search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கீர்"

    • கோடை காலத்தில் உடல் சூட்டை தணிக்கும் வெள்ளரிக்காய்.
    • இன்று வெள்ளரிக்காயில் பாயாசம் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

    தேவையான பொருட்கள்

    வெள்ளரிக்காய் - 1

    பால் - 250 மில்லி

    சர்க்கரை - தேவையான அளவு

    அரிசி மாவு - 3 தேக்கரண்டி

    பாதாம் மிக்ஸ் - 1 மேசைக்கரண்டி

    நெய் - 2 தேக்கரண்டி

    ஏலக்காய் - 2

    முந்திரி - தேவையான அளவு

    செய்முறை

    வெள்ளரிக்காயை தோல், விதையை நீக்கி விட்டு பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    அரிசி மாவுடன் கொஞ்சமாக தண்ணீர் சேர்த்து அதனுடன் பாதாம் மிக்ஸை கலந்து கொள்ளவும்.

    ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து நெய் ஊற்றி சூடானதும் முந்திரி பருப்பை போட்டு வறுத்து தனியாக வைத்துக்கொள்ளவும்.

    அதே பாத்திரத்தில் மீதமிருக்கும் நெய்யை சேர்த்து வெள்ளரிக்காயை நன்றாக வதக்கிக் கொள்ளுங்கள்.

    பிறகு கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி வேக வைத்துக் கொள்ளுங்கள்.

    நன்கு வெந்ததும் அரிசி மாவு கலவை சேர்த்து கிளறவும்.

    பின்னர் ஏலக்காய்த்தூள், சர்க்கரை சேர்த்து சிறிது நேரம் கொதிக்கவிட்டு இறக்கவும்.

    கடைசியாக காய்ச்சிய பால், முந்திரி பருப்பை சேர்த்து ருசித்தால் வெள்ளரிக்காய் பாயாசம் தயார்.

    ஆரோக்கியம் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health

    • பாயாசத்தில் பல்வேறு வகைகள் உள்ளன.
    • பாயாசத்தில் பழங்களை சேர்த்து செய்தால் சூப்பராக இருக்கும்.

    தேவையான பொருள்கள்:

    அன்னாசிப்பழத் துண்டுகள்- 1 கப்

    காய்ச்சிய பால் - 1 லிட்டர்

    கன்டென்ஸ்டு மில்க் - 1 கப்

    ஜவ்வரிசி - 1/2 கப்

    பைனாப்பிள் எசன்ஸ் - 1 ஸ்பூன்

    நெய் - தேவையான அளவு

    முந்திரி - தேவையான அளவு

    கிஸ்மிஸ் - தேவையான அளவு

    செய்முறை:

    * அன்னாசி பழத்தினை தோல் சீவி ஒரே அளவிலான சிறிய துண்டுகளாக வெட்டி வைத்துக் கொள்ள வேண்டும்.

    * ஜவ்வரிசியை அலசி சிறிது தண்ணீர் ஊற்றி ஊறவைக்கவும்.

    * அடுப்பில் அடி கனமான பாத்திரத்தை வைத்து அதில் பால் ஊற்றி மிதமான தீயில் வைத்து பாலை காய்ச்சிக் கொள்ள வேண்டும்.

    * மற்றொரு அடுப்பில் ஒரு பாத்திரம் 1.5 கப் தண்ணீர் ஊற்றி கொதிக்க ஆரம்பித்தவுடன் அதில் ஊற வைத்த ஜவ்வரிசியை போட்டு 5 நிமிடங்கள் வரை கொதித்த பின் அந்த தண்ணீரை வடிகட்டி ஜவ்வரிசியை தண்ணீரில் குளிர்ந்த நீரில் அலசி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

    * பால் கொதிக்க ஆரம்பித்தவுடன் அதில் பாதியளவு அன்னாசி பழத்தை சேர்த்து நன்றாக கொதிக்க விடவும்.

