search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இந்திய வானிலை ஆய்வு மையம்"

    • தென்மாவட்டங்களில் படிப்படியாக மழை குறையும்.
    • டெல்டா மாவட்டங்களில் இன்று காலை முதல் இடி, மின்னலுடன் மழை பெய்து வருகிறது.

    சென்னை:

    தமிழகத்தின் தென் மாவட்ட பகுதிகளில் பெய்து வரும் கனமழையால் வெள்ளக்காடாகி உள்ளது. வரலாறு காணாத வகையில் மழை கொட்டி தீர்த்ததால் தென்மாவட்ட மக்கள் வெள்ளத்தில் மிதக்கிறார்கள். பஸ், ரெயில் போக்குவரத்து முற்றிலும் தடைபட்டுள்ளது. மழை தற்போது குறைந்து வெள்ள நீர் வடிந்து வந்தாலும் மக்கள் இன்னும் இயல்பு நிலைக்கு திரும்பவில்லை.

    இதற்கிடையில் தென் மாவட்டங்களில் இன்றும் கனமழை நீடிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என்றும் தென் தமிழகத்தில் இன்று கனமழை நீடிக்கும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் தென்காசி உள்ளிட்ட சில தென் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    தென்மாவட்டங்களில் படிப்படியாக மழை குறையும். ஓரிரு இடங்களில் மட்டும் பலத்த மழை பெய்யக்கூடும். புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் 5 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை இலாகா தெரிவித்துள்ளது.

    இதற்கிடையில் டெல்டா மாவட்டங்களில் இன்று காலை முதல் இடி, மின்னலுடன் மழை பெய்து வருகிறது. புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், ராமநாதபுரம் மற்றும் சிவகங்கை மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மழை பெய்யும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • நாளை வடதமிழக கடலோர பகுதிகளை மிச்சாங் புயல் நெருங்கும்.
    • புயல் காரணமாக தமிழகத்தில் பல்வேறு இடங்களில் கன மழை பெய்து வருகிறது.

    சென்னை:

    தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவி வந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், நேற்று அதிகாலையில் தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று மிச்சாங் புயலாக உருவானது. சென்னைக்கு தென்கிழக்கே 290 கி.மீ. தொலைவில் மையம் கொண்டுள்ள மிச்சாங் புயல் தீவிர புயலாக வலுப்பெற்றுள்ளது.

    நாளை வடதமிழக கடலோர பகுதிகளை மிச்சாங் புயல் நெருங்கும். மாலை 5 மணிக்கு மேல் தரைக்காற்று அதிகளவு வீசக்கூடும்.

    நெல்லூர்-மசூலிப்பட்டினம் இடையே வருகிற 5ந்தேதி முற்பகல் புயல் கரையை கடக்கும்.

    மிச்சாங் புயலை எதிர்கொள்ள முப்பது கப்பல்களுடன் கடலோர காவல் படையினர் தயார் நிலையில் உள்ளனர். புயலையொட்டி இரவு நேரத்திலும் கடல் பகுதியில் கடலோர காவல் படையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபடுவர். 8 கப்பல்கள் தொடர் ரோந்து பணியிலும், 10க்கும் மேற்பட்ட ஹெலிகாப்டர்களும் தயார் நிலையில் உள்ளன.

    புயல் காரணமாக தமிழகத்தில் பல்வேறு இடங்களில் கன மழை பெய்து வருகிறது. ஆழ்கடல் பகுதிக்கு மீன்பிடிக்க சென்றுள்ள மீனவர்கள் விரைவாக கரை திரும்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • வங்கக்கடலில் உருவாகி உள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி நாளை மறுநாள் புயலாக வலுப்பெறும்.
    • வடதமிழகம்-தெற்கு ஆந்திரா கடலோர பகுதிகளில் கடும் பாதிப்பை ஏற்படுத்த வாய்ப்பு இருப்பதாக கணிக்கப்பட்டுள்ளது.

    சென்னை:

    வங்கக்கடலில் உருவாகி உள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி நாளை மறுநாள் (3-ந்தேதி) புயலாக வலுப்பெறும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.

    இந்த புயல் வடதமிழகம்-தெற்கு ஆந்திரா கடலோர பகுதிகளில் கடும் பாதிப்பை ஏற்படுத்த வாய்ப்பு இருப்பதாக கணிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில் இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:

    * தமிழகத்திற்கு நாளை முதல் வரும் 5ந்தேதி வரை ஆரஞ்ச் நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    * நாளை முதல் 5ந்தேதி வரை கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும்.

    * வரும் 3 மற்றும் 4ந் தேதிகளில் வட தமிழகத்தின் கடலோர பகுதிகளில் கன முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.

