search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பிபோர்ஜோய் புயல்"

    • எட்டு மாவட்டங்களில் இருந்து சுமார் 1,171 கர்ப்பிணி பெண்களில் 1,152 கர்ப்பிணி பெண்கள் மீட்கப்பட்டு முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர்.
    • கரையோரத்தில் வசித்து வந்த சுமார் ஒரு லட்சம் பேரை வெளியேற்றி முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர்.

    அரபிக்கடலில் கடந்த 5-ந் தேதி உருவான பிபோர்ஜோய் புயல் அதிதீவிர புயலாக உருமாறியது. இது நேற்று மாலை குஜராத் மாநிலம் ஜாகவ் துறைமுகம் அருகே கரையை கடந்தது.

    புயலின் மையப்பகுதி நேற்று நள்ளிரவில் கரையை கடந்த போது ஜாகவ் துறைமுக பகுதியில் 125 கிலோ மீட்டர் வேகத்தில் சூறைக்காற்று வீசியது. புயல் கரையை கடக்கும்போது பொது மக்களுக்கு பாதிப்பு ஏற்படாமல் இருக்க முன் எச்சரிக்கை நடவடிக்கையாக ஒரு லட்சத்திற்கும் அதிகமான கடலோர கிராம மக்கள் பாதுகாப்பு முகாம்களுக்கு மாற்றப்பட்டனர்.

    பிபோர்ஜோய் புயலின் கோர தாண்டவத்தில் ஜாகவ் துறைமுக பகுதி, பவ்நகர் மாவட்டங்களில் சுமார் 940 கிராமங்களில் கடும் பாதிப்பு ஏற்பட்டது. இங்குள்ள கட்டிடங்களின் கூரைகள் தூக்கி வீசப்பட்டன. ராட்சத மரங்களும் வேரோடு சரிந்து விழுந்தது. சிறியதும், பெரியதுமாக சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மரங்கள் முறிந்தது. மேலும் சூறைக்காற்றுக்கு தாக்கு பிடிக்க முடியாமல் 500-க்கும் மேற்பட்ட மின்கம்பங்களும் சரிந்து விழுந்தன. மரங்கள், மின்கம்பங்கள், கட்டிடங்கள் இடிந்ததில் அப்பகுதியில் இருந்த வாகனங்களும் சேதமானது.

    புயல் முன்னெச்சரிக்கை காரணமாக ஜாகவ், பவ் மாவட்டங்களை சேர்ந்த 1000 கிராமங்கள் இருளில் மூழ்கியுள்ளன.

    இவ்வளவு இடர்பாடுக்கு மத்தியில், பிபோர்ஜோய் புயலின்போது குஜராத்தில் 700 குழந்தைகள் பிறந்துள்ளதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. குஜராத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, கரையோரத்தில் வசித்து வந்த சுமார் ஒரு லட்சம் பேரை வெளியேற்றி முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர்.

    இதில் எட்டு மாவட்டங்களில் இருந்து சுமார் 1,171 கர்ப்பிணி பெண்களில் 1,152 கர்ப்பிணி பெண்கள் மீட்கப்பட்டு முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர். இதில், 707 கர்ப்பிணி பெண்கள் வெற்றிகரமாக குழந்தைகளைப் பெற்றெடுத்துள்ளனர்.

    குறிப்பாக கட்ச் மாவட்டத்தில் இருந்து அதிகபட்சமாக 308 குழந்தைகள் பிறந்துள்ளன. ராஜ்கோட் மாவட்டத்தில் நூறு குழந்தைகளும், தேவ்பூமி துவாரகா மாவட்டத்தில் 93 குழந்தைகளும் பிறந்துள்ளன.

    இதுகுறித்து குஜராத் அரசு சார்பில் வெளியிட்ட அறிக்கைியல், " குஜராத் மருத்துவமனைகள் மற்றும் சுகாதார மையங்களில் 707 குழந்தைகள் வெற்றிகரமாக பிறந்துள்ளன. புயல் எதிரொலியால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 302 அரசு வாகனங்கள் மற்றும் 202 ஆம்புலன்ஸ்கள் தயார் நிலையில் இருந்தன. ஒவ்வொன்றும் மருத்துவ பணியாளர்களுடன், இரவும் பகலும் விடாமுயற்சியுடன் பணியாற்றின" என்று குறிப்பிட்டிருந்தது.

    • பிபோர்ஜோய் புயலின் கோர தாண்டவத்தில் ஜாகவ் துறைமுக பகுதி, பவ்நகர் மாவட்டங்களில் சுமார் 940 கிராமங்களில் கடும்பாதிப்பு ஏற்பட்டது.
    • சூறைக்காற்றுக்கு தாக்கு பிடிக்க முடியாமல் 500-க்கும் மேற்பட்ட மின்கம்பங்களும் சரிந்து விழுந்தன.

