search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இனிப்பு"

    • லட்டுக்கள் சூடாகவோ அல்லது குளிராகவோ சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்.
    • வித்தியாசமாக கொண்டைக்கடலை லட்டு செய்யலாம் வாங்க.

    உடுப்பி, மங்களூர் பகுதியில் உள்ள பல கொங்கனி குடும்பங்களில், கிருஷ்ண ஜென்மாஷ்டமி அன்று கிருஷ்ணருக்கு நைவேத்யமாக கொண்டைக்கடலை மாவு லட்டுகள் செய்து பரிமாறப்படுகிறது. இந்த லட்டுகள் கொண்டைக்கடலை மாவு, கொப்பளித்த நெல், வெல்லம் ஆகியவற்றின் கலவையாகும். அவை முந்திரி, காய்ந்த தேங்காய், நெய்யில் வறுத்த எள்ளுடன் சுவையூட்டப்படுகின்றன. இந்த லட்டுக்கள் சூடாகவோ அல்லது குளிராகவோ இருக்கும் போது சாப்பிட மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும். அவை சரியாக செய்யப்பட்டால், அவை பல மாதங்கள் சேமிக்கப்படும்.

    ஆனால் இன்று நாம் வெள்ளை கொண்டைகடலையை ஊறவைத்து அரைத்து, அதனை எண்ணெய் அல்லது நெய்யில் பொறித்து வரும் மாவில் இருந்து வித்தியாசமாக கொண்டைக்கடலை லட்டு செய்யலாம் வாங்க பார்க்கலாம்.

    தேவையான பொருட்கள்:

    வெள்ளை கொண்டைக்கடலை - 150 கிராம்

    சர்க்கரை - 150 கிராம்

    ஏலக்காய் பொடி 1 தேக்கரண்டி

    பிஸ்தா, பாதாம் (பொடித்தது) - தேவைக்கு

    எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு

    கேசரி பவுடர் (ஆரஞ்சு நிறம்) - தேவைக்கு

    செய்முறை:

    கொண்டைக்கடலையை சுத்தம் செய்து 3 மணி நேரம் தண்ணீரில் ஊறவைக்கவும். பின்பு அதை வடிகட்டி மிக்சியில் போட்டு அரைக்கவும். வாணலியை அடுப்பில் வைத்து அதில் நெய் அல்லது எண்ணெய் ஊற்றி சூடுபடுத்தவும். கொண்டைக்கடலை மாவை தட்டையாக தட்டி எண்ணெயில்  போட்டு பொரித்து எடுக்கவும். ஆறியதும் அதை மிக்சியில் போட்டு கொரகொரப்பாக அரைத்துக்கொள்ள வேண்டும்.

    அடிகனமான பாத்திரத்தில் சர்க்கரை சேர்த்து அது மூழ்கும் அளவிற்கு தண்ணீர் ஊற்றி அதை அடுப்பில் வைக்க வேண்டும். ஒரு கம்பி பதம் அதாவது பிசுபுசுப்பத்தன்மை வந்தவுடன் அடுப்பை அணைத்துவிட்டு அதில் கேசரி பவுடர், ஏலக்காய் பொடி சேர்த்து கலக்க வேண்டும்.

    இந்த பாகு கரைசலில் கொரகொரப்பாக அரைத்து வைத்துள்ள கொண்டைக்கடலை மாவினை அதனுடன் சேர்த்து கிளற வேண்டும். இந்த கலவை பாத்திரத்தில் ஒட்டாமல் திரண்டு வரும்போது நெய்யில் வறுத்து ஒன்றிரண்டாக பொடித்த முந்திரி, பாதாமை அதில் சேர்க்க வேண்டும். இதனை இளம் சூடாக இருக்கும்போதே. உருண்டைகளாக பிடிக்க வேண்டும். கடைசியாக, நெய்யில் வறுத்த பிஸ்தா, பாதாமை லட்டுகளின் மேல் தூவவும். இப்போது சுவையான 'கொண்டைக்கடலை லட்டு' தயார்.

