search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இடமாற்றம்"

    • அருங்காட்சியக கமிஷனர் சுகந்தி உள், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை சிறப்பு செயலாளராக நியமிக்கப்படுகிறார்.
    • ஒழுங்கு நடவடிக்கை கமிஷனர் உமாசங்கர், தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் புதிய முயற்சிகள் நிறுவன இயக்குனராக மாற்றப்பட்டார்.

    சென்னை:

    தலைமைச்செயலாளர் சிவ்தாஸ் மீனா வெளியிட்டுள்ள அரசாணையில் கூறப்பட்டுள்ளதாவது:-

    ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை கமிஷனராக இருந்த தாரேஸ் அகமது சிறப்பு திட்டங்கள் செயலாக்கத்துறை செயலாளராக இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளார். அவர் சமூக பாதுகாப்பு திட்டத்தின் கமிஷனராக முழு கூடுதல் பொறுப்பு வகிப்பார். சமூக பாதுகாப்பு திட்ட கமிஷனர் வெங்கடாச்சலம் நில சீர்திருத்த கமிஷனராக மாற்றப்படுகிறார். அவர் நில சீர்திருத்த இயக்குனர் மற்றும் நகர்ப்புற நில உச்சவரம்பு மற்றும் நகர்ப்புற நிலவரி அலுவல் சாரா இயக்குனராகவும் முழு கூடுதல் பொறுப்பு வகிப்பார்.

    தமிழ்நாடு பண்டகசாலை கழக மேலாண் இயக்குனர் சிவஞானம் பொது மற்றும் மறுவாழ்வு துறையின் கூடுதல் செயலாளராக மாற்றப்படுகிறார். பொது மற்றும் மறுவாழ்வு துறை சிறப்பு செயலாளர் கலையரசி வருவாய் நிர்வாக கூடுதல் கமிஷனராக நியமிக்கப்படுகிறார். அறிவியல் நகர தலைவர் மலர்விழி நீர்வளத்துறை கூடுதல் செயலாளராக நியமிக்கப்படுகிறார். அருங்காட்சியக கமிஷனர் சுகந்தி உள், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை சிறப்பு செயலாளராக நியமிக்கப்படுகிறார்.

    தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் புதிய முயற்சிகள் நிறுவன இயக்குனர் சந்திரகலா ஒருங்கிணைந்த குழந்தைகள் மேம்பாட்டு திட்ட இயக்குனராக நியமிக்கப்படுகிறார். ஒருங்கிணைந்த குழந்தைகள் மேம்பாட்டு திட்ட இயக்குனரும், சமூக நல கமிஷனராக முழு கூடுதல் பொறுப்பு வகித்த அமுதவள்ளி சமூக நல கமிஷனராக நியமிக்கப்பட்டு உள்ளார். சமூக நலன் மற்றும் பெண்கள் அதிகாரம் அளித்தல் துறையின் கமிஷனராக ஜெயகாந்தன் மாற்றப்பட்டதாக பிறப்பிக்கப்பட்ட அரசாணை ரத்து செய்யப்படுகிறது.

    ஒழுங்கு நடவடிக்கை கமிஷனர் உமாசங்கர், தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் புதிய முயற்சிகள் நிறுவன இயக்குனராக மாற்றப்பட்டார். நீர்வளத்துறை கூடுதல் செயலாளராக இருந்த மகேஸ்வரி ரவிக்குமார் விடுமுறை நிறைவடைந்ததைத்தொடர்ந்து நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை கூடுதல் செயலாளராக நியமிக்கப்பட்டிருக்கிறார்.

    சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியத்தின் செயல் இயக்குனர் சிம்ரஞ்சித் சிங் கஹ்லோன் நகராட்சி நிர்வாக துணை இயக்குனராக மாற்றப்பட்டு இருக்கிறார். புவியியல் மற்றும் சுரங்கத்துறை கமிஷனர் ஜெயகாந்தன் ஊரக மேம்பாடு மற்றும் ஊராட்சித்துறை சிறப்பு செயலாளராக இடமாற்றம் செய்யப்பட்டார். வாழ்ந்து காட்டுவோம் திட்ட தலைமை செயல் அதிகாரி பத்மஜா பொதுத்துறை துணை செயலாளராக நியமிக்கப்பட்டு உள்ளார்.

    உள், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை கூடுதல் செயலாளர் கஜலட்சுமி தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வி சேவைகள் கழகத்தின் மேலாண்மை இயக்குனராக நியமிக்கப்படுகிறார். உயர்கல்வித்துறை கூடுதல் செயலாளர் பழனிச்சாமி தமிழ்நாடு பண்டகசாலை கழகத்தின் மேலாண்மை இயக்குனராக இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளார். நகராட்சி நிர்வாக கூடுதல் இயக்குனர் லலிதா சென்னை மாநகராட்சியின் கூடுதல் கமிஷனராக (வருவாய் மற்றும் நிதி) மாற்றப்பட்டு உள்ளார்.

    சென்னை மாநகராட்சியின் துணை கமிஷனராக (வருவாய் மற்றும் நிதி) ஆனந்த் மோகனை நியமித்த அரசாணை ரத்து செய்யப்படுகிறது. அவர் நாகர்கோவில் மாநகராட்சி கமிஷனராக தொடர்ந்து செயல்படுவார். திருவள்ளூர் கூடுதல் கலெக்டர் ரிஷப் திருவண்ணாமலை கூடுதல் கலெக்டராக மாற்றப்பட்டார். தஞ்சை மாவட்ட கூடுதல் கலெக்டர் (வருவாய்) சுகபுத்ரா திருவள்ளூர் மாவட்ட கூடுதல் கலெக்டராக மாற்றப்பட்டார்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • கடந்த மாதம் 26ந்தேதி, பி.டி.ஓ.,க்கள் இடமாறுதல் உத்தரவு வெளியானது.
    • பணியிட மாறுதல் செய்யப்பட்டவர்களில், 6 பேருக்கு மீண்டும் இடமாறுதல் வழங்கப்பட்டுள்ளது.

    திருப்பூர்

    கடந்த வாரம், 23 பி.டி.ஓ.,க்கள் இடமாறுதல் செய்யப்பட்ட நிலையில், அவர்களில் 6 பேருக்கு மீண்டும் இடமாறுதல் வழங்கப்பட்டுள்ளது.

    ஊரக வளர்ச்சித்துறையில் கடந்த மாதம் 26ந்தேதி, பி.டி.ஓ.,க்கள் இடமாறுதல் உத்தரவு வெளியானது. மொத்தம் 23 பி.டி.ஓ.,க்கள் இடமாறுதல் செய்யப்பட்டனர். இந்நிலையில் பணியிட மாறுதல் செய்யப்பட்டவர்களில், 6 பேருக்கு மீண்டும் இடமாறுதல் வழங்கப்பட்டுள்ளது.

    பல்லடம் பி.டி.ஓ., ரமேஷ், அவிநாசி ஒன்றியத்துக்கும், அங்கிருந்த லீலாவதி காங்கயத்துக்கும் இடமாறுதல் செய்யப்பட்டுள்ளனர். குடிமங்கலத்துக்கு இடமாறுதல் செய்யப்பட்ட பியூலா எப்சிபாய் பல்லடத்துக்கும் பல்லடத்துக்கு மாற்றப்பட்டிருந்த பிரியா கலெக்டர் அலுவலக (வளர்ச்சி) மேலாளராகவும் மாற்றப்பட்டுள்ளார்.

    கலெக்டர் அலுவலக வளர்ச்சி பிரிவு மேலாளர் மகேந்திரன் குடிமங்கலம் பி.டி.ஓ.,வாகவும், காங்கயம் பி.டி.ஓ., ராகவேந்திரன் வெள்ளகோவிலுக்கும் இடமாறுதல் செய்யப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை திருப்பூர் மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் வெளியிட்டுள்ளார்.

