search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    காற்றழுத்த தாழ்வு பகுதி நாளை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும்
    X

    காற்றழுத்த தாழ்வு பகுதி நாளை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும்

    • தெற்கு அந்தமான் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியது.
    • வங்கக்கடலில் புயல் உருவாகும் பட்சத்தில் "மிச்சாங்" என பெயர் வைக்கப்படும்.

    புதுடெல்லி:

    தெற்கு அந்தமான் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியது. காற்றழுத்த தாழ்வு பகுதியானது நாளை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

    காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்ற பின், அடுத்த 48 மணி நேரத்தில், தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் புயலாக வலுப்பெற வாய்ப்பு உள்ளது. வங்கக்கடலில் புயல் உருவாகும் பட்சத்தில் "மிச்சாங்" என பெயர் வைக்கப்படும்.

    தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    Next Story
    ×