    • லட்டு என்பது ஒரு பாரம்பரிய இனிப்பு ஆகும்.
    • லட்டை அனைத்து வயதினரும் விரும்புவர்.

    லட்டு என்பது ஒரு பாரம்பரிய இனிப்பு ஆகும், இது சர்க்கரை, கோதுமை மாவு, நெய் மற்றும் பிற பொருட்களுடன் தயாரிக்கப்படுகிறது. இது ஒரு சுவையான மற்றும் ஆரோக்கியமான இனிப்பு ஆகும். லட்டை அனைத்து வயதினரும் விரும்புவர். லட்டு வயதானவர்களுக்கும், குழந்தைகளுக்கும் பிடித்த இனிப்பு ஆகும். இது ஒரு சிறந்த ஆரோக்கியமான இனிப்பு ஆகும், இது உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்களை வழங்குகிறது. லட்டு செய்ய பல வழிகள் உள்ளன. ஸ்ட்ராபெர்ரி பழத்தினை வைத்து வித்தியாசமான முறையில் ஸ்ட்ராபெர்ரி லட்டு செய்யலாம். அதற்கான செய்முறை விளக்கங்களை பார்க்கலாம்.

    தேவையான பொருட்கள்:

    பூந்தி தயாரிக்க:

    கடலை மாவு -150 கிராம்

    இளஞ்சிவப்பு நிற சிரப் - 1 தேக்கரண்டி

    உப்பு - ஒரு சிட்டிகை தண்ணீர் - 120 மில்லி

    நெய் - தேவையான அளவு

    சர்க்கரை பாகு தயாரிக்க:

    சர்க்கரை - 150 கிராம்

    ஸ்ட்ராபெர்ரி பழக்கூழ் அல்லது எசென்ஸ் - ஒரு மூடி

    சர்க்கரை - 100 கிராம்

    தண்ணீர் - 150 மில்லி

    பிஸ்தா, பாதாம் - தேவைக்கு

    செய்முறை:

    ஒரு பாத்திரத்தில் கடலை மாவு. இளஞ்சிவப்பு நிற சிரப், தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து கட்டிகள் இல்லாமல் கரைக்கவும். இதனை 10 நிமிடங்களுக்கு அப்படியே வைக்கவும். மற்றொரு அடிகனமான பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி சூடுபடுத்தவும். அதில் ஸ்ட்ராபெர்ரி பழக்கூழ், சர்க்கரை சேர்த்து கலக்கி, கம்பி பதம் வரும் வரை காய்ச்சவும். தேவைப்பட்டால் அதில் சில துளிகள் இளஞ்சிவப்பு நிற சிரப் சேர்க்கலாம்.

    வாணலியை அடுப்பில் வைத்து அதில் நெய் ஊற்றி சூடுபடுத்தவும். இப்போது தயாரித்து வைத்திருக்கும் கடலை மாவு கலவையை சல்லடைக் கரண்டி மூலம் அதில் ஊற்றவும். பூந்தி நன்றாக பொரித்து வந்ததும், அதை ஸ்ட்ராபெர்ரி பாகில் போடவும். இந்த பூந்திக் கலவை சூடாக இருக்கும் போதே, உருண்டைகளாக பிடிக்கவும். தேவைப்பட்டால் அதில் சிறிது நெய் சேர்க்கலாம். கடைசியாக, நெய்யில் வறுத்த பிஸ்தா, பாதாமை லட்டுகளின் மேல் தூவவும். இப்போது 'ஸ்ட்ராபெர்ரி லட்டு தயார்.

    • குழந்தைகளுக்கு இந்த ஸ்வீட் மிகவும் பிடிக்கும்.
    • இந்த ரெசிபி செய்ய அதிக நேரம் ஆகாது.