    * இந்த கால கட்டத்தில் 12 முதல் 20 செ.மீ. வரை மழை பதிவாக கூடும்.

    இவ்வாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • அடுத்த 24 மணி நேரத்தில் 64.5 மில்லி மீட்டர் முதல் 115.5 மில்லி மீட்டர் வரை மழை பெய்ய வாய்ப்பு.
    • கரையோரங்களில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி வானிலை மையம் எச்சரித்துள்ளது.

    திருவனந்தபுரம்:

    வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி, தீவிர காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக வலுவடைந்துள்ளது. இதன் காரணமாக கேரள மாநிலம் முழுவதும் மழை பெய்து வருகிறது. நேற்று பல இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்தது.

    இந்த மழை வருகிற 4-ந்தேதி வரை நீடிக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இன்றும் புயல், காற்று, இடியுடன் மழை பெய்தது. மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசியது. இன்று பத்தனம்திட்டா, கோட்டயம், எர்ணாகுளம், இடுக்கி மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

    அடுத்த 24 மணி நேரத்தில் 64.5 மில்லி மீட்டர் முதல் 115.5 மில்லி மீட்டர் வரை மழை பெய்ய வாய்ப்பு இருப்பதால், கரையோரங்களில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி வானிலை மையம் எச்சரித்துள்ளது.

    • தெற்கு அந்தமான் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியது.
    • வங்கக்கடலில் புயல் உருவாகும் பட்சத்தில் "மிச்சாங்" என பெயர் வைக்கப்படும்.

    புதுடெல்லி:

    தெற்கு அந்தமான் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியது. காற்றழுத்த தாழ்வு பகுதியானது நாளை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

    காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்ற பின், அடுத்த 48 மணி நேரத்தில், தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் புயலாக வலுப்பெற வாய்ப்பு உள்ளது. வங்கக்கடலில் புயல் உருவாகும் பட்சத்தில் "மிச்சாங்" என பெயர் வைக்கப்படும்.

    தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் 29-ந்தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும்.
    • புதிய காற்றழுத்த தாழ்வு பகுதியால் அந்தமான் தீவுகளில் மின்னலுடன் கூடிய மழை பெய்யும்.

    சென்னை:

    தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி 26-ந்தேதி உருவாகுவதற்கான வாய்ப்பு இருப்பதாகவும் அது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து 29-ந்தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுபெறும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.

    ஆனால் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி தெற்கு அந்மான் கடல் பகுதியில் உருவாவதற்கான சாத்திய கூறுகள் தாமதம் ஆயின. இன்று 27-ந்தேதி உருவாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று உருவாவதில் மேலும் தாமதம் ஏற்பட்டது.

    சூறாவளி சுழற்சியானது தற்போது தெற்கு அந்தமான் கடல் பகுதியில் உள்ளது. மேலும் சராசரி கடல் மட்டத்தில் இருந்து 5.8 கி.மீ. வரை சுழற்சி நீண்டுள்ளது. அதன் தாக்கத்தில் காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 24 மணி நேரத்தில் தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் உருவாக வாய்ப்பு உள்ளன.

    இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து 29-ந்தேதி தென்கிழக்கு வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    இதன் காரணமாக அந்தமான் தீவுகளில் இன்றும் நாளையும் கனமழை பெய்யக்கூடும். எனவே 29-ந்தேதி முதல் டிசம்பர் 2-ந்தேதி வரை தென்கிழக்கு வங்காள விரிகுடா, மத்திய வங்காள விரிகுடா பகுதிக்கு மீனவர்கள் செல்ல வேணடாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    கடலோர தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை, காரைக்கால் பகுதிகளிலும் இடி-மின்னலுடன் லேசான மழை பெய்யும். நாளை (28-ந்தேதி) முதல் 2-ந்தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    சென்னை மற்றும் புறநகரில் ஒருசில இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தெரிவித்து உள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • குமரிக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.
    • வளிமண்டல சுழற்சியால் தமிழகத்தில் பருவமழை மேலும் தீவிரம் அடைகிறது.

    சென்னை:

    தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை பரவலாக பெய்து வருகிறது. கடந்த வாரம் வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதியால் தமிழ்நாட்டின் பல மாவட்டங்களில் கனமழை பெய்தது.

    குறிப்பாக டெல்டா மாவட்டங்கள், தென் மாவட்டங்கள், கடலோர தமிழகப் பகுதிகளில் கன மழை பெய்தது. சென்னையில் 2 நாட்கள் பலத்த மழை கொட்டியது.

