search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வடசேரியில் 28-ந்தேதி உண்ணாவிரதம்
    X

    வடசேரியில் 28-ந்தேதி உண்ணாவிரதம்

    • கனகமூலம் சந்தையை இடமாற்றம் செய்ய எதிர்ப்பு
    • ஆலோசனை கூட்டத்தில் வியாபாரிகள் முடிவு

    நாகர்கோவில் :

    நாகர்கோவில் வடசேரி பஸ்நிலைய விரிவாக்க பணிகள் நடைபெறுவதையடுத்து வடசேரி கனகமூலம் சந்தையை வேறு இடத்திற்கு மாற்றுவதற்கு மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.

    அந்த சந்தையை தற்காலிகமாக அண்ணா பஸ் நிலையத்தில் உள்ள சுரங்கப் பாதையையொட்டிய பகுதியில் அமைப்பது தொடர்பாக மாநகராட்சி மேயர் மகேஷ்,மற்றும் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். இந்த நிலையில் கனகமூலம் சந்தையை இடம் மாற்றுவது குறித்து வடசேரி கனகமூலம் சந்தையில் வியாபாரிகள் இன்று ஆலோசனை மேற்கொண்டனர்.

    வியாபாரிகள் சங்க தலைவர் ரமேஷ் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் கனகமூலம் சந்தையை வேறுஇடத்திற்கு மாற்றுவதற்கு வியாபாரிகள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

    தற்போது கனகமூலம் சந்தையில் 122 கடைகள் மட்டுமே செயல்பட்டு வருகிறது. எனவே கனகமூலம் சந்தையின் ஒரு புறத்தில், தற்காலிகமாக கொட்டகை அமைத்து காய்கறி வியாபாரம் செய்ய அனுமதி வழங்க வேண்டும். இது தொடர்பாக மாநகராட்சி மேயர் மற்றும் அதிகாரிகளை நேரில் சென்று சந்தித்து வலியுறுத்த கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

    மேலும் வடசேரி சந்தையை வேறு இடத்துக்கு மாற்றுவதால் வியாபாரிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும். எனவே அதனை கருத்தில் கொண்டு மாநகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

    தங்களின் கோரிக்கை தொடர்பாக மாநகராட்சியின் கவனத்தை ஈர்க்கும் வகையில் வடசேரியில் வருகிற 28-ந்தேதி வியாபாரிகள் ஒரு நாள் உண்ணாவிரத போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர்.

    Next Story
    ×