செயலாளர்கள் ஆவடி சா.மு.நாசர், கும்மிடிப்பூண்டி டி.ஜெ. கோவிந்தராஜன், திருத்தணி எஸ். சந்திரன் ஆகியோர் தலைமை தாங்கினர். எம்.எல்.ஏக்கள் பூந்தமல்லி ஆ.கிருஷ்ணசாமி, திருவள்ளூர் வி.ஜி.ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் ம.கிரண், மாவட்ட மாணவர் அணி அமைப்பாளர் ஏ.முரளி சேனா, மாவட்ட மருத்துவ அணி அமைப்பாளர் ஆ.சாம் ஜெபராஜ் ஆகியோர் வரவேற்றனர்

    இதில் மாநில இளைஞரணி செயலாளர் பிரபு கஜேந்திரன், மாநில மாணவரணி அமைப்பாளர் பூவை ஜெரால்ட், எழுத்தாளர் மணிமாறன், தலைமை செயற்குழு உறுப்பினர் திருத்தணி எம்.பூபதி, மாநில விவசாய அணி துணைச் செயலாளர் ஆர்.டி.இ.ஆதிசேஷன், மாநில நெசவாளர் அணி துணை தலைவர் ஓ.ஏ.நாகலிங்கம், மாவட்ட நிர்வாகிகள் கே.திராவிட பக்தன், டாக்டர்.வி.சி.ஆர்.குமரன், சி.ஜெயபாரதி, உதயமலர் பாண்டியன், எம்.மிதுன் சக்கரவர்த்தி, பொதுக்குழு உறுப்பினர்கள் ப.சிட்டிபாபு, எஸ்.கே.ஆதாம், வி.கிஷோர், மு.சுப்பிரமணி, ராஜேஸ்வரி ரவீந்திரநாத் இளைஞர் அணி துணை அமைப்பாளர்கள் த.மோதிலால், டி.கே.பாபு டி.ஆர்.திலீபன், மா.புவனேஷ் குமார் உள்பட 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.

    காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட தி.மு.க. இளைஞர் அணி, மாணவரணி, மருத்து வரணி சார்பில் காஞ்சிபுரம் பெரியார்தூண் அருகில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. தெற்கு மாவட்ட செயலாளர் க.சுந்தர் எம்.எல்.ஏ தலைமை தாங்கினார். இதில் காஞ்சிபுரம் தொகுதி எம்.பி க.செல்வம், இளைஞர் அணி மாநில துணைச் செயலாளர் அப்துல் மாலிக், மருத்துவர் அணி கதிரவன் ஆகியோர் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினர்.

    உண்ணாவிரத போராட்டத்தில் மாநகர செயலாளர் தமிழ்ச்செல்வன், மாநகராட்சி மேயர் மகாலட்சுமி யுவராஜ், பொருளாளர், சன்பிராண்ட் ஆறுமுகம், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் யுவராஜ், மாணவரணி, ஏ.வி சுரேஷ்குமார், மாநகர அவைத் தலைவர் செங்குட்டுவன், துணை செயலாளர் முத்து செல்வன், ஜெகநாதன், பகுதி செயலாளர் கே, சந்துரு, திலகர், தசரதன்,வெங்கடேசன், தலைமை செயற்குழு உறுப்பினர் எம். எஸ். சுகுமார், ஒன்றிய செயலாளர்பி. எம்.குமார், சேகர், ஞானசேகரன், குமணன் ,படுநெல்லி பாபு தொ.மு.ச. கே.ஏ. இளங்கோவன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    • ஆளுநரை கண்டித்தும் தமிழக முழுவதும் திமுகவினர் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    • பாராளுமன்ற தேர்தலில் இந்தியா கூட்டணி அமோக வெற்றி பெறும்.