    அரபிக்கடலில் கடந்த 5-ந் தேதி உருவான பிபோர்ஜோய் புயல் அதிதீவிர புயலாக உருமாறியது. இது நேற்று மாலை குஜராத் மாநிலம் ஜாகவ் துறைமுகம் அருகே கரையை கடந்தது. புயலின் மையப்பகுதி நேற்று நள்ளிரவில் கரையை கடந்த போது ஜாகவ் துறைமுக பகுதியில் 125 கிலோ மீட்டர் வேகத்தில் சூறைக்காற்று வீசியது. அப்போது கடலில் பல மீட்டர் உயரத்திற்கு அலைகளும் எழுந்தது. அதோடு கன மழையும் பெய்தது.

    பிபோர்ஜோய் புயலின் கோர தாண்டவத்தில் ஜாகவ் துறைமுக பகுதி, பவ்நகர் மாவட்டங்களில் சுமார் 940 கிராமங்களில் கடும்பாதிப்பு ஏற்பட்டது. இங்குள்ள கட்டிடங்களின் கூரைகள் தூக்கி வீசப்பட்டன. ராட்சத மரங்களும் வேரோடு சரிந்து விழுந்தது. சிறியதும், பெரியதுமாக சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மரங்கள் முறிந்தது. மேலும் சூறைக்காற்றுக்கு தாக்கு பிடிக்க முடியாமல் 500-க்கும் மேற்பட்ட மின்கம்பங்களும் சரிந்து விழுந்தன. மரங்கள், மின்கம்பங்கள், கட்டிடங்கள் இடிந்ததில் அப்பகுதியில் இருந்த வாகனங்களும் சேதமானது.

    இந்நிலையில், குஜராத் மாநிலத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை குஜராத் முதலமைச்சருடன் இணைந்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஹெலிகாப்டர் மூலம் ஆய்வு மேற்கொண்டார்.

    • ஜாகவ் துறைமுகத்தில் கரையை கடந்தபின்பும் பிபோர்ஜோய் புயலின் சீற்றம் தணியவில்லை என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
    • மாநிலத்தில் புயல் நிவாரண பணிகளை விரைந்து மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

    அகமதாபாத்:

    அரபிக்கடலில் கடந்த 5-ந் தேதி உருவான பிபோர்ஜோய் புயல் அதிதீவிர புயலாக உருமாறியது. இது நேற்று மாலை குஜராத் மாநிலம் ஜாகவ் துறைமுகம் அருகே கரையை கடந்தது.

    புயலின் மையப்பகுதி நேற்று நள்ளிரவில் கரையை கடந்த போது ஜாகவ் துறைமுக பகுதியில் 125 கிலோ மீட்டர் வேகத்தில் சூறைக்காற்று வீசியது. அப்போது கடலில் பல மீட்டர் உயரத்திற்கு அலைகளும் எழுந்தது. அதோடு கன மழையும் பெய்தது.

    புயல் கரையை கடக்கும்போது பொது மக்களுக்கு பாதிப்பு ஏற்படாமல் இருக்க முன் எச்சரிக்கை நடவடிக்கையாக ஒரு லட்சத்திற்கும் அதிகமான கடலோர கிராம மக்கள் பாதுகாப்பு முகாம்களுக்கு மாற்றப்பட்டனர்.

    மேலும் தேசிய பேரிடர் மீட்பு படையை சேர்ந்த 15 குழுக்கள், மாநில பேரிடர் மீட்பு படையின் 12 குழுக்கள், பொதுப்பணித்துறையின் 115 குழுக்கள், மின்வாரியத்தின் 397 குழுக்கள் ஜாகவ் துறைமுக பகுதி மற்றும் கடலோர மாவட்டங்களில் தயார் நிலையில் இருந்தனர்.

    பிபோர்ஜோய் புயலின் கோர தாண்டவத்தில் ஜாகவ் துறைமுக பகுதி, பவ்நகர் மாவட்டங்களில் சுமார் 940 கிராமங்களில் கடும்பாதிப்பு ஏற்பட்டது. இங்குள்ள கட்டிடங்களின் கூரைகள் தூக்கி வீசப்பட்டன. ராட்சத மரங்களும் வேரோடு சரிந்து விழுந்தது. சிறியதும், பெரியதுமாக சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மரங்கள் முறிந்தது. மேலும் சூறைக்காற்றுக்கு தாக்கு பிடிக்க முடியாமல் 500-க்கும் மேற்பட்ட மின்கம்பங்களும் சரிந்து விழுந்தன. மரங்கள், மின்கம்பங்கள், கட்டிடங்கள் இடிந்ததில் அப்பகுதியில் இருந்த வாகனங்களும் சேதமானது.

