search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "inspectors"

    • தஞ்சை கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    • கால்நடை ஆய்வாளர் பயிற்சியை உடனடியாக தொடங்க வேண்டும்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்ட தமிழ்நாடு கால்நடை ஆய்வாளர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் தஞ்சை கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் முத்துராஜா தலைமை தாங்கினார்.

    கோட்ட செயலாளர்கள் ஜெகதீஷ், டோனிபிரிட்மேன், சந்துரு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    மாவட்ட இணை செயலாளர் சாமி. கோவிந்தராஜ் வரவேற்றார்.

    ஆர்ப்பாட்டத்தில் மாநில செயலாளர் தமிழ்வாணன், அரசு ஊழியர் சங்க மாநில செயலாளர் கோதண்ட பாணி, சத்துணவு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் ரவிச்சந்திரன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.

    ஆர்ப்பாட்டத்தில் கால்நடை ஆய்வாளர் பயிற்சியை உடனடியாக தொடங்க வேண்டும்.

    சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பின் படி6-வது ஊதியக்குழுவில் வழங்கப்படாத ஊதியத்தை உடனடியாக வழங்க வேண்டும்.

    பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

    முடிவில் மாவட்ட மகளிரணி செயலாளர் அந்தோணிஜெயந்தி நன்றி கூறினார்.

    • சென்னை தடத்தில் 150 சிறப்பு பஸ்களும், பிற தடங்களில் 100 சிறப்பு பஸ்களும் இயக்கம்.
    • சிறப்பு அலுவலா்கள், பரிசோதகா்கள் பணியமா்த்தப்பட்டு பஸ் இயக்கத்தை சீரமைக்க ஏற்பாடு.

    தஞ்சாவூர்:

    அரசு போக்குவரத்து கழகத்தின் கும்பகோணம் கோட்ட மேலாண் இயக்குநா் மோகன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    சனி, ஞாயிறு வாரவிடுமுறை மற்றும் சுபமுகூா்த்த நாளையொட்டி, தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தின் கும்பகோணம் கோட்டம் சாா்பில் பொது மக்களின் வசதிக்காக, திருச்சி, கும்பகோணம், தஞ்சாவூா், பட்டுக்கோட்டை, நாகப்பட்டினம், திருவாரூா், மயிலாடுதுறை, வேதா ரண்யம், திருத்துறைப்பூண்டி, புதுக்கோட்டை, காரைக்குடி, இராமநாதபுரம் ஆகிய ஊா்களிலிருந்து சென்னைக்கும் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.

    இதேபோல் சென்னையிலிருந்து மேற்கண்ட ஊா்களுக்கு 150 பஸ்களும், திருச்சியிலிருந்து கோவை, திருப்பூா், மதுரை ஆகிய இடங்களுக்கும், கோவை, திருப்பூா், மதுரை ஆகிய இடங்களிலிருந்து திருச்சிக்கும், திருச்சியிலிருந்து காரைக்குடி, புதுக்கோட்டை, தஞ்சாவூா், நாகப்பட்டினம், வேளாங்கண்ணி ஆகிய ஊா்களுக்கு 100 பஸ்களும் என மொத்தம் 250 சிறப்பு பஸ்கள் இன்று (வெள்ளிக்கிழமை) மற்றும் நாளை (சனிக்கிழமை) இயக்கப்பட உள்ளன.

    இதேபோல, விடுமுறைக்கு வந்த பயணிகள் மீண்டும் அவரவா் ஊா்களுக்குச் செல்ல 20 மற்றும் 21-ந் தேதிகளில் (ஞாயிறு, திங்கள்) சென்னை தடத்தில் 150 சிறப்பு பஸ்களும், பிற தடங்களில் 100 சிறப்பு பஸ்களும் இயக்க விரிவான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    மேலும், முக்கிய பேருந்து நிலையங்களில் சிறப்பு அலுவலா்கள், பரிசோ தகா்கள், பணியாளா்கள், பயணிகள் வசதிக்காக பணியமா்த்தப்பட்டு பேருந்து இயக்கத்தைச் சீரமைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • திருச்செங்கோடு - நாமக்கல் பிரதான சாலையில் மாணிக்கம்பாளையம் பஸ் நிறுத்தம் பகுதியில் திருச்செங்கோடு மோட்டார் வாகன ஆய்வாளர்கள் ஆய்வு நடத்தினர்.
    • அப்போது மாணிக்கம்பாளை யத்தில் பஸ்களை நிறுத்தி பயணி களை ஏற்றி, இறக்கி செல்ல வேண்டும் என்று தெரிவித்தனர்.