    • திருச்சி மாநகர காவல் துறை ஆணையர் சத்யபிரியா அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
    • மசாஜ் சென்டரில் விபச்சாரம் நடப்பது உறுதி செய்யப்பட்டு ஒருவர் கைது செய்யப்பட்டார்.

    திருச்சி:

    திருச்சி மாநகரத்தில் செயல்படும் ஸ்பா மற்றும் மசாஜ் சென்டர்களில் பாலியல் தொழில் நடப்பதாக புகார்கள் வருகின்றன. அவ்வப்போது விபச்சார தடுப்பு பிரிவு போலீசாரும் மேற்கண்ட மையங்களில் அதிரடி சோதனை நடத்தி அப்பாவி பெண்களை மீட்டு வருகின்றனர். இந்நிலையில் பாலியல் தொழிலை தடுக்க தவறியதாக, திருச்சி மாநகர விபச்சார தடுப்பு பிரிவு சிறப்பு சப் இன்ஸ்பெக்டர்கள் ராஜ்மோகன், பால சரஸ்வதி, ஏட்டு அசாலி ஆகிய மூவரையும் ஆயுதப்படைக்கு மாற்றம் செய்து, திருச்சி மாநகர காவல் துறை ஆணையர் சத்யபிரியா அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

    கடந்த இரு தினங்களுக்கு முன்பு கலெக்டர் அலுவலக சாலையில் மசாஜ் சென்டரில் விபச்சாரம் நடப்பது உறுதி செய்யப்பட்டு ஒருவர் கைது செய்யப்பட்டார். மேலும் வெளி மாநில அழகி உட்பட 3 பேர் மீட்கப்பட்டனர். அதன் தொடர்ச்சியாக மேற்கண்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு இருக்கலாம் என கூறப்படுகிறது.

    • நாமக்கல் மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) சிவசுப்பிரமணியன், திருச்சி மாவட்டம் லால்குடி வருவாய் கோட்டாட்சிய ராகவும், முசிறி வருவாய் கோட்டாட்சியர் மாதவன், நாமக்கல் மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவி யாளராகவும் நியமிக்கப் பட்டுள்ளனர்.
    • 3 துணை கலெக்டர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளர்.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) சிவசுப்பிரமணி யன், திருச்சி மாவட்டம் லால்குடி வருவாய் கோட்டாட்சிய ராகவும், முசிறி வருவாய் கோட்டாட்சியர் மாதவன், நாமக்கல் மாவட்ட கலெக்ட ரின் நேர்முக உதவி யாளராகவும் நியமிக்கப் பட்டுள்ளனர். அதேபோல, நாமக்கல் மாவட்ட கலால் உதவி ஆணையர் செல்வி, திருப்பூர் மாவட்ட தனித்துணை கலெக்டராக வும் (சமூக பாதுகாப்புத் திட்டம்), கோவை மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவி யாளர் (நிலம்) பால கிருஷ்ணன், நாமக்கல் மாவட்ட கலால் உதவி ஆணையராகவும் மாறுதல் செய்யப்பட்டுள்ளனர்.

    மேலும், நாமக்கல் மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (நிலம்) நடேசன், கோவை மாவட்ட மேலாளராக (சில்லரை விற்பனை) தமிழ்நாடு மாநில வாணிபக் கழகத்திற்கு (தெற்கு) மாற்றப்பட்டுள்ளார்.

    • உறவினர்கள், கூலித்தொழிலாளர்கள் என நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் சாப்பிட்டு வந்தனர்.
    • மன நோயாளிகள் பிரிவில் மருந்து வழங்கும் இடத்தில் அம்மா உணவகம் செயல்பட்டு வருகிறது.