    தேவையான பொருட்கள்

    தேங்காய்த் துருவல், இனிப்பில்லாத கோவா - தலா 1/2 கப்,

    கேரட் துருவல் - 1 கப்,

    சர்க்கரை - 2 கப்,

    ஏலக்காய்த்தூள் - 1 சிட்டிகை,

    நெய் - 1 டேபிள்ஸ்பூன்,

    அலங்கரிக்க :

    பிஸ்தா, பாதாம் - சிறிது.

    செய்முறை

    கடாயில் நெய் ஊற்றி கேரட் சேர்த்து மிதமான தீயில் வைத்து பச்சை வாசனை போக வதக்கி, ஒரு பாத்திரத்தில் கொட்டவும்.

    பிஸ்தா, பாதாமை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    மீண்டும் அதே கடாயில் தேங்காய்த் துருவல் சேர்த்து வதக்கி சர்க்கரை சேர்த்து வதக்கவும்.

    சர்க்கரை கரைந்து வரும்போது கேரட் துருவல் போட்டு வதக்கி சுருண்டு வரும்போது கோவா துருவல், ஏலக்காய்த்தூள் சேர்த்து நன்கு கிளறி பர்ஃபி பதத்திற்கு வந்ததும் நெய் தடவிய தட்டில் கொட்டி அதன் மேல் பொடியாக நறுக்கிய பாதாம், பிஸ்தாவை கொட்டி நன்றாக அழுத்தி விடவும். ஆறியதும் துண்டுகள் போட்டு அலங்கரித்து பரிமாறவும்.

    இப்போது ராஜஸ்தான் ஸ்பெஷல் கேரட் கோவா பர்ஃபி ரெடி.

    குறிப்பு: நெய் தேவையானால் 1 டீஸ்பூன் கடைசியாக சேர்க்கலாம்.

    லைஃப்ஸ்டைல் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health

    • குழந்தைகளுக்கு இந்த கேக்சிக்கில்ஸ் ரொம்ப பிடிக்கும்.
    • இந்த ரெசிபி செய்ய 30 நிமிடமே போதுமானது.

    தேவையான பொருட்கள்:

    கேக் (உங்களுக்கு விருப்பமானது) - 2 கப்

    பட்டர் கிரீம் - 3 டேபிள் ஸ்பூன்

    வெள்ளை சாக்லெட் - 1 கப்

    சிலிக்கான் மோல்டு - 1

    ஐஸ்கிரீம் குச்சிகள் - தேவைக்கேற்ப

    செய்முறை:

    ஒரு சிறிய பாத்திரத்தில் சாக்லெட்டை கொட்டவும்.

    அதைவிட சற்று பெரிய பாத்திரத்தில் சிறிது தண்ணீர் ஊற்றி, அதில் சாக்லெட் இருக்கும் பாத்திரத்தை வைத்து தண்ணீரை சூடுப்படுத்தவும். தண்ணீரின் வெப்பத்தால் சாக்லெட் உருகியதும் அதை ஆறவைக்கவும்.

    சிலிக்கான் மோல்டை ஈரப்பதம் இல்லாமல் சுத்தமாக துடைக்கவும். பின்பு அதில் உருக்கிய வெள்ளை சாக்லெட்டை 3 டீஸ்பூன் ஊற்றி, எல்லா பக்கமும் படியுமாறு மெதுவாக சுழற்றவும்.

    பின்னர் ஐஸ்கிரீம் குச்சிகளை உருக்கிய சாக்லெட்டில் தோய்த்து மோல்டின் நடுப்பகுதியில் நுழைக்கவும். இது செட் ஆவதற்காக 10 முதல் 12 நிமிடங்கள் வரை குளிர்சாதனப் பெட்டியில் வைக்கவும்.