    பவ் நகர் மாவட்டத்தில் கட்டிட இடிபாடுகளில் சிக்கி 2 பேர் பலியானார்கள். 22-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இதுபோல ஆடு, மாடு, நாய்கள் என 23-க்கும் மேற்பட்ட விலங்குகளும் இறந்தது. இதனை குஜராத் மாநில நிவாரண பணிகள் பிரிவு ஆணையர் அலோக் சிங் தெரிவித்துள்ளார்.

    புயல் முன்னெச்சரிக்கை காரணமாக ஜாகவ், பவ் மாவட்டங்களில் நேற்றே மின்சாரம் துண்டிக்கப்பட்டிருந்தது. நள்ளிரவு வீசிய சூறைக்காற்றில் ஏராளமான மின்கம்பங்கள் சரிந்து விழுந்ததால் அவற்றை சரிசெய்யும் பணியில் மின்வாரிய ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.

    நேற்று நள்ளிரவே பேரிடர் மீட்பு குழுவினருடன் இணைந்து மின்வாரிய ஊழியர்கள் கிராமங்களில் சரிந்து விழுந்த மின்கம்பங்களை சீர் செய்யவும், முறிந்த மரக்கிளைகளை அப்புறப்ப டுத்தும் பணியிலும் ஈடுபட்டனர். இந்த பணிகள் முழுமையாக முடிந்த பின்னரே இக்கிராமங்களுக்கு மின் இணைப்பு கொடுக்க முடியும். இதற்கு இன்னும் ஒரு சில நாட்கள் ஆகும் என்று தெரிகிறது. அதுவரை இம்மாவட்டங்களை சேர்ந்த 940 கிராமங்கள் இருளில் மூழ்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

    பிபோர்ஜோய் புயல் பாதிப்பு குறித்து குஜராத் முதல்-மந்திரி பூபேந்திர படேலுடன் பிரதமர் மோடி போனில் தொடர்பு கொண்டு பேசினார்.

    மேலும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான நிவாரண உதவிகளை உடனே மேற்கொள்ளவும், வனவிலங்கு சரணாலயங்களில் உள்ள விலங்குகள் பாதுகாப்பாக இருக்கிறதா? என்பதை கண்காணிக்கவும் கேட்டுக்கொண்டார். இதனை குஜராத் முதல் மந்திரி பூபேந்திர படேல் தெரிவித்தார்.

    மேலும் மாநிலத்தில் புயல் நிவாரண பணிகளை விரைந்து மேற்கொள்ளுமாறு அவர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

    இதற்கிடையே நேற்று ஜாகவ் துறைமுகத்தில் கரையை கடந்தபின்பும் பிபோர்ஜோய் புயலின் சீற்றம் தணியவில்லை என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வழக்கமாக புயல் கரையை கடந்ததும் அது வலுவிழந்து இயல்பு நிலைக்கு திரும்பும்.

    ஆனால் இப்போது ஜாகவ் துறைமுகத்தில் கரையை கடந்த பிபோர்ஜோய் புயல் இன்று காலை வடகிழக்கு திசை நோக்கி நகர்ந்தது. சவுராஷ்டிரா-கட்ச் வழியாக நகரும் புயல் 105 முதல் 115 கிலோ மீட்டர் வேகத்தில் சீற்றம் குறையாமல் ராஜஸ்தான் நோக்கி நகர்ந்து வருகிறது. இதன் காரணமாக ராஜஸ்தான் பகுதியில் கனமழை பெய்து வருகிறது.

    • புயல் கரை கடக்கத் தொடங்கியதையடுத்து பலத்த காற்றுடன் கனமழை பெய்தது.
    • பல்வேறு இடங்களில் மரங்கள் வேருடன் சாய்ந்தன. மின்கம்பங்களும் சாய்ந்துள்ளன.

    அகமதாபாத்:

    அரபிக் கடலில் உருவான பிபோர்ஜோய் புயல் அதிதீவிர புயலாக மாறியது. இந்தப் புயல் குஜராத் மாநில கடற்கரை மாவட்டமான கட்ச்- பாகிஸ்தானின் கராச்சி கடற்கரை இடையே கரையை கடக்கும் என வானிலை மையம் தெரிவித்தது. இதனால் குஜராத் மாநிலத்தில் கடற்கரையோரப் பகுதியில் இருந்து சுமார் 10 கி.மீட்டர் சுற்றுப்பகுதியில் வசிக்கும் மக்கள் அரசு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள முகாமுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். சுமார் ஒரு லட்சம் மக்கள் வீடுகளில் இருந்து வெளியேற்றப்பட்டு, அரசின் தற்காலிக தங்குமிடங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

    புயல் காரணமாக நேற்றிலிருந்து காற்றுடன் மழை பெய்து வருகிறது. 6-க்கும் மேற்பட்ட மாநிலங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டது. பலத்த காற்று வீசும் என்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டது.

