search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆலோசனை கூட்டம்"

    • அ.தி.மு.க. பூத் கமிட்டி பணிகள் ஆய்வு குறித்த ஆலோசனை கூட்டம் செங்கோட்டையில் நடந்தது.
    • கூட்டத்தில் பொன்தனபாலன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

    செங்கோட்டை:

    செங்கோட்டையில் தென்காசி வடக்குமாவட்ட அ.தி.மு.க. மாவட்ட அலுவலகத்தில் பூத் கமிட்டி, மகளிர் குழு இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை குழு அமைத்து வரும் பணிகள் ஆய்வு குறித்த ஆலோசனை கூட்டம் நடந்தது. மாவட்ட செயலாளர் கிருஷ்ணமுரளி என்ற குட்டியப்பா எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். மகளிரணி துணை செயலாளரும், முன்னாள் அமைச்சருமான ராஜலட்சுமி முன்னிலை வகித்தார். மாவட்ட துணை செயலாளர் பொய்கை மாரியப்பன் வரவேற்று பேசினார். கூட்டத்தில் மாநில அண்ணா தொழிற்சங்க மாநில துணை செயலாளர் பொன்தனபாலன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

    கூட்டத்தில் மண்டல தகவல் தொழில்நுட்ப பிரிவு துணை செயலாளர் சிவஆனந்த், மாவட்ட அண்ணா தொழிற்சங்க மண்டல முன்னாள் செயலாளர் கந்தசாமிபாண்டியன், மாவட்ட சார்பு அணி நிர்வாகிகள், ஒன்றிய செயலாளர்கள், பேரூர் செயலாளர்கள், ஒன்றிய, நகர, பேரூர் பொறுப்பாளர்கள் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். மாவட்ட பொருளாளர் சண்முகையா நன்றி கூறினார்.

    • அ.தி.மு.க. ஓ.பன்னீர்செல்வம் அணி சார்பில் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
    • பூத் கமிட்டி அமைப்பது குறித்து நிர்வாகிகளுக்கு பல்வேறு ஆலோசனைகளை வழங்கினர்.

    தஞ்சாவூர்:

    நாடாளுமன்ற தேர்தலையொட்டி தஞ்சை மாவட்டத்தில் அ.தி.மு.க. ஓ.பன்னீர்செல்வம் அணி சார்பில் பூத்கமிட்டி அமைப்பது குறித்த நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் தஞ்சையில் நடைபெற்றது.

    இதற்கு மாவட்ட அமைப்பாளர்கள் ராஜரத்தினம், பூண்டி கிருஷ்ணன் ஆகியோர் தலைமை தாங்கினர்.

    கூட்டத்தில் இணை ஒருங்கிணைப்பாளரும், தஞ்சை தெற்கு மாவட்ட செயலாளருமான வைத்திலிங்கம் எம்.எல்.ஏ., வடக்கு மாவட்ட செயலாளர் எம்.ஜி.எம்.சுப்பிரமணியன் ஆகியோர் கலந்து கொண்டு பூத் கமிட்டி அமைப்பது குறித்து நிர்வாகிகளுக்கு பல்வேறு ஆலோசனைகளை வழங்கினர்.

    இதில் பகுதி செயலாளர்கள் அறிவுடைநம்பி, சண்முகபிரபு, சுவாமிநாதன், திருச்சி மண்டல தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் வினுபாலன், ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரி தவமணி, தஞ்சை சட்டமன்ற தொகுதி செயலாளர் சத்தியராஜ், திருவையாறு சட்டமன்ற தொகுதி செயலாளர் மோகன்தாஸ், ஒன்றிய செயலாளர் துரை.வீரணன், மாநகராட்சி எதிர்கட்சி தலைவர் மணிகண்டன், கவன்சிலர் சரவணன், கரந்தை பகுதி துணை செயலாளர் தாஸ், மாவட்ட தொழில்சங்க இணை செயலாளர் வீரராஜ், குளிச்சப்பட்டு ஊராட்சி மன்ற தலைவர் இளவரசி கலியமூர்த்தி, முன்னாள் மாவட்ட ஊராட்சி குழு தலைவர் அமுதா ரவிச்சந்திரன், நிர்வாகி ராஜேஸ் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் கீழவாசல் பகுதி செயலாளர் ரமேஷ் நன்றி கூறினார்.