    * அடுத்து அதில் அலசி வைத்துள்ள ஜவ்வரிசியைச் சேர்த்து 3 நிமிடங்கள் வரை வேக விட வேண்டும்.

    * பிறகு அதில் கன்டென்ஸ்டு மில்க் சேர்த்து நன்றாக கலக்க வேண்டும். கன்டென்ஸ்டு மில்க் சேர்ப்பதால் அதில் இருக்கும் சர்க்கரை சுவையே போதுமானது. பாயாசம் நன்றாக கெட்டியான பின் அடுப்பினை அணைத்துவிட்டு பாயாசத்தை இறக்கி வைக்கவும்.

    * இப்போது இதில் ஒரு துளி பைனாப்பிள் எசன்ஸ் மற்றும் வெட்டி வைத்துள்ள பைனாப்பிள் துண்டுகளை சேர்க்க வேண்டும்.

    * அடுப்பில் ஒரு சிறிய பான் வைத்து அதில் நெய் ஊற்றி முந்திரி மற்றும் திராட்சை சேர்த்து வறுத்து பாயாசத்தில் ஊற்றி அலங்கரித்தால் தித்திப்பான அன்னாசி பழ பாயாசம் ரெடி!

    ஆரோக்கியம் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health

    • கேரளாவில் பாசிப்பருப்பு பாயாசம் மிகவும் பிரபலம்.
    • இன்று இந்த ரெசிபி செய்முறையை பார்க்கலாம்.

    தேவையான பொருட்கள்:

    பாசிப்பருப்பு - 1 கப்

    வெல்லம் - 1 கப் (துருவியது)

    நெய் - 2 டேபிள் ஸ்பூன்

    கெட்டியான தேங்காய் பால் - 1 கப்

    நீர் போன்ற தேங்காய் பால் - 2 1/2 கப்

    முந்திரி - 3 டேபிள் ஸ்பூன்

    உலர் திராட்சை - 3 டேபிள் ஸ்பூன்

    ஏலக்காய் - 4

    செய்முறை:

    * ஒரு வாணலியை அடுப்பில் 1 டேபிள் ஸ்பூன் நெய் ஊற்றி சூடானதும், அதில் முந்திரி மற்றும் உலர் திராட்சை சேர்த்து பொன்னிறமாக வறுத்து ஒரு தட்டில் தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

    * பின்பு அதில் பாசிப்பருப்பை சேர்த்து 2 நிமிடம் நல்ல மணம் வரும் வரை வறுத்துக் கொள்ள வேண்டும்.

    * பிறகு அதில் நீர் போன்ற தேங்காய் பாலை சேர்த்து கொதிக்க வைக்க வேண்டும்.

    * அதன் பின் அதில் ஏலக்காய் சேர்த்து மிதமான தீயில் 15 நிமிடம் அல்லது பருப்பு வேகும் வரை மூடி வைக்க வேண்டும்.

    * பருப்பு நன்கு வெந்த பின், வெல்லத்தை சேர்த்து 5 நிமிடம் நன்கு கிளறி இறக்க வேண்டும்.

    * இறுதியில் அதில் கெட்டியான தேங்காய் பாலை சேர்த்து கிளறி விட்டு, அத்துடன் எஞ்சிய 1 டேபிள் ஸ்பூன் நெய் மற்றும் வறுத்த முந்திரி, உலர் திராட்சையை சேர்த்து கிளறினால், சுவையான கேரளா ஸ்டைல் பாசிப்பருப்பு பாயாசம் ரெடி!

    • சிவப்பரிசியில் அதிகளவு சத்துக்கள் நிறைந்துள்ளது.
    • சிவப்பரிசியில் பல்வேறு ருசியான ரெசிபிகளை செய்யலாம்.

    தேவையான பொருட்கள் :

    சிவப்பு அரிசி - 5 டேபிள்ஸ்பூன்,

    பால் - ஒரு லிட்டர்,

    ஏலக்காய்த்தூள் - கால் டீஸ்பூன்,

    பாதாம் - 10 (துருவிக் கொள்ளவும்),

    சர்க்கரை - தேவையான அளவு.

