search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஒன்றிய செயலாளர்"

    • பா.ம.க அவசர ஆலோசனை கூட்டம் நடந்தது.
    • திருப்புல்லாணி ஒன்றிய செயலாளர் மக்தூம் கான் வரவேற்றார்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரத்தில் பாட்டாளி மக்கள் கட்சி கிழக்கு மாவட்டம் சார்பில் அவசர ஆலோசனை கூட்டம் நடந்தது. மாவட்ட செயலாளர் தேனி சை.அக்கிம் தலைமை தாங்கி னார். மாவட்ட தலைவர் சந்தானதாஸ், மாவட்ட அமைப்புச் செயலாளர் சதாம் ராஜா, அமைப்பு தலைவர் ஜீவா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    திருப்புல்லாணி ஒன்றிய செயலாளர் மக்தூம் கான் வரவேற்றார். நிகழ்ச்சியில் புதிய மாவட்ட இளைஞர் சங்க அமைப்பாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட ராம்நகர் லட்சுமணனுக்கு சந்தான தாஸ் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்.

    கூட்டத்தில் மாவட்டம் முழுவதும் புதிய கிளைகள் அமைக்க வேண்டும், கிளைகள் அனைத்திலும் கொடி ஏற்ற வேண்டும், இளைஞர் சங்கங்களை பலப்படுத்த வேண்டும், ராமநாதபுரம் மாவட்டம் வைகை நீர் ஒப்பந்தத்தின்படி 12-ல் 7 பங்கு நீரை தமிழக அரசு ராமநாதபுரம் மாவட் டத்திற்கு கொண்டு வர ஏற்பாடு செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மா னங்கள் நிறை வேற்றப் பட்டது.

    பசுமை தாயகத்தின் மாநில துணைச் செயலாளர் கர்ண மகா ராஜா, மாவட்ட துணை செயலாளர் ராசிக், ராமநாத புரம் நகர செயலாளர் பாலா, மண்ட பம் ஒன்றிய செய லாளர் வெங்கடேஷ், கீழக்கரை நகர செயலாளர் லோக நாதன், மாவட்ட தொழிற் சங்க செயலாளர் லட்சு மணன், திருப்புல்லாணி ஒன்றிய தலைவர் ராஜேந்திரன், நகர துணை செயலாளர் கார்த்திக், இளைஞர் சங்க செயலாளர் துல்கர், இளைஞர் சங்க அமைப் பாளர் ராம் நகர் லட்சுமணன் மாவட்ட சிறுபான்மை பிரிவு தலைவர் இப்ராகிம்,

    சிறுபான்மை பிரிவு செயலாளர் வாப் பாசா, மாணவர் சங்க செயலாளர் சந்தோசம், மாவட்ட மாணவர் சங்க அமைப் பாளர் கபில்தேவ், கடலாடி ஒன்றிய செயலாளர் இரு ளாண்டி, கடலாடி ஒன்றிய துணை செயலாளர் முனிய சாமி, மண்டபம் ஒன்றிய துணை செயலாளர் சாகுல், மண்டபம் ஒன்றிய இளைஞரணி செயலாளர் முனியசாமி, மற்றும் நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.

    ராமநாதபுரம் ஒன்றிய செயலாளர் பொறியாளர் முகமது ஷரீப் நன்றி கூறி னார். புதிய மாவட்ட இளைஞர் சங்க அமைப்பா ளராக தேர்ந்தெடுக்கப்பட்ட ராம்நகர் லட்சுமணனுக்கு மாவட்ட தலைவர் சந்தானதாஸ் சால்வை அணிவித்து வரவேற்றார்.

    • கடந்த மாதம் ஒன்றிய செயலாளர் பதவிக்காலம் நிறைவு பெற்றது.
    • தி.மு.க.வில் ஒன்றிய செயலாளர் பதவிக்கு தேர்தல் நடைபெற்றது

    தாராபுரம் :

    தி.மு.க., அமைப்பு தேர்தலில் தாராபுரம் ஒன்றிய செயலாளராக கடந்த 5 ஆண்டு காலமாக எஸ்.வி.செந்தில்குமார் பணியாற்றி வந்தார்.

    கடந்த மாதம் ஒன்றிய செயலாளர் பதவிக்காலம் நிறைவு பெற்றது. இதையடுத்து தி.மு.க.வில் ஒன்றிய செயலாளர் பதவிக்கு தேர்தல் நடைபெற்றது .இதில் தாராபுரம் ஒன்றியத்தில்தி.மு.க. செயலாளராக ஏற்கனவே பணியாற்றி வந்த எஸ்.வி.செந்தில் குமாரை எதிர்த்து போட்டியிட யாரும் வேட்பு மனு தாக்கல் செய்யாததால் அவர் போட்டியின்றி மீண்டும் ஒன்றிய செயலாளராக வெற்றி பெற்றார்.

