என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
விபசார புரோக்கரிடம் லஞ்சம் - 2 இன்ஸ்பெக்டர்கள் அதிரடி மாற்றம்
Byமாலை மலர்16 May 2018 6:39 AM GMT (Updated: 16 May 2018 6:39 AM GMT)
சென்னையில், விபச்சார புரோக்கர்களிடம் லட்சக்கணக்கில் லஞ்சம் வாங்கிக் கொண்டு விபச்சாரத்துக்கு அனுமதியளித்த 2 இன்ஸ்பெக்டர்ள் இடமாற்றம் செய்யப்பட்டனர்.
சென்னை:
சென்னை போலீசில் மத்திய குற்றப்பிரிவின் கீழ் விபசார தடுப்பு பிரிவு செயல்பட்டு வருகிறது. இங்கு பணியாற்றிய 2 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் மீது லஞ்ச புகார் எழுந்தது.
விபசார புரோக்கர்களிடம் லட்சக் கணக்கில் லஞ்சம் வாங்கிக்கொண்டு விபசாரத்துக்கு அனுமதித்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக உளவு பிரிவு போலீசார் விசாரணை நடத்தி போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதனுக்கு அறிக்கை அளித்தனர். இதன்படி 2 போலீஸ் இன்ஸ்பெக்டர்களும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
இவர்களுக்கு பதில் கோட்டடூர்புரத்தில் பணியாற்றிய இன்ஸ்பெக்டர் மகாலட்சுமி, உளவு பிரிவு இன்ஸ்பெக்டர் சண்முகவேல் ஆகியோர் விபசார தடுப்பு பிரிவுக்கு புதிய இன்ஸ்பெக்டர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
இடமாற்றம் செய்யப்பட்ட 2 போலீஸ் இன்ஸ்பெக்டர்களும் வேறு காவல் நிலையங்களில் பணி அமர்த்தப்பட்டுள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X