search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    கேரளாவில் 11 மாவட்டங்களுக்கு பலத்த மழை எச்சரிக்கை
    X

    கேரளாவில் 11 மாவட்டங்களுக்கு பலத்த மழை எச்சரிக்கை

    • அடுத்த 5 நாட்களுக்கு பரவலாக மாநிலம் முழுவதும் மழை பெய்யும்.
    • 11 மாவட்டங்களில் 6 முதல் 11 செ.மீ. வரை மழை பெய்யுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலத்தில் பல மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. அடுத்த 5 நாட்களுக்கு பரவலாக மாநிலம் முழுவதும் மழை பெய்யுமென்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    திருவனந்தபுரம், கொல்லம், பத்தினம்திட்டா மாவட்டங்களை தவிர்த்து மீதமுள்ள 11 மாவட்டங்களில் 6 முதல் 11 செ.மீ. வரை மழை பெய்யுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதனால் அந்த மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    Next Story
    ×