search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இந்தியா ஆஸ்திரேலியா தொடர்"

    • 4-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி சத்தீஷ்கார் தலைநகர் ராய்ப்பூரில் இன்று தொடங்கியது.
    • இந்த தொடரில் இந்தியா 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

    ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி, இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 5 ஆட்டங்கள் கொண்ட 20 ஓவர் தொடரில் பங்கேற்றுள்ளது. இந்த தொடரில் இந்தியா 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

    இந்த நிலையில் இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 4-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி சத்தீஷ்கார் தலைநகர் ராய்ப்பூரில் இன்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.

    இந்திய லெவன்:

    யாஷஸ்வி ஜெய்ஸ்வால், ருதுராஜ் கெய்க்வாட், ஜிதேஷ் சர்மா, சூர்யகுமார் யாதவ், ஸ்ரேயாஸ் அய்யர், ஷ்ரேயாஸ் ஐய்யர், ரிங்கு சிங், அக்சர் பட்டேல், ரவி பிஷ்னோய், தீபக் சாஹர், முகேஷ் குமார்.

    இந்திய லெவன்:

    யாஷஸ்வி ஜெய்ஸ்வால், ருதுராஜ் கெய்க்வாட், ஜிதேஷ் சர்மா, சூர்யகுமார் யாதவ், ஸ்ரேயாஸ் அய்யர், ஷ்ரேயாஸ் ஐய்யர், ரிங்கு சிங், அக்சர் பட்டேல், ரவி பிஷ்னோய், தீபக் சாஹர், முகேஷ் குமார்.

    ஆஸ்திரேலிய லெவன்:

    ஜோஷ் பிலிப், டிராவிஸ் ஹெட், பென் மெக்டெர்மாட், ஆரோன் ஹார்டி, டிம் டேவிட், மேத்யூ ஷார்ட், மேத்யூ வேட் (கேப்டன்), கிறிஸ் கிரீன், பென் துவார்ஷஸ், ஜாசன் பெரென்டோர்ப், தன்வீர் சங்கா.

    • கவுகாத்தி போட்டியில் 222 ரன் குவித்தும் தோற்றது பரிதாபமே.
    • பேட்டிங்கில் ருதுராஜ் கெய்க்வாட் மிகவும் நல்ல நிலையில் உள்ளார்.

    ராய்ப்பூர்:

    இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் இடையேயான 5 போட்டி கொண்ட 20 ஓவர் தொடர் இந்தியாவில் நடைபெற்று வருகிறது.

    விசாகப்பட்டினத்தில் நடந்த முதல் ஆட்டத்தில் 8 விக்கெட் வித்தியாசத்திலும், திருவனந்தபுரத்தில் நடைபெற்ற 2-வது போட்டியில் 44 ரன் வித்தியாசத்திலும் இந்தியா வெற்றி பெற்றது. கவுகாத்தியில் நடந்த 3-வது ஆட்டத்தில் ஆஸ்திரேலியா 5 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.

    இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 4-வது 20 ஓவர் போட்டி சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரில் நாளை (வெள்ளிக்கிழமை) நடக்கிறது.

    சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி கடந்த ஆட்டத்தில் ஏற்பட்ட தோல்விக்கு பதிலடி கொடுத்து தொடரை கைப்பற்றுமா? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.

    கவுகாத்தி போட்டியில் 222 ரன் குவித்தும் தோற்றது பரிதாபமே. பனிப்பொழிவு பாதிப்பை ஏற்படுத்தி இருந்தது. அதே நேரத்தில் பந்துவீச்சில் முன்னேற்றம் அடைவது அவசியமாகும்.

    பேட்டிங்கில் ருதுராஜ் கெய்க்வாட் மிகவும் நல்ல நிலையில் உள்ளார். அவர் 1 சதம், 1 அரைசதத்துடன் 181 ரன் குவித்துள்ளார். கேப்டன் சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷன் , ஜெய்ஷ் வால், ரிங்கு சிங் போன்ற அதிரடி பேட்ஸ்மேன்களும் உள்ளனர். கடந்த 3 போட்டியில் இடம் பெறாத ஸ்ரேயாஸ் அய்யர் அணியோடு இனணகிறார். அவரது வருகை கூடுதல் பலம் சேர்க்கும். அவர் ஆடும் போது திலக்வர்மா நீக்கப்படலாம்.