    தேசிய பேரிடர் மீட்புப்படையின் 15 குழுக்கள், 12 மாநில பேரிடர் மீட்புக்குழுக்கள், மாநில சாலை மற்றும் கட்டுமானத்துறையின் 115 குழுக்கள், மின்சாரத்துறையின் 397 குழுக்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டனர்.

    இதற்கிடையே, ஏற்கனவே கணித்தபடி பிபோர்ஜோய் புயல் வடகிழக்கு நோக்கி நகர்ந்து நேற்று மாலை 4.30 மணியளவில் குஜராத் மாநிலம் சவுராஷ்டிரா மற்றும் கட்ச் கடலோர பகுதியில் கரைகடக்கத் தொடங்கியது. கரைகடக்கும் நிகழ்வு நள்ளிரவு வரை நீடித்தது.

    கடலோரப் பகுதியில் மணிக்கு 110 முதல் 125 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசியது.

    புயல் கரை கடக்கத் தொடங்கியதையடுத்து பலத்த காற்றுடன், கனமழை பெய்து வருகிறது. பல்வேறு இடங்களில் மரங்கள் வேருடன் சாய்ந்தன. மின்கம்பங்களும் சாய்ந்துள்ளன.

    இந்நிலையில், பிபோர்ஜோய் புயல் தாக்கியதில் பவ்நகர் மாவட்டத்தில் 2 பேர் பலியானார்கள். 22 பேர் காயமடைந்தனர். 23 விலங்குகள் உயிரிழந்தன. 500க்கும் மேற்பட்ட மரங்கள் சாய்ந்துள்ளன. மின் கம்பங்கள் சேதமடைந்துள்ளதால் சுமார் 900 கிராமங்களில் மின்சாரம் பாதிப்பு அடைந்துள்ளது என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    சாலையில் விழுந்த மரங்களை அப்புறப்படுத்தும் பணியில் ராணுவத்தினர் மற்றும் பேரிடர் மீட்புக் குழுவினர் ஈடுபட்டுள்ளனர்.

    மேலும், புயல் பாதிப்பு நிலவரம் குறித்து முதல் மந்திரி பூபேந்திர படேலிடம் பிரதமர் மோடி தொலைபேசி வாயிலாக கேட்டறிந்தார்.

    • சுமார் ஒரு லட்சம் மக்கள் வீடுகளில் இருந்து வெளியேற்றப்பட்டு, அரசின் நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
    • புயல் கரை கடக்கத் தொடங்கியதையடுத்து பலத்த காற்றுடன், கனமழை பெய்து வருகிறது.

    அரபிக் கடலில் உருவான பிபோர்ஜோய் புயல் அதிதீவிர புயலாக மாறியது. இந்தப் புயல் இன்று மாலை குஜராத் மாநில கடற்கரை மாவட்டமான கட்ச்- பாகிஸ்தானின் கராச்சி கடற்கரை இடையே கரையை கடக்கும் என வானிலை மையம் தெரிவித்தது.

    இதனால் குஜராத் மாநிலத்தில் கடற்கரையோரப் பகுதியில் இருந்து சுமார் 10 கி.மீட்டர் சுற்றுப்பகுதியில் வசிக்கும் மக்கள் அரசு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள முகாமுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். சுமார் ஒரு லட்சம் மக்கள் வீடுகளில் இருந்து வெளியேற்றப்பட்டு, அரசின் தற்காலிக தங்குமிடங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

    புயல் காரணமாக நேற்றிலிருந்து காற்றுடன் மழை பெய்து வருகிறது. 6-க்கும் மேற்பட்ட மாநிலங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டது. பலத்த காற்று வீசும் என்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டது.

    தேசிய பேரிடர் மீட்புப்படையின் 15 குழுக்கள், 12 மாநில பேரிடர் மீட்புக்குழுக்கள், மாநில சாலை மற்றும் கட்டுமானத்துறையின் 115 குழுக்கள், மின்சாரத்துறையின் 397 குழுக்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டனர்.

    இந்நிலையில், ஏற்கனவே கணித்தபடி பிபோர்ஜேய் புயல் வடகிழக்கு நோக்கி நகர்ந்து இன்று மாலை 4.30 மணியளவில் குஜராத் மாநிலம் சவுராஷ்டிரா மற்றும் கட்ச் கடலோர பகுதியில் கரைகடக்கத் தொடங்கியது. கரைகடக்கும் நிகழ்வு நள்ளிரவு வரை நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    புயல் காரணமாக குஜராத் கடற்கரையை ஒட்டியுள்ள துவாரகா, ஓகா, நலியா, பூஜ், போர்பந்தர் மற்றும் காண்ட்லா ஆகிய பகுதிகளில் இன்று காலை முதலே கனமழை பெய்து வருகிறது. கடலோரப் பகுதியில் மணிக்கு 50 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசியது.

