என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
கிரிக்கெட்
ஹாட்ரிக் வெற்றி ஆர்வத்தில் இந்தியா- ஆஸ்திரேலியாவுடன் நாளை மோதல்
- 5 போட்டிகள் கொண்ட தொடரில் இந்தியா 2-0 என்ற கணக்கில் முன்னிலை வகுக்கிறது.
- இரு அணிகள் மோதும் 3-வது டி20 போட்டி நாளை நடக்கிறது.
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலியா அணி, 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. முதல் டி20-யில் இந்தியா 2 விக்கெட் வித்தியாசத்திலும் 2-வது போட்டியில் 44 ரன்கள் வித்தியாசத்திலும் இந்தியா வெற்றி பெற்றுள்ளது. இதன்மூலம் 5 போட்டிகள் கொண்ட தொடரில் இந்தியா 2-0 என்ற கணக்கில் முன்னிலை வகுக்கிறது.
இந்நிலையில் இரு அணிகள் மோதும் 3-வது டி20 போட்டி நாளை நடக்கிறது. இந்த போட்டி கவுதாத்தியில் இரவு 7 மணிக்கு தொடங்குகிறது. ஆஸ்திரேலிய அணி தரப்பில் ஸ்மித், ஜோஸ் இங்கிலீஸ் ஆகியோர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். இந்திய அணி தரப்பில் ஜெய்ஸ்வால், ருதுராஜ் தொடக்கம் சிறப்பாக உள்ளது.
மிடில் ஆர்டரில் இஷான் கிஷன், சூர்யகுமார் யாதவ் பக்கபலமாக உள்ளனர். பினிசிங்கில் ரிங்கு சிங் அதிரடி காட்டுகிறார். அவர் நேற்று நடந்த போட்டியில் 9 பந்தில் 31 ரன்கள் விளாசினார்.
நாளை இந்தியா வெற்றி பெற்றால் தொடரை கைப்பற்றும் நிலையில் உள்ளது. ஆஸ்திரேலியா 2 போட்டிகளில் தோல்வியடைந்துள்ளதால் முதல் வெற்றியை ருசிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. இதனால் போட்டியில் அனல் பறக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்