search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    காங்கிரஸ் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்
    X

    காங்கிரஸ் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்

    • காங்கிரஸ் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது.
    • முடிவில் விருதுநகர் கிழக்கு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் துணைத்தலைவர் ராதாகிருஷ்ணன் நன்றி கூறினார்.

    சிவகாசி

    சிவகாசி அருகே உள்ள எம்.புதுப்பட்டியில் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம் நடந்தது. வட்டார காங்கிரஸ் தலைவர் முத்துமாரி தலைமை தாங்கினார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் சீனிவாசன் முன்னிலை வகித்தார். விருதுநகர் மாவட்ட செய்தி தொடர்பாளர் மீனாட்சி சுந்தரம் வரவேற்றார். நிகழ்ச்சியில் மாநில பொதுக்குழு உறுப்பினர் கிருஷ்ணமூர்த்தி, முன்னாள் மத்திய அரசு வக்கீல் முருகானந்தம், மாவட்ட செயற்குழு உறுப்பினர் சிவகுருநாதன், மாநில பொதுக்குழு உறுப்பினர் பாலகிருஷ்ணசாமி, மாவட்ட செயற்குழு உறுப்பினர் வைரவசாமி ஆகியோர் பேசினர். வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி கூடுதல் தொகுதிகள் கேட்டு பெற வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. நிகழ்ச்சியில் காங்கிரஸ் நிர்வாகிகள் நந்தகுமார், செல்லையாதேவர், சங்கர், சோமசுந்தரம், சற்குண பாண்டியன், கோபால், சிவகாசி ஷேக், குருசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    முடிவில் விருதுநகர் கிழக்கு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் துணைத்தலைவர் ராதாகிருஷ்ணன் நன்றி கூறினார்.

    Next Story
    ×