search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் குருபூஜையை முன்னிட்டு ஆலோசனை கூட்டம்
    X

    ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றவர்கள்.

    பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் குருபூஜையை முன்னிட்டு ஆலோசனை கூட்டம்

    • பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் குருபூஜையை முன்னிட்டு ஆலோசனை கூட்டம் நடந்தது.
    • பசும்பொன்னில் முத்துராம லிங்கத்தேவர் நினைவிடத்தில் மரியாதை செலுத் தத்தப்படும்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரத்தில் பசும்பொன் முத்துராம லிங்கத் தேவரின் 116-வது பிறந்தநாள் விழா மற்றும் 61-வது குருபூஜை விழாவை யொட்டி மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற்பாடு பணிகள் தொடர்பாக மாவட்ட காவல் கண்கா ணிப்பாளர் தங்கதுரை முன்னிலையில் கலெக்டர் விஷ்ணு சந்திரன் தலைமை யில் ஆேலாசனை கூட்டம் நடந்தது.

    இதில் முத்துராமலிங்க தேவர் பிறந்தநாள் விழா வினை முன்னிட்டு மேற்கொள்ளப் பட்டு வரும் பணிகள் தொடர்பாக அலுவலர்க ளுடன் ஆய்வு மேற்கொள்ளப் பட்டது. ஒவ்வொரு வருடமும் அக்.

    30-ந் தேதி பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் பிறந்தநாள், குருபூஜை விழா அரசு விழாவாக கொண்டா டப்பட்டு வருகிறது.

    அன்றைய தினம் தமிழக அரசின் சார்பில் பசும் பொன்னில் முத்துராம லிங்கத்தேவர் நினைவி டத்தில் மரியாதை செலுத் தத்தப்படும். அன்றைய தினம் பல்வேறு கட்சியினர் மற்றும் பொதுமக்கள் சார்பில் மரியாதை செலுத்தப் படும். பசும்பொன்னுக்கு வருகை தரும் முக்கிய பிரமுகர்கள், பொதுமக்கள் சென்று வர ஏதுவாக அப்பகுதியில் வாகன நிறுத்தும் இடம், முக்கிய பிரமுகர்கள் செல்லும் வழி, பொதுமக்கள் செல்லும் வழி, சாலைகளை சீர மைத்தல், மின் இணைப்பு வசதி, அன்னதானம் நடை பெறும் இடங்களில் உணவு பாதுகாப்புத்துறை சார்பில் உரிய அனுமதிகள் வழங்கப் படுவதை உறுதி செய்தல்.

    பசும்பொன் பகுதியில் சுற்றி உள்ள பகுதிகளில் கண்காணிப்பு காமிரா பொருத்துதல், குடிநீர் வசதி போன்றவைகள் தொடர்பு டைய அலுவலர்கள் தங்க ளுக்கு ஒதுக்கப்பட்ட பணி களை விரைந்து முடிக்க வேண்டுமென அறிவுறுத்தினார்.

    அதனைத் தொடர்ந்து கலெக்டர் விஷ்ணுசந்திரன், மாவட்ட காவல் கண்கா ணிப்பாளர் தங்கதுரை ஆகியோர் விழா நடை பெறும் இடங்களை பார்வை யிட்டு ஆய்வு மேற்கொண்ட னர்.

    Next Story
    ×