    நாகர்கோவில் :

    நீட் தேர்வை திணிக்கும் மத்திய அரசு கண்டித்தும், ஆளுநரை கண்டித்தும் தமிழக முழுவதும் திமுகவினர் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    நாகர்கோவில் அண்ணா விளையாட்டரங்கம் முன்பு கன்னியாகுமரி கிழக்கு மேற்கு மாவட்ட திமுக இளைஞரணி மாணவரணி மருத்துவர் அணி சார்பில் உண்ணாவிரத போராட்டம் இன்று நடந்தது. போராட்டத்திற்கு இளைஞர் அணி அமைப்பாளர்கள் அகஸ்தீசன் ஆகியோர் தலைமை தாங்கினார்கள். போராட்டத்தை அமைச்சர் மனோ தங்கராஜ் தொடங்கி வைத்தார்.

    அப்போது அவர் பேசியதாவது:-

    தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் உலகம் முழுவதும் உள்ளவர்கள் பாராட்டும் வகையில் ஆட்சி செய்து வருகிறார். பாரதிய ஜனதா அரசு தமிழகத்தின் உடைய வளர்ச்சிகளை எப்படி தடுக்கலாம் என்று செயல்பட்டு வருகிறது. அதை முறையடித்து சிறப்பான ஆட்சியை தமிழக முதல்வர் செயல்படுத்தி வருகிறார். நீட் தேர்வு வேண்டாம் என்று முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி கூறினார்.