    • தனியாருக்கு சொந்தமான இடத்தில் தார் தொழிற்சாலை அமைந்துள்ளது.
    • 4 ஊராட்சிகளுக்கு உட்பட்ட கிராம மக்களின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுக்கா எடமணல்-திருநகரி சாலையில் தனியாருக்கு சொந்தமான இடத்தில் தார் தொழிற்சாலை அமைந்துள்ளது.

    இதனால் சுற்றுச்சூழல் பாதிக்கும் அபாயம் ஏற்படும் என கூறி அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து மாவட்ட கலெக்டரிடம் மனு அளித்துள்ளனர்.

    இந்நிலையில் 4 ஊராட்சிகளுக்கு உட்பட்ட கிராம மக்களின் ஆலோசனைக் கூட்டம் எடமணல் கிராமத்தில் நடைபெற்றது ஜெய ராமன் தலைமையில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் எடமணல், திருநகரி, வேட்டங்குடி, திருமுல்லைவாசல் ஆகிய ஊராட்சிகளுக்கு உட்பட்ட கிராம நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தின் முடிவில் தார் பிளாண்ட் தொழிறடசாலையை தடை செய்வதற்கான முயற்சிகள் அனைத்திற்கும் ஒத்துழைப்பு அளிப்பது, தார் பிளாண்ட் தடை செய்யக்கோரி ஊராட்சி மன்ற தலைவர்களை அணுகி சிறப்புத் தீர்மானம் நிறைவேற்ற கேட்டு பெறுவது போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    • ஆலோசனை கூட்டம் முன்னாள் எம்.பி. அன்வர் ராஜா, செல்வ மோகன்தாஸ்பாண்டியன் தலைமையில் நடைபெற்றது.
    • கூட்டத்தில் அ.தி.மு.க. நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

    தென்காசி:

    தென்காசி தெற்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் பூத் கமிட்டி, இளைஞர் இளம் பெண்கள் பாசறை, மகளிர்அணி அமைப்பது சம்பந்தமான ஆலோசனை கூட்டம் முன்னாள் எம்.பி. அன்வர் ராஜா, தென்காசி தெற்கு மாவட்ட செயலாளர் செல்வ மோகன்தாஸ்பாண்டியன் ஆகியோர் தலைமையில் பாவூர்சத்திரத்தில் உள்ள மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்றது.

    கூட்டத்திற்கு மாவட்ட அவைத்தலைவர் சண்முகசுந்தரம் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் மாவட்ட துணைச் செயலாளர் வீரபாண்டியன், மாவட்ட பொருளாளர் லாட சன்னியாசி, பொதுக்குழு உறுப்பினர்கள் கசமுத்து, பாண்டிய ராஜ், அண்ணா தொழிற்சங்கம் கந்தசாமிபாண்டியன், சார்பணி மாவட்ட செயலாளர்கள், காத்தவராயன், சந்திரகலா, பிரேம்குமார், கிருஷ்ணசாமி, நெல்லை முகிலன், சுப்பையா என்ற ராஜ், சிவசீதாராம், வக்கீல் சிவகுமார், ஒன்றிய செயலாளர்கள் சங்கரபாண்டியன், அமல்ராஜ், என். ஹெச்.எம்.பாண்டியன், ஜெயக்குமார், அருவேல்ராஜ், முருகேசன், சுப்பிரமணியன், பாலகிருஷ்ணன், இருளப்பன், நகர செயலாளர்கள் சுடலை, சக்திவேல், பேரூர் செயலாளர்கள் கணேஷ் தாமோதரன், கார்த்திக்குமார், முத்துராஜன், ஜெயராமன், சுப்பிரமணியன், வில்சன், சங்கர், பூத் கமிட்டி அமைக்கும் பொறுப்பாளர்கள் பாலமுருகன், ராமசுப்பிரமணியன், சாமி ஆசாரி, பரசுராமன், வக்கீல்கள் செல்லத்துரை பாண்டியன், ரங்கராஜ், சதீஷ்குமார், சாந்தகுமார், ராமச்சந்திரன், ஜோதி முருகன், மாவட்ட மாணவரணி பொருளாளர் சேர்மப்பாண்டி, கவுன்சிலர் உமா மகேஸ்வரன் மற்றும் ராமமூர்த்தி, ஜெயபால கண்ணன், குணம் என்ற உத்தர குண பாண்டியன், ஐவராஜா, தமிழ் என்ற ராமசாமி, மணி, சுந்தர், குத்தாலிங்கம், பாலமுருகன், பாஸ்கர், சேவியர் ரஜினி, ராசு, தங்கச்சாமி, மற்றும் அ.தி.மு.க. நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