    திருச்செங்கோடு:

    திருச்செங்கோடு வட்டாரப் போக்குவரத்து அலுவலக எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் அடிக்கடி விபத்து நடைபெறும் இடங்கள் மற்றும் விபத்து நடைபெற வாய்ப்புள்ள இடங்களை ஆய்வு செய்து விபத்துக்களை தவிர்க்க தேவையான நடவடிக்கைகள் குறித்து அறிக்கை அளிக்க கலெக்டர் தெரிவித்துள்ளார்.

    ஆய்வு

    இதையடுத்து, திருச்செங்கோடு - நாமக்கல் பிரதான சாலையில் மாணிக்கம்பாளையம் பஸ் நிறுத்தம் பகுதியில் திருச்செங்கோடு மோட்டார் வாகன ஆய்வாளர்கள் ஆய்வு நடத்தினர்.

    இங்கு விபத்துகளை தடுக்கும் பொருட்டு சாலையின் இரு மார்க்கத்திலும் சிக்னல் விளக்குகள், சாலையின் இரு மார்க்கத்திலும் உரிய இடங்களில் ரம்பிள் கீற்றுக்கள், கண்காணிப்பு காமிராக்கள் பொருத்த மோட்டார் வாகன ஆய்வாளர்கள் பரிந்துரை செய்தனர். இதனிடையே, மாணிக்கம்பாளை யம் பஸ் நிறுத்தத்தில் அரசு மற்றும் தனியார் பஸ்கள் நின்று செல்வதில்லை என்ற புகாரை தொடர்ந்து மோட்டார் வாகன ஆய்வாளர் பாமபிரியா, வேலகவுண்டம்பட்டி போலீசார், நுகர்வோர் பாதுகாப்பு சங்கத்தின் நிர்வாகி செந்தில்குமார் ஆகியோர் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

    எச்சரிக்கை

    அப்போது மாணிக்கம்பாளை யத்தில் பஸ்களை நிறுத்தி பயணி களை ஏற்றி, இறக்கி செல்ல வேண்டும் என்று தெரிவித்தனர். அவ்வாறு ஏற்றி இறக்கி செல்லாத பஸ் ஓட்டுநர், நடத்துனர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்தனர். 

    • அவிநாசி போலீஸ் ஸ்டேஷனில் சட்டம் மற்றும் ஒழுங்கு இன்ஸ்பெக்டர் பல்லடத்துக்கு மாற்றப்பட்டார்.
    • பல்லடத்தில் பணிபுரிந்து வரும் ராஜவேல் அவிநாசி சட்டம் மற்றும் ஒழுங்கு இன்ஸ்பெக்டராக நியமிக்கப்பட்டுள்ளார்.

    திருப்பூர்:

    அவிநாசி போலீஸ் ஸ்டேஷனில் சட்டம் மற்றும் ஒழுங்கு இன்ஸ்பெக்டர் பல்லடத்துக்கு மாற்றப்பட்டார். அவிநாசி போலீஸ் உட்கோட்டத்துக்கு உட்பட்ட அவிநாசி ஸ்டேஷனில் சட்டம் மற்றும் ஒழுங்கு இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருபவர் சரஸ்வதி. இவர், பல்லடம் போலீஸ் ஸ்டேஷன் கிரைம் இன்ஸ்பெக்டராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவருக்கு மாற்றாக, பல்லடத்தில் பணிபுரிந்து வரும் ராஜவேல் அவிநாசி சட்டம் மற்றும் ஒழுங்கு இன்ஸ்பெக்டராக நியமிக்கப்பட்டுள்ளார்.

    • நெல்லை சரக டி.ஐ.ஜி. பிரவேஷ்குமார் வள்ளியூர் சரகத்திற்குட்பட்ட 3 இன்ஸ்பெக்டர்கள் உள்பட 5 பேரை பணியிட மாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளார்
    • திசையன்விளை இன்ஸ்பெக்டர் ஜமால், தூத்துக்குடி மாவட்டம் முறப்பநாட்டிற்கும், அங்கு பணியாற்றிய இன்ஸ்பெக்டர் ஸ்டீபன் ஜோஸ் வள்ளியூர் குற்றப்பிரிவுக்கும் மாற்றப்பட்டுள்ளனர்.

    நெல்லை:

    நெல்லை சரக டி.ஐ.ஜி. பிரவேஷ்குமார் வள்ளியூர் சரகத்திற்குட்பட்ட 3 இன்ஸ்பெக்டர்கள் உள்பட 5 பேரை பணியிட மாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளார்.

