search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இன்ஸ்பெக்டர்கள்"

    • அவிநாசி போலீஸ் ஸ்டேஷனில் சட்டம் மற்றும் ஒழுங்கு இன்ஸ்பெக்டர் பல்லடத்துக்கு மாற்றப்பட்டார்.
    • பல்லடத்தில் பணிபுரிந்து வரும் ராஜவேல் அவிநாசி சட்டம் மற்றும் ஒழுங்கு இன்ஸ்பெக்டராக நியமிக்கப்பட்டுள்ளார்.

    திருப்பூர்:

    அவிநாசி போலீஸ் ஸ்டேஷனில் சட்டம் மற்றும் ஒழுங்கு இன்ஸ்பெக்டர் பல்லடத்துக்கு மாற்றப்பட்டார். அவிநாசி போலீஸ் உட்கோட்டத்துக்கு உட்பட்ட அவிநாசி ஸ்டேஷனில் சட்டம் மற்றும் ஒழுங்கு இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருபவர் சரஸ்வதி. இவர், பல்லடம் போலீஸ் ஸ்டேஷன் கிரைம் இன்ஸ்பெக்டராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவருக்கு மாற்றாக, பல்லடத்தில் பணிபுரிந்து வரும் ராஜவேல் அவிநாசி சட்டம் மற்றும் ஒழுங்கு இன்ஸ்பெக்டராக நியமிக்கப்பட்டுள்ளார்.

    • மேற்கு மண்டலத்தில் சரகங்கத்தில் 8 இன்ஸ்பெக்டர்கள் மற்றும் 16 இன்ஸ்பெக்டர்கள் மாறுதல் செய்யப்பட்டுள்ளனர்.
    • 48 இன்ஸ்பெக்டர்களுக்கு மாறுதல் செய்து கோவை மேற்கு மண்டல ஐஜி சுதாகர் உத்தரவிட்டார்.

    கொண்டலாம்பட்டி:

    மேற்கு மண்டலத்தில் உள்ள கோவை, சேலம் சரகங்கள் கோவை, சேலம், திருப்பூர், மாநகர பகுதிகளுக்கு 48 இன்ஸ்பெக்டர் களுக்கு மாறுதல் செய்து கோவை மேற்கு மண்டல ஐஜி சுதாகர் உத்தரவிட்டார்.

    அதன்பேரில் சேலம் மாநகரத்திற்கு இன்ஸ்பெக்டர்கள் தூத்துக்குடி வடக்கு காவல் நிலையம் முருகன்,சென்னை அயனாவரம் காவல் நிலையம் செல்வராஜ்,மேற்கு மண்டல காத்திருப்போர் பட்டியலில் இருந்த விஜதரண்,சசிகலா, திண்டுக்கல் மாவட்டம் மோகன்பாபு கண்ணா,நீலகிரி மாவட்டம் நடுவட்டம் காவல் நிலையம் சண்முகசுந்தரம்,கோவை மாநகர காவல் இருந்து விக்னேஸ்வரன், ஆனந்,ஆகிய 8 இன்ஸ்பெக்டர்கள் மற்றும் சேலம் சரகத்திற்கு 16 இன்ஸ்பெக்டர்கள் மாறுதல் செய்யப்பட்டுள்ளனர்.

    இவர்கள் அனைவரும் விரைவில் பொறுப்பேற்க உள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

    ×