என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
கிரிக்கெட்
ரோகித் சர்மாவின் சாதனையை சமன் செய்த மேக்ஸ்வெல்
- மேக்ஸ்வெல் 104 ரன்களுடனும் (48 பந்து, 8 பவுண்டரி, 8 சிக்சர்), விளாசி கடைசி வரை அவுட் ஆகாமல் இருந்தார்.
- இந்த போட்டியில் ஆட்ட நாயகனாக மேக்ஸ்வெல் தேர்வு செய்யப்பட்டார்.
கவுகாத்தி:
இந்தியா- ஆஸ்திரேலியா இடையிலான 3-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி அசாம் மாநிலம் கவுகாத்தியில் நேற்றிரவு நடந்தது. முதலில் பேட்டிங் செய்த இந்தியா, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 3 விக்கெட்டுக்கு 222 ரன்கள் குவித்தது.
பின்னர் மெகா இலக்கை நோக்கி ஆடிய ஆஸ்திரேலிய அணி ஒரு கட்டத்தில் 68 ரன்னுக்குள் 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
இந்த நெருக்கடியான சூழலில் களம் கண்ட ஆல்-ரவுண்டர் கிளென் மேக்ஸ்வெல், தனக்கே உரிய பாணியில் மட்டையை நாலாபுறமும் சுழட்டினார்.
கடைசி இரு ஓவரில் அந்த அணியின் வெற்றிக்கு 43 ரன்கள் தேவைப்பட்டது. 19-வது ஓவரை வீசிய அக்ஷர் பட்டேலின் ஓவரில் 22 ரன் எடுத்தனர். இதையடுத்து கடைசி ஓவரில் ஆஸ்திரேலியாவுக்கு 21 ரன்கள் தேவையாக இருந்தது. கடைசி பந்தில் 2 ரன் தேவைப்பட்டது. அந்த பந்தை மேக்ஸ்வெல் நேர்பகுதியில் சர்வ சாதாரணமாக பவுண்டரிக்கு விரட்டி ஆட்டத்தை வெற்றிகரமாக முடித்து வைத்தார்.
மேக்ஸ்வெல் 104 ரன்களுடனும் (48 பந்து, 8 பவுண்டரி, 8 சிக்சர்), விளாசி கடைசி வரை அவுட் ஆகாமல் இருந்தார். மேலும் ஆட்டநாயகன் விருதை அவரே பெற்றார்.
இந்நிலையில் ரோகித் சர்மாவின் சாதனையை மேக்ஸ்வெல் சமன் செய்தார். மேக்ஸ்வெல்லுக்கு இது 4-வது சதமாக பதிவானது. சர்வதேச 20 ஓவர் கிரிக்கெட்டில் அதிக சதம் அடித்தவரான இந்திய வீரர் ரோகித் சர்மாவின் (4 சதம்) சாதனையும் சமன் செய்தார்.
மேலும் ஆஸ்திரேலிய வீரர் மேக்ஸ்வெல் 47 பந்துகளில் சதத்தை எட்டினார். இதன் மூலம் 20 ஓவர் கிரிக்கெட்டில் ஆஸ்திரேலியர்களின் அதிவேக சதத்தை சமன் செய்தார். ஏற்கனவே ஆரோன் பிஞ்ச், ஜோஷ் இங்லிஸ் தலா 47 பந்தில் சதம் அடித்திருந்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்