    இன்ஸ்பெக்டர்கள்

    அதன்படி திசையன்விளை இன்ஸ்பெக்டர் ஜமால், தூத்துக்குடி மாவட்டம் முறப்பநாட்டிற்கும், அங்கு பணியாற்றிய இன்ஸ்பெக்டர் ஸ்டீபன் ஜோஸ் வள்ளியூர் குற்றப்பிரிவுக்கும் மாற்றப்பட்டுள்ளனர். வள்ளியூர் குற்றப்பிரிவில் பணியாற்றிய இன்ஸ்பெக்டர் சாந்தி திசையன்விளை போலீஸ் நிலையத்திற்கும் மாற்றம் செய்யப்பட்டுள்ளளர்.

    இதேபோல் சிவகங்கை மாவட்டத்தில் பணியாற்றி வரும் இன்ஸ்பெக்டர் ஜெயலெட்சுமி, தென்காசி மாவட்டம் புளியங்குடி அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கும், பணகுடி சரகத்தில் பணியாற்றி வரும் இன்ஸ்பெக்டர் மகாலெட்சுமி தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரி குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளனர்

    • மேற்கு மண்டலத்தில் சரகங்கத்தில் 8 இன்ஸ்பெக்டர்கள் மற்றும் 16 இன்ஸ்பெக்டர்கள் மாறுதல் செய்யப்பட்டுள்ளனர்.
    • 48 இன்ஸ்பெக்டர்களுக்கு மாறுதல் செய்து கோவை மேற்கு மண்டல ஐஜி சுதாகர் உத்தரவிட்டார்.

    கொண்டலாம்பட்டி:

    மேற்கு மண்டலத்தில் உள்ள கோவை, சேலம் சரகங்கள் கோவை, சேலம், திருப்பூர், மாநகர பகுதிகளுக்கு 48 இன்ஸ்பெக்டர் களுக்கு மாறுதல் செய்து கோவை மேற்கு மண்டல ஐஜி சுதாகர் உத்தரவிட்டார்.

    அதன்பேரில் சேலம் மாநகரத்திற்கு இன்ஸ்பெக்டர்கள் தூத்துக்குடி வடக்கு காவல் நிலையம் முருகன்,சென்னை அயனாவரம் காவல் நிலையம் செல்வராஜ்,மேற்கு மண்டல காத்திருப்போர் பட்டியலில் இருந்த விஜதரண்,சசிகலா, திண்டுக்கல் மாவட்டம் மோகன்பாபு கண்ணா,நீலகிரி மாவட்டம் நடுவட்டம் காவல் நிலையம் சண்முகசுந்தரம்,கோவை மாநகர காவல் இருந்து விக்னேஸ்வரன், ஆனந்,ஆகிய 8 இன்ஸ்பெக்டர்கள் மற்றும் சேலம் சரகத்திற்கு 16 இன்ஸ்பெக்டர்கள் மாறுதல் செய்யப்பட்டுள்ளனர்.

    இவர்கள் அனைவரும் விரைவில் பொறுப்பேற்க உள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

    சென்னையில், விபச்சார புரோக்கர்களிடம் லட்சக்கணக்கில் லஞ்சம் வாங்கிக் கொண்டு விபச்சாரத்துக்கு அனுமதியளித்த 2 இன்ஸ்பெக்டர்ள் இடமாற்றம் செய்யப்பட்டனர்.
    சென்னை:

    சென்னை போலீசில் மத்திய குற்றப்பிரிவின் கீழ் விபசார தடுப்பு பிரிவு செயல்பட்டு வருகிறது. இங்கு பணியாற்றிய 2 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் மீது லஞ்ச புகார் எழுந்தது.

    விபசார புரோக்கர்களிடம் லட்சக் கணக்கில் லஞ்சம் வாங்கிக்கொண்டு விபசாரத்துக்கு அனுமதித்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக உளவு பிரிவு போலீசார் விசாரணை நடத்தி போலீஸ் கமி‌ஷனர் ஏ.கே.விஸ்வநாதனுக்கு அறிக்கை அளித்தனர். இதன்படி 2 போலீஸ் இன்ஸ்பெக்டர்களும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

    இவர்களுக்கு பதில் கோட்டடூர்புரத்தில் பணியாற்றிய இன்ஸ்பெக்டர் மகாலட்சுமி, உளவு பிரிவு இன்ஸ்பெக்டர் சண்முகவேல் ஆகியோர் விபசார தடுப்பு பிரிவுக்கு புதிய இன்ஸ்பெக்டர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

    இடமாற்றம் செய்யப்பட்ட 2 போலீஸ் இன்ஸ்பெக்டர்களும் வேறு காவல் நிலையங்களில் பணி அமர்த்தப்பட்டுள்ளனர்.
    ×