    ஈரோடு, 

    ஈரோடு அரசு மருத்துவமனை பின்புறம் அம்மா உணவகம் கடந்த 7 ஆண்டுகளாக ஈரோடு மாநகராட்சி சார்பில் இயங்கி வந்தது. இங்கு அரசு மருத்துவமனை நோயாளிகள், அவரது உறவினர்கள், கூலித்தொழிலாளர்கள் என நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் சாப்பிட்டு வந்தனர்.

    குறைந்த விலையில் நிறைவான சாப்பாடு கிடைப்பதால் இங்கு எப்போதும் கூட்டம் அதிகமாக இருக்கும்.

    இந்நிலையில் அரசு மருத்துவமனை பின்புற பகுதியில் பல கோடி மதிப்பில் பல்துறை மருத்துவமனை மைய கட்டிடம் கட்டும் பணி நடந்து வருகிறது. இந்தப் பணிகள் முடியும் தருவாயில் உள்ளது.

    இந்நிலையில் இந்த பணிக்காக இடம் தேவைப்பட்டதால் அம்மா உணவக கட்டிடத்தை இடிக்க மருத்துவமனை நிர்வாகம் முடிவு செய்தது. இதற்காக மாநகராட்சி இடம் முறையாக அனுமதி பெற்றது. இதனைத் தொடர்ந்து அம்மா உணவக கட்டிடம் இடிக்கப்பட்டது.

    இதனையடுத்து தற்போது தற்காலிகமாக அரசு மருத்துவமனை மன நோயாளிகள் பிரிவில் மருந்து வழங்கும் இடத்தில் அம்மா உணவகம் செயல்பட்டு வருகிறது. அங்கு உணவு பரிமாறப்பட்டு வருகிறது.

    இந்த இடத்தையும் விரைவில் காலி செய்யுமாறு மருத்துமனை நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது. இதனையடுத்து அம்மா உணவகத்திற்கு வேறு இடத்தில் இடம் தேர்வு செய்யப்பட உள்ளது.

    • திருச்சி மாவட்டத்தில் 4 உதவி கலெக்டர்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்
    • தமிழகம் முழுவதும் 25 இடங்களில் உதவி கலெக்டர் இடமாற்றம்

    திருச்சி,

    திருச்சி உதவி கலெக்டராக பணியாற்றி வரும் கோ. தவச் செல்வத்துக்கு பதிலாக மதுரை மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் ரா.பார்த்திபன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். அதேபோன்று லால்குடி உதவி கலெக்டர் வைத்தியநாதனுக்கு பதிலாக நாமக்கல் மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர்(பொது) சிவசுப்பிரமணியனும், முசிறி உதவி கலெக்டர் மாதவனுக்கு பதிலாக சென்னை கன்னியாகுமரி தொழில்நுட்பத் திட்டம் மறு பகிர்மான அலுவலர் (ராஜன்) என்பவரும் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும் ஸ்ரீரங்கத்தில் காலியாக உள்ள உதவி கலெக்டர் பணியிடத்திற்கு கரூர் மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் தட்சிணாமூர்த்தி நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவினை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் குமார் ஜயந்த் பிறப்பித்துள்ளார். இதேபோன்று தமிழக முழுவதும் மொத்தம் 25 இடங்களில் உதவி கலெக்டர்கள் மாற்றப்பட்டுள்ளார்கள்.

    • பவானி நகராட்சிக்கு கமிஷனராக இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளார்.
    • வெள்ளகோவில் நகராட்சி கமிஷனர் பதவிக்கு கூடுதல் பொறுப்பாக காங்கயம் நகராட்சி கமிஷனர் செயல்படுவார்.