    • காங்கிரஸ் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது.
    • முடிவில் விருதுநகர் கிழக்கு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் துணைத்தலைவர் ராதாகிருஷ்ணன் நன்றி கூறினார்.

    சிவகாசி

    சிவகாசி அருகே உள்ள எம்.புதுப்பட்டியில் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம் நடந்தது. வட்டார காங்கிரஸ் தலைவர் முத்துமாரி தலைமை தாங்கினார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் சீனிவாசன் முன்னிலை வகித்தார். விருதுநகர் மாவட்ட செய்தி தொடர்பாளர் மீனாட்சி சுந்தரம் வரவேற்றார். நிகழ்ச்சியில் மாநில பொதுக்குழு உறுப்பினர் கிருஷ்ணமூர்த்தி, முன்னாள் மத்திய அரசு வக்கீல் முருகானந்தம், மாவட்ட செயற்குழு உறுப்பினர் சிவகுருநாதன், மாநில பொதுக்குழு உறுப்பினர் பாலகிருஷ்ணசாமி, மாவட்ட செயற்குழு உறுப்பினர் வைரவசாமி ஆகியோர் பேசினர். வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி கூடுதல் தொகுதிகள் கேட்டு பெற வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. நிகழ்ச்சியில் காங்கிரஸ் நிர்வாகிகள் நந்தகுமார், செல்லையாதேவர், சங்கர், சோமசுந்தரம், சற்குண பாண்டியன், கோபால், சிவகாசி ஷேக், குருசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    முடிவில் விருதுநகர் கிழக்கு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் துணைத்தலைவர் ராதாகிருஷ்ணன் நன்றி கூறினார்.

    • அ.தி.மு.க. பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம் நடந்தது.
    • மேற்கு (தெற்கு) ஒன்றிய செயலாளர் அரியூர் ராதாகிருஷ்ணன் நிகழ்ச்சி ஏற்பாடுகளை செய்திருந்தார்.

    அலங்காநல்லூர்

    மதுரை புறநகர் மேற்கு மாவட்டம், சோழவந்தான் சட்டமன்ற தொகுதி அ.தி.மு.க. சார்பில் சிக்கந்தர் சாவடி தனியார் மண்ட பத்தில் 2024 பாராளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ள தையொட்டி பூத் கமிட்டி அமைப்பது குறித்த ஆலோ சனை கூட்டம் நடந்தது.

    முன்னாள் அமைச்சர் சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார் தலைமை தாங்கி பூத் கமிட்டி அமைப்பது குறித்து நிர்வாகிகளுக்கு ஆலோ சனை வழங்கினார்.

    மேற்கு (தெற்கு) ஒன்றிய செயலாளர் அரியூர் ராதாகிருஷ்ணன் நிகழ்ச்சி ஏற்பாடுகளை செய்தி ருந்தார். எம்.ஜி.ஆர். மன்ற இணைச் செயலாளர் தண்டரை மனோகரன் சிறப்பு அழைப்பாக கலந்து கொண்டார்.