    புயல் கரை கடக்கத் தொடங்கியதையடுத்து பலத்த காற்றுடன், கனமழை பெய்து வருகிறது. கடல் கொந்தளிப்பாக காணப்படுகிறது. பல்வேறு இடங்களில் மரங்கள் வேருடன் சாய்ந்தன. மின்கம்பங்களும் சாய்ந்துள்ளன. கூரை வீடுகளின் மேற்கூரைகள் பெயர்ந்து காற்றில் பறந்தன. தேவபூமி துவாரகா மாவட்டத்தில் மரம் விழுந்ததில் 3 பேர் காயமடைந்துள்ளனர். சாலையில் விழுந்த மரங்களை அப்புறப்படுத்தும் பணியில் ராணுவத்தினர் மற்றும் பேரிடர் மீட்புக் குழுவினர் ஈடுபட்டுள்ளனர். அடுத்த ஐந்து நாட்கள் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • இன்று மாலை கட்ச் பகுதியில் கரையை கடக்கிறது
    • 130 கி.மீட்டர் வேகத்தில் சூறைக்காற்று வீசும் என எச்சரிக்கை

    அரபிக் கடலில் உருவான பிபோர்ஜோய் புயல் அதிதீவிர புயலாக மாறியது. இந்தப் புயல் இன்று மாலை குஜராத் மாநில கடற்கரை மாவட்டமான கட்ச்- பாகிஸ்தானின் கராச்சி கடற்கரை இடையே கரையை கடக்கும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

    இதனால் குஜராத் மாநிலத்தில் கடற்கரையோரப் பகுதியில் இருந்து சுமார் 10 கி.மீட்டர் சுற்றுப்பகுதியில் வசிக்கும் மக்கள் அரசு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள முகாமுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். இதுவரை 74 ஆயிரம் மக்கள் வீடுகளில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.

    நேற்றிலிருந்து காற்றுடன் மழை பெய்து வருகிறது. 6-க்கும் மேற்பட்ட மாநிலங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இன்று 130 கி.மீட்டர் வேகத்தில் காற்று வீசும் என்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டுள்ளது.

    தேசிய பேரிடர் மீட்புப்படையின் 15 குழுக்கள், 12 மாநில பேரிட மீட்புக்குழுக்கள், மாநில சாலை மற்றும் கட்டுமானத்துறையின் 115 குழுக்கள், மின்சாரத்துறையின் 397 குழுக்கள் தயார் நிலையில் இருப்பதாக குஜராத் நிவாரண ஆணையர் தெரிவித்துள்ளார்.

    இன்று மாலை வடகிழக்கு நோக்கி நகர்ந்து சவுராஷ்டிரா மற்றும் கட்ச், குஜராத்தின் மந்த்வி- பாகிஸ்தானின் கராச்சி அருகில் உள்ள ஜக்காவ் துறைமுகம் இடையே கரையை கடக்கும் என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.

    குஜராத் மாநிலத்தின் போர்பந்தர், ராஜ்கோட், மொர்பி, ஜுனாகாத், சவுராஷ்டிரா, வடக்கு குஜராத் பகுதிகளில் அதிதீவிர மழை பெய்யும் என எச்சரித்துள்ளது.

    • குஜராத்தில் நாளைமறுதினம் கரையை கடக்கும் என எதிர்பார்ப்பு
    • 150 கி.மீட்டர் வேகத்தில் காற்று வீசும் என எச்சரிக்கை

    அரபிக் கடலின் கிழக்கு மத்திய பகுதியில் இந்த மாத தொடக்கத்தில் குறைந்த காற்றழுத்தம் உருவானது. அதன்பிறகு அது கடந்த 6-ந்தேதி புயலாக மாறியது. அந்த புயலுக்கு 'பிபோர்ஜோய்' என்று பெயரிடப்பட்டுள்ளது. அந்த புயல் வடக்கு திசை நோக்கி கடந்த சில தினங்களாக நகர்ந்து வந்தது. இந்த நிலையில் அது தீவிர புயலாகவும், அதி தீவிர புயலாகவும் அடுத்தடுத்து மாறியது.

