search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பெரியவாளவாடியில் கைத்தறி நெசவாளர்கள் உண்ணாவிரதம்
    X

    உண்ணாவிரதத்தில் பங்கேற்ற பெண்கள் கைத்தறி ராட்டையில் துணி நெசவு செய்த காட்சி.

    பெரியவாளவாடியில் கைத்தறி நெசவாளர்கள் உண்ணாவிரதம்

    • பெரிய வாளவாடி பஞ்சாயத்து அலுவலகம் எதிரில் உண்ணாவிரத போராட்டம் நடந்தது.
    • கைத்தறி ரகங்களை விசைத்தறியில் நெய்வதற்கு அனுமதிக்க கூடாது.

    உடுமலை:

    கைத்தறி நெசவாளர் குடும்பங்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க கோரி உடுமலை அருகே உள்ள பெரிய வாளவாடி பஞ்சாயத்து அலுவலகம் எதிரில் உண்ணாவிரத போராட்டம் நடந்தது. காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடந்த அடையாள உண்ணாவிர போராட்டத்தில் சங்கத்தின் தலைவர் ஜோதி ,செயலாளர் லட்சுமணன், பொருளாளர் ஜெயராமன் உட்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.

    கைத்தறி ரகங்களை விசைத்தறியில் நெய்வதற்கு அனுமதிக்க கூடாது. கைத்தறி நெசவாளர் காப்பீட்டு திட்ட அட்டையை மீண்டும் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடந்தது. இதில் பங்கேற்ற பெண்கள் கைத்தறி ராட்டையில் துணி நெசவு செய்தனர்.

    Next Story
    ×