    செய்முறை:

    சிவப்பு அரிசியை மிக்ஸியில் ரவை போல் உடைத்துக் கொள்ளவும்.

    பாலுடன் உடைத்த அரிசியை சேர்த்துக் கொதிக்கவிடவும்.

    நன்கு கொதித்து வரும்போது, அடுப்பை 'சிம்'மில் வைத்து 10 நிமிடம் வேகவிடவும்.

    பின்னர் சர்க்கரை சேர்க்கவும். எல்லாம் நன்கு சேர்ந்து வரும்போது ஏலக்காய்த்தூள், துருவிய பாதாம் சேர்த்து இறக்கவும்.

    இதை சூடாகவோ, குளிர வைத்தோ பரிமாறலாம்.

    • கார்த்திகை தீபமான இன்று இறைவனுக்கு படைக்க தேங்காய் பால் பாயாசம் செய்யலாம்.
    • இந்த பாயாசம் செய்வது சுலபம், சுவையோ அருமை.

    தேவையான பொருட்கள் :

    தேங்காய் துருவல் - ஒரு கப்

    வெல்லம் - ஒரு கப்

    பச்சரிசி மாவு - ஒரு டேபிள் ஸ்பூன்

    நெய் - 2 டீஸ்பூன்

    ஏலக்காய்த்தூள் - அரை டீஸ்பூன்

    முந்திரி பருப்பு - 10

    காய்ந்த திராட்சை - 10

    செய்முறை :

    முதலில், மிக்ஸி ஜாரில் தேங்காய் துருவல் சேர்த்து அத்துடன் வெந்நீர் சேர்த்து நன்றாக அரைத்து தேங்காய் பால் எடுக்கவும்.

    ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி கொதி வந்ததும், வெல்லம் சேர்த்து கரைத்து அந்த தண்ணீரை வடிகட்டி வைக்கவும்.

    தற்போது, தேங்காய் பாலுடன் அரிசி மாவு சேர்த்து நன்றாக கரைத்துக் கொள்ளவும்.

    அதனுடன், வடிகட்டிய வெல்லம் சேர்த்து இந்த கலவையை அடுப்பில் வைத்து 2 நிமிடங்கள் கொதிக்கவிட்டு திக்கான பதம் வரும் வரை கிளறவும்.

    இறுதியாக, கடாயில் நெய்விட்டு சூடானதும் முந்திரி பருப்பு, காய்ந்த திராட்சை போட்டு வறுத்து பாயாசத்துடன் சேர்த்து கலந்தால் சுவையான தேங்காய் பால் பாயாசம் ரெடி..!.

    • கேரட்டில் அதிகளவு சத்துக்கள் நிறைந்துள்ளது.
    • தினமும் ஒரு கேரட் சாப்பிடுவது உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.

    தேவையான பொருட்கள்:

    கேரட் - 250 கிராம்

    வெல்லம் - கால் கப்

    தண்ணீர் - தேவையான அளவு

    தேங்காய் பால் - ஒரு கப்

    ஏலக்காய் தூள் - அரை டீஸ்பூன்

    உப்பு - ஒரு சிட்டிகை

    நெய் - இரண்டு டீஸ்பூன்

    முந்திரி, திராட்சை - தேவையான அளவு

    செய்முறை:

    கேரட்டை விழுதாக அரைத்து கொள்ளவும்.

    கடாயில் நெய் ஊற்றி காய்ந்ததும் முந்திரி, திராட்சை சேர்த்து பொன்னிறமாக வறுத்து எடுத்து வைத்து கொள்ளவும்.

    ஒரு கிண்ணத்தில் வெல்லம் மற்றும் தண்ணீர் சேர்த்து கரைத்து கொள்ளவும்.

    பிறகு, அதில் கேரட் விழுது சேர்த்து ஒரு கொதி வந்தவுடன் தேங்காய் பால், ஏலக்காய் தூள் சேர்த்து கொதிக்கவிடவும்.