    வடகிழக்கு அரபிக் கடலில் நிலை கொண்டிருக்கும் 'பிபோர்ஜோய்' புயல் மணிக்கு 8 கி.மீ. வேகத்தில் நகர்ந்து வருகிறது. இந்த அதிதீவிர புயல் குஜராத்தின் போர்பந்தரில் இருந்து 250 கி.மீ. தொலைவில் உள்ளது. இது நாளை மறுநாள் (வியாழக்கிழமை) குஜராத்தின் ஜக்காவ் துறைமுகப் பகுதியில் கரையைக் கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

    அதிதீவிர புயல் கரையை கடக்கும்போது பலத்த மழையும், பலத்த காற்றும் வீசும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக மணிக்கு 125 முதல் 150 கி.மீ. வேகத்தில் சூறாவளி காற்று வீசும் என்று கூறப்பட்டு இருந்தது. அதன்படி மராட்டியம், குஜராத் மாநிலங்களில் நேற்று முதல் மிக பலத்த மழையும், மிக பலத்த சூறாவளி காற்றும் வீசத் தொடங்கியுள்ளது.

    மும்பையில் கடல் கொந்தளிப்பு காணப்படுகிறது. அதில் 4 பேர் சிக்கினார்கள். ஒருவர் மீட்கப்பட்ட நிலையில் 3 பேரின் கதி என்னவென்று தெரியவில்லை. இதற்கிடையே புயல் காரணமாக நாளை மற்றும் நாளை மறுநாள் குஜராத்தின் கட்ச், துவாரகா, போர்பந்தர், ஜாம்நகர், ராஜ்கோட், ஜூனாகர், மோர்பி உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

    புயல் காரணமாக குஜராத்தின் கட்ச் மாவட் டத்தில் 144 தடை உத்தரவு அமல் செய்யப்பட்டுள்ளது. அந்த மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று முதல் 3 நாட்கள் விடுமுறை விடப்பட்டுள்ளது. புயல் அபாயம் உள்ள இதர மாவட்டங்களிலும் முன் எச்சரிக்கை நடவடிக்கை கள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன.

    6 மாநிலங்களில் மிக பலத்த மழை பெய்யும் என்று இன்று காலை வானிலை ஆய்வு மையமும் எச்சரித்துள்ளது.

    புயல் கரையை கடக்கும்போது மிகப்பெரிய சேதத்தை ஏற்படுத்தும் என்று கருதப்படுகிறது. எனவே புயலை எதிர்கொள்வது தொடர்பாக குஜராத் முதல்-மந்திரி பூபேந்திர படேல் தலைமையில் உயர்நிலை ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. மாநில பேரிடர் மீட்புப்படை, தேசிய பேரிடர் மீட்புப் படை மற்றும் கடற்படை வீரர்கள் கட்ச், சவுராஷ்டிரா பகுதிகளில் முகாமிட்டுள்ளனர். கடற்கரையோரம் மற்றும் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் 30 ஆயிரம் பேர் அப்புறப்படுத்தப்பட்டு உள்ளனர்.

    கடற்கரையில் இருந்து 10 கி.மீ. தொலைவுக்குள் இருப்பவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பப்பட்டு வருகிறார்கள். சுமார் 2 லட்சம் கால்நடைகளும் பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளன.

    'பிபோர்ஜோய்' புயல் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் டெல்லியில் நேற்று அவசர ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா மற்றும் பல்வேறு துறைகளை சேர்ந்த உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.

    இதையடுத்து குஜராத்தை சேர்ந்த மத்திய மந்திரி மன்சுக் மாண்டவியா, புருசோத்தம் ரூபலா, தர்சன் ஜர்டோஷ், மகேந்திர முன்ஞ்பாரா உள்பட 5 மத்திய மந்திரிகளை கட்ச், சவுராஷ்டிரா பகுதிகளில் முகாமிட்டு நிவாரண பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி அறிவுறுத்தினார். அதன்பேரில் 5 மத்திய மந்தரிகளும் குஜராத் விரைகிறார்கள்.

    • வியாழக்கிழமை குஜராத் ஜக்காவ் துறைமுகம் அருகே கரையை கடக்க இருக்கிறது
    • சூறாவளி காற்றுடன் பலத்தை மழை பெய்யும் என எச்சரிக்கை

    அரபிக் கடலில் உருவான பிபோர்ஜோய் புயல் அதிதீவிர புயலான வலுவடைந்து குஜராத் மாநிலம் கட்ச்- பாகிஸ்தானின் கராச்சி இடையே வியாழக்கிழமை கரையை கடக்கும் என இந்திய வானிலை மையம் தெரிவித்திருந்தது.

    இந்த புயலால் குஜராத் மாநில கடற்கரையோரப் பகுதிகள் பாதிக்கப்படும் என்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

    பிரதமர் மோடி நேற்று உயர்மட்ட ஆலோசனைக் கூட்டத்தை நடத்தினார். அப்போது, கடற்கரையோர பகுதியில் வசிக்கும் மக்களை பாதுகாப்பான இடத்திற்கு வெளியேற்றுவது உள்ளிட்ட முக்கியம்சங்கள் குறித்து ஆலோசனை நடத்தினார்.