    பந்துவீச்சில் பிஷ்னோய் 6 விக்கெட் வீழ்த்தி இந்த தொடரில் முன்னிலையில் உள்ளார். பிரசித் கிருஷ்ணா இடத்தில் தீபக்சாஹர் இடம் பெற வாய்ப்பு உள்ளது.

    மேத்யூ வேட் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி இந்த ஆட்டத்திலும் வென்று தொடரை 2-2 என்ற கணக்கில் சமன் செய்யும் ஆர்வத்தில் இருக்கிறது.

    கடைசி 2 போட்டிக்கான ஆஸ்திரேலிய அணியில் பெரிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. அதிரடி பேட்ஸ்மேன் மேக்ஸ்வெல், ஸ்டோனிஸ், ஜோஷ் இங்லிஸ், அபோட் ஆகியோர் நாடு திரும்பியுள்ளனர். 3-வது போட்டிக்கு முன்பே ஸ்டீவ் சுமித், ஆடம் ஜம்பா ஆஸ்திரேலியா சென்று விட்டனர்.

    பென் மெக்டர்மட், ஜோஷ் பிலிப்பி, , பென் துவரீஷுயிஸ், கிறிஸ் கிரீன் ஆகியோர் அணியோடு இணைந்துள்ளனர். ஆஸ்திரேலியா பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் சமபலத்துடன் திகழ்கிறது.

    இரு அணிகளும் நாளை மோதுவது 30-வது 20 ஓவர் போட்டியாகும். இதுவரை நடந்த 29 ஆட்டத்தில் இந்தியா 17-ல், ஆஸ்திரேலியா 11-ல் வெற்றி பெற்றுள்ளன. ஒரு போட்டி முடிவு இல்லை.

    இரவு 7 மணிக்கு தொடங்கும் இந்த போட்டி ஸ்போர்ட்ஸ் 18 மற்றும் ஜியோ சினிமாவில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

    • மேக்ஸ்வெல் 104 ரன்களுடனும் (48 பந்து, 8 பவுண்டரி, 8 சிக்சர்), விளாசி கடைசி வரை அவுட் ஆகாமல் இருந்தார்.
    • இந்த போட்டியில் ஆட்ட நாயகனாக மேக்ஸ்வெல் தேர்வு செய்யப்பட்டார்.

    கவுகாத்தி:

    இந்தியா- ஆஸ்திரேலியா இடையிலான 3-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி அசாம் மாநிலம் கவுகாத்தியில் நேற்றிரவு நடந்தது. முதலில் பேட்டிங் செய்த இந்தியா, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 3 விக்கெட்டுக்கு 222 ரன்கள் குவித்தது.

    பின்னர் மெகா இலக்கை நோக்கி ஆடிய ஆஸ்திரேலிய அணி ஒரு கட்டத்தில் 68 ரன்னுக்குள் 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

    இந்த நெருக்கடியான சூழலில் களம் கண்ட ஆல்-ரவுண்டர் கிளென் மேக்ஸ்வெல், தனக்கே உரிய பாணியில் மட்டையை நாலாபுறமும் சுழட்டினார்.

    கடைசி இரு ஓவரில் அந்த அணியின் வெற்றிக்கு 43 ரன்கள் தேவைப்பட்டது. 19-வது ஓவரை வீசிய அக்ஷர் பட்டேலின் ஓவரில் 22 ரன் எடுத்தனர். இதையடுத்து கடைசி ஓவரில் ஆஸ்திரேலியாவுக்கு 21 ரன்கள் தேவையாக இருந்தது. கடைசி பந்தில் 2 ரன் தேவைப்பட்டது. அந்த பந்தை மேக்ஸ்வெல் நேர்பகுதியில் சர்வ சாதாரணமாக பவுண்டரிக்கு விரட்டி ஆட்டத்தை வெற்றிகரமாக முடித்து வைத்தார்.

    மேக்ஸ்வெல் 104 ரன்களுடனும் (48 பந்து, 8 பவுண்டரி, 8 சிக்சர்), விளாசி கடைசி வரை அவுட் ஆகாமல் இருந்தார். மேலும் ஆட்டநாயகன் விருதை அவரே பெற்றார்.

