search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    தமிழகத்திற்கு வரும் 5-ந் தேதி வரை ஆரஞ்ச் அலர்ட்
    X
    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

    தமிழகத்திற்கு வரும் 5-ந் தேதி வரை ஆரஞ்ச் அலர்ட்

    • வங்கக்கடலில் உருவாகி உள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி நாளை மறுநாள் புயலாக வலுப்பெறும்.
    • வடதமிழகம்-தெற்கு ஆந்திரா கடலோர பகுதிகளில் கடும் பாதிப்பை ஏற்படுத்த வாய்ப்பு இருப்பதாக கணிக்கப்பட்டுள்ளது.

    சென்னை:

    வங்கக்கடலில் உருவாகி உள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி நாளை மறுநாள் (3-ந்தேதி) புயலாக வலுப்பெறும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.

    இந்த புயல் வடதமிழகம்-தெற்கு ஆந்திரா கடலோர பகுதிகளில் கடும் பாதிப்பை ஏற்படுத்த வாய்ப்பு இருப்பதாக கணிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில் இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:

    * தமிழகத்திற்கு நாளை முதல் வரும் 5ந்தேதி வரை ஆரஞ்ச் நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    * நாளை முதல் 5ந்தேதி வரை கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும்.

    * வரும் 3 மற்றும் 4ந் தேதிகளில் வட தமிழகத்தின் கடலோர பகுதிகளில் கன முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.

    * இந்த கால கட்டத்தில் 12 முதல் 20 செ.மீ. வரை மழை பதிவாக கூடும்.

    இவ்வாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    Next Story
    ×