    இந்த நிலையில் அதிதீவிர புயலான பிபோர்ஜோய் தற்போது தீவிர புயலாக வலுவிழந்தாக வானிலை மையம் அறிவித்துள்ளது. இது இன்று அதிகாலை நிலவரப்படி போர்பந்தரில் இருந்து தென்மேற்கே 310 கி.மீட்டர் தொலைவிலும், தேவ்பூமி துவார்காவில் இருந்து தென்மேற்கே 320 கி.மீட்டர் தொலைவிலும், ஜக்காவ் துறைமுகத்தில் இருந்து தெற்கு, தென்மேற்கே 380 கி.மீட்டர் தொலைவிலும் உள்ளது. நாளை மறுதினம் மாலை குஜராத்தில் உள்ள ஜாக்காவ் துறைமுகத்தை கடந்து செல்லும் எனத் தெரிவித்துள்ளது.

    பிபோர்ஜோய் காரணமாக மகாராஷ்டிரா மாநிலத்தில் பெரும்பாலான இடங்களில் கனமழை பெய்து வருகிறது. 6 மாநிலங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    • குஜராத்தில் அரசு சார்பில் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
    • புயல் கரையை கடக்கும் போது மணிக்கு 150 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

    தென்கிழக்கு அரபிக் கடல் பகுதிகளில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி பிபர்ஜாய் புயலாக உருவெடுத்தது. இந்த புயலானது போர்பந்தருக்கு 340 கிலோ மீட்டர் தெற்கு, தென்மேற்கிலும், துவாரகாவுக்கு 400 கிலோ மீட்டர் தெற்கு-தென்மேற்கிலும் அதிதீவிர புயலாக மையம் கொண்டு உள்ளது.

    பிபோர்ஜோய் புயல் மணிக்கு 9 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்வதாகவும், வருகிற 15-ந் தேதி பிற்பகல் குஜராத்தின் மாண்ட்வி- பாகிஸ்தானின் கராச்சி இடையே சவுராஸ்டிரா கடல் பகுதியில் கரையை கடக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    புயல் கரையை கடக்கும் போது மணிக்கு 150 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

    இதன் எதிரொலியால், குஜராத்தில் அரசு சார்பில் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், புயல் காரணமாக 67 ரெயில் சேவைகள் ரத்துசெய்யப்பட்டு உள்ளது. குஜராத் மேற்கு ரெயில்வே பிராந்தியத்தில் 67 ரெயில்கள் ரத்துசெய்யப்பட்டுள்ளதாக ரெயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    • மரைன் டிரைவ் பகுதியில் தடுப்பு சுவரை தாண்டி அலைகள் சீறி பாய்ந்தன.
    • தேசிய பேரிடர் மீட்பு படையினரும், மாநில பேரிடர் படையினரும் தயார் நிலையில் நிறுத்தப்பட்டுள்ளனர்.

    மும்பை:

    தென்கிழக்கு அரபிக் கடல் பகுதிகளில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி பிபர்ஜாய் புயலாக உருவெடுத்தது.

    இந்த புயலானது போர்பந்தருக்கு 340 கிலோ மீட்டர் தெற்கு, தென்மேற்கிலும், துவாரகாவுக்கு 400 கிலோ மீட்டர் தெற்கு-தென்மேற்கிலும் அதிதீவிர புயலாக மையம் கொண்டு உள்ளது.

    பிபோர்ஜோய் புயல் மணிக்கு 9 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்வதாகவும், வருகிற 15-ந் தேதி பிற்பகல் குஜராத்தின் மாண்ட்வி-பாகிஸ்தானின் கராச்சி இடையே சவுராஸ்டிரா கடல் பகுதியில் கரையை கடக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. புயல் கரையை கடக்கும் போது மணிக்கு 150 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

    இந்த புயல் காரணமாக மும்பையில் காற்றுடன் பலத்த மழை பெய்தது. மரைன் டிரைவ் பகுதியில் தடுப்பு சுவரை தாண்டி அலைகள் சீறி பாய்ந்தன.

    மேலும் அங்குள்ள தாதர், தாராவி, சி.எஸ்.எம்.டி. உள்ளிட்ட பல்வேறு பகுதியில் மிதமானது முதல் பலத்த மழை வரை பெய்தது.

    பலத்த காற்றுடன் கூடிய மழை காரணமாக மும்பையில் விமான சேவை பாதிக்கப்பட்டது.

    4 விமானங்கள் திருப்பிவிடப்பட்டன. விமானங்கள் வருவதும், புறப்பட்டுச் செல்வதும் 40 நிமிடம் தாமதமானது.