    இந்நிலையில் ரோகித் சர்மாவின் சாதனையை மேக்ஸ்வெல் சமன் செய்தார். மேக்ஸ்வெல்லுக்கு இது 4-வது சதமாக பதிவானது. சர்வதேச 20 ஓவர் கிரிக்கெட்டில் அதிக சதம் அடித்தவரான இந்திய வீரர் ரோகித் சர்மாவின் (4 சதம்) சாதனையும் சமன் செய்தார்.

    மேலும் ஆஸ்திரேலிய வீரர் மேக்ஸ்வெல் 47 பந்துகளில் சதத்தை எட்டினார். இதன் மூலம் 20 ஓவர் கிரிக்கெட்டில் ஆஸ்திரேலியர்களின் அதிவேக சதத்தை சமன் செய்தார். ஏற்கனவே ஆரோன் பிஞ்ச், ஜோஷ் இங்லிஸ் தலா 47 பந்தில் சதம் அடித்திருந்தனர்.

    • இறுதிவரை போராடிய மேக்ஸ்வெல் சதம் அடித்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
    • 5 போட்டிகள் கொண்ட தொடரில் 2-1 என்ற கணக்கில் இந்தியா முன்னிலையில் உள்ளது.

    இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 3-வது டி20 போட்டி கவுகாத்தியில் இன்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி களமிறங்கிய இந்திய அணியில் ருதுராஜ் அதிரடியாக விளையாடிய சதம் அடித்தார். அவருக்கு அடுத்தப்படியாக சூர்யகுமார் 39 ரன்களும் திலக் வர்மா 31 ரன்கள் விளாசினார். இதன் மூலம் இந்தியா 20 ஓவர் முடிவில் 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 222 ரன்கள் குவித்தது.

    இதனையடுத்து கடுமையான இலக்குடன் ஆஸ்திரேலிய அணி களமிறங்கியது. தொடக்க வீரர்களான ஹெட் முதல் பந்தில் இருந்தே அதிரடியாக விளையாடினார். அவருடன் ஜோடி சேர்ந்த ஆரோன் ஹார்டியும் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர். 4.2 ஓவரில் 47 ரன்கள் குவித்த இந்த ஜோடியை அர்தீப்சிங் பிரித்தார். ஆரோன் ஹார்டி 16 ரன்னில் அவுட் ஆனார். அவர் அவுட் ஆன சிறிது நேரத்தில் 18 பந்தில் 35 ரன்கள் குவித்த ஹெட்டும் பெவிலியன் திரும்பினார்.

    அடுத்து இங்கிலீஸ் 6 ரன்னிலும் ஸ்டோய்னிஸ் 17 ரன்னிலும் டிம் டேவிட் 0 ரன்னிலும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். ஒரு முனையில் விக்கெட் சரிந்தாலும் மறுமுனையில் அதிரடி காட்டிய மேக்ஸ்வெல் அரை சதம் அடித்து அசத்தினார். கடைசி வரை போராடிய மேக்ஸ்வெல் 47 பந்துகளில் சதம் அடித்து அசத்தினார்.

    இறுதி வரை போராடிய ஆஸ்திரேலிய அணி கடைசி பந்தில் வெற்றியை ருசித்தது. இதனால் இந்தியாவை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இதன் மூலம் 5 போட்டிகள் கொண்ட தொடரில் 2-1 என்ற கணக்கில் இந்தியா முன்னிலை வகிக்கிறது.

    • ருதுராஜ் கெய்க்வாட் அதிரடியாக விளையாடி ரன்குவிப்பில் ஈடுபட்டார்.
    • ஆஸ்திரேலியா சார்பில் ரிச்சர்ட்சன், பெரன்டார்ஃப் மற்றும் ஆரோன் ஹார்டி தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

    ஆஸ்திரேலியா அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இந்த தொடரின் முதல் இரண்டு போட்டிகளில் இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது. அந்த வகையில், தொடரின் மூன்றாவது டி20 போட்டி கவுகாத்தியில் நடைபெறுகிறது.

    இரு அணிகளிடையேயான மூன்றாவது டி20 போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி இந்திய அணிக்கு யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் ருதுராஜ் கெய்க்வாட் துவக்க வீரர்களாக களமிறங்கினர். ஜெய்ஸ்வால் 6 ரன்களில் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினார்.