     திருப்பூர் :

    வெள்ளகோவில் நகராட்சி கமிஷனராக பணிபுரிந்து வந்த ஆர்.மோகன் குமார் பணி மாறுதல் அடிப்படையில் காலியாக உள்ள பவானி நகராட்சிக்கு கமிஷனராக இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளார். இதை நகராட்சி நிர்வாக இயக்குனர் தெரிவித்துள்ளார். இதனால் தற்போது காலியாக உள்ள வெள்ளகோவில் நகராட்சி கமிஷனர் பதவிக்கு கூடுதல் பொறுப்பாக காங்கயம் நகராட்சி கமிஷனர் செயல்படுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும் வெள்ளகோவில் நகராட்சி அலுவலகத்தில் உதவி பொறியாளராக பணிபுரிந்து வந்த மணி என்பவர் பணியிட மாறுதலாக கூடலூர் நகராட்சியின் பொறியாளராகவும், திருமுருகன் பூண்டி நகராட்சி அலுவலகத்தில் உதவி பொறியாளராக பணிபு ரிந்து வந்த தீபன் என்பவர் வெள்ளகோவில் நகராட்சி அலுவலகத்தில் நகராட்சி பொறியாளராகவும் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.

    • கலெக்டர் தாசில்தார் பணியிடங்களை மாற்றியும், பதவி உயர்வு வழங்கியும் உத்தரவு பிறப்பித்தார்.
    • கலெக்டர் அலுவலக துணை தாசில்தாராக இருந்த ஜெயமாலா, தாராபுரம், தனி தாசில்தாராக நியமிக்கப்பட்டுள்ளார்.

    திருப்பூர் :

    திருப்பூர் மாவட்டத்தில் மூன்று தாசில்தார்களை பணியிட மாற்றம் செய்து, கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.

    திருப்பூர் கலெக்டர் கிறிஸ்துராஜ் தாசில்தார் பணியிடங்களை மாற்றியும், பதவி உயர்வு வழங்கியும் நேற்று மாலை உத்தரவு பிறப்பித்தார். அதன்படி, காங்கயம் மண்டல துணை தாசில்தாராக இருந்த மோகனன், தாராபுரம், ஆர்.டி.ஓ., நேர்முக உதவியாளராகவும், இப்பணியிடத்தில் இருந்த ஜெகதீஸ்குமார், திருப்பூர் 'டாஸ்மாக்' கிடங்கு, மேலாளாராக மாற்றப்பட்டார். கலெக்டர் அலுவலக (டி.என்.ஆர்.எஸ்.பி., நிலை - 2) துணை தாசில்தாராக இருந்த ஜெயமாலா, தாராபுரம், தனிதாசில்தாராக நியமிக்கப்பட்டுள்ளார்.

    • நித்யா (வயது 28) என்பவர், கடந்த மார்ச் 11-ந் தேதி, ஆடு மேய்க்க சென்றபோது, பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்டார்.
    • இந்த நிலையில், பரமத்தி போலீஸ் நிலையத்தில் பணியாற்றி வந்த ஆய்வாளர் சுரேஷ், தர்மபுரி மாவட்டம், பாலக்கோடுக்கு அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டார்.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம், பரமத்திவேலூர் தாலுகா, ஜேடர்பாளையம் அருகில் உள்ள சரளைமேடு பகுதியைச் சேர்ந்த நித்யா (வயது 28) என்பவர், கடந்த மார்ச் 11-ந் தேதி, ஆடு மேய்க்க சென்றபோது, பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்டார்.

    இச்சம்பவம் தொடர்பாக, அப்பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுவனை கைது செய்தனர். இதைத்தொ டர்ந்து அப்பகுதியில் 2 பிரிவினருக்கும் இடையில் அடிக்கடி தகராறு ஏற்பட்டது.

    அதையடுத்து, வெல்ல ஆலையில் பணியாற்றும் தொழிலாளர்களின் குடிசைக்கு தீ வைப்பு, வீடுகளுக்கு தீ வைப்பு, டிராக்டர்கள் எரிப்பு, பெட்ரோல் குண்டு வீச்சு என, அடுத்தடுத்து தொடர் சம்பவங்கள் அப்பகுதியில் நடைபெற்றதால், அங்கு பதற்றம் நிலவி வருகிறது.