    இப்போது கேக்கை தூளாக உதிர்த்துக்கொள்ளவும். பின்பு அதனுடன் சிறிது சிறிதாக பட்டர் கிரீமை சேர்த்து நன்றாகக் கலக்கவும். இந்தக் கலவை சப்பாத்தி மாவு பதத்தில் இருக்க வேண்டும்.

    குளிர்சாதனப் பெட்டியில் வைத்திருக்கும் மோல்டை வெளியே எடுக்கவும்.

    தயாரித்து வைத்திருக்கும் கேக் கலவையை, மோல்டில் இருக்கும் வெள்ளை சாக்லெட் மீது நிரப்பவும்.

    பின்னர் அதன் மீது சிறிதளவு உருக்கிய வெள்ளை சாக்லெட்டை ஊற்றவும். (சாக்லெட் இறுகி இருந்தால் சில நிமிடம் மறுபடியும் சுடுநீரில் வைக்கவும்.) மீண்டும் 12 முதல் 15 நிமிடங்கள் வரை மோல்டை குளிர்சாதனப் பெட்டியில் வைத்து எடுக்கவும்.

    இப்போது சுவையான கேக்சிக்கில்ஸ் தயார்.

    லைஃப்ஸ்டைல் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health

    • குமரி மாவட்ட பிரபு அறக்கட்டளை சார்பில் நடந்தது
    • பாயும் ஒளி நீ எனக்கு என்ற புதிய திரைப்படம் நாகர்கோவில் ராஜேஷ் திரையரங்கில் திரையிடப் பட்டது

    கன்னியாகுமரி :

    நடிகர் விக்ரம் பிரபு நடித்த பாயும் ஒளி நீ எனக்கு என்ற புதிய திரைப்படம் நாகர்கோவில் ராஜேஷ் திரையரங்கில் திரையிடப் பட்டது. அதன் முதல் நாள் நிகழ்ச்சியில் திரைப்படத்தை பார்த்து கண்டுகளிக்க வந்த ரசிகர்களுக்கு குமரி மாவட்ட பிரபு அறக்கட்டளை தலைவர் சி.டி.ஆர். சுரேஷ் இனிப்பு வழங்கி வரவேற்றார்.

    நிகழ்ச்சியில் குமரி மாவட்ட விக்ரம் பிரபு மன்ற தலைவர் கருத்திருமன், அகில இந்திய சிவாஜி மன்ற பொதுச்செயலாளர் கோலப்பன், குமரி மாவட்ட பிரபு அறக்கட்டளை துணை செயலாளர்கள் சத்யன், பணிஜெஸ்டஸ் மற்றும் கிறிஸ்டோபர் ஜோ, தன பால், ராம்குமார் ஜெகரா ஜன், நாகராஜ பிரபு, சுரேஷ், ஜெயன், சுரேந்திரன், பாலமுருகன், சுந்தர் மற்றும் குமரி மாவட்ட சிவாஜி மன்ற நிர்வாகிகள், குமரி மாவட்ட பிரபு அறக்கட்ட ளை நிர்வாகிகள், குமரி மாவட்ட விக்ரம் பிரபு நற்பணி மன்ற நிர்வாகிகள் மற்றும் ரசிகர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    • குழந்தைகளுக்கு இந்த ஸ்நாக்ஸ் மிகவும் பிடிக்கும்.
    • சொஜ்ஜி அப்பம் என்பது பூரி போன்ற இனிப்பு உணவு.

    தேவையான பொருட்கள்

    ரவை - 1 கப்

    மைதா - 1 கப்

    துருவிய தேங்காய் - 1 கப்

    சர்க்கரை - ஒன்றரை கப்

    எண்ணெய் - பொரிக்கத் தேவையான அளவு

    உப்பு - சிட்டிகை

    நெய் - 1 டீஸ்பூன்

    செய்முறை

    வெறும் வாணலியில் ரவையை லேசான தீயில் வறுத்தெடுத்துக்கொள்ளுங்கள்.