    பிபோர்ஜோய் புயலால் குஜராத் மாநிலத்துக்கு பலத்த மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டது. சவுராஸ்டிரா, கட்ச் ஆகிய கடற்கரை மாவட்டங்களில் பலத்த மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. அந்த பகுதிக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

    கட்ச், ஜாம்நகர், மோர்பி, கிர்சோம்நாத், போர்பந்தர், தேவபூமி, துவாரகா ஆகிய 6 மாவட்டங்கள் புயலால் பாதிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது.

    இதனால் இந்த மாவட்டங்களில் தாழ்வான பகுதியில் உள்ள மக்கள் வெளியேற்றப்பட்டனர். அவர்கள் தற்காலிகமாக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

    குஜராத் மாநில அரசு அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து வருகிறது. தேசிய பேரிடர் மீட்பு படையினரும், மாநில பேரிடர் படையினரும் தயார் நிலையில் 6 மாவட்டங்களில் நிறுத்தப்பட்டுள்ளனர்.

    • கட்ச்- கராச்சி இடையே கரையை கடக்கும் என எதிர்பார்ப்பு
    • அதிதீவிர கனமழை மற்றும் சூறாவளி காற்று வீசும் என வானிலை மையம் அறிவிப்பு

    அரபிக்கடலில் உருவான பிபோர்ஜோய் புயல் அதிதீவிர புயலாக வலுவடைந்துள்ளது. இந்தப்புயல் குஜராத் மாநிலம் கட்ச்- பாகிஸ்தானின் கராச்சி இடையே வியாழக்கிழமை கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    குஜராத் மாநிலம் சவுராஷ்டிரா மற்றும் கட்ச் கடற்கரையோர மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கனமழை மற்றும் 150 கி.மீ.-க்கும் அதிகமான வேகத்தில் காற்று வீசும் என்பதால், பிரதமர் மோடி உயர்மட்ட ஆலோசனை கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார். கூட்டத்தில் மக்களை பாதுகாப்பான இடத்திற்கு வெளியேற்றுதல், எடுக்கப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கை உள்ளிட்ட முக்கியம்சங்கள் குறித்து ஆலோசனை நடத்தப்படலாம்.

    சவுராஷ்டிரா மற்றும் கட்ச் கடற்கரை பகுதிகளுக்கு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. புதன்கிழமை வரை இரு இடங்களில் உள்ள கடற்கரைகள் கொந்தளிப்புடன் காணப்படும். வியாழக்கிழமை கடல் அதிக அளவில் கொந்தளிப்பாக காணப்படும் என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.

    கட்ச், ஜாம்நகர், மொர்பி, கிர் சோம்நாத், போர்பந்தர், தேவ்பூமி த்வர்கா மாவட்டங்கள் கனமழை மற்றும் சூறாவளி காற்றால் பாதிக்கபடலாம். 13-ந்தேதி முதல் 15-ந்தேதி வரை 15 கி.மீட்டருக்கும் அதிகமாக வேகத்தில் காற்று வீசலாம்.

    கட்ச் மாவட்ட அதிகாரிகள் மக்களை பாதுகாப்பான இடத்திற்கு வெளியேற்றும் வேலையை தொடங்கிவிடட்னர். மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    • தற்போது புயல் மணிக்கு 5 கிமீ வேகத்தில் வடக்கு நோக்கி நகர்ந்து வருகிறது.
    • இன்று காலை போர்பந்தரில் இருந்து தெற்கு தென்மேற்கில் 480 கிமீ தொலைவில் புயல் இருந்தது.

    புதுடெல்லி:

    அரபிக்கடலில் உருவான பிபோர்ஜோய் புயல் தீவிர புயலாக வலுவடைந்து வடக்கு மற்றும் வடகிழக்கு நோக்கி நகர்ந்து வருகிறது. இந்த புயல் இன்று காலையில் மேலும் வலுவடைந்து மிக தீவிர புயலாக மாறியது.

    இன்று காலை 9 மணி நிலவரப்படி இந்த புயல் குஜராத்தின் போர்பந்தரில் இருந்து தெற்கு தென்மேற்கில் 480 கிமீ தொலைவிலும், நாலியாவில் இருந்து தெற்கு-தென்மேற்கில் 610 கிமீ தொலைவிலும் மையம் கொண்டிருந்தது. தற்போது புயல் மணிக்கு 5 கிமீ வேகத்தில் வடக்கு நோக்கி நகர்ந்து வருகிறது.

    புயல் மேலும் நகர்ந்து வரும் 15ம் தேதி பிற்பகல் பாகிஸ்தான் மற்றும் அதை ஒட்டிய குஜராத்தின் சவுராஷ்டிரா மற்றும் கட்ச் கடற்கரைகளை கடக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

    ×