    இந்நிலையில், கடந்த, 14-ந் தேதி, அதிகாலை சரளைமேடு பகுதியில் தனியாருக்கு சொந்தமான வெல்ல ஆலையில் தூங்கி கொண்டிருந்த தொழிலா ளர்கள் 4 பேர் மீது, மர்ம நபர்கள் பெட்ரோல் ஊற்றி தீ வைத்தனர்.

    அதில், படுகாயம் அடைந்த 4 பேரும் கரூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இச்சம்பவம், அப்பகுதியில் மீண்டும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    இந்த நிலையில், பரமத்தி போலீஸ் நிலையத்தில் பணியாற்றி வந்த ஆய்வாளர் சுரேஷ், தர்மபுரி மாவட்டம், பாலக்கோடுக்கு அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டார்.

    அதையடுத்து, அங்கு பணியாற்றிய இன்ஸ்பெக்டர் ரவி, பர மத்தி போலீஸ் நிலை யத்திற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார். இதற்கான உத்தரவை, சேலம் சரக டி.ஐ.ஜி. விஜயகுமார் (பொ) வழங்கி உள்ளார்.

    • அவிநாசி போலீஸ் ஸ்டேஷனில் சட்டம் மற்றும் ஒழுங்கு இன்ஸ்பெக்டர் பல்லடத்துக்கு மாற்றப்பட்டார்.
    • பல்லடத்தில் பணிபுரிந்து வரும் ராஜவேல் அவிநாசி சட்டம் மற்றும் ஒழுங்கு இன்ஸ்பெக்டராக நியமிக்கப்பட்டுள்ளார்.

    திருப்பூர்:

    அவிநாசி போலீஸ் ஸ்டேஷனில் சட்டம் மற்றும் ஒழுங்கு இன்ஸ்பெக்டர் பல்லடத்துக்கு மாற்றப்பட்டார். அவிநாசி போலீஸ் உட்கோட்டத்துக்கு உட்பட்ட அவிநாசி ஸ்டேஷனில் சட்டம் மற்றும் ஒழுங்கு இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருபவர் சரஸ்வதி. இவர், பல்லடம் போலீஸ் ஸ்டேஷன் கிரைம் இன்ஸ்பெக்டராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவருக்கு மாற்றாக, பல்லடத்தில் பணிபுரிந்து வரும் ராஜவேல் அவிநாசி சட்டம் மற்றும் ஒழுங்கு இன்ஸ்பெக்டராக நியமிக்கப்பட்டுள்ளார்.

    • வார்டு உறுப்பினர்கள் ஈஸ்வரி , கணேசன் கலந்து கொண்டனர்.
    • அனைவரும் கிராமத்தின் சுகாதாரத்தை பேணிக்காக்கும் உறுதிமொழி ஏற்றனர்.

    திருப்பூர்:

    திருப்பூர் ஒன்றியம் இடுவாய் ஊராட்சியில் உள்ள சீரங்ககவுண்டன் பாளையத்தில் உள்ள அரசமர மைதானத்தில் கிராம சபை கூட்டம் ஊராட்சி மன்ற தலைவர் கணேசன் தலைமையில் நடைபெற்றது.கூட்டத்தில் ஊராட்சி மன்ற துணை தலைவர் பரமசிவம் , வார்டு உறுப்பினர்கள் ஈஸ்வரி , கணேசன் கலந்து கொண்டனர். மாவட்ட சட்டப்பணி குழு சார்பாக வக்கீல் ராஜசேகரன் , கிராம நிர்வாக அலுவலர் , விவசாயத்துறை சுகாதாரத் துறை அதிகாரிகளும் உள்ளாட்சி அதிகாரிகளும் பங்கேற்றனர். கூட்டத்தில் இடுவாய் ஊராட்சியை திருப்பூர் மாநகராட்சியோடு இணைத்தால் தற்போது மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் பணியாற்றி வரும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்களை சேர்ந்தவர்களுக்கு வேலை இழப்பும் பொருளாதார பாதிப்பும் ஏற்படும் என்ற காரணத்தாலும், உள்ளாட்சிப் பணிகள் விரைந்து நடைபெறுவதில் தாமதம் ஏற்படும் என்கிற காரணத்தாலும் இடுவாய் ஊராட்சியை திருப்பூர் மாநகராட்சியோடு இணைக்க கூடாது .