    மற்றொரு பாத்திரத்தில் மைதா, உப்பு, நெய் மற்றும் தண்ணீர் சேர்த்து பூரி மாவு பதத்துக்குப் பிசைந்து இரண்டு மணிநேரம் ஊறவிடுங்கள்.

    இப்போது வறுத்த ரவையுடன் ஒன்றரை கப் தண்ணீர் சேர்த்து ரவையை வேகவிடுங்கள்.

    ரவை வெந்ததும் துருவிய தேங்காய், சர்க்கரை சேர்த்து கிளறி இறக்கிவைத்துவிடுங்கள். ரவை ஆறியதும் எலுமிச்சைப் பழ அளவு உருண்டைகளை உருட்டிக்கொள்ளுங்கள்.

    இப்போது பிசைந்து வைத்துள்ள மைதா மாவைச் சிறு உருண்டைகளாகத் திரட்டி அதன் நடுவில் ரவை பூரணத்தை வைத்து மூடி மீண்டும் பூரியாகத் திரட்டுங்கள்.

    வாணலியில் எண்ணெய் சூடானதும் திரட்டிவைத்துள்ள சொஜ்ஜி அப்பத்தை போட்டு பொரித்தெடுத்துப் பரிமாறுங்கள்.

    இப்போது சூப்பரான ஸ்நாக்ஸ் சொஜ்ஜி அப்பம் ரெடி.

    ஆரோக்கியம் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health

    • குழந்தைகளுக்கு சத்தான ஸ்நாக்ஸ் கொடுக்க விரும்பினால் இதை செய்து கொடுக்கலாம்.
    • இந்த அல்வா செய்முறையை பார்க்கலாம்.

    தேவையானபொருட்கள் :

    விதை நீக்கிய பேரீச்சம்பழம் - 100 கிராம்,

    கர்ஜூர் (Khajur )- 8 (விதை நீக்கியது),

    நெய் - 100 கிராம்,

    எண்ணெய் - 50 மில்லி,

    சர்க்கரை - 250 கிராம்,

    டூட்டி ஃப்ரூட்டி - 50 கிராம்,

    முந்திரி, திராட்சை - தலா 25 கிராம்,

    வெள்ளரி விதை - ஒரு டீஸ்பூன்.

    செய்முறை :

    பேரீச்சை, கர்ஜூர் இரண்டையும் முதல் நாள் இரவே மூழ்கும் அளவு நீர் விட்டு ஊறவைத்து, மறுநாள் அந்த நீருடன் நைஸாக அரைக்கவும்.

    நெய் - எண்ணெயை ஒன்றாக சேர்க்கவும்.

    வாணலியில் சர்க்கரை, அரைத்த விழுது சேர்த்து கிளறவும் (முதலில் அது இளகும். பயப்பட வேண்டாம்). அவ்வப்போது நெய் - எண்ணெய் கலவை சேர்த்து நன்கு கிளறவும்.

    ஒட்டாமல் வரும்போது முந்திரி, திராட்சை, வெள்ளரி விதை, டூட்டி ஃப்ரூட்டி சேர்த்து இறக்கவும்.

    சூப்பரான சத்தான ட்ரை ஃப்ரூட் அல்வா ரெடி.

    இதை அப்படியேவும் கொடுக்கலாம். அல்லது நெய் தடவிய தட்டில் கொட்டி ஆறியதும் துண்டுகளாக வெட்டியும் கொடுக்கலாம். இதை ஒரு வாரம் வரை பிரிட்ஜில் வைத்திருந்து சாப்பிடலாம்.

    ஆரோக்கியம் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health

    • வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்தே இந்த ரெசிபியை செய்யலாம்.
    • கோதுமை மாவில் வித்தியாசமான ருசியான ரெசிபிகளை செய்யலாம்.

