search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட்

    இந்திய அணியின் பந்து வீச்சை பந்தாடிய மேக்ஸ்வெல்- 5 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா வெற்றி
    X

    இந்திய அணியின் பந்து வீச்சை பந்தாடிய மேக்ஸ்வெல்- 5 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா வெற்றி

    • இறுதிவரை போராடிய மேக்ஸ்வெல் சதம் அடித்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
    • 5 போட்டிகள் கொண்ட தொடரில் 2-1 என்ற கணக்கில் இந்தியா முன்னிலையில் உள்ளது.

    இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 3-வது டி20 போட்டி கவுகாத்தியில் இன்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி களமிறங்கிய இந்திய அணியில் ருதுராஜ் அதிரடியாக விளையாடிய சதம் அடித்தார். அவருக்கு அடுத்தப்படியாக சூர்யகுமார் 39 ரன்களும் திலக் வர்மா 31 ரன்கள் விளாசினார். இதன் மூலம் இந்தியா 20 ஓவர் முடிவில் 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 222 ரன்கள் குவித்தது.

    இதனையடுத்து கடுமையான இலக்குடன் ஆஸ்திரேலிய அணி களமிறங்கியது. தொடக்க வீரர்களான ஹெட் முதல் பந்தில் இருந்தே அதிரடியாக விளையாடினார். அவருடன் ஜோடி சேர்ந்த ஆரோன் ஹார்டியும் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர். 4.2 ஓவரில் 47 ரன்கள் குவித்த இந்த ஜோடியை அர்தீப்சிங் பிரித்தார். ஆரோன் ஹார்டி 16 ரன்னில் அவுட் ஆனார். அவர் அவுட் ஆன சிறிது நேரத்தில் 18 பந்தில் 35 ரன்கள் குவித்த ஹெட்டும் பெவிலியன் திரும்பினார்.

    அடுத்து இங்கிலீஸ் 6 ரன்னிலும் ஸ்டோய்னிஸ் 17 ரன்னிலும் டிம் டேவிட் 0 ரன்னிலும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். ஒரு முனையில் விக்கெட் சரிந்தாலும் மறுமுனையில் அதிரடி காட்டிய மேக்ஸ்வெல் அரை சதம் அடித்து அசத்தினார். கடைசி வரை போராடிய மேக்ஸ்வெல் 47 பந்துகளில் சதம் அடித்து அசத்தினார்.

    இறுதி வரை போராடிய ஆஸ்திரேலிய அணி கடைசி பந்தில் வெற்றியை ருசித்தது. இதனால் இந்தியாவை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இதன் மூலம் 5 போட்டிகள் கொண்ட தொடரில் 2-1 என்ற கணக்கில் இந்தியா முன்னிலை வகிக்கிறது.

    Next Story
    ×