    கல்வியில் சிறந்து தமிழகம் விளங்கி வருகிறது. தமிழகத்தில் எத்தனை பல்கலைக்கழகம் உள்ளது என்பதை எண்ணி பார்க்க வேண்டும். தமிழகம் மருத்துவத் துறையில் சிறந்து விளங்கி வருகிறது.முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி ஏழை எளிய மக்களின் கஷ்டத்தை புரிந்து கொண்டவர்.அரசு பள்ளியில் படிக்கும் சாமானிய வீட்டு பிள்ளையும் பிளஸ்-2 படித்துவிட்டு மருத்துவ படிப்பு அல்லது மேற்படிப்பு செல்ல வேண்டிய சூழ்நிலையில் அந்தப் படிப்பு போதாது நீட் தேர்வு வேண்டும் என்று கூறுகிறீர்கள். பனிரெண்டாம் வகுப்பு தேர்வு என்பது தகுதி தேர்வாகும். வசதி படைத்தவர்கள் நீட் தேர்வை பயன்படுத்தி மருத்துவக் கல்லூரிக்கு சென்று விடுவார்கள்.ஆனால் ஏழை எளிய மக்கள் பாதிக்கப்படக்கூடிய சூழல் ஏற்படும். இதனால் தான் நீட் தேர்வை திமுக அரசு எதிர்த்து வருகிறது. மக்களிடையே குறைகளை பேசி அதை தீர்க்க நாடாளுமன்றம் குரல் கொடுத்து வருகி றார்கள். ஆனால் நாடாளுமன்றத்துக்கு வரமாட்டேன் என்று கூறுகிறார்கள். மணிப்பூர் சம்பவம் பற்றி எதிர்க்கட்சியினர் பேசிய பிறகு பிரதமர் மணிப்பூரில் எந்த பிரச்சனையும் இல்லை என்று கூறியுள்ளார். கோடான கோடி தொண்டர்களை திமுக தலைவரைப் பற்றி பேச பாரதி ஜனதா தலைவருக்கு அண்ணாமலைக்கு என்ன தகுதி உள்ளது. திமுக தலைவர் நமக்கு நாமே என்பதன்மூலமாக தமிழக முழுவதும் நடை பயணம் மேற்கொண்டு மக்கள் மத்தியில் எழுச்சி ஏற்படுத்தினார். ஆனால் அண்ணாமலை மக்களை ஏமாற்றி வருகிறார். அண்ணாமலை , எதிர் கட்சித் தலைவர்கள் யார் வேண்டுமானாலும் வாருங்கள் என்னுடன் நீட் தேர்வு குறித்து விவாதிக்க தயாராக இருக்கிறீர்களா. பெருந்தலைவர் காமராஜர் பள்ளிகளை தந்தார். தலைவர் கலைஞர் கல்லூரிகளை தந்தார். இதனால் தமிழகத்தில் கல்வியில் சிறந்து விளங்குகிறது. வட இந்தியாவில் கூட லட்சக்கணக்கில் சம்பளம் வாங்கும் அளவிற்கு தமிழர்கள் இருக்கிறார்கள் என்றால் அதற்கு முக்கிய காரணம் நமது மாநிலத்தில் உள்ள கல்விதான் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். இந்தியை திணிக்கும் உரிமை யாருக்கும் கிடையாது. சுங்கச்சாவடியில் மத்திய அரசு பல கோடி ரூபாய் கொள்ளை அடித்துள்ளது. சாலை அமைப்பதிலும் ஊழல் செய்துள்ளது தங்களது ஆதாயத்திற்காக மதத்தை அரசியலுக்காக பாரதிய ஜனதா அரசு பயன்படுத்தி வருகிறத. தமிழ்நாடு தான் இந்திய துணைக்கண்டத்திற்கு வழிகாட்டியாக உள்ளது. குமரி மாவட்டத்தில் ஏற்கனவே 35 குவாரிகள் இயங்கியது. தற்பொழுது 7 குவாரிகள் மட்டுமே இயங்கி வருகிறது. கல்வி உதவி தொகை வழங்குவதாக ஏழை மக்களை பாரதிய ஜனதா அரசு ஏமாற்றியது. மக்களை திசை திருப்பும் முயற்சியில் பாரதிய ஜனதா அரசு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. மத்திய அரசிற்கு முடிவு கட்டும் கவுண்டன் தொடங்கிவிட்டது. விலைவாசி உயர்வால் மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். பெட்ரோல் விலை டீசல் விலை பொருட்களின் விலை கணிசமான அளவு உயர்ந்துள்ளது. இதை மக்கள் நினைத்து பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் இந்தியா கூட்டணி அமோக வெற்றி பெறும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    நாகர்கோவில் மாநக ராட்சி மேயரும் கிழக்கு மாவட்ட செயலாளர் மகேஷ், மாநில துணைச் செயலாளர் ஆஸ்டின், முன்னாள் அமைச்சர் சுரேஷ் ராஜன், மாநில இளைஞரணி துணைச் செயலாளர் பிரதீப் ராஜா, துணை மேயர்மேரி பிரின்சி லதா உட்பட நிர்வாகிகள் வாழ்த்துரை வழங்கினார்கள். உண்ணாவிரத போராட்டத்தில் மாவட்ட பொருளாளர் கேட்சன், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் ராஜன், புஷ்பலீலா ஆல்பன், மண்டல தலைவர் ஜவகர், குருந்தன்கோடு மேற்கு ஒன்றிய செயலாளர் பி.எஸ். சந்திரா, கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை செயலாளர் தில்லை செல்வம், அறங்காவலர் குழு தலைவர் பிரபா ராமகிருஷ்ணன், நிர்வாகி தாமரை பாரதி, மாவட்டத் துணைச் செயலாளர் பூதலிங்கம், ஒன்றிய செயலாளர்கள்பாபு, சுரேந்திர குமார், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் சதாசிவம், ரேமோன் மனோ தங்கராஜ், அணி அமைப்பாளர்கள் சி. என்.செல்வன், இ.என். சங்கர்,அருண் காந்த் உள்படபலர் கொண்டனர்.

    • அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் தமிழகம் முழுவதும் உண்ணாவிரத போராட்டம் நடைபெற இருக்கிறது.
    • உண்ணாவிரத போராட்டத்தில் கலந்து கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டும் என்று பணிவுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

    சென்னை:

    தமிழ்நாடு இளைஞர்கள் சங்க மாநில தலைவர் டாக்டர் எம்.எம்.ஆர்.மதன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    வருகிற 20-ந் தேதி தி.மு.க சார்பில் நீட் தேர்வுக்கு விலக்கு கோரி தி.மு.க தலைவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணைக்கிணங்க இளைஞரணி செயலாளர் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் தமிழகம் முழுவதும் உண்ணாவிரத போராட்டம் நடைபெற இருக்கிறது.