    முன்னாள் எம்.எல்.ஏக்கள் கருப்பையா, மாணிக்கம், ஒன்றிய செய லாளர்கள் ரவிச்சந்திரன், காளிதாஸ், கொரியர் கணே சன், மாவட்ட மகளிரணி லட்சுமி, மாவட்ட விவசாய அணி செயலாளர் ராம் குமார், வாடிப்பட்டி பேரூர் செயலாளர் அசோக்குமார், ஒன்றிய கவுன்சிலர்கள் ஜெகதா ராதாகிருஷ்ணன், அம்மு லோகேஸ்வரன், முன்னாள் கூட்டுறவு தலைவர் மலர் கண்ணன், பொதும்பு கிளை செய லாளர் ராகுல், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • ஒன்றிய செயலாளர் ஜெஸீம் தலைமையில் நடந்தது
    • அனைத்து வாக்குச்சாவடிகளிலும் பூத் கமிட்டி அமைத்து அயராது பாடுபடுவது

    கன்னியாகுமரி :

    அகஸ்தீஸ்வரம் வடக்கு ஒன்றிய அ.தி.மு.க. நிர்வா கிகள் ஆலோசனை கூட்டம் அஞ்சுகிராமத்தில் நடை பெற்றது. கூட்டத்துக்கு அகஸ்தீஸ்வரம் வடக்கு ஒன்றிய அ.தி.மு.க செயலா ளர் ஜெஸீம் தலைமை தாங்கினார். ஒன்றிய விவசாய அணி செயலாளர் மேட்டுக்குடி முருகன், அழகப்பபுரம் பேரூர் செய லாளர் மணிகண்டன், தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் பகவதி குமார் என்ற கண்ணன், ஊராட்சி கழக பொறுப்பா ளர்கள் லீன், செல்லப்பெரு மாள் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அஞ்சுகிராமம் பேரூர் செயலாளர் ராஜ பாண்டியன் வரவேற்று பேசினார். கூட்டத்தில் ஒன்றிய செயலாளர் ஜெஸீம் நிர்வாகிகளுக்கு ஆலோசனைகள் வழங்கி னார்.

    கூட்டத்தில் முன்னாள் அமைச்சரும், கன்னியா குமரி சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏ.வுமான தளவாய்சுந்தரத்தை குமரி கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் நியமனம் செய்த அ.தி.மு.க. பொதுச் செயலாளரும் முன்னாள் முதல்-அமைச்சரும் தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமிக்கு நன்றி தெரி விப்பது. வருகிற பாராளுமன்ற தேர்தலில் கன்னியாகுமரி தொகுதியில் அ.தி.மு.க. வெற்றிக்காக அகஸ்தீஸ்வரம் வடக்கு ஒன்றியத்துக்குட்பட்ட அனைத்து வாக்குச்சாவடிகளிலும் பூத் கமிட்டி அமைத்து அயராது பாடுபடுவது என்று முடிவு செய்யப்பட்டது என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன.

    அதைத்தொடர்ந்து ஒன்றிய செயலாளராக பதவியேற்றுள்ள ஜெஸீம்-க்கு நிர்வாகிகள் சார்பில் வாழ்த்து தெரிவிக்கப் பட்டது. அ.தி.மு.க. கட்சியின் 52-வது ஆண்டு தொடக்க விழாவை இந்த மாதம் பிரம்மாண்டமாக கொண்டாட வேண்டும், வடக்கு ஒன்றியத்துக்கு புதிய நிர்வாகிகள் தேர்வு செய்தல் உள்ளிட்ட பல்வேறு தீர் மானங்கள் நிறை வேற்றப் பட்டன. கூட்டத்தில் நிர்வாகிகள் லெட்சுமணன், செல்லம்பிள்ளை, வீரபத்தி ரன், விஜயகுமார் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

    • கட்டிடம் கட்ட அனுமதி கேட்டிருந்த 35பேரை வரவழைத்து கமிட்டி குழுவினருடன் அமர்ந்து ஆவணங்களை ஆய்வு செய்து பேசினார்.
    • மாவட்ட நிர்வாகம் சார்பில் இதை பரிசீலனை செய்வார்கள் என கூறியதாக பொதுமக்கள் தெரிவித்தனர்.