    இதையடுத்து நேற்று திருப்பூர் வந்த தி.மு.க. தலைவரும், தமிழக முதல்- அமைச்சருமான மு.க.ஸ்டாலினை தாராபுரம் தி.மு.க. ஒன்றிய செயலாளர் எஸ்.வி.செந்தில்குமார் நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தார். அப்போது அவரின் பணி சிறக்க வேண்டுமென எஸ்.வி. செந்தில்குமாருக்கு முதல் -அமைச்சர் வாழ்த்து தெரிவித்தார்.

    • கருணாநிதி படத்துக்கு தி.மு.க.வினர் மலர் அஞ்சலி செலுத்தினர்.
    • தி.மு.க. ஒன்றிய செயலாளர் ஜெயபாலன் தலைமை தாங்கினார்.

    சாயல்குடி

    ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடியில் இன்று முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.

    தி.மு.க. ஒன்றிய செயலாளர் ஜெயபாலன் தலைமை தாங்கினார். மாவட்ட நெசவாளர் அணி துணை அமைப்பாளர் குலாம்முகைதீன், சாயல்குடி விவசாய சங்க தலைவர் ராஜாராம், மாவட்ட முன்னாள் இளைஞர் அணி துணை அமைப்பாளர் ராஜேந்திரன், சாயல்குடி நகர இளைஞர் அணி அமைப்பாளர் விக்னேஷ் ராம் முன்னிலை வகித்தனர்.

    கருணாநிதியின் உருவப்படத்திற்கு தி.மு.க. நிர்வாகிகள் மாலை அணிவித்து மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். இதில் ஒன்றிய பொருளாளர் பாலகிருஷ்ணன், ஒன்றிய பிரதிநிதி நாகேந்திரன், நகர துணைச் செயலாளர் சுப்ரமணியன், ஊராட்சித் தலைவர்கள் டி. வேப்பங்குளம் முருகன், இதம் பாடல் மங்களசாமி, ஒன்றிய கவுன்சிலர் பிச்சை, நிர்வாகிகள் சண்முகராசு உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    பேரூர் தி.மு.க.

    சாயல்குடி பேரூர் தி.மு.க. சார்பில் கருணாநிதி நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. பேரூர் செயலாளர் வெங்கடேஷ் ராஜ் தலைமை தாங்கினார். சாயல்குடி பேரூராட்சி தலைவர் மாரியப்பன், மாநில வர்த்தக அணி துணை அமைப்பாளர் ராமர், மாவட்ட மீனவர் அணி அமைப்பாளர் அருள் பால்ராஜ், பேரூராட்சி துணைச் சேர்மன்மணிமேகலை பாக்கியராஜ் முன்னிலை வகித்தனர்.

    இதில் பேரூராட்சி வார்டு உறுப்பினர்கள் குமரையா, ஆபிதா அனிபா அண்ணா, தி.மு.க. அவைத்தலைவர் உதயசூரியன், நகர சிறுபான்மை பிரிவு செயலாளர் செய்யது, நகர இளைஞர் அணி துணை அமைப்பாளர் நிக்கோலஸ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • 4 பேர் மீது வழக்கு
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை

    கன்னியாகுமரி:

    இரணியல் அருகே உள்ள தலக்குளம் பகுதியில் இன்று காலியிடங்களுக்கான தேர்தல் நடந்தது. இதனை முன்னிட்டு கிள்ளியூர் தெற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் கோபால்கிரு ஷ்ணன்,தேர்தல் பொறுப்பா ளராக நியமிக்கப்பட்டு இருந்தார்.

    இந்த நிலையில் அவர் புது விளை பகுதியில் நேற்று இரவு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அதே பகுதியைச் சேர்ந்த சிலர் அங்கு வந்தனர். அவர்கள் கோபால்கிருஷ்ணனிடம் தேர்தல் பணியில் ஈடு பட்டவர்கள் இரவு நேர த்தில் எதற்காக இங்கு வந்தீர்கள்?என்று கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

    அப்போது அவர் தாக்க ப்பட்டதாக கூறப்படுகிறது. நெய்யூரில் உள்ள தனியார் மருத்துவ மனையில் சிகிச்சை க்காக சேர்ந்துள்ள கோபால் கிருஷ்ணன், புதுவிளை பகுதியைச் சேர்ந்த மணி கண்டன், அய்யப்பன், கோபு, ரமேஷ் ஆகியோர் தன்னை தாக்கிய தாக இரணியல் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

    அதன் பேரில் இரணியல் சப்-இன்ஸ்பெக்டர் குமார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    இதேபோல் புதுவிளை சுதாகர் என்பவர் இரணியல் போலீஸ் நிலையத்தில் அளித்த புகாரில், அதே பகுதியைச் சேர்ந்த 4 பேர் தன்னை தாக்கியதாக தெரிவித்து உள்ளார். சப்-இன்ஸ்பெக்டர் குமார் வழக்கு பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகிறார்.

    ×