    அதுசமயம் நமது தமிழ்நாடு இளைஞர்கள் சங்கத்தையும் போராட்டத்தில் பங்கேற்குமாறு அழைப்பு விடுத்துள்ளனர். எனவே மாநில, மாவட்ட நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் அனைவரும் அந்தந்த மாவட்ட தலைநகரங்களில் நடைபெறும் உண்ணாவிரத போராட்டத்தில் கலந்து கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டும் என்று பணிவுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

    இவ்வாறு அதில் எம்.எம்.ஆர்.மதன் கூறியுள்ளார்.

    • பெட்ரோல் பங்க் அமைக்க தொடர்ந்து எதிர்ப்பு
    • சின்னமுட்டம் பகுதி மீனவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

    கன்னியாகுமரி :

    கன்னியாகுமரி அருகே உள்ள சின்னமுட்டத்தில் மீன்பிடி துறைமுகம் உள்ளது. இந்த துறைமுகத்தை தங்கு தளமாக கொண்டு 350-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகின்றன.

    இந்த நிலையில் சின்ன முட்டம் துறைமுக வளாகத்தில் பெட்ரோல் பங்கு அமைக்க முடிவு செய்யப்பட்டு அதற்கான பணிகள் தொடங்கப்பட்டது. இதற்கு சின்னமுட்டம் பகுதி மீனவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

    பெட்ரோல் பங்க் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து அவர்கள் சின்னமுட்டம் புனித தோமையார் ஆலயம் முன்பு போராட்டத்திலும் ஈடுபட்டனர். கடந்த 9-ந் தேதி முதல் இந்த போராட்டம் நடைபெற்று வருகிறது. அவர்களிடம் போலீசார், பேச்சுவார்த்தை நடத்தியும் பலனில்லை.

    இந்த நிலையில் இன்று மீனவர்கள் திடீரென உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். புனித தோமையார் ஆலயம் முன்பு அவர்கள் போராட்டத்தை தொடங்கி உள்ளனர். இதனால் அங்கு பரபரப்பும் ஏற்பட்டது.. இதை தொடர்ந்து அங்கு இன்று ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்.

    போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மீனவர்களுடன் போலீசார் மற்றும் அதிகாரிகள் தொடர்ந்து சமரச பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள்.

    • 400-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் போராட்டத்தில் கலந்து கொண்டு வருகின்றனர்.
    • இவர்கள் அரசின் கவனத்திற்கு செல்வதற்காக பல்வேறு கோரிக்கைகளை முழக்கங்களாக பேசி வருகின்றனர்.

     பாப்பிரெட்டிபட்டி,

    அசம்பாவிதம் எதுவும் ஏற்படாமல் இருப்பதற்கு ஏ, பள்ளிப்பட்டு போலீசார் 20-க்கும் மேற்பட்டோர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றன.

    தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள கோபாலபுரத்தில் சுப்பிரமணிய சிவா சர்க்கரை ஆலை அரசு நிறுவனம் சுமார் 35 ஆண்டுகளாக செயல்பட்டு வருகின்றது.

    இந்த ஆலையில் 800-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலையில் பணிபுரிந்து வருகின்றனர். இவர்களுக்கு தொழிலாளர் பாதுகாப்பு, சம்பள உயர்வு, தற்காலிக தொழிலாளர்களை நிரந்தர தொழிலாளர்களாக மாற்றுவது மற்றும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்து தொழில் சார்ந்த கூட்டமைப்பு சுப்பிரமணிய சிவா சர்க்கரை ஆலை சார்பில் அடையாள ஒரு நாள் உண்ணாவிரதம் வியாழக்கிழமை இன்று காலை தொடங்கினர்.

    இதில் 400-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் போராட்டத்தில் கலந்து கொண்டு வருகின்றனர். இவர்கள் அரசின் கவனத்திற்கு செல்வதற்காக பல்வேறு கோரிக்கைகளை முழக்கங்களாக பேசி வருகின்றனர்.

    அசம்பாவிதம் எதுவும் ஏற்படாமல் இருப்பதற்கு ஏ, பள்ளிப்பட்டு போலீசார் 20-க்கும் மேற்பட்டோர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றன.

    • மேலூர் அருகே இந்திய கூட்டணி கட்சி சார்பில் உண்ணாவிரதம் நடந்தது.
    • மணிப்பூர் கலவரத்தை கண்டித்து நடந்தது.