    இவரை தொடர்ந்து களமிறங்கிய இஷான் கிஷன் டக் அவுட் ஆனார். பிறகு களமிறங்கிய கேப்டன் சூர்யகுமார் யாதவ் 39 ரன்களை குவித்து ஆட்டமிழந்தார். ருதுராஜ் கெய்க்வாட் அதிரடியாக விளையாடி ரன்குவிப்பில் ஈடுபட்டார். இவர் 57 பந்துகளில் 123 ரன்களை குவித்தார். திலக் வர்மா சிறப்பாக ஆடி 31 ரன்களை குவித்தார்.

    போட்டி முடிவில் இந்திய அணி 3 விக்கெட்டுகளை இழந்து 222 ரன்களை குவித்தது. ஆஸ்திரேலியா சார்பில் கேன் ரிச்சர்ட்சன், பெரன்டார்ஃப் மற்றும் ஆரோன் ஹார்டி தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர். 

    • முதல் 2 டி20 போட்டியில் இந்தியா வெற்றி பெற்றுள்ளது.
    • இரு அணிகளுக்கும் இடையேயான 3-வது போட்டியில் ஆஸ்திரேலியா டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது.

    கவுகாத்தி:

    மேத்யூ வேட் தலைமையிலான ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 5 ஆட்டங்கள் கொண்ட 20 ஓவர் தொடரில் விளையாடி வருகிறது. இதில் விசாகப்பட்டினத்தில் நடந்த முதலாவது ஆட்டத்தில் 2 விக்கெட் வித்தியாசத்திலும், திருவனந்தபுரத்தில் நடந்த 2-வது ஆட்டத்தில் 44 ரன் வித்தியாசத்திலும் இந்தியா வெற்றி பெற்று தொடரில் 2-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

    இந்நிலையில் இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 3-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி அசாம் மாநிலம் கவுகாத்தியில் உள்ள பார்சாபாரா கிரிக்கெட் ஸ்டேடியத்தில் இன்று நடக்கிறது. இதில் ஆஸ்திரேலியா டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது.

    இந்த போட்டியில் வேகப்பந்து வீச்சாளர் முகேஷ் குமார் இடம் பெறவில்லை. திருமணம் நடைபெற உள்ளதால் அவர் இந்த தொடரில் இருந்து விலகி உள்ளார். அவருக்கு பதிலாக தீபக் சாஹர் அணியில் இணைந்துள்ளார்.

    • 5 போட்டிகள் கொண்ட தொடரில் இந்தியா 2-0 என்ற கணக்கில் முன்னிலை வகுக்கிறது.
    • இரு அணிகள் மோதும் 3-வது டி20 போட்டி நாளை நடக்கிறது.

    இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலியா அணி, 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. முதல் டி20-யில் இந்தியா 2 விக்கெட் வித்தியாசத்திலும் 2-வது போட்டியில் 44 ரன்கள் வித்தியாசத்திலும் இந்தியா வெற்றி பெற்றுள்ளது. இதன்மூலம் 5 போட்டிகள் கொண்ட தொடரில் இந்தியா 2-0 என்ற கணக்கில் முன்னிலை வகுக்கிறது.

    இந்நிலையில் இரு அணிகள் மோதும் 3-வது டி20 போட்டி நாளை நடக்கிறது. இந்த போட்டி கவுதாத்தியில் இரவு 7 மணிக்கு தொடங்குகிறது. ஆஸ்திரேலிய அணி தரப்பில் ஸ்மித், ஜோஸ் இங்கிலீஸ் ஆகியோர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். இந்திய அணி தரப்பில் ஜெய்ஸ்வால், ருதுராஜ் தொடக்கம் சிறப்பாக உள்ளது. 

    மிடில் ஆர்டரில் இஷான் கிஷன், சூர்யகுமார் யாதவ் பக்கபலமாக உள்ளனர். பினிசிங்கில் ரிங்கு சிங் அதிரடி காட்டுகிறார். அவர் நேற்று நடந்த போட்டியில் 9 பந்தில் 31 ரன்கள் விளாசினார்.

    நாளை இந்தியா வெற்றி பெற்றால் தொடரை கைப்பற்றும் நிலையில் உள்ளது. ஆஸ்திரேலியா 2 போட்டிகளில் தோல்வியடைந்துள்ளதால் முதல் வெற்றியை ருசிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. இதனால் போட்டியில் அனல் பறக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. 