    மாமல்லபுரம்:

    கல்பாக்கத்தில் உள்ள அணுமின் நிலையத்தை சுற்றி 5கி.மீ தூரத்தில் கட்டிடம் கட்டவோ, விவசாய நிலத்தை வீட்டு மனையாக்கி விற்கவோ அணுசக்தி துறையின் "நிலா" கமிட்டி அனுமதி வழங்குவதில்லை.

    இதனால் அப்பகுதி மக்கள் நிலங்களை விற்க முடியாமலும், வாங்க முடியாமலும் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். இதுகுறித்து பொது மக்கள் செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் திருக்கழுகுன்றம் தாசில்தார், உள்ளிட்டோரிடம் முறையிட்டு வந்தனர்.

    இந்நிலையில் "நிலா" கமிட்டியில் அணுசக்திதுறை சார்பில் முக்கிய பொறுப்பில் இருக்கும் இந்திராகாந்தி அணு ஆராய்ச்சி மையத்தின் இயக்குனர் வெங்கட்ராமன், அப்பகுதியில் கட்டிடம் கட்ட அனுமதி கேட்டிருந்த 35பேரை வரவழைத்து கமிட்டி குழுவினருடன் அமர்ந்து ஆவணங்களை ஆய்வு செய்து பேசினார். இதில் அணுசக்திதுறையால் மக்களின் குடியிருப்பு பயன்பாட்டிற்கு எந்த தடையும் கிடையாது, வணிக பயன்பாட்டிற்கு தற்போது அனுமதி கிடையாது. மாவட்ட நிர்வாகம் சார்பில் இதை பரிசீலனை செய்வார்கள் என கூறியதாக பொதுமக்கள் தெரிவித்தனர்.

    • தேவராஜி எம்.எல்.ஏ. தலைமையில் நடந்தது
    • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    ஆலங்காயம்:

    திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தி.மு.க. முகவர்களின் (பூத் கமிட்டி) ஆலோசனை கூட்டம் நேற்று வாணியம்பாடி நியு டவுன் பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் திமுக மாவட்ட செயலாளரும், ஜோலார்பேட்டை எம்எல்ஏவுமான க.தேவராஜி தலைமையில் நடைபெற்றது.

    இந்த கூட்டத்திற்கு மாவட்ட அவைத் தலைவர் ஆர்.எஸ்.ஆனந்தன், மாவட்ட துணைச் செயலாளர் ஆ.சம்பத்குமார், தலைமை செயற்குழு உறுப்பினர் மு.அசோகன் முன்னிலை வகித்தனர். நகர தி.மு.க. செயலாளர் சாரதிகுமார் வரவேற்றார்.

    கூட்டத்தில் தேவராஜி எ.எல்.ஏ., வாணியம்பாடி தொகுதி பார்வையாளர் டி.செங்குட்டுவன் மற்றும் திமுக நிர்வாகிகள் முகவர்களுக்கு ஆலோசனை வழங்கினர். தி.மு.க ஒன்றிய செயலாளர்கள் வி.எஸ்.ஞானவேலன்(ஆலங்காயம் மேற்கு), எஸ்.தாமோதிரன் (ஆலங்காயம் கிழக்கு), கே.ஆர்.திருப்பதி(திருப்பத்தூர் கிழக்கு), டி.சாமுடி (நாட்றம்பள்ளி கிழக்கு), உதயேந்திரம் பேரூர் செயலாளர் ஆ.செல்வராஜ், மாவட்ட பொறியாளர் அணி அமைப்பாளர் தே.பிரபாகரன், மாவட்ட விவசாயி அணி அமைப்பாளர் பூ.சதாசிவம், மாவட்ட அமைப்புசாரா ஓட்டுனர் அணி அமைப்பாளர் எஸ்.ராஜா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் குருபூஜையை முன்னிட்டு ஆலோசனை கூட்டம் நடந்தது.
    • பசும்பொன்னில் முத்துராம லிங்கத்தேவர் நினைவிடத்தில் மரியாதை செலுத் தத்தப்படும்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரத்தில் பசும்பொன் முத்துராம லிங்கத் தேவரின் 116-வது பிறந்தநாள் விழா மற்றும் 61-வது குருபூஜை விழாவை யொட்டி மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற்பாடு பணிகள் தொடர்பாக மாவட்ட காவல் கண்கா ணிப்பாளர் தங்கதுரை முன்னிலையில் கலெக்டர் விஷ்ணு சந்திரன் தலைமை யில் ஆேலாசனை கூட்டம் நடந்தது.