    தேவையான பொருட்கள் :

    கோதுமை மாவு - 1 கப்

    வெல்லம் - 1/2 கப்

    அரிசி மாவு - 2 டேபிள் ஸ்பூன்

    கனிந்த வாழைப்பழம் - 2

    ஏலக்காய் பொடி - 1 சிட்டிகை

    சமையல் சோடா - 1/4 டீஸ்பூன்

    உப்பு - 1 சிட்டிகை

    எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு.

    செய்முறை :

    வெல்லத்தை பொடித்து கொள்ளவும்.

    வாழைப்பழத்தை நன்கு மசித்துக் கொள்ள வேண்டும்.

    ஒரு பாத்திரத்தில் 1/4 கப் தண்ணீர் ஊற்றி, அதில் வெல்லத்தைப் போட்டு அடுப்பில் வைத்து, வெல்லப் பாகு தயார் செய்து வடிகட்டிக் கொள்ள வேண்டும்.

    ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவு, அரிசி மாவு, மசித்த வாழைப்பழத்தை சேர்த்து, அத்துடன் காய்ச்சி வடிகட்டி வைத்துள்ள வெல்லப் பாகு, உப்பு, சமையல் சோடா, ஏலக்காய் பொடி, சேர்த்து, கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி, ஓரளவு கெட்டியாக கலந்து 30 மணி நேரம் அப்படியே வைக்கவும்.

    பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடானதும், ஒரு கரண்டியில் மாவு எடுத்து, எண்ணெயில் ஊற்றி, பொன்னிறமாக பொரித்து எடுக்க வேண்டும். இப்படி அனைத்து மாவையும் எண்ணெயில் பொரித்து எடுத்தால், வாழைப்பழ அப்பம் ரெடி!..

    ஆரோக்கியம் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health

    • பெற்றோர்கள் குழந்தைகளை பள்ளிக்கு அழைத்து வந்தனர்.
    • திருப்பூர் மாவட்டத்தில் நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகள் மொத்தம் 447 உள்ளது.

    திருப்பூர் :

    கோடை விடுமுறை முடிந்து இன்று1 முதல், 5-ம் வகுப்பு வரையிலான தொடக்கப்பள்ளிகள் திறக்கப்பட்டன. திருப்பூர் மாவட்டத்தில் தாராபுரம், காங்கயம், பல்லடம் , உடுமலை உள்பட அனைத்து இடங்களில் 1 முதல் 5-ம்வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்பட்டன. குழந்தைகள் அனைவரும் மிகவும் மகிழ்ச்சியுடன் பள்ளிக்கு வந்தனர். குழந்தைகள் என்பதால் பெற்றோர்கள் அவர்களை பள்ளிக்கு அழைத்து வந்தனர். 1-ம்வகுப்பு சேர்ந்த சில குழந்தைகள் பள்ளிக்கு செல்ல மறுத்து அழுது அடம்பிடித்தனர். அவர்களை பெற்றோர் மற்றும் ஆசிரியர்கள் ஆசுவாசப்படுத்தி அனுப்பி வைத்தனர். மேலும் குழந்தைகளுக்கு ஆசிரியர்கள் ரோஜா பூக்கள் கொடுத்து இனிப்பு வழங்கி வரவேற்றனர்.