    • 2-வது போட்டியில் ஜெய்ஸ்வால், ருதுராஜ், இஷான் கிஷன் ஆகியோர் அரைசதம் விளாசி அசத்தினர்.
    • 2-வது டி20 போட்டியில் ஆட்டநாயகனாக ஜெய்ஸ்வால் தேர்வு செய்யப்பட்டார்.

    5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ஆஸ்திரேலியா - இந்தியா அணிகள் மோதி வருகின்றனர். இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டி20 போட்டியில் இந்திய அணி 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அசத்தியது. இதனையடுத்து 2-வது டி20 போட்டி நேற்று நடைபெற்றது.

    இதில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா 20 ஓவர் முடிவில் 4 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 235 ரன்கள் எடுத்தது. ஜெய்ஸ்வால், ருதுராஜ், இஷான் கிஷன் ஆகியோர் அரைசதம் விளாசி அசத்தினர். இதனையடுத்து களமிறங்கிய ஆஸ்திரேலியா 20 ஓவர் முடிவில் 191 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை தழுவியது. இதன்மூலம் 5 போட்டிகள் கொண்ட தொடரில் இந்தியா 2-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இந்த போட்டியில் ஆட்டநாயகனாக ஜெய்ஸ்வால் தேர்வு செய்யப்பட்டார். 

    இந்நிலையில் முதல் டி20 போட்டியில் ருதுராஜ் பந்து ஏதும் சந்திக்காமலே ரன் அவுட் முறையில் வெளியேறினார். இதற்கு ருதுராஜ் கெய்க்வாட்டிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன் என ஜெய்ஸ்வால் கூறியுள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    முதல் டி20 போட்டியில் தவறு செய்து விட்டேன். மன்னித்து விடுங்கள் ருது பாய். அது என் தவறு என்பதை நான் ஒப்புக் கொள்கிறேன். ருதுராஜ் அடக்கம் மற்றும் மிகவும் அரவணைக்கக் கூடியவர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோதும் முதல் 20 ஓவர் போட்டி ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் நாளை நடக்கிறது.
    • ஸ்ரேயாஸ் அய்யர் கடைசி 2 ஆட்டத்தில் அணியோடு இனைந்து கொள்வார்.

    விசாகப்பட்டினம்:

    ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி உலகக் கோப்பைக்கு முன்பு இந்தியாவில் 3 ஒருநாள் போட்டித் தொடரில் விளையாடியது. இந்த தொடரை இந்தியா 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. பின்னர் நடந்த உலகக்கோப்பை போட்டியில் ஆஸ்திரேலியா சாம்பியன் பட்டம் பெற்றது. இறுதிப் போட்டியில் 6 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தியது.

    தற்போது அந்த அணி இந்திய மண்ணில் 5 இருபது ஒவர் போட்டி தொடரில் ஆடுகிறது. ஒருநாள் போட்டி தொடரின் தொடர்ச்சியாக 20 ஓவர் ஆட்டங்கள் நடைபெறுகிறது.

    இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோதும் முதல் 20 ஓவர் போட்டி ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் நாளை (23-ந்தேதி) நடக்கிறது.

    உலகக் கோப்பையில் விளையாடிய சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷன் மற்றும் பிரசித் கிருஷ்ணா ஆகியோர் மட்டுமே இந்த தொடரில் இடம் பெற்றுள்ளனர். ஸ்ரேயாஸ் அய்யர் கடைசி 2 ஆட்டத்தில் அணியோடு இனைந்து கொள்வார். சூர்யகுமார் யாதவ் கேப்டனாக பணியாற்றுகிறார்.

    இளம் வீரர்களை கொண்ட இந்திய அணி வெற்றியுடன் கணக்கை தொடங்குமா? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது. உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் ஏற்பட்ட தோல்விக்கு பழி தீர்க்க வேண்டிய கட்டாயம் இந்தியாவுக்கு இருக்கிறது.

    இரு அணிகள் மோதிய கடைசி 5 இருபது ஓவர் போட்டியில் இந்தியா 3-2 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் சொந்த மண்ணில் நடந்த 3 போட்டி கொண்ட 20 ஓவர் தொடரை இந்தியா 2-1 என்ற கணக்கில் கைப்பற்றி இருந்தது.