    மேலூர்

    மணிப்பூர் மாநிலத்தில் கலவரத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி வழங்க கோரி மேலூர் அருகே உறங்கான்பட்டியில் இந்திய கூட்டணி கட்சியின் சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. மேலூர் வட்டார காங்கிரஸ் கமிட்டி தலைவர் வைரவன், கிராம காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசு, ஒன்றிய கவுன்சிலர் மலைச்சாமி, சுண்ணாம்பூர் பாண்டி, கொட்டாணிபட்டி செல்லையா, வைரமணி, அங்கு பிள்ளை மார்க்சிஸ்ட் தாலுகா செயலாளர் கண்ணன், மணவாளன் இந்திய கம்யூனிஸ்ட் மாவட்ட குழு உறுப்பினர் மெய்யர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • கைதி பிரபு திடீரென தரையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டார்.
    • கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட பிரபு மீண்டும் நேற்று சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

    சேலம்:

    கரூர் மாவட்டம் தவிட்டுப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் மாங்கா பிரபு (41). கொலை வழக்கு ஒன்றில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

    இதற்கிடையே சேலம் மாவட்டம் வீராணம் பகுதியில் நடைபெற்ற கொலை வழக்கிலும் தொடர்புடைய இவர் உள்பட மூன்று பேரை நேற்று விசாரணைக்கு சேலம் நீதிமன்றத்திற்கு போலீசார் அழைத்து வந்தனர்.

    அப்போது கைதி பிரபு திடீரென தரையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டார். அப்போது அவர் கூறுகையில் , சேலம் மத்திய சிறையில் பழங்களை வைத்து சாராய ஊறல் தயாரித்ததாக அதிகாரிகள் தன்னை 4 நாட்களுக்கு முன்பு தனி சிறையில் அடைத்தனர்.

    மேலும் பொய்யான தகவலை கூறி சிறைத்துறையினர் அடித்து துன்புறுத்துகிறார்கள். சேலம் மத்திய சிறையில் அதிகாரிகள் உதவியுடன் தான் கஞ்சா, கைபேசி உள்ளிட்டவை சிறைக்குள் கொண்டு செல்லப்பட்டு சிறைவாசிகளால் பயன்படுத்தப்படுகிறது என்று கூறினார். இதைத்தொடர்ந்து கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட பிரபு மீண்டும் நேற்று சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

    ஆனால் நேற்று மாலை முதல் பிரபு சாப்பிடாமல் உண்ணாவிரதம் இருந்து வருகிறார். இன்று காலையும் வழக்கம்போல அவருக்கு உணவு வழங்கியும் அவர் சாப்பிட மறுத்து விட்டார் . தொடர்ந்து அவரிடம் சிறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள். இதுவரை அவர் சாப்பிடவில்லை.

    மேலும் தன்னை தனி சிறையில் அடைத்து கொடுமைப்படுத்துவதாகவும், உயிருக்கு பாதுகாப்பு இல்லாத நிலை உள்ளதால் வேறு சிறைக்கு மாற்ற வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார். இதனால் சிறையில் பரபரப்பு நிலவி வருகிறது. இதற்கு இடையே நேற்று சிறைத்துறை டிஐஜி மற்றும் குழுவினர் சேலம் மத்திய சிறையில் ஆய்வு செய்தது குறிப்பிடத்தக்கது.

    • தொழிற்பயிற்சி அலுவலர்கள் 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாவிரதம் நடத்தினர்.
    • சி.பி.டி. தேர்வு முறையை ரத்து செய்ய வேண்டும்

    மதுரை

    மதுரை கலெக்டர் அலுவலகம் எதிரில் தமிழ்நாடு தொழிற்பயிற்சி அலுவலர்கள் சங்கத்தின் சார்பில் அடையாள உண்ணாவிரத போராட்டம் நடந்தது. சங்கத்தின் பொதுச்செயலாளர் செல்வம், மாநில செயலாளர் நவநீதன், மாவட்ட தலைவர் தெய்வராஜ், மாவட்ட செயலாளர் நீதிராஜா ஆகியோர் கலந்து கொண்டனர்.