    அந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தீவிரம் அடைந்து புயலாக மாறி ஒடிசா, மேற்கு வங்கம் கடல் பகுதிக்கு நகர்ந்து சென்றதால் தமிழகத்தில் எதிர்பார்த்த மழை பெய்யாமல் குறைந்தது.

    இந்த நிலையில் குமரிக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.

    இதன் காரணமாக தமிழகத்தில் இன்று முதல் 24-ந்தேதி வரை அநேக இடங்களில லேசான மழையும், ஒரு சில பகுதிகளில் கனமழையும் பெய்யக்கூடும் என்று இந்திய வானிலை மையம் அறிவித்துள்ளது. மேலும் 22, 23 மற்றும் 24-ந் தேதியில் ஒரு சில இடங்களில் மிக கனமழை பெய்வதற்கு வாய்ப்பு உள்ளது. இதற்கான ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை கொடுக்கப்பட்டு உள்ளது.

    இன்று சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை உள்ளிட்ட 10 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

    கடலோர தமிழகத்தில் அநேக இடங்களிலும், உள் தமிழகத்தின் ஒரு சில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி-மின்னலுடன் இன்று லேசான மழை பெய்யும்.

    செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, ராமநாதபுரம் மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

    சென்னையில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி, மின்னலுடன் லேசான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    சென்னையில் நள்ளிரவு மற்றும் அதிகாலையில் ஒரு சில பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. சென்னை, செங்கல்பட்டு, விழுப்புரம் மற்றும் புதுச்சேரியில் இன்று கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    வளிமண்டல சுழற்சியால் தமிழகத்தில் பருவமழை மேலும் தீவிரம் அடைகிறது. அடுத்து வருகின்ற 4 நாட்களுக்கு கனமழைக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    பேரிடர் மேலாண்மை துறை மற்றும் அனைத்து மாவட்ட கலெக்டர்கள் முன்எச்சரிக்கையுடன் மழையை எதிர்கொள்ள தயாராக இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • இன்று முதல் 6ந்தேதி வரை தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.
    • நாளை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

    புதுடெல்லி:

    இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:

    தமிழ்நாட்டிற்கு நாளை ஆரஞ்சு நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இன்று முதல் 6ந்தேதி வரை தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. தமிழகத்தில் நாளை கனமழை முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.

    நாளை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • அடுத்த 5 நாட்களுக்கு பரவலாக மாநிலம் முழுவதும் மழை பெய்யும்.
    • 11 மாவட்டங்களில் 6 முதல் 11 செ.மீ. வரை மழை பெய்யுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலத்தில் பல மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. அடுத்த 5 நாட்களுக்கு பரவலாக மாநிலம் முழுவதும் மழை பெய்யுமென்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    திருவனந்தபுரம், கொல்லம், பத்தினம்திட்டா மாவட்டங்களை தவிர்த்து மீதமுள்ள 11 மாவட்டங்களில் 6 முதல் 11 செ.மீ. வரை மழை பெய்யுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதனால் அந்த மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    • காலை 11 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை சூரிய ஒளி உடலில் நேரடியாக படுவதை தவிர்க்க வேண்டும்.
    • பகலில் மது, காபி, டீ மற்றும் கார்பன் ஏற்றப்பட்ட பானங்கள் உள்ளிட்டவைகளை குடிப்பதை தவிர்க்க வேண்டும்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலத்தில் இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை வழக்கம்போல் தொடங்காமல் தாமதமாக தொடங்கியது. அப்போது அனைத்து மாவட்டங்களிலும் கனமழை பெய்தது. சில மாவட்டங்களில ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் குடியிருப்பு பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்தது.

    ஆனால் பருவமழை சில வாரங்களே நீடித்தது. அதன்பிறகு மழை பெய்யவில்லை. இதனால் வழக்கத்தை விட அங்கு வெயில் அதிகமாக அடித்தது. இந்தநிலையில் கேரள மாநிலத்தில் இன்றும், நாளையும் அதிக வெப்ப நிலை நிலவும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

    கேரள மாநிலத்தில் இயல்பை விட 3 முதல் 5 டிகிரி வரை வெப்பம் அதிகமாக இருக்கும் என்றும், 9 மாவட்டங்களில் 34 முதல் 36 டிகிரி வரை வெயில் சுட்டெரிக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    திருவனந்தபுரம் மற்றும் கொல்லத்தில் 36 டிகிரி செல்சியசும், ஆலப்புழா, கோட்டயம் மற்றும் பாலக்காட்டில் 35 டிகிரி செல்சியசும், எர்ணாகுளம், திருச்சூர், மலப்புரம் மற்றும் கோழிக்கோடு மாவட்டங்களில் 34 டிகரி செல்சியசும் வெப்பம் பதிவாகும் என்று கூறப்பட்டுள்ளது.