    ஆஸ்திரேலிய அணிக்கு மேத்யூ வேட் கேப்டனாக உள்ளார். உலகக் கோப்பை யில் ஆடிய டிரெவிஸ் ஹெட், மேக்ஸ்வெல், ஸ்டீவ் சுமித்,ஜோஸ் இங்லிஸ், மார்கஸ் ஸ்டோனிஸ், ஆடம் ஜம்பா , அபோட் ஆகியோர் 20 ஓவர் தொடரில் இடம் பெற்றுள்ளனர்.

    இரு அணிகளும் நாளை மோதுவது 27-வது ஓவர் போட்டியாகும். இதுவரை நடந்த 26 ஆட்டத்தில் இந்தியா 15-ல், ஆஸ்திரேலியா 10-ல் வெற்றி பெற்றன. ஒரு ஆட்டம் முடிவு இல்லை.

    நாளைய ஆட்டம் இரவு 7 மணிக்கு நடக்கிறது. ஸ்போர்ட்ஸ் 18 மற்றும் ஜியோ சினிமாவில் இந்தப் போட்டி நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

    இந்தியா:-

    சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), ருதுராஜ் கெய்க்வாட் (துணை கேப்டன்), இஷான்கிஷன், ஜெய்ஷ்வால், ஜிதேஷ் சர்மா, ரிங்குசிங், ஷிவம் துபே, திலக் வர்மா, அக்ஷர் படேல், வாஷிங்டன் சுந்தர், அர்தீப்சிங், அவேஷ்கான், முகேஷ்குமார், பிரசித் கிருஷ்ணா, ரவி பிஷ்னோய்.

    ஆஸ்திரேலியா:-

    மேத்யூ வேட் (கேப்டன்), டிரெவிஸ் ஹெட், ஆரோன் ஹார்டி, மேக்ஸ்வெல், ஸ்டீவ் சுமித், ஸ்டோ னிஸ், டிம் டேவிட், பெகரன் டார்ப், ஜோஸ் இங்லிஸ், தன்வீர் சங்கா, அபோட், நாதன் எல்லிஸ், கானே ரிச்சர்ட்சன், ஆடம் ஜம்பா, மேத்யூ ஷார்ட்.

    • இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 5 டி20 போட்டிகள் கொண்ட தொடர்களில் விளையாட உள்ளது.
    • இதற்கான அணியில் சாஹல் இடம் பிடிக்கவில்லை.

    ஆசிய கோப்பைக்கான தொடரிலும் ஒருநாள் உலகக் கோப்பைக்கான தொடரிலும் இந்திய அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் யுஸ்வேந்திர சாஹலுக்கு இடம் கிடைக்கவில்லை. அப்போது யுஸ்வேந்திர சாஹல் சூரியன் மீண்டும் பிரகாசமாக உதிக்கும் என சமூக வலைதளத்தில் பதிவிட்டிருந்தார். அப்போது அந்த பதிவு வைரலானது.

    இந்நிலையில் தற்போது ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 5 டி20 போட்டிகள் கொண்ட தொடர்களில் இந்திய அணி விளையாட உள்ளது. இதற்கான அணியிலும் சாஹல் இடம் பிடிக்கவில்லை.

    இந்த சூழலில் அவர் எக்ஸ் தளத்தில் சிரித்தபடி பதிவிட்டுள்ளார். இந்த பதிவு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    இந்திய அணியில் இடம் பிடித்தவர்கள் விவரம்:-

    1. சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), 2. ருதுராஜ் கெய்க்வாட் (துணைக் கேப்டன்), 3. இஷான் கிஷன், 4. ஜெய்ஸ்வால், 5. திலக் வர்மா, 6. ரிங்கு சிங், 7. ஜிதேஷ் சர்மா (விக்கெட் கீப்பர்), 8. வாஷிங்டன் சுந்தர், 9. அக்சார் பட்டேல், 10. ஷிவம் டுபே, 11. ரவி பிஷ்னோய், 12. அர்ஷ்தீப்சிங், 13. பிரசித் கிருஷ்ணா, 14. அவேஷ் கான், 15. முகேஷ் குமார்.