    திருப்பூர் மாவட்டத்தில் நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகள் மொத்தம் 447 உள் ளது. இவற்றில் 6முதல், பிளஸ் 2 வகுப்பு வரை ஒரு லட்சத்து, 26 ஆயிரத்து 673 பேர் கல்வி பயில்கின்றனர். பள்ளி திறந்த கடந்த 12ந்தேதி ஒரு லட்சத்து 20 ஆயிரத்து 545 பேர் பள்ளிக்கு வருகை புரிந்தனர். 6,128 பேர் (5 சதவீதம்) பள்ளிக்கு வரவில்லை. நடப்பு வாரத்துக்குள் இவர்கள் பள்ளிக்கு திரும்ப தேவையான நடவடிக்கைகளை பள்ளி கல்வித்துறை தொடங்கி உள்ளது. திருப்பூரில் அதிகபட்சமாக 1-ம்வகுப்பில் 2,645 மாணவர்கள் அரசு பள்ளியில் இணைந்துள்ளனர். 2-ம் வகுப்பில் 220, 3-ம் வகுப்பில் 238, 4-ம் வகுப்பில் 241, 5-ம் வகுப்பில் 240, 6-ம் வகுப்பில் 532 பேர் இணைந்துள்ளனர். 7 மற்றும் 8-ம் வகுப்பில் முறையே 65 மற்றும் 62 பேர் என மொத்தம், 4,243 பேர் அரசு பள்ளிகளில் இணைந்துள்ளனர்.

    தமிழை முதன்மை பாடமாக தேர்வு செய்து படிக்க 1,351 மாணவர், 1,290 மாணவிகள் என 2,641 பேர் இணைந்துள்ளனர். ஆங்கில மீடியம் படிப்பை 840 மாணவர், 762 மாணவிகள் என 1,602 பேர் தேர்வு செய்துள்ளனர்.

    மாவட்ட கல்வி அலுவலர் அமுதா கூறுகையில், இன்று பள்ளிக்கு வரும் அனைத்து மாணவருக்கும் நோட்டு வழங்கப்படும். ஒரு வாரத்துக்குள் விடு பட்டவர்களுக்கு வழங்க தேவையான புத்தகம் பள்ளிகளில் இருப்பில் உள்ளது. தலைமை ஆசிரியர்களுக்கு இது குறித்து தெரியப்படுத்தப்பட்டுள்ளது. விரைவில் சீருடை, காலணி உள்ளிட்ட நலத்திட்டங்களும் குழந்தைகளுக்கு வழங்கப்படும் என்றார்.

    • கோடை காலத்தில் உடல் சூட்டை தணிக்கும் வெள்ளரிக்காய்.
    • இன்று வெள்ளரிக்காயில் பாயாசம் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

    தேவையான பொருட்கள்

    வெள்ளரிக்காய் - 1

    பால் - 250 மில்லி

    சர்க்கரை - தேவையான அளவு

    அரிசி மாவு - 3 தேக்கரண்டி

    பாதாம் மிக்ஸ் - 1 மேசைக்கரண்டி

    நெய் - 2 தேக்கரண்டி

    ஏலக்காய் - 2

    முந்திரி - தேவையான அளவு

    செய்முறை

    வெள்ளரிக்காயை தோல், விதையை நீக்கி விட்டு பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    அரிசி மாவுடன் கொஞ்சமாக தண்ணீர் சேர்த்து அதனுடன் பாதாம் மிக்ஸை கலந்து கொள்ளவும்.

    ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து நெய் ஊற்றி சூடானதும் முந்திரி பருப்பை போட்டு வறுத்து தனியாக வைத்துக்கொள்ளவும்.

    அதே பாத்திரத்தில் மீதமிருக்கும் நெய்யை சேர்த்து வெள்ளரிக்காயை நன்றாக வதக்கிக் கொள்ளுங்கள்.

    பிறகு கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி வேக வைத்துக் கொள்ளுங்கள்.

    நன்கு வெந்ததும் அரிசி மாவு கலவை சேர்த்து கிளறவும்.

    பின்னர் ஏலக்காய்த்தூள், சர்க்கரை சேர்த்து சிறிது நேரம் கொதிக்கவிட்டு இறக்கவும்.

    கடைசியாக காய்ச்சிய பால், முந்திரி பருப்பை சேர்த்து ருசித்தால் வெள்ளரிக்காய் பாயாசம் தயார்.