    அதிகரிக்கும் வெப்ப நிலையை கருத்தில் கொண்டு கேரள மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம், பொதுமக்கள் கடைபிடிக்க வேண்டிய எச்சரிக்கை அறிவுறுத்தல்களையும் வெளியிட்டு இருக்கிறது. அதன் விவரம் வருமாறு:-

    காலை 11 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை சூரிய ஒளி உடலில் நேரடியாக படுவதை தவிர்க்க வேண்டும், நீரிழப்பை தடுக்க கையில் குடிநீர் பாட்டில் வைத்திருக்க வேண்டும், தாகம் இல்லாவிட்டாலும் நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும்.

    பகலில் மது, காபி, டீ மற்றும் கார்பன் ஏற்றப்பட்ட பானங்கள் உள்ளிட்டவைகளை குடிப்பதை தவிர்க்க வேண்டும், வெளியில் செல்லும்போது தளர்வான மற்றும் வெளிர் நிற ஆடைகள் அணிய வேண்டும், குடை அல்லது தொப்பி பயன்படுத்துவது நல்லது.

    மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய பள்ளி அதிகாரிகள் மற்றும் பெற்றோர்கள் கூடுதல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். முதியவர்கள், கர்ப்பிணிகள், குழந்தைகள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் ஏதேனும் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் காலை 11 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை உடலில் சூரிய ஒளி படுவதை தவிர்க்க வேண்டும்.

    காட்டுத்தீயை ஏற்படுத்தக்கூடிய நிகழ்வுகளை தவிர்க்க வேண்டும், பொதுமக்கள் இந்த காலக்கட்டத்தில் நிறைய பழங்கள் மற்றும் காய்கறிகளை உட்கொள்ள வேண்டும்.

    மேற்கண்டவை உள்ளிட்ட மேலும் பல்வேறு அறிவுறுத்தல்கள் வெளியிடப்பட்டுள்ளன.

    • புனே, கோலாப்பூர், ராய்காட் உள்ளிட்ட மாவட்டங்களில் ஜூலை 27-ந்தேதி வரை ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
    • மும்பையில் நாளை கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்பு.

    மும்பை:

    மகாராஷ்டிராவில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்த நிலையில் கடந்த சில நாட்களாக மும்பையில் கனமழை பெய்து வருகிறது. இதனால் பல மாவட்டங்களில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.

    இந்நிலையில் புனே, கோலாப்பூர், ராய்காட் உள்ளிட்ட மாவட்டங்களில் ஜூலை 27-ந்தேதி வரை ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    ராய்காட், ரத்னகிரி, சிந்துத்ரக், புனே, கோலாப்பூர் மற்றும் சதாரா மாவட்டங்களில் ஜூலை 27-ந்தேதி வரை கனமழை முதல் மிக கனமழை பெய்யும். மும்பையிலும் நாளை கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    • கேரளாவில் பலத்த மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
    • அதிக மழை பொழிவுக்கு வாய்ப்பு உள்ள மாவட்டங்களில் பேரிடர் மீட்பு துறையினர் உஷார் நிலையில் இருக்கும்படி மாநில அரசு அறிவுறுத்தி உள்ளது.

    திருவனந்தபுரம்:

    கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கி உள்ள நிலையில் வடகிழக்கு வங்கக்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது.

    இதன் காரணமாக கேரளாவில் அடுத்த 5 நாட்களுக்கு இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

    மேலும் மத்திய கிழக்கு அரபிக்கடலில் நிலை கொண்டுள்ள பிபோர்ஜோய் புயல், அடுத்த 36 மணி நேரத்தில் மீண்டும் தீவிரம் அடைந்து வடகிழக்கு திசையிலும், அடுத்த 3 நாட்களில் வடமேற்கு திசையிலும் நகரக்கூடும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    இதன்காரணமாகவும் கேரளாவில் பலத்த மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதையடுத்து மாநிலத்தில் அதிக மழை பொழிவுக்கு வாய்ப்பு உள்ள மாவட்டங்களில் பேரிடர் மீட்பு துறையினர் உஷார் நிலையில் இருக்கும்படி மாநில அரசு அறிவுறுத்தி உள்ளது.

    மேலும் திருவனந்தபுரம், கொல்லம், பத்தினம்திட்டா, ஆலப்புழா உள்பட 8 மாவட்டங்களுக்கு அடுத்த 5 நாட்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

    ×