    தமிழ்நாடு குடிசை மாற்று வாரியமும் ஒன்றிய அரசும் இணைந்து வழங்கி வந்த வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ளவர்கள் மானியத்தில் வீடு கட்டும் திட்டம் (இரண்டு லட்சத்து 10 ஆயிரம் மானியம் ) கடந்த ஓராண்டாக செயல்படுவதில்லை. எனவே உடனடியாக அந்தத் திட்டத்தை செயல்படுத்த உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். சமீபத்தில் தமிழக அரசால் கொண்டுவரப்பட்ட 12 மணி நேரம் தொழிலாளர்கள் பணியாற்ற வேண்டும் என்ற சட்ட திருத்தம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. தொழிலாளர் தினமான மே தினத்தன்று முதலமைச்சர் அந்த சட்ட திருத்தத்தை திரும்ப பெற்றதற்கு இந்த கிராம சபை மூலம் ஏகமனதாக அவருக்கு நன்றி தெரிவிப்பது.

    இடுவாயில் செயல்பட்டு வரும் அரசு மதுபான கடையை அகற்றக்கோரி கடந்த பல வருடங்களாக கிராம சபையில் தீர்மானம் நிறைவேற்றியும் பாராளுமன்ற உறுப்பினர் தலைமையில் போராட்டம் நடத்தியும் கோரிக்கை நிறைவேறாமல் உள்ளது. எனவே தமிழக அரசு இந்த அரசு மதுபான கடையில் மது விற்பனையை உடனடியாக நிறுத்த வேண்டும். இடம் மாற்றம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அப்போது மதுபான கடை அகற்றாததால் ஊராட்சி தலைவர் ராஜினாமா செய்ய வேண்டும் என பா.ஜ.க.வினர் கருத்து தெரிவித்தனர்.

    ஊராட்சித் தலைவர் அதற்கு விளக்கம் அளித்து பேசும் போது, மதுபான கடையை வைக்கலாமா வேண்டாமா என்ற அதிகாரம் ஊராட்சி தலைவருக்கு இல்லை . ஜனநாயக முறைப்படி எதிர்ப்பு தெரிவித்து போராட மட்டுமே அதிகாரம் உள்ளது. அதை இடைவிடாது செய்து வருவதாக விளக்கம் அளித்தார்.பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த பொது மக்களின் கோரிக்கை மனுக்களை ஊராட்சி தலைவர் பெற்றுக் கொண்டார். கோரிக்கைகள் மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.அனைவரும் கிராமத்தின் சுகாதாரத்தை பேணிக்காக்கும் உறுதிமொழி ஏற்றனர்.

    • திங்கட்கிழமையன்று நடைபெறும் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறுகிறது.
    • ஊரக வளர்ச்சித்துறை அலுவலக கூட்டரங்கில் நடைபெறும் என தெரிவிக்கப்படுகிறது

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், வாரந்தோறும் திங்கட்கிழமையன்று நடைபெறும் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 24.04.2023 அன்று காலை 10.30 மணிக்கு விழுப்புரம் மாவட்ட கலெக்டர் பெருந்திட்ட வளாகத்தில் அமைந்துள்ள ஊரக வளர்ச்சித்துறை அலுவலக கூட்டரங்கில் நடைபெறும் என தெரிவிக்கப்படுகிறது.

    ×