    டிப்ளமோ, பொறியியல் போன்ற உயர் கல்வியில் கூட அமுல்படுத்தாக 8-ம் வகுப்பு மற்றும் 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்று பயிலும் பயிற்சியாளர்க ளுக்கு அமுல்படுத்துவது என்பது திறனை பரிசோதிக்க ஏதுவாக இல்லாத நிலை உள்ளது. மேலும் பயிற்சியாளர்களின் தரம் குறைய வாய்ப்புள்ளது.

    இதனால் சி.பி.டி. தேர்வு முறையை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாவிரதம் நடந்தது.

    • பெரிய வாளவாடி பஞ்சாயத்து அலுவலகம் எதிரில் உண்ணாவிரத போராட்டம் நடந்தது.
    • கைத்தறி ரகங்களை விசைத்தறியில் நெய்வதற்கு அனுமதிக்க கூடாது.

    உடுமலை:

    கைத்தறி நெசவாளர் குடும்பங்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க கோரி உடுமலை அருகே உள்ள பெரிய வாளவாடி பஞ்சாயத்து அலுவலகம் எதிரில் உண்ணாவிரத போராட்டம் நடந்தது. காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடந்த அடையாள உண்ணாவிர போராட்டத்தில் சங்கத்தின் தலைவர் ஜோதி ,செயலாளர் லட்சுமணன், பொருளாளர் ஜெயராமன் உட்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.

    கைத்தறி ரகங்களை விசைத்தறியில் நெய்வதற்கு அனுமதிக்க கூடாது. கைத்தறி நெசவாளர் காப்பீட்டு திட்ட அட்டையை மீண்டும் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடந்தது. இதில் பங்கேற்ற பெண்கள் கைத்தறி ராட்டையில் துணி நெசவு செய்தனர்.

    • கனகமூலம் சந்தையை இடமாற்றம் செய்ய எதிர்ப்பு
    • ஆலோசனை கூட்டத்தில் வியாபாரிகள் முடிவு

    நாகர்கோவில் :

    நாகர்கோவில் வடசேரி பஸ்நிலைய விரிவாக்க பணிகள் நடைபெறுவதையடுத்து வடசேரி கனகமூலம் சந்தையை வேறு இடத்திற்கு மாற்றுவதற்கு மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.

    அந்த சந்தையை தற்காலிகமாக அண்ணா பஸ் நிலையத்தில் உள்ள சுரங்கப் பாதையையொட்டிய பகுதியில் அமைப்பது தொடர்பாக மாநகராட்சி மேயர் மகேஷ்,மற்றும் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். இந்த நிலையில் கனகமூலம் சந்தையை இடம் மாற்றுவது குறித்து வடசேரி கனகமூலம் சந்தையில் வியாபாரிகள் இன்று ஆலோசனை மேற்கொண்டனர்.

    வியாபாரிகள் சங்க தலைவர் ரமேஷ் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் கனகமூலம் சந்தையை வேறுஇடத்திற்கு மாற்றுவதற்கு வியாபாரிகள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

    தற்போது கனகமூலம் சந்தையில் 122 கடைகள் மட்டுமே செயல்பட்டு வருகிறது. எனவே கனகமூலம் சந்தையின் ஒரு புறத்தில், தற்காலிகமாக கொட்டகை அமைத்து காய்கறி வியாபாரம் செய்ய அனுமதி வழங்க வேண்டும். இது தொடர்பாக மாநகராட்சி மேயர் மற்றும் அதிகாரிகளை நேரில் சென்று சந்தித்து வலியுறுத்த கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

    மேலும் வடசேரி சந்தையை வேறு இடத்துக்கு மாற்றுவதால் வியாபாரிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும். எனவே அதனை கருத்தில் கொண்டு மாநகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

    தங்களின் கோரிக்கை தொடர்பாக மாநகராட்சியின் கவனத்தை ஈர்க்கும் வகையில் வடசேரியில் வருகிற 28-ந்தேதி வியாபாரிகள் ஒரு நாள் உண்ணாவிரத போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர்.

    ×