    ஆரோக்கியம் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health

    • பாப்கார்ன், சாக்லேட் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும்.
    • இன்று இது இரண்டையும் வைத்து ஒரு சூப்பரான ஸ்நாக்ஸ் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

    தேவையான பொருட்கள் :

    பாப்கார்ன் சோளம் - ஒரு கப்,

    குக்கீஸ் சாக்லேட் - 50 கிராம்,

    வெண்ணெய் (அ) நெய் - ஒரு டீஸ்பூன்,

    எண்ணெய், உப்பு - சிறிதளவு,

    செய்முறை :

    ஒரு பாத்திரத்தில் சாக்லேட்டை பொடித்துப் போடவும். வேறொரு பாத்திரத்தில் தண்ணீர் விட்டு கொதிக்க வைக்கவும். கொதிக்கும் போது சாக்லேட் உள்ள

    பாத்திரத்தை அதன் மேல் வைத்து சாக்லேட்டை ஆவியில் உருக வைக்கவும். உருக ஆரம்பித்ததும் இறக்கி நெய் (அ) வெண்ணெய் சேர்ந்து கட்டியில்லாமல் கிளறவும்.

    குக்கரில் எண்ணெய் விட்டு, பாப் கார்னைப் போட்டு, உப்பு சேர்த்து மூடியால் மூடி விடவும். பொரிந்ததும் எடுத்து ஒரு தட்டில் கொட்டவும்.

    பிறகு, தயாரித்த சாக்லேட் சிரப்பை வடிகட்டி மூலம் பாப்கார்ன் மேல் விடவும்.

    நன்கு குலுக்கி சீராக பரவ விடவும்.

    சூப்பரான சாக்லேட் பாப்கார்ன் ரெடி.

    இதனை ஒரு பிளாஸ்டிக் டப்பாவின் போட்டு வைத்து தேவைப்படும் போது பயன்படுத்தலாம்.

    • சாக்லேட் பால்ஸ் அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடிய ஒரு ரிச்சான ரெசிபி.
    • அளவான பொருட்களை வைத்து அதிரடியாக செய்யக்கூடிய ரெசிபி இது.

    தேவையான பொருட்கள்

    கோகோ பவுடர் - 25 கிராம்,

    கன்டென்ஸ்டு மில்க் - கால் கப்,

    பட்டர் - ஒரு ஸ்பூன்,

    உப்பு - சிறிது,

    சாக்லேட் பால்களை உருட்ட தேங்காய்த்துருவல் - 2 ஸ்பூன் (உலர வைத்தது).

    பருப்பு துகள்கள் சாக்லேட் மற்றும் கலர் ஸ்பிரிங்கில்ஸ்.

    செய்முறை

    ஒரு பிளேட்டில் சிறிது வெண்ணெய்யை தடவி வைக்கவும்.

    இன்னொரு பாத்திரத்தில் கன்டென்ஸ்டு மில்க், வெண்ணெய், உப்பு, கோகோ பவுடர் அனைத்தையும் ஒன்றாக கலந்து சூடுபடுத்தவும். மிதமான தீயில் கலவையைக் கலந்து பாகும் வரும் வரை கிளறிக் கொண்டே இருக்கவும்.

    இரண்டு நிமிடத்தில் கலவை கட்டியானதும் வெண்ணெய் பூசப்பட்ட தட்டில் மேல் ஊற்றவும்.

    சிறிது ஆற வைத்து இந்த பிளேடை பிரிட்ஜில் வைக்கவும்.

    ஒரு மணி நேரம் கழித்து ஃப்ரிட்ஜில் இருந்து வெளியே எடுத்து கையில் வெண்ணெயை தடவி இந்த சாக்லேட் கலவையை உருண்டைகளாக உருட்டவும்.

    இந்த உருண்டையை ஸ்ப்ரிங்கில்ஸ், பருப்பு துகள்கள் மீது உருட்டி எடுத்தால் சுவையான சாக்லேட்ஃபட்ஜ் பால்ஸ் தயார்.

    ×