    • ஆஸ்திரேலிய அணிக்கு கேப்டனாக மேத்யூ வேட் செயல்படுவார் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.
    • உலகக்கோப்பை வென்ற அணியில் இடம்பெற்றிருந்த வீரர்களில் 7 பேர் டி20 தொடருக்கான அணியில் இடம்பெற்றுள்ளனர்.

    மும்பை:

    உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இந்தியாவை வீழ்த்தி ஆஸ்திரேலியா சாம்பியன் பட்டம் வென்றது. உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் நிறைவடைந்துள்ள நிலையில் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாட உள்ளது.

    இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான முதல் டி20 போட்டி வரும் 23-ம் தேதி விசாகப்பட்டினத்தில் நடைபெற உள்ளது.

    இந்நிலையில் இந்தியாவுக்கு எதிரான டி20 தொடரில் இருந்து ஆஸ்திரேலிய அணியின் அதிரடி தொடக்க ஆட்டக்காரர் டேவிட் வார்னர் விலகியுள்ளார். உலகக்கோப்பை வெற்றிக்கு பின் அவர் தாயகம் திரும்ப முடிவு செய்துள்ளதால் இந்தியாவுக்கு எதிரான டி20 தொடரில் இருந்து விலகியுள்ளார். அவருக்கு பதிலாக ஆல் ரவுண்டர் ஆரோன் ஹார்டி அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

    இந்த தொடருக்கான ஆஸ்திரேலிய அணிக்கு கேப்டனாக மேத்யூ வேட் செயல்படுவார் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. உலகக்கோப்பை வென்ற அணியில் இடம்பெற்றிருந்த வீரர்களில் 7 பேர் டி20 தொடருக்கான அணியில் இடம்பெற்றுள்ளனர்.

    இந்த தொடருக்கான ஆஸ்திரேலியா அணி விவரம் பின்வருமாறு;-

    மேத்யூ வேட் (கேப்டன்), ஆரோன் ஹார்டி, ஜேசன் பெஹ்ரன்டோர்ப், சீன் அபோட், டிம் டேவிட், நாதன் எல்லிஸ், டிராவிஸ் ஹெட், ஜோஷ் இங்கிலிஸ், கிளென் மேக்ஸ்வெல், தன்வீர் சங்கா, மேட் ஷார்ட், ஸ்டீவ் ஸ்மித், மார்கஸ் ஸ்டோய்னிஸ், கேன் ரிச்சர்ட்சன், ஆடம் ஜம்பா

    • ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ஐந்து டி20 தொடர்களில் இந்திய அணி விளையாடவுள்ளது.
    • தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்தியா 3 டி20, 3 ஒருநாள் போட்டி, 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது.

    புதுடெல்லி:

    இந்திய அணியின் ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா, வங்காளதேசத்துக்கு எதிரான ஆட்டத்தில் பந்தை தடுக்க முயற்சித்தபோது இடறிவிழுந்து இடது கணுக்காலில் காயமடைந்தார். காயம் முழுமையாக குணம் அடையாததால் ஹர்திக் பாண்ட்யா உலக கோப்பை தொடரில் இருந்து விலகினார். அவருக்கு பதிலாக பிரசித் கிருஷ்ணா அணியில் சேர்க்கப்பட்டார்.

    இந்நிலையில் உலகக் கோப்பை தொடர் முடிந்து இந்திய அணி ஆஸ்திரேலியா மற்றும் தென் ஆப்பிரிக்கா தொடர்களில் விளையாட உள்ளது. இந்த இரு தொடர்களிலும் ஹர்திக் பாண்ட்யா விலகி உள்ளார்.

    கணுக்காலில் ஏற்பட்ட காயத்திற்கு அறுவை சிகிச்சை தேவையா இல்லையா என்பது குறித்து மருத்துவர்கள் குழு இன்னும் முடிவெடுக்கவில்லை. மேலும் அவர் 2 மாதங்கள் ஓய்வில் இருக்க மருத்துவர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.

    ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ஐந்து டி20 தொடர்களில் இந்திய அணி விளையாடவுள்ளது. இந்த தொடர் வருகிற 23-ந் தேதி விசாகப்பட்டினத்தில் தொடங்குகிறது.

    இந்த தொடர் முடிவடைந்த பிறகு இந்திய அணி தென் ஆப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் செல்ல உள்ளது. அங்கு 3 டி20, 3 ஒருநாள் போட்டி, 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது.

    ×