    இதில் முத்துராமலிங்க தேவர் பிறந்தநாள் விழா வினை முன்னிட்டு மேற்கொள்ளப் பட்டு வரும் பணிகள் தொடர்பாக அலுவலர்க ளுடன் ஆய்வு மேற்கொள்ளப் பட்டது. ஒவ்வொரு வருடமும் அக்.

    30-ந் தேதி பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் பிறந்தநாள், குருபூஜை விழா அரசு விழாவாக கொண்டா டப்பட்டு வருகிறது.

    அன்றைய தினம் தமிழக அரசின் சார்பில் பசும் பொன்னில் முத்துராம லிங்கத்தேவர் நினைவி டத்தில் மரியாதை செலுத் தத்தப்படும். அன்றைய தினம் பல்வேறு கட்சியினர் மற்றும் பொதுமக்கள் சார்பில் மரியாதை செலுத்தப் படும். பசும்பொன்னுக்கு வருகை தரும் முக்கிய பிரமுகர்கள், பொதுமக்கள் சென்று வர ஏதுவாக அப்பகுதியில் வாகன நிறுத்தும் இடம், முக்கிய பிரமுகர்கள் செல்லும் வழி, பொதுமக்கள் செல்லும் வழி, சாலைகளை சீர மைத்தல், மின் இணைப்பு வசதி, அன்னதானம் நடை பெறும் இடங்களில் உணவு பாதுகாப்புத்துறை சார்பில் உரிய அனுமதிகள் வழங்கப் படுவதை உறுதி செய்தல்.

    பசும்பொன் பகுதியில் சுற்றி உள்ள பகுதிகளில் கண்காணிப்பு காமிரா பொருத்துதல், குடிநீர் வசதி போன்றவைகள் தொடர்பு டைய அலுவலர்கள் தங்க ளுக்கு ஒதுக்கப்பட்ட பணி களை விரைந்து முடிக்க வேண்டுமென அறிவுறுத்தினார்.

    அதனைத் தொடர்ந்து கலெக்டர் விஷ்ணுசந்திரன், மாவட்ட காவல் கண்கா ணிப்பாளர் தங்கதுரை ஆகியோர் விழா நடை பெறும் இடங்களை பார்வை யிட்டு ஆய்வு மேற்கொண்ட னர்.

    • பா.ம.க அவசர ஆலோசனை கூட்டம் நடந்தது.
    • திருப்புல்லாணி ஒன்றிய செயலாளர் மக்தூம் கான் வரவேற்றார்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரத்தில் பாட்டாளி மக்கள் கட்சி கிழக்கு மாவட்டம் சார்பில் அவசர ஆலோசனை கூட்டம் நடந்தது. மாவட்ட செயலாளர் தேனி சை.அக்கிம் தலைமை தாங்கி னார். மாவட்ட தலைவர் சந்தானதாஸ், மாவட்ட அமைப்புச் செயலாளர் சதாம் ராஜா, அமைப்பு தலைவர் ஜீவா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    திருப்புல்லாணி ஒன்றிய செயலாளர் மக்தூம் கான் வரவேற்றார். நிகழ்ச்சியில் புதிய மாவட்ட இளைஞர் சங்க அமைப்பாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட ராம்நகர் லட்சுமணனுக்கு சந்தான தாஸ் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்.