    பின், வறுத்த முந்திரி, திராட்சை சேர்த்து கலந்து இறக்கவும்.

    இப்போது சூப்பரான கேரட் பாயாசம் ரெடி.

    • கேரட்டில் பல்வேறு ரெசிபிகளை செய்யலாம்.
    • கேரட் கீர் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும்.

    தேவையான பொருட்கள்

    கேரட் - 3

    பாதாம் பவுடர் - 1 1/2 மேசைக்கரண்டி

    பால் - அரை கப்

    பாதாம் பருப்பு - 8

    சீனி - கால் கப் + 2 மேசைக்கரண்டி

    உப்பு - ஒரு சிட்டிகை

    செய்முறை

    * கேரட்டை துருவி எடுத்துக் கொள்ளவும்.

    * பாதாம் பருப்பை பொடித்து கொள்ளவும்.

    * ஒரு பாத்திரத்தில் கால் கப் தண்ணீர் ஊற்றி துருவிய காரட்டை போட்டு 10 நிமிடம் வேக வைக்கவும்.

    * வெந்ததும் எடுத்து தண்ணீரை வடித்து விட்டு மிக்ஸியில் போட்டு ஒரு முறை அரைத்துக் கொள்ளவும்.

    * அரைத்த விழுதை ஒரு பாத்திரத்தில் போட்டு அதனுடன் சீனி, பாதாம் பவுடர், பாதாம் பருப்பு, உப்பு, பால் ஆகியவற்றை சேர்த்து கலந்துக் கொள்ளவும்.

    * இதை அப்படியே குடித்தால் மேலே ஒரு தேக்கரண்டி நெய் சேர்த்து குடிக்கவும், அல்லது ப்ரிட்ஜில் வைத்து நன்கு குளிர்ச்சியாக குடிப்பதாக இருந்தால் நெய் தேவையில்லை.

    * தனியாக துருவி வேக வைக்காமல் குக்கரிலேயே அப்படியே வேக வைத்து எடுத்து பிசைந்து விட்டுக் கொண்டு மற்ற பொருட்களையும் சேர்க்கலாம்.

    * சுவையான கேரட் கீர் தயார்.

    • கேரட் கீர் செய்ய 15 நிமிடங்களே போதுமானது.
    • வீட்டிற்கு திடீரென விருந்தினர் வந்தால் இந்த கீர் செய்து அசத்தலாம்.

    தேவையான பொருட்கள்

    கேரட் - 3

    பாதாம் பவுடர் - 1 1/2 மேசைக்கரண்டி

    பால் - அரை கப்

    பாதாம் பருப்பு - 10

    சர்க்கரை - கால் கப் + 2 மேசைக்கரண்டி

    உப்பு - ஒரு சிட்டிகை

    செய்முறை

    கேரட்டை துருவி எடுத்துக் கொள்ளவும்.

    ஒரு பாத்திரத்தில் கால் கப் தண்ணீர் ஊற்றி துருவிய கேரட்டை போட்டு 10 நிமிடம் வேக வைக்கவும்.

    வெந்ததும் எடுத்து தண்ணீரை வடித்து விட்டு மிக்ஸியில் போட்டு ஒரு முறை அரைத்துக் கொள்ளவும்.

    அதை எடுத்து ஒரு பாத்திரத்தில் போட்டு சர்க்கரை, பாதாம் பவுடர், பாதாம் பருப்பு, உப்பு, பால் ஆகியவற்றை சேர்த்து கலந்து அடுப்பில் வைத்து மிதமான தீயில் சிறிது நேரம் கொதிக்க விடவும்.

    கீர் திக்கான பதம் வந்தவுடன் அதை இறக்கி சூடாகவோ, பிரிட்ஜில் வைத்து நன்கு குளிர்ச்சியாகவோ குடிக்கலாம்.

    இப்போது சூப்பரான கேரட் கீர் ரெடி.

    ×