    கூட்டத்தில் மாவட்டம் முழுவதும் புதிய கிளைகள் அமைக்க வேண்டும், கிளைகள் அனைத்திலும் கொடி ஏற்ற வேண்டும், இளைஞர் சங்கங்களை பலப்படுத்த வேண்டும், ராமநாதபுரம் மாவட்டம் வைகை நீர் ஒப்பந்தத்தின்படி 12-ல் 7 பங்கு நீரை தமிழக அரசு ராமநாதபுரம் மாவட் டத்திற்கு கொண்டு வர ஏற்பாடு செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மா னங்கள் நிறை வேற்றப் பட்டது.

    பசுமை தாயகத்தின் மாநில துணைச் செயலாளர் கர்ண மகா ராஜா, மாவட்ட துணை செயலாளர் ராசிக், ராமநாத புரம் நகர செயலாளர் பாலா, மண்ட பம் ஒன்றிய செய லாளர் வெங்கடேஷ், கீழக்கரை நகர செயலாளர் லோக நாதன், மாவட்ட தொழிற் சங்க செயலாளர் லட்சு மணன், திருப்புல்லாணி ஒன்றிய தலைவர் ராஜேந்திரன், நகர துணை செயலாளர் கார்த்திக், இளைஞர் சங்க செயலாளர் துல்கர், இளைஞர் சங்க அமைப் பாளர் ராம் நகர் லட்சுமணன் மாவட்ட சிறுபான்மை பிரிவு தலைவர் இப்ராகிம்,

    சிறுபான்மை பிரிவு செயலாளர் வாப் பாசா, மாணவர் சங்க செயலாளர் சந்தோசம், மாவட்ட மாணவர் சங்க அமைப் பாளர் கபில்தேவ், கடலாடி ஒன்றிய செயலாளர் இரு ளாண்டி, கடலாடி ஒன்றிய துணை செயலாளர் முனிய சாமி, மண்டபம் ஒன்றிய துணை செயலாளர் சாகுல், மண்டபம் ஒன்றிய இளைஞரணி செயலாளர் முனியசாமி, மற்றும் நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.

    ராமநாதபுரம் ஒன்றிய செயலாளர் பொறியாளர் முகமது ஷரீப் நன்றி கூறி னார். புதிய மாவட்ட இளைஞர் சங்க அமைப்பா ளராக தேர்ந்தெடுக்கப்பட்ட ராம்நகர் லட்சுமணனுக்கு மாவட்ட தலைவர் சந்தானதாஸ் சால்வை அணிவித்து வரவேற்றார்.

    • தமிழ்நாடு பழனிச்சாமி, தர்மராஜன், லட்சுமணன், வக்கீல் வெங்கடாஜலபதி, மரக்கடை கிருஷ்ணமூர்த்தி, உள்பட பலர் கலந்து கொண்டனர்.
    • பல்லடத்தில் அதிமுக., நகர நிர்வாகிகள் கூட்டம் நகரச் செயலாளர் ராமமூர்த்தி தலைமையில் நடைபெற்றது.

    பல்லடம்:

    பல்லடத்தில் அதிமுக., நகர நிர்வாகிகள் கூட்டம் நகரச் செயலாளர் ராமமூர்த்தி தலைமையில் நடைபெற்றது. இதில் அதிமுக., பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆணைக்கிணங்க அதிமுக., 52 ஆம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு பல்லடம் நகரத்திலுள்ள 18 வார்டுகளில் கொடியேற்று விழா, மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்குவது என முடிவு செய்யப்பட்டது. இதில் நிர்வாகிகள் தமிழ்நாடு பழனிச்சாமி, தர்மராஜன், லட்சுமணன், வக்கீல் வெங்கடாஜலபதி, மரக்கடை கிருஷ